தனியார் தோட்ட உரிமையாளர்களினால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல் வேண்டுகோள்!

பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்களினால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பெருந்தோட்ட மக்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து, தொழிலாளர் குடும்பங்களை அவமதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியல் இலாபங்களை நோக்கமாக கொண்டு செயற்படாமல் மலைய மக்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *