“வடக்கில் ஒன்றையும் – தெற்கில் ஒன்றையும் – வெளிநாட்டில் இன்னொன்றையும் பேசித்திரிகிறார் ஜனாதிபதி ரணில்.” – அநுரகுமார திஸாநாயக்க

“வடக்கில் ஒன்றையும் – தெற்கில் ஒன்றையும் – வெளிநாட்டில் இன்னொன்றையும் பேசித்திரிகிறார் ஜனாதிபதி ரணில்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சர்வதேச சமூகத்தை மாத்திரமல்ல இங்குள்ள அரசியல்வாதிகளையும், மக்களையும் ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு கனவு காண்கின்றது.  நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கும்? இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்கள்

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அரசின் கனவு தவிடுபொடியாகி விடும். இங்குள்ள சில அரசியல்வாதிகள் கோமா நிலையில் இருந்தாலும் நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்.

வடக்கு, கிழக்கு சென்று ஒன்றையும், தெற்கில் இன்னொன்றையும், வெளிநாடு சென்று மற்றொன்றையும் மாறி மாறி சொல்லித் திரியும் ஜனாதிபதி ரணில்  ரணில் விக்ரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம். அதாவது முடிந்தால் தேசிய ரீதியில் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *