இந்தியா – கனடா மோதல் எதிரொலி – இடைநிறுத்தப்பட்ட விசா சேவை !

இந்திய கனடா மோதலையடுத்து கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

 

இதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், சமீபத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மற்றும் அங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கனடா பொது பாதுகாப்பு அமைச்சர், கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில், கனேடிய நாட்டு மக்களுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே இராஜங்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் செயல்பாட்டு காரணங்களுக்காக விசா சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *