அருண் சித்தார்த் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்ப்பணம் !

யாழ். இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார நிவாரண உதவித் திட்டத்தினூடாக 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கூரஹல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி, கொழும்பு இளைஞர் பெளத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர மற்றும் அவர்களது குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *