முல்லைத்தீவு – மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் அனுஸ்டிப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

 

தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மந்துவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ,தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

முல்லைத்தீவு மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை நடத்திய குண்டு தாக்குதலில் 24 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்ததோடு 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *