தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் !

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக சுமார் 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும் என 17 மீனவர்களை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

 

குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இலங்கை கடற்படையினர் இந்த ஆண்டில் இதுவரையில் 17 இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 110 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *