யாழ்ப்பாணத்தின் பிரபல தனியார் விடுதியில் உயிரிழந்து மூன்று நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் !

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள பிரபல தனியார் விடுதியொன்றில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமியை தவிர மற்றுமொரு பெண்ணும் மயக்க நிலையில் மீட்கப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பாட்டி முறையான 54 வயதான பெண், மயக்க நிலையிலிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மூன்று நாட்களுக்கு முன்னரே மரணித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *