பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

University_of_Jaffna_Logoயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதம் தமிழ்சமூகத்தின் மிகமுக்கிய நிறுவனம் ஒன்றை கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய பல்வேறு விடயங்களும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிஸ்தார் எஸ் ஆர் மொகமட் இன் இக்கட்டுரை பிரசுரமாகிறது. பல்கலைக்கழகங்கள் கண்ணாடி போன்று சமூகத்தை உள்ளவாறே மட்டுமே பிரதிபலிக்க முடியுமா? இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியனவா? என்ற அடிப்படைகளில் விவாதம் அமைகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்
._._._._._.

பல வாரங்களுக்கு முன்  ஊடகவியலாளர் திரு. ஜெயபாலனினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூகமாற்றமும் யாழ் பல்கலைக்கழகமும் சம்பந்தமான விவாதஅரங்கும் அதை தொடர்ந்து வந்த பேராசிரியர் ஃகூல் அவர்களின் பேட்டியும் ஆரோக்கியமான பல கருத்துகளை தாங்கிவந்த போதிலும் அவை ஒரு அடிப்படை கேள்வியில் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. அதாவது சமூக மாற்றத்திற்கு பல்கலைக்கழகம் தானா அடிப்படை என்ற கேள்வியே அதுவாகும். இருந்தும் இந்த கேள்வி கேட்கப்படாமலே ஒரு முடிவு எய்யப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. சமூக மாற்றத்தை யாழ் பல்கலைக் கழகம் செய்யத்தவறி விட்டது என்பதே அந்த முடிவு.

சமூகமாற்றம் என்பது என்ன? அது ஒரே நாளையில் ஏற்படக் கூடியதா? அல்லது அது ஒரு தொடர்ச்சியான இயங்கியலை கொண்டதா? அல்லது ஒரு சமூகத்தின் குறைபாடுகளாக நாம்காணும் அம்சங்களை அச்சமூகத்தில் இருந்து நீக்கிவிட்டால் அது சமூக மற்றமாகுமா? ஏதாவது ஒரு வகையில் தனது பழைய நிலையை ஒரு சமூகம் மாற்றிக்கொண்டால் அதை ஒரு முன்னேறிய சமூகமாக கொள்ள முடியுமா? ஒரு சமூகமாற்றத்துக்கு எல்லை உண்டா? அப்படியானால் அதன் உச்சஎல்லை என்ன? ஏன் அதை பல்கலைக்கழகம் தான் ஏற்படுத்த வேண்டும்? என்ற நியாயமான  கேள்விகளுக்கெல்லாம் அந்த கட்டுரையிலோ அல்லது பேட்டியிலோ பதில்கள் இல்லை. இருந்தபோதிலும்  சமூக மாற்றத்தின் தேவை இருப்பதாக ஏதோ ஒரு வகையில் உணரும் நாம் அச்சமூகத்தில் புரையோடியிருக்கும் பல அடிப்படை விடயங்களை மூடி மறைத்துவிட்டு அல்லது அவைபற்றி அக்கறைபடாமல் சமூகமாற்றம் பற்றி கதைப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.

சமூகத்தின் அங்கங்களான தனி மனிதர்களில் ஏற்படும் சிந்தனை மாற்றம் அதை பிரதிபலிக்கும் அவர்களின் செயல் மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தின் மாற்றத்திற்கு காரணமாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இந்த அடிப்படை சிந்தனை மாற்றம் என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பாக என்னால் பார்க்க முடியாதுள்ளது. ஏனெனில் இந்த உலகத்தின் முதல் பல்கலைக்கழகமான கி.பி 859ல்  மொரோக்கோ (Morroco) வில் உள்ள பெஸ்(Fes) நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் கல்வி சேவை செய்து கொண்டிருக்கும் பெஸ் பல்கலைக்கழகமாகட்டும் அல்லது ஜூலை மாதம் 2010ல்  சுவீடன்(Sweedan) கல்மர்( Kalmar) நகரத்தில் அமைக்கப்பட்ட லின்னயுஸ்(Linnaues) பல்கலைக் கழகமாகட்டும் இவைக்கும் இடையில் அமைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பல்கலைக் கழகங்களாகட்டும் இதில் எதுவுமே சமூகமாற்றதிற்காக அமைக்கப்படவில்லை, சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்க யாழ் பல்கலைக்கழகத்தை மாத்திரம் தனியாக பிரித்து எடுத்து அது சமூகமாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும், அப்படி ஏற்படுத்தும் அளவிற்கு அதன் நிர்வாகத் திறனும், கல்விசார் மேன்நிலையும் ஏதுவாக இல்லை. எனவே அவைகளை பெற்று தமிழ், குறிப்பாக யாழ் சமூகத்தை மாற்றியாகவே வேண்டும், அதற்கு பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக்கழகத்துக்கான வருகை இன்றியமையாதது என்பது போன்றதான கருத்து பரிமாற்றம், கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஆரம்பிக்கப்பட்ட தென்இந்திய தமிழ் சினிமா போலவே தென்படுகின்றது. 

அதே நேரத்தில் பல பல்கலைக் கழகங்கள் தங்கள் நாடுகளில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களை, நம் காலத்து சான்றாக வேண்டுமானால் 1976 களில் ஆயத்துல்லா ரூஹ¤ல்லா கொமய்னி  பாரிஸ்(Paris) நகரத்தில் இருந்து கொண்டு ஈரானின் தெ·ரான்(Tehran) பல்கலைகழகத்தின் மாணவர்  மூலம் இஸ்லாமிய புரட்சி என்று தொடங்கி  வெறும் அரசியல் மாற்றத்தையும் அதை தொடர்ந்த பாரசீக குடாநாட்டு பிரதேசத்தில் இன்றும் நிலவிவரும் அரசியல் நிலவரத்தையும் குறிப்பிடலாம், நாம்  தவறாக சமூக மாற்றமாக பார்க்க தொடங்கிவிட்டோமோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.

பல்கலைக் கழகங்கள் நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்றால் அதை முற்றாக நிராகரிக்க முடியாதவாறு சான்றுகள் உள்ளன என்பதற்காக சமூகமாற்ற விடயத்திலும் அதுதான் உண்மை என்றால் அதை ஏற்கக் கூடியதாக நம்மிடம் சான்றுகள் இல்லை.  இந்த வகையிலேயே சமூகமாற்றதுக்கு அடிப்படையாக இருப்பவை எவை என்பதையும், அவைகளை வளர்த்தெடுப்பதில் நிறுவனங்களின் பங்கு என்ன என்பதையும், அவை என்னென்ன நிறுவங்கள் என்பதையும் பார்க்கவேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

என்னை பொறுத்தவரை பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள் என்பவைகளே சமூகமாற்றத்திற்கான பொருத்தமான ஆரம்பபுள்ளிகள். அதிலிருந்தே கோடுகள் வரையப்பட்டு அவை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக இணைக்கப்படல் வேண்டும். எந்த பாடசாலை சமூக அநீதி பற்றி மாணவ குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, அல்லது எத்தனை பாடசாலைகள் அவ்வாறு முயற்சித்தது?  ஆரம்ப பாடசாலையில் பயிற்றப்படாத மாணவனொருவன் பல்கலைகழகத்தில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை நாம் எப்போதோ தெரிந்து வைத்துள்ளோமே. ஆக எமது அடிப்படை குணாம்சங்கள் பல்கலைக்கழக சமூகத்தில் எப்படி பிரதிபலிக்காமல் இருக்கும்?

மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயங்களில் முக்கியம் பெறுவது சாதி பிரச்சினை என்பது எனது நிலைப்பாடு. இதை தொடர்வது சீதனபிரச்சினை.  இது பாடசாலைகளில் முளைவிடாமல் தடுப்பதற்குப் பதிலாக, அது கதைப் பொருளாக்கப்படாமல், விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாமல், வெட்ட வெளிச்சத்தில் அங்கேயே ஆரம்பமாகி, வழிபாட்டு தளங்களால் வளர்க்கப்பட்டு, திருமண பந்தத்தில் உறுதியாக்கப்படுகிறது. அப்படியிருக்க இடையில் வரும் பல்கலைகழகத்துக்கு மட்டும் ஏன் இந்த பாரிய பொறுப்பு, ஒரு வகை தண்டனை?

சாதிப் பிரச்சினையும், சீதனப் பிரச்சினையும் காட்டமாக இல்லாவிட்டாலும் காலத்துக்கு காலம் அவை பேசு பொருளாக்கப்பட்டன என்பது உண்மையாயினும் அதை நோக்கிய செயல்பாடுகள் நத்தை வேகத்திலேயே செயல்பட்டன. ஆனால் கல்வி கற்பதில் காட்டும் ஆர்வம் மின்னஞ்சல் போல் அதிவேகமாக செல்கின்றன, அது ஆரோக்கியமான விடயமும் கூட. ஆனால் சமூகமாற்றதுக்கு அது உதவியதா என்றால், அந்த கல்வியையும் கூட ஒரு வியாபாரமாகவே பார்க்கப்பட்டதால் சமூக மாற்றத்தில் கல்வி கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

சாதி, சீதனபிரச்சினை மாத்திரம்தான் சமூகத்தில் புரையோடியுள்ளதா? என்று கேட்டால் ஒரு நீண்ட பட்டியலுடன் அனேகர் வருவர். அதிலே நான் முக்கியமாக கருதுவது யாழ்  சமூகத்தின் மனப்போக்கு. இதுவும் வீட்டுக்கப்பால் பாடசாலையில் இருந்தே ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. மாணவரின் அறிவு நிலையும், அவர்களின் திறமையும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டு மாணவர் கெட்டிக்காரராகவும், மக்குகளாகவும் முத்திரை குத்தப்பட்டுகின்றனர். இந்த முத்திரை குத்தலும் சாதி அடிப்படையில் ஒரு வகை நியாயப்படுத்தலுக்கு உள்ளாகி ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் கல்வியில் மேதாவிதனத்துக்கும் ஒரு உறவுமுறை கட்டப்படுகின்றது. அல்லது அறியாமைக்கும், இழிநிலைக்கும் இன்னொரு சாதி அல்லது இனம் சொந்தமாக்கப்படுகின்றது. இது மாத்திரமல்ல எப்படியாவது பல்கலைகழகத்தின் வாசல்படி மிதித்துவிட்டால் அது பிறவிப்பயனை அடைந்ததுக்கான அறிகுறியாக கொள்ளப்படுகிறது. ஆண் ஒருவர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டால் அது சீதனத்தை தீர்மானிக்கும் அளவுகோலாகவும், அதுவே பெண் ஒருவரின் துணையை தெரிவு செய்யும் உரிமையை பறிப்பதாகவும் சிலவேளைகளில் அதுவே அவளுக்கு நிரந்தர கன்னி பட்டத்தையும் பெற்றுத் தருவதாகவும் அமைந்து விடுகின்றது. 

தமிழ் இலக்கிய பாடமாகட்டும், ஓட்டைகளை கிண்டிகிளறும் சட்ட வியாக்கியாணமாகட்டும், சிக்கல் நிறைந்த பெளதீக தேற்றமாகட்டும், தலை சுற்றும் தத்துவமாகட்டும் எதையும் மனப்பாடம் செய்யத் தெரிந்தவன் பகுப்பாய்வுதிறன் இல்லாமலேயே பரீட்சையில் சித்தியடைந்து விடுவான். இது முடியாதவன் கூட “குதிரை” ஓடி விடயத்தை சாதிக்கின்றான். உண்மையில் கெட்டிக்காரனும், திறைமைசாலியும் எந்த சாதியில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் பிறக்கலாம். ஆனால் அவனை வளரவிடாமல் தடுப்பதில் இந்த பாடசாலைகளும், வழிபாட்டு தளங்களும் அவனுக்கு தடைபோடுவதே சமூக அநீதியின் ஊற்று என்பதை நாம் மறக்கமுடியாது.

இந்த குதிரை ஓட்டத்துடன், கல்விக்கடை(tutory) நடத்தல், பரீட்சை வினாத்தாள் வெளியாக்கம், வினாத்தாள் திருத்த நிலையத்தில் (paper correction centres) ஆள் வைத்து புள்ளி ஏற்றல் என்ற பல்வேறு விடயங்கள் யாழ் சமூகத்தை பொறுத்தவரை ஒரு வெளிப்படை இரகசியம். இது ஒரு சமூகத்துக்கு எதிரான குற்றச்செயல் என்பதை எந்த பாடசாலை வெறுத்து ஒதுக்கிறது? மாறக கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன.

சரி கல்விநிலையங்கள் தான் அப்படி, சமய வழிபாட்டுத் தளங்களாவது கொஞ்சம் முன்மாதிரியாக நடக்கக் கூடாதா? சாதி குறைந்தவராக கணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுகாரனை மதபோதகர் ஒருவர் தேவாலயத்துக்குள் அனுமதித்து விட்டார் என்பதற்காக  உயர்ந்தசாதியாக தன்னை தீர்மாணித்து கொண்ட இன்னுமொரு வழிபாட்டுக்காரன் அந்த ஆலயத்தை பூட்டியதும் இல்லாமல் அங்கு புத்தரின் சிலை ஒன்றை  வைத்து கோயிலை இயங்கவிடாமல் செய்த சம்பவம் போன்று எத்தனை நாடகங்கள். இதை எல்லாம் இன்றும் அனுமதித்துக் கொண்டு ஏன் நேராக யாழ் பல்கலைக்கழகத்துடன் போருக்கு செல்லவேண்டும்?

சமயமும், சாம்பாரும் நாங்கள் முன்மாதிரியானவர்கள், மாக்ஸிய கொள்கை கொண்டவர்கள் எனவே கத்தரிக்காயில் உள்ள நம்பிக்கை எமக்கு கடவுளிடமில்லை என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் இந்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை. ஆகவே இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர்களால் எள்ளளவும் முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிடலாம். பாடசாலையை, சமயத்தை சமூக மாற்றதுக்காக பயன்படுத்த தெரிந்தவன் தான் யாழ் சமூகத்துக்கு தேவையே தவிர பல்கலைக்கழக நிர்வாகத்தை சரியாக செய்யத்தெரிந்த பேராசிரியர் சமூக மாற்றத்துக்கு என்ன செய்யமுடியும் என்பதுதான் என் கேள்வி?

அடுத்து யாழ் சமூக மனப் போக்கில் முக்கிய இடம் பிடிப்பது “முதன்மை” சிந்தனை. இது “கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய…” என்ற அடிப்படையில் இருந்து பிறந்த அம்சமாக எனக்கு தோன்றுகிறது. இதை பின்வரும் பல சிறிய உதரணங்கள் மூலம் நிறுவலாம்.   

தமிழ் மொழிமூலம் பல்கலைகழகத்தில் கற்கும் மாணவரில் யாழ் பிரதேச மாணவர்களே எண்ணிக்கை அடிப்படையில் அதிகம். அதற்காக அவர்கள்தான் முதன்மை சித்தி பெற தகுதியுடையோர் என்று பொருள்படாது. ஆனாலும் நடப்பது என்ன?  பட்டப்படிப்பின் ஆரம்பத்திலேயே யாழ் மாணவருக்கு முதல் தர (1st Class) சித்தி தொடக்கம் இரண்டாம்தர கீழ் நிலை(2nd Class lower) சித்திவரை எல்லா சித்திகளையும் (கற்பனையில்) தங்களுக்கிடையே பிரித்து எடுத்துக் கொள்வார்கள். அங்கு யாழ் மாணவர் இல்லாவிட்டால் அல்லது அந்த யாழ் மாணவர் வெளிப்படையாகவே படிப்பில் பின்நிற்பவர் என்றால் அந்த கற்பனை சித்தி திருக்கோணமலை மாணவருக்கு, அப்படியும் முடியாது என்றால் மட்டக்களப்பு மாணவருக்கு, அதுவும் முடியாது போனால் வன்னி மாணவருக்கு, அதுவும் கூட முடியாது போனால் மலைநாட்டு மாணவருக்கு, இது எதுவுமே சாத்தியப்படாது போகும் பட்சத்தில் போனால் போகட்டும் என்று ஒரு சோனக மாணவருக்கு வழங்கப்படும். இங்கு நான் காட்ட முற்படுவது தன்னை புத்திசாலியாக, திறமைசாலியாக நினைப்போருக்கு எதிரான போக்கையல்ல, மாறாக தன்  புத்திசாலிதனத்தையும், திறமையையும் ஒத்த அல்லது அதைவிடவும் கூட மற்றவரிடமும் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதை கொஞ்சமும் யோசிக்காத  அசட்டை  தன்மையையே.

அடுத்த உதாரணமாக ஒரு சுவாரஸ்யமான விடயத்தை சொல்லலாம். கடந்த 2010 உலககிண்ண உதைபந்தாட்ட போட்டி. உதைபந்தாட்ட முதன்மை நாடுகளான ஜேர்மனியும், ஆர்ஜண்டீனாவும் காலிறுதி போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது  படித்த, நான்குவிடயங்கள் தெரிந்த ஒரு திருக்கோணமலை வாசி எம்முடன்  கூட இருந்தார். “இவங்கள் என்ன விளையாடுராங்கள், ரிங்கோ டீம்(Trincomalle team) இறங்கி இருக்கவேண்டும் இன்னேரம் கதை …” என்று அவர் முடிக்கமுன்னமே என் தலையை சுவரில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு, இந்த போட்டியின் தேர்வு முறை என்ன, இதற்கு தகுதிபெற்று வர எத்தனை நாடுகளை எந்தெந்த படிமுறையில் சந்தித்து உலக கோப்பை ஆட்டத்துக்கு வர ஒருநாடு  அனுமதிக்கப்படும், அத்துடன்  FIFA (Federation of International Football Associations)வின் உலக தர( World rank list) வரிசையில் இலங்கை எத்தனையாவது இடம் (130 வது) அப்படி இருக்க திருக்கோணமலையின் நிலை… என்று விளங்கப்படுத்த எனக்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டது. நல்ல வேளை “தமிழீழ கழகம்” (Tamil Ealam Team)என்ற ஒன்று இல்லாமல் இருந்தது இல்லையேல் இந்த உலக கோப்பையுடன் நானும் “துரோகி” பட்டம் பெற்றிருப்பேன்.(இப்போதும் என்ன “தியாகி” பட்டமா, என்ன?)

இன்னுமொரு நகைச்சுவையான விடயமும் இங்கு பொருத்தம் என எண்ணுகிறேன்.  செந்தமிழ் சிம்மக் குரலோன் திரு. அப்துல் ஹமீதின் லண்டன்  IBC (பல வருடங்களுக்கு முன் இடம் பெற்ற) வானொலி பேட்டி ஒன்று. அதில் ஒரு யாழ்(ஆதி)வாசி (கல் தோன்றி மண்…. என்ற அர்தத்தில் மட்டும்) ஒரு புத்திசாலிதனமான கேள்வியை முன்வைத்தார். அதாவது, ஹமீத் அவர்களே! உங்கள் மனைவி ஒரு தமிழ் பெண்மணி அதனால்தான் நீங்கள் செந்தமிழ் பேசுகிறீர்கள் இல்லையா? என்று கேட்டு வைத்தார். ஐயா! நீங்கள் தமிழர், உங்கள் மனைவி தமிழர், உங்கள் இருவரின் பெற்றார் தமிழர், பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, அவர்களின் 10, 20 தலைமுறையினர் எல்லாரும் சுத்த தமிழர் உங்களால் செந்தமிழ் பேச முடிகிறதா, இல்லயே ஏன்? என்று கேற்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ “என் தாய் மொழி தமிழ், அதை நான் அழகாக, சுத்தமாக பேசாவிட்டால் எப்படி?” என்றார். இங்கு நான் சொல்ல வருவது “தமிழர்” அல்லாத ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்ட ஒருவர் “தமிழர்” ஒருவரின் துணையின்றி தமிழை கூட சரியாக பேச முடியாது என்ற அந்த சிந்தனை போக்கையே. 

இதைபோல் இன்னுமொன்று, “உமக்கு தெரியுமா?, இங்கிலாந்து மகாராணிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்தவன் தமிழன்”. இப்படி ஒரு சம்பாசணையை எனக்கு ஜேர்மனியில் கேட்க நேர்ந்தபோது, இந்த விடயத்தை சொன்ன ஆள் பற்றி நான் நினைத்தது, போச்சுடா, “இவர் நினைக்கிறார் போலும் மகாராணி இந்த உலகத்தின் அதிசிறந்த அறிவாளி, அந்த அறிவாளிக்கே கணக்கு படிப்பித்தவர் அதி, அதி அறிவாளி, அந்த அறிவாளி ஒரு “தமிழர்”, நானும் “தமிழர்”, ஆகவே நானும்  அறிவாளி” என்பதாகும் (இதுவும் ஒரு வகை சமன்பாடு, திரு. தமிழ்வாதம் கோபிக்க வேண்டாம்)

இப்படி “தமிழ்”, “தமிழர்” என்ற விடயங்கள் தான் எங்கும், எதிலும், எப்போதும் முதன்மையானது அல்லது முதன்மைபெற வேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த விடயமே. இந்த அடிப்படையிலேயே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கண்ட கனவாக சொல்லப்படும் விடயமும் அமைகின்றது. அதாவது “யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக்கல்” என்பதாகும். கனவுகள் நிஜமாவது ஏதோ உண்மையாகினும் எல்லா கனவுகளும் அப்படியாகும் என்பது கோள்விக்குறியே. ஒப்பிட்டு ரீதியில் யாழ் பல்கலைக்கழகம் இளமையானது, தர வரிசையிலும் பேராதனை, கொழும்பு பல்கலைக் கழகங்களை விட பின்நிற்பது. அங்கே வெளி நாட்டு மாணவர் வந்து கற்கக் கூடிய விதத்தில் ஆங்கில மொழிமூலமான கற்கை நெறிகள் இல்லை. ரஸ்ய, ஜப்பானிய அல்லது ஜேர்மனிய பல்கலைக் கழகங்கள் போல் சுதேச மொழியில் வெளி நாட்டு மாணவருக்கு படிப்பிக்கும் அளவுக்கு தமிழில் புத்தகங்களோ, ஆய்வு நுல்களோ ஏனைய வசதிகளோ இல்லை. ஆங்கிலத்தில் அத்தகைய கற்கை நெறிகள் உருவாகப்படலாம் என்றாலும் வெளி நாட்டு மாணவர் இந்தியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது மலேசியாவுக்கோ சென்று இலகுவாக காரியத்தை முடித்துவிட வசதி வாய்ப்புக்கள் இருக்கும்போது அல்லது அவ்வசதிகள் ஓரளவு பேராதனையிலும், கொழும்பிலும் இருக்கும்போது ஏன் கஸ்டப்பட்டு வெளிநாட்டு மாணவர் யாழ் வரவேண்டும். அப்படி வெளிநாட்டு மாணவர் இல்லாத பல்கலைக்கழகம் ஆசிய தர வரிசையில் எப்படி முதன்மை இடத்தை பிடிக்க முடியும்.  ஆகவே அடிப்படை விடயங்கள் பூர்த்தியாகப்படாமல் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கனவில் நம்பிக்கை வைத்து அதே கொள்கையில் பிடிப்பாக இருக்கும் பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக் கழக வருகையை சமூக மாற்றத்தின் அத்திவாரமாக கற்பனை பண்ணுவது பிரபாகரனின் கனவை நம்பி களமிறங்கிய புலி போராளிகளின் நிலையை ஒத்ததாகும்.

பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ்ப்பாணத்துக்கான மீள்வருகை சமூகமாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டதென்றால் அது மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். ஆனால் அதற்காக அவர் யாழ் பல்கலைக் கழகத்துக்குத்தான்  வரவேண்டுமென்பது விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய விடயம். அதாவது பேராசிரியரின் கல்விதகைமை, நிருவாக அனுபவமும், திறமையும் சமூக மாற்றத்தை கொண்டுவருமா என்பது தொடர்பான வாத பிரதிவாதங்கள். 

என்னைப் பொறுத்தவரை பேராசிரியரின் பணி ஒரு பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு பாடசாலையை சமூக மாற்றத்திற்கான ஒரு பரிசோதனை கூடமாக பாவிக்கலாம். அந்த மாதிரி பாடசாலையில் சமூக விஞ்ஞானம் ஒரு முதன்மை பாடமாகவும் சமூக மாற்றத்துக்கான மாதிரிகளை கண்டறியவும் அவைகளுக்கு செயலுருவம் கொடுக்கும் களமாகவும் அதற்கு பேராசிரியர் ஃகூல், அல்லது அவரைவிட பொருத்தமானவர் யார் இருப்பினும் அவர் பொறுப்பாக்கப்படல் வேண்டும். இந்த ஐரோப்பிய பாடசாலைகள் போல் நற்புத்துணை (twined Schools) பாடசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதன்மூலம் ஒரு பிரதேச மாணவர் மற்றைய பிரதேச மாணவரை அறிந்துகொள்ள அவர்களின் கலாச்சார விடயங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாகும். பாடசாலைகளில் மாணவருக்கு மற்ற சமயங்களை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

பாடசாலை முடித்து பல்கலைக்கழகம் செல்ல முடியாதோருக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கும் திட்டம் வேண்டும்.  சமூகத்தின் அனைத்து தரத்தினருக்கும் ஏற்றாற்போல் கருத்தரங்குகள், பயிற்சி பட்டரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். நாட்டின் பொது பாடத்திட்டத்துக்கு புறம்பாக, யாழ்பகுதியின் அனைத்து பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்ட  சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும். இவ்வாறு பல சாத்தியமான திட்டங்களை பரீட்சார்த்த ரீதியிலேனும் செய்துபார்க்க வேண்டும்.

ஊழல், லஞ்சம் என்பன யாழ் சமூகத்தில் மாத்திரம் குடிகொண்டுள்ளதாக கொள்ளமுடியாது. இவை நாட்டின் சகல இன மக்களாலும் கைக்கொள்ளப்படும் விடயங்களாகும். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற நிலைபாட்டை உடைக்கும் முகமாக இதில் முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இவற்றை முறியடிக்க சரியான வேலை திட்டங்கள் இல்லாததினால் தான் யாழ் பல்கலைக்கழகம் மீதும் அது வழங்கும் பட்டங்கள் மீதும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. பாடக்குறிப்பை மனனம் செய்து அச்சொட்டாக அதை மீளகொடுத்து, அதற்கு திறமைசித்தி பெற்று, அங்கேயே பதவியும் பெற்று புதிய மாணவருக்கு கற்பிக்கும்போது மீண்டும் அதே பாடக்குறிப்பு கைமாறப்படும் போது எப்படி சிறந்த கலாநிதிகளை உருவாக்கமுடியும்? வெறும் கல்லா நிதிகள் அல்லவா உற்பத்தி பண்ணப்படுவர்.  

ஆக, சமூகமாற்றம் என்பது அடி மட்டதில் இருந்து பிறக்க ஆயத்தங்கள் செய்யாமல், ஒன்றல்ல பத்து ஏன் நூறு பேராசிரியரிர் ஃகூல்கள் வந்தாலும்  யாழ் பல்கலைக்கழகம் அதன் நிலையில் இருந்து மாற்றமடையாது என்பது என் நிலைப்பாடு.

Mohamed SR. Nisthar.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 Comments

  • குணசிங்கம் பரணிதரன்
    குணசிங்கம் பரணிதரன்

    நிஸ்தாரின் ஆகஸ்டு 19, 2010ற்கான கட்டுரையினது கருத்துப் பரிமாற்றம் பற்றி சில விமர்சனங்கள், கேள்விகள் (?) இத்தால் நிரற்படுத்தப்படுகின்றன….

    //என்னை பொறுத்தவரை பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள் என்பவைகளே சமூகமாற்றத்திற்கான பொருத்தமான ஆரம்பபுள்ளிகள். அதிலிருந்தே கோடுகள் வரையப்பட்டு அவை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக இணைக்கப்படல் வேண்டும்.//

    பாடசாலை ஒரு சமூக நிறுவனம். சரிதான்! அப்படியாயின் நிஸ்தாரின் கருத்துப்படி பல்கலைக்கழகம் ஒரு தனிநபர் வியாபாரமா? சமூகவியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள் பற்றிச் சொல்கின்ற எந்தவொரு பாடப்புத்தகமும் (basic text book/s) “பல்கலைக்கழகம் என்பது சமூகமாற்றத்துக்கு வித்திடக்கூடியதொரு மாபெரும் சமூகநிறுவனம்” என்றுதானே வரைவிலக்கணப்படுத்தியுள்ளன?

    //ஒப்பிட்டு ரீதியில் யாழ் பல்கலைக்கழகம் இளமையானது, தர வரிசையிலும் பேராதனை, கொழும்பு பல்கலைக் கழகங்களை விட பின்நிற்பது. அங்கே வெளி நாட்டு மாணவர் வந்து கற்கக் கூடிய விதத்தில் ஆங்கில மொழிமூலமான கற்கை நெறிகள் இல்லை. ரஸ்ய, ஜப்பானிய அல்லது ஜேர்மனிய பல்கலைக் கழகங்கள் போல் சுதேச மொழியில் வெளி நாட்டு மாணவருக்கு படிப்பிக்கும் அளவுக்கு தமிழில் புத்தகங்களோ, ஆய்வு நுல்களோ ஏனைய வசதிகளோ இல்லை.//

    “எங்களிடம் ஒன்றும் இல்லை, அதனால் ஒரு நாளும் ஒன்றுமே இருக்கப் போவதில்லை”, என்கின்ற உங்களது ‘சகலமும் அழிவின் அடிப்படையே’ என்கின்ற நொஸ்ரடாமசின் dooms day கருத்தியல் வாதம் ருசியாவின் ரஸ்புட்டின் காலத்திலேயே முடிந்துவிட்டது.

    “இல்லை என்பது இங்கில்லை”… என்கின்ற அகன்ற மனக்கண்ணோட்டத்துடனான புதிய சிந்தனைகளின் ஊற்றாய் யாழ் பல்கலை மிளிர வேண்டும் என்று நினைத்தல் பிழையா?

    ஒரு காலத்தில் கொழும்பு, பேராதெனிய பல்கலைகளுக்கு இணையான தகுதிக்கு வரக்கூடிய நிலை யாழ் பல்கலைக்கு இருந்தது. அதை சீர்குலைத்தவர்கள்தான் அந்த “சைவ வேளாண் ஆணாதிக்க ஊடுருவிகள்”.

    அப்படியாயின் ஒப்பீட்டளவில் இளமையான றுகுணு பல்கலை, வயம்ப பல்கலை போன்றவை இன்று இலங்கையில் தமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனதானே? ஏன் யாழ் பல்கலை மட்டும் “வசதிகள் இல்லை என்பதால் எங்களால் முடியாது போனது” என்று குருட்டுக் காரணம் சொல்லித் தப்பிக் கொண்டிருக்கின்றது??? தங்களது குறைகளை மறைத்துப் பூசி மெழுகிச் சுயலாபம் கண்டு அதிகாரம் செய்து யாழ் பலகலையைச் சீர்குலைக்கும் மனிதர்களையல்லவா ஜெயபாலனும் அவரது விவாதமேடையும் சாடிக் கொண்டிருக்கின்றனர்?

    //இப்படி “தமிழ்”, “தமிழர்” என்ற விடயங்கள் தான் எங்கும், எதிலும், எப்போதும் முதன்மையானது அல்லது முதன்மைபெற வேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த விடயமே. //

    ஜெயபாலன் ஆரம்பித்து வைத்த விவாத மேடை ‘தமிழன்’ என்கின்ற அடையாளம் அந்த ‘யாழ்ப்பாண சைவ வேளாண் ஆணாதிக்கத் தில்லுமுல்லுக்காரக் கூட்டத்துக்கு’ மட்டுமேயான தனி உரிமையல்ல (!) என்பதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை நிஸ்தார் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

    //ஆக, சமூகமாற்றம் என்பது அடி மட்டதில் இருந்து பிறக்க ஆயத்தங்கள் செய்யாமல், ஒன்றல்ல பத்து ஏன் நூறு பேராசிரியரிர் ஃகூல்கள் வந்தாலும் யாழ் பல்கலைக்கழகம் அதன் நிலையில் இருந்து மாற்றமடையாது என்பது என் நிலைப்பாடு.//

    இது நிஸ்தாரின் கருத்து மட்டுமே! ஆனால், ஒரு சமூகம் என்கின்ற மாபெரும் நிறுவனம் இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்ரேல் என்கின்ற புதிய நாடு ஸ்தாபிக்கப்பட்டு 30 வருடங்களில் அந்த நாட்டினை தொழினுட்பம், விவசாயம் மற்றும் இன்னபிற துறைகளில் முன்னேறச் செய்ய அடிப்படைக் காரணமாக அமைந்தது அந்தப் ‘புதிய’ நாட்டின் ‘இளமையான’ பல்கலைக்கழகங்களே! அதனை மறுதலிக்க முடியாது.

    //பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ்ப்பாணத்துக்கான மீள்வருகை சமூகமாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டதென்றால் அது மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். ஆனால் அதற்காக அவர் யாழ் பல்கலைக் கழகத்துக்குத்தான் வரவேண்டுமென்பது விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய விடயம். அதாவது பேராசிரியரின் கல்விதகைமை, நிருவாக அனுபவமும், திறமையும் சமூக மாற்றத்தை கொண்டுவருமா என்பது தொடர்பான வாத பிரதிவாதங்கள். //

    இங்கு ஹூலை விடவும் மேலான ஒருவரும் யாழ் பல்கலைக்கழகத்தினுள் வரத்தயாராக இருப்பதாக தெரியவில்லை! “யாழ் பலகலைக்கழக உருத்திராட்சப் பூனைகளுக்கு மணிகட்டப் போவது யார் (?)” என்கின்ற கேள்விக்கு ஹூல் தான் அறுதியான~இறுதியான விடை என்று சொல்ல வரவில்லை! ஆனால், அதற்காக துணைவேந்தர் பதவியில் சண்முகலிங்கனைத் தொடர்ந்தும் இருத்த முடியுமா? அல்லது, வவுனியா வளாகத்தைச் சாம்பாராக்கி சுயலாபம் காணுகின்ற இ. நந்தகுமாரனைக் கூப்பிட்டு பதவிக் கதிரையில் அமர்த்தி அழகு பார்க்க முடியுமா?

    //இதைபோல் இன்னுமொன்று, “உமக்கு தெரியுமா?, இங்கிலாந்து மகாராணிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்தவன் தமிழன்”. //

    மேற்படி உதாரணத்தைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி நிஸ்தார் அவர்களே. இந்த மாதிரியான கண்மூடித்தனமானதும் சுயலாபம் கருதி மட்டுமே செயற்படுவதுமான துர்வழியிலமைந்த கோமாளிப் போக்கினைத்தான் ஜெயபாலன் ஆரம்பித்து வைத்திருக்கின்ற விவாதமன்றம் தொடர்ந்தும் சாடிக் கொண்டிருக்கின்றது. இங்கு நான் நுஹ்மானின் “எங்களின் தாத்தாவிடம் ஓர் யானையிருந்தது… அது கொம்பன் யானை” என்கின்ற வகையில் வருகின்ற கவிதையை உதாரணம் காட்டி – கவிதையின் இறுதியில் நுஹ்மான் கேட்கின்ற கேள்வியையும் முன்வைக்கின்றேன்.

    “கொம்பன் யானைக்காரனின் பேரா – இப்போது உன் நிலைமை ஏன் கவலைக்கிடமாக இருக்கிறது?”

    ஆக மொத்தத்தில், ‘கொம்பன் யானைக்காரர்களின் பேரர்களான’ பழமைவாதிகளிடமிருந்து யாழ் பல்கலையை மீட்டெடுத்து தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு ஏகோபித்த அடையாளமாக அதனை மாற்றுதல் என்கின்ற கனவு நனவாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையா? “கனவு காண்போம், செயற்படுத்துவோம்” என்று புதுமை படைக்கின்ற அப்துல் கலாமின் எதிர்ப்பார்ப்புக்களும் அப்படியாயின் பிழை என்றும் கூறுவீர்களா நிஸ்தார்? தயவு செய்து ‘அக்னிச் சிறகுகளை விரித்துச் சுதந்திரமான ஆக்கபூர்வமான உலகு நோக்கி எமது தமிழ் பேசும் சமூகம் ஆர்ப்பரித்துப் பறப்பதற்கு தடையாக ஒருவரும் இருக்க வேண்டாமே’.

    //பாடக்குறிப்பை மனனம் செய்து அச்சொட்டாக அதை மீளகொடுத்து, அதற்கு திறமைசித்தி பெற்று, அங்கேயே பதவியும் பெற்று புதிய மாணவருக்கு கற்பிக்கும்போது மீண்டும் அதே பாடக்குறிப்பு கைமாறப்படும் போது எப்படி சிறந்த கலாநிதிகளை உருவாக்கமுடியும்? வெறும் கல்லா நிதிகள் அல்லவா உற்பத்தி பண்ணப்படுவர்?//

    மேற்படி கருத்தைக் கூறியதால் தாங்களும் ஜெயபாலனது மிகவும் நீண்டதான விவாத மேடையின் இறுதி முடிவுக்கு உடன்படுகின்றீர்கள் தானே நிஸ்தார்? நன்றிகள்.

    “கல்லாநிதிகளைக் களைந்து” கல்வியின் உண்மையைத் தேடி வருகின்ற ஆக்கபூர்வமான சிந்தனாவாதிகளின் வருகைக்கு ஹூல் வழிசமைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருத்தல் தவிர வேறொரு உபாயமும் இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழ் பேசும் சமூகத்துக்குள் கல்வி/விஞ்ஞானத் தேடல் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வழியாகத் தென்படவில்லை.

    ஜெயபாலனின் விவாத மேடை ‘ஹூலை’ ஒரு சிறந்த, தொலைநோக்குள்ள நிர்வாகிக்கு உதாரணமாக அல்லது ஒரு மாதிரியுருவாக (conceptual model) மட்டுமே உருவகம் செய்துள்ளது. வரப் போவது ஹூலாகவோ, வேறெவராகவோவும் இருக்கலாம். ஆனால் வருபவர் – வட-கிழக்குப் பிரதேச மக்களின் சில பல எதிர்பார்ப்புக்கள்/தேவைகள்/உரிமைகள் என்கின்ற அடிப்படையில் சிந்திக்காமல் ‘சண்முகலிங்கன் போல்’ சித்து விளையாட்டுக்கள் காட்டினால்; அவரும் கடுமையாக சாடப்பட்டு ஒதுக்கப்படும் நிலைதான் ஏற்படும். அப்படி நடந்தால், அது சமூகத்துக்கோ பல்கலைக்கழகத்துக்கோ நல்லதல்லவே!

    பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூக நிறுவனம்….. அது தனிமனிதர்களின் சொத்தல்ல…. அந்த வகையில் அது கைலாசபதியினதோ அதன் பின் வந்தவர்களினதோ ‘வளர்ப்புப் பிள்ளை’ என்று சொல்தலாகாது. மேற்படியோர் சரியான வகையில் சிந்திக்கத் தவறியதன் விளைவே – யாழ் பல்கலையினதும் இலங்கைத் தமிழ் பேசும் சமூகத்தினதும் தற்போதைய சிதிலப் போக்குக்குக் காரணம். இதைத்தான் ஜெயபாலன் ஆரம்பித்துவைத்த விவாத மேடை வெளிக்கொணர்ந்துள்ளது.

    நண்பர் நிஸ்தார் அவர்கள் கொள்கையியல் அடிப்படையிலான தெளிவினைப் பற்றிப் பூரணமாகச் சிந்திக்காமல் அவசரப்பட்டுத் தம் கருத்துக்களைச் சொல்லி விட்டார் என்றே நினைக்கின்றேன். அதுவும் பரவாயில்லைத் தான். கருத்துக்களை தெரிவிக்க எவருக்கும் உரிமையிருக்கின்றது தானே? எப்படியாயினும் – இதுவும் ஒரு ஆக்கபூர்வமான விவாதக் களத்துக்கு வழிசமைக்கட்டும். அதுதான் சமூக மறுமலர்ச்சிக்கான அடிப்படை.

    Reply
  • நளிம் க(G)ஃபூர்
    நளிம் க(G)ஃபூர்

    குணசிங்கம் பரணிதரனின் கருத்துக்களுக்குச் சார்பாக, ஏலவே ஜெயபாலனினால் சுட்டிக்காட்டப்பட்டதொரு விடயத்தை இத்தால் முன்வைக்கின்றேன்.

    //ஆய்விலும் கற்பித்தலிலும் புத்திஜீவித சுதந்திரம், பல்கலைக்கழகத்திற்கான சுயாதீனம், தங்களுடைய சொந்த மதிப்பீடுகள் முதன்மைகளை வரையறுக்கும் சுயாதீன ஒழுங்குகள், சர்வதேசியம் என்ற வடிவங்களும் பல்கலைக்கழகங்கள் சிலவற்றினால் ஏற்கப்பட்டு இருந்தது. இவற்றினைவிடவும் ஆய்வுகளுக்கான தேவைகளின் அதிகரிப்பும் அதற்கான கேள்வியையும் பொருளாதாரத்தையும் பொறுத்து பல்கலைக்கழகங்கள் வேறு வேறு வடிவங்களை முயற்சித்து வருகின்றன. இன்றைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தின் அரசியல் பொருளாதார கலாச்சார அம்சங்களில் ஆளுமை செலுத்துவதனூடு சிந்தனையையும் சமூகக் கட்டமைப்பையும் செப்பனிடுகின்ற, தேவையேற்படின் மாற்றி அமைக்கின்ற சமூகப் பொறியியலை மேற்கொள்கின்றன.//

    ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ள மேற்படி வரைவிலக்கணம்தான் இன்றைய நவீன பல்கலைக்கழகங்கள் பற்றிய எண்ணக்கருக்களின் அடிப்படை. இதன் வழியிலேயே பல்கலைக்கழக நகரங்கள் (campus or university towns) என்கின்ற மாதிரியுருக் கோட்பாடும் (example model concept) நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அஃதாவது ஒரு பல்கலைக்கழகமானது ஒரு பிரதேசத்தில் உள்ள சமூகத்தின் சகல தொழிற்பாடுகளிலும் பங்களிக்கின்ற ஒரு தகவல்-பரிமாற்ற மற்றும் ஆய்வுக் களமாகத் தொழிற்பட்டு – சமூகச் செயற்பாடுகளை மேம்படுத்தலில் முக்கிய பங்களிக்க வேண்டும்.

    இதற்கான உதாரணங்கள் சில –

    1. பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததான teaching hospitalகள்
    2. பல்கலைக்கழகமொன்றன் கல்வித்துறை/பீடம் அந்தப் பிரதேச பாடசாலைகளின் கல்வித் தர மேம்பாடு பற்றிய ஆய்வுகள் செய்தல், பாடசாலைக் கல்வி முன்னேற்றத்துக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்,
    3. பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அந்தப் பிரதேசத்தின் கட்டுமான, நீரியல், தொழினுட்பச் செயற்பாடுகளில் ஆய்வு செய்தலும், ஆலோசனை வழங்கலும்,
    4. பல்கலைக்கழகத்திலுள்ள விவசாய பீடம் அப்பிரதேசம் தொடர்பான விவசாய முன்னேற்ற ஆய்வுகள், விவசாய விரிவாக்கல் தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்,
    5. பல்கலைக்கழகத்தின் கலை/கலாச்சாரப் பீடம் அந்தப் பல்கலைக்கழகத்தின் சார்பாக தான் காணப்படுகின்ற பிரதேச கலாச்சார மேம்பாட்டுக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தலும், பிற பிரதேசங்களுடன் கலாச்சார பரிமாற்றத்துக்கான களமாக விளங்குதலும்…..

    அஃதாவது மேற்படி உதாரணங்களின் அடிப்படையில், ஒரு சமூகத்தின் சகல செயற்பாடுகளிலும் காத்திரமான பங்களிப்பு வழங்கக்குடிய முக்கிய சமூக நிறுவனம் பல்கலைக்கழகமே என்பது இத்தால் தெளிவாக முன்வைக்கப்படுகின்றது. அந்த வகையில், நிஸ்தார் ‘பல்கலைக்கழகம் பற்றிய எண்ணக்கருக்கள்’ தொடர்பாக பூரணமான தெளிவில்லாமலேயே தனது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் எனத்தான் நான் நினைக்கின்றேன்.

    ஆகவே, ஜெயபாலன் முன்வைத்துள்ள //ஒரு சமூக நிறுவனம் என்கின்ற வகையில் யாழ் பல்கலைக்கழகம் தன் கடமையைச் சரிவரச் செய்யத் தவறியுள்ளது// என்கின்ற கருத்தை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதற்கு நிஸ்தார் உடன்படுவார் என்றே நான் நினைக்கின்றேன்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /பாடக்குறிப்பை மனனம் செய்து அச்சொட்டாக அதை மீளகொடுத்து, அதற்கு திறமைசித்தி பெற்று, அங்கேயே பதவியும் பெற்று புதிய மாணவருக்கு கற்பிக்கும்போது மீண்டும் அதே பாடக்குறிப்பு கைமாறப்படும் போது எப்படி சிறந்த கலாநிதிகளை உருவாக்கமுடியும்? /– முகமட் எஸ்.ஆர்.

    “மனப்பாடம்” செய்வது என்பது இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேர் அல்ல்து மேற்கத்திய “லாஜிக்” என்பதிலிருந்து வேறுபட்டது.
    “உபநிஷ்தங்களின்” பிராமணா எனப்படும் “மத சடங்குகளின்” ஸ்லோகங்களை மனப்பாடம் செயது நடத்துபவர்களே “பிராமணர்கள்” – அதன் அர்த்ததை புரிந்தவர்களும் இல்லை, அதை உருவாக்கியவர்களும் பிராமணர்கள் இல்லை!. அதற்காக அதற்கு அர்த்தம் இல்லை என்பது இல்லை. அதனுடைய வாலே நீங்கள் சொல்லுவது. புத்தமதம் இந்த சடங்குகளின் இயந்திரத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. ஆனால் அர்த்தங்களை மாற்றவில்லை! அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் பரவலாக இது பற்றியான புரிந்துணர்வு ஏற்ப்பட்டுள்ளது. அர்த்தங்களை ஓரளவுக்கு எளிமையாக புரிந்தவர்களை மதிக்கவே செய்கிறார்கள். தலை நிறைய மனப்பாடங்களுடன் “தலை கனத்துடன்” வருபவர்களே நகையாடப்படுகின்றனர்! (இயற்கை விஞ்ஞானங்களிலும்).

    இலங்கைத் தமிழர்களுக்கு (முஸ்லீம்கள் உட்பட), தமிழ்நாடு என்றாலே ஓரளவுக்கு “விஷயம் புரியாதவர்கள்” என்ற எண்ணம் உள்ளது. இது கோபிக்கக் கூடிய விஷயமல்ல ஆனால், இந்த கருத்தியலால் கண்கள் மறைக்கப்படுகின்றன./இதைபோல் இன்னுமொன்று, “உமக்கு தெரியுமா?, இங்கிலாந்து மகாராணிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்தவன் தமிழன்”. இப்படி ஒரு சம்பாசணையை எனக்கு ஜேர்மனியில் கேட்க நேர்ந்தபோது, இப்படி “தமிழ்”, “தமிழர்” என்ற விடயங்கள் தான் எங்கும், எதிலும், எப்போதும் முதன்மையானது அல்லது முதன்மைபெற வேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த விடயமே./– இதுபோன்ற உங்களின் கருத்துக்களை தமிழ்நாட்டுக்காரனான நானும் கூறுகிறேன்.

    எனக்கு இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ப்து 1980 களுக்கு முன்பு தெரியாது. இத்தகைய கருத்தினால் பொறாமைக்காரன்(பரிதாபம் என்பது சரியாக இருக்கும்) என்று பிரச்சாரப்படும் என்பதுகூட சமீபத்திய தெளிவே!. இப்படியாக பொறமை படக்கூடியவர்களைப் பற்றி “மோட்டு” தமிழ்நாட்டு கிரிமினல்கள் கவலைப்படுவதில்லை!.வே.பிரபாகரனை “உசுப்பேத்திவிட்டு” எப்படி முள்ளிய வாய்க்காலில் விட்டார்களோ, அதேபோல் நீங்கள் பொறாமைபடுகிறவர்களை? “தமிழின் தங்கங்களாக” உசுப்பேத்திவிட்டு நக்கலாக பொறிகளுக்குள் தள்ளுவது நேரடியாக என்னால் உணரப்படுகிறது (ஆராய்க)!. இவர்களும் (தமிழ்நாடு) இதை தங்கள் நடைமுறை இயங்கியலின் அடுத்தக்கட்ட நகர்வாகவே செய்கிறர்களே தவிர, ஆபத்தை உணர்ந்து செய்வதில்லை!. இந்த கோணத்திலேயே என்னுடைய விமர்சனங்கள் அமைகின்றன!.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    நல்ல ஒரு கட்டுரை, இதில் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை எல்லாமே கலந்து படைத்துள்ளார் எழுத்தாளார். நிற்க

    நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரையில் எமது சமூகத்தில் அவதானித்த மாற்றங்கள் என்னவென்றால், எனது ஆரம்ப பாடசாலைக்காலங்களில் வெள்ளாளர்,வெள்ளாளர் அல்லாத வேறு சாதியினருக்கு தேங்காய்ச்சிரட்டை அல்லது பச்சைப்பணைஓலையினால் செய்யப்பட்ட பிளாவில் தண்ணீர் அல்லது தேனீர் கொடுத்தார்கள், பின்னர் எனது உயர்தர வகுப்புகாலங்களில் இது கிளாசாகவும்(Glass) சில்வர் டம்ளர்களாகவும் மாறி அதை வேலிமட்டையில் தொங்கவிடுவார்கள். அந்தக் காலங்களில் எனது ஊரில் கள்ளுத்தவறணைகளில், பிளாவினால் சாதிச்சண்டை ஏற்பட்டு அது வாள்வெட்டு, குடிசைஎரிப்புவரை முடிந்திருக்கின்றன. இன்று முட்கம்பிமுகாம்களில் இது மலசலகூட சண்டயாக வளர்ச்சியடைந்துள்ளது அவ்வளவுதான் யாழ்மையவாதிகளில் ஏற்பட்ட மாற்றம். முன்னரெல்லாம் வை.சி.கு, மலாயன் கபே அல்லது தாமோதர விலாஸ் போன்ற கடைகளில் மட்டும்தான் சாப்பிடுவார்கள், பின்னர் இவர்களின் பிரியமாண சாப்பாடு கொத்துறொட்டியாக வளர்ச்சியடைந்தது. இப்ப கள்ளுக்கொட்டில்களில் எல்லோரும் ஒரே பிளாஸ்ரிக் கப்(Plastic cup)களில்தான் கள் அருந்துவதாக கேள்வி.

    Reply
  • நளிம் க(G)ஃபூர்
    நளிம் க(G)ஃபூர்

    “யாழ் பல்கலையானது ஒரு சமூக நிறுவனம் என்கின்ற வகையில் தனது பங்களிப்பைச் சரிவரச் செய்யவில்லை” என்னும் ஜெயபாலனின் கருத்தும் – அதற்கு ‘எதிர்வாதமாக’ நிஸ்தாரினால் எழுப்பப்பட்டுள்ள, “பல்கலைக்கழகமொன்று ஒரு சமுக நிறுவனமாக கருதப்பட முடியுமா?” என்கின்ற கேள்வியும் அடிப்படையில்; கீழ்வரும் தேடல்களின் சாரமாகவே உருவாகியுள்ளன:-

    1. பல்கலைக்கழகம் பற்றிய எண்ணக்கரு,
    2. அறிவார்த்தமான தேடல் சார்ந்த சமூக மறுமலர்ச்சி,
    3. யாழ் பல்கலையின் குறை நிறைகளும் – அதன் சமூகப் பிரக்ஞையற்ற தன்மையும், மற்றும்,
    4. மேற்படி விடயங்களின் அடிப்படையில் முன்னேற்றப்பாதை பற்றிய புதிய சிந்தனைகள்.

    எனவே, ஜெயபாலனும் நிஸ்தாரும் பொதுவான ஒரு குறிக்கோளின் அடிப்படையிலேயே இரு வேறு பார்வைகளை முன்வைத்து காத்திரமானதொரு விவாதமேடைக்கு அடித்தளமிட்டுள்ளனர். இவர்கள் இருவரது குறிக்கோளும் ஒன்றுதான் – என்ன (?) அவர்கள் எடுத்திருக்கின்ற பார்வைகள்தான் சற்று வேறானவை.

    இங்கு:-

    //“மனப்பாடம்” செய்வது என்பது இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேர் அல்ல்து மேற்கத்திய “லாஜிக்” என்பதிலிருந்து வேறுபட்டது. “உபநிஷ்தங்களின்” பிராமணா எனப்படும் “மத சடங்குகளின்” ஸ்லோகங்களை மனப்பாடம் செயது நடத்துபவர்களே “பிராமணர்கள்” – அதன் அர்த்ததை புரிந்தவர்களும் இல்லை, அதை உருவாக்கியவர்களும் பிராமணர்கள் இல்லை!. அதற்காக அதற்கு அர்த்தம் இல்லை என்பது இல்லை. அதனுடைய வாலே நீங்கள் சொல்லுவது. புத்தமதம் இந்த சடங்குகளின் இயந்திரத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. ஆனால் அர்த்தங்களை மாற்றவில்லை! // என்கின்ற டெமோக்கிறசியின் கருத்து இவ்விவாத மேடைக்கு எந்த விதத்தில் பங்களிப்பை வழங்கும் என்று எனக்குப் புரியவில்லை. ‘ஆக்கபூர்வமான சிந்தனைகள், அறிவார்த்தமான தேடல் – புதுமை’ போன்ற விடயங்களை ஊக்குவித்து, புதியதொரு கோணத்தில் அறிவார்த்தமான சமூக மறுமலர்ச்சியைத் தேடியே இந்தப் பாரிய விவாத மேடையானது ஜெயபாலனாலும், நிஸ்தாராலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. “மனப்பாடம் செய்யும்….. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைத்தனமான” நடவடிக்கைகள் நிஸ்தாரினாலும், ஜெயபாலனினாலும் பல வேறுபட்ட கோணங்களில் மிகவும் வன்மையாகச் சாடப்பட்டுத்தான் வந்திருக்கின்றன. அதனை இவ்விவாத மேடை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுமிருக்கின்றது.

    மேலும் //எனக்கு இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது 1980 களுக்கு முன்பு தெரியாது// என்று டெமோக்கிறசி கூறியுள்ள வசனம் மிக்க கண்டனத்துக்குரியது.

    ஜெயபாலன், நிஸ்தார் போன்ற பலரும் தங்களது முகவரிகளைத் தொலைத்து விட்டு, தமது நாட்டை விட்டே வெளியேறித் துன்புற்று நொந்து வெந்து கொண்டிருக்கின்ற போது…… “இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள் என்பது 1980ற்குப் பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது” என்கின்ற வகையில் கூறப்பட்ட கருத்து, தேசம்நெற் போன்றதொரு மாபெரும் ஊடகக்களத்தில் முன்வைக்க முடியாதது. இத்தகைய கருத்து பலரையும் மிகுந்த விசனத்துக்கு உள்ளாக்கி மனம்வருந்தச் செய்யும். டெமோக்கிறசி political connectedness இனைப் பற்றி சிந்திக்காது அவசரப்பட்டுத் தெரிவித்துவிட்ட கருத்துத்தான் அது என்று நினைக்கின்றேன். டெமோக்கிறசியின் அறியாமை மற்றும் அவசரத்தன்மை தொடர்பாக என்னால் பரிதாபப்படத்தான் முடிகின்றது.

    அண்மையில் இலங்கைக்கு விசேட தேவைகள் உள்ளவர்களுக்கான ஒலிம்பிக்ஸ் (special Olympics) நடாத்துவது தொடர்பாக வந்து, “தான் ஒரு தமிழன் என்கின்ற வகையில் கட்டாயம் யாழ் மண்ணைத் தரிசிக்க வேண்டும்” என்று முனைப்பாக நின்ற பேராசிரியர். நகராஜன் என்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த sports scientist வெளிப்படையாகச் சொன்ன கருத்து இங்கு என்னால் முன்வைக்கப்படுகின்றது…….

    “மு. வரதராசனாரும்…. கல்கியும் எழுதிய எழுத்துக்களின் அடிப்படையில் யாழ் மண்ணும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களும் பற்றிய பிரமிப்பு என்னிடம் 1960களில் இருந்தே ஊற்றெடுக்கத் தொடங்கியது… ஆயினும், யாழ் மண்ணின் தற்போதைய நிலையும் சிதிலப் போக்கும் என்னை வருந்தவைக்கின்றது. நான் இன்னமும் மு. வரதராசனார் புகழ்ந்து போற்றிய ‘உண்மையான’ இலங்கையின் தமிழ் பேசும் மக்களை தேடியலைந்து கொண்டே தான் இருக்கின்றேன்…. ஒரு காலத்தில் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் சிந்தனைகளும் கருத்துக்களும் தமிழரென்று அடையாளப்படுத்தப் படுகின்ற பல்வகைத்தன்மை வாய்ந்த சமூகத்திற்கு (a vast diverse global community) விழிப்புணர்வு ஊட்டுபனவாக இருந்தன….”

    டெமோக்கிறசி அவர்களே எங்களுக்கும் காலம் காலமாக அடையாளம் ஒன்று உண்டு…. அதனை 1980களுக்குப் பிறகுதான் நீங்கள் விளங்கிக் கொண்டீர்கள் என்றால் அது உங்கள் தனிப்பட்ட விடயம். தயவு செய்து விவாதத்தின் போக்கிற்குப் பொருத்தப்பாடற்ற விடயங்களைக் கொணர்ந்து திணித்துப் புகுத்தி கருத்தியல் ஓட்டத்தின் பாதையைத் திசை திருப்ப வேண்டாம். விவாதத்தை வலுவூட்டுவதற்காக – சார்பாகவோ, எதிராகவோ தரமான கருத்துக்களைச் சொல்வதுதான் பொருத்தமானது.

    எதற்கும் மு. வரதராசனார் பற்றிய விடயங்களைத் தேடிப் பார்க்கலாமே டெமோக்கிறசி…..

    நன்றி.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    எத்தனை கலை, கணித, விஞ்ஞான, தத்துவ மேதைகளை உலகப் பல்கலைக்கழகங்கள், ஒவ்வொரு வருடமும் வெளித்தள்ளுகின்றன என்பது தெரியாமல், சிங்கள பவுத்த பேரினவாத அரசின் நிர்வாகத்தில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் பிறழ்வுகளை தமிழர் ஆட்சியின் முறைகேடாக காட்ட முயல்வது அறிவுடமை ஆகாது. உலகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடக்கக் கூடாததொன்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறவில்லை.

    Ph.D.; MBA போன்ற பட்டப் படிப்புகள் குறைந்த நாளில், நிறைந்த பணத்தில் பெறலாமிந்த வெளிநாடுகளில் என்பதை மறந்து, திடீரென யாழ் பல்கலைக்கழகப் பற்று வந்து, தொடர்கட்டுரை நியாயம் பிளக்கிற சூட்சுமமென்ன?

    நிஸ்தார், தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழ்த்தேசிய அகமுரண்பாடுகளை களைந்து கொள்ளவும் ஆயுதப் புரட்சியொன்றே சரியான வழியென்பதை, நிஷ்டையிலிருந்து எழுந்து சிந்தியுங்கள்.

    Reply
  • தேவராசா
    தேவராசா

    இது தளபதியின் கருத்து //முன்னரெல்லாம் வை.சி.கு, மலாயன் கபே அல்லது தாமோதர விலாஸ் போன்ற கடைகளில் மட்டும்தான் சாப்பிடுவார்கள், பின்னர் இவர்களின் பிரியமான சாப்பாடு கொத்துறொட்டியாக வளர்ச்சியடைந்தது. இப்ப கள்ளுக்கொட்டில்களில் எல்லோரும் ஒரே பிளாஸ்ரிக் கப்(Plastic cup)களில்தான் கள் அருந்துவதாக கேள்வி//

    மலாயன் க்ஃபேயிற்கும், கள்ளுக்கடை பிளாஸ்ரிக் கோப்பைகளுக்கும் – யாழ்ப்பாணப் பல்கலையில் ஏற்பட வேண்டிய சமூக மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? அது தெரியவில்லை!

    எப்படியாயினும், ‘குண்டுச் சட்டிக்குள் விமானமோட்டும்’ குறுகிய மனப்பாங்கிலிருந்து இலங்கைத் தமிழ் சமூகம் இன்னமும் விடுதலை பெறவில்லை என்பதே இத்தால் வெளிப்படை.நிஸ்தார் சொல்ல வந்த கருத்து என்னதானென்று விளங்க முயற்சிக்காமலே எழுதப்பட்ட வசனங்கள் இவை. இது ஒருவகையில் இலங்கைத் தமிழரின் சிதிலப் போக்குக்கு அடிப்படைக் காரணமான ‘அதிமேதாவித்தனத்தை’ சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. உதாரணத்தை சுட்டிக் காட்டியதற்காக நண்பர் தளபதிக்கு மிக்க நன்றிகள்.

    Reply
  • Kumar
    Kumar

    நிஸ்தாரின் கட்டுரை நடுநிலையான பல கருத்துக்களை முன்வைத்துள்ளது. பாராட்டுக்கள். UOJ பற்றிய விமர்சனத்தில் பல positive விடயங்களை உள்ளடக்கினால் கட்டுரையாளர்களின் நோக்கம் ஹூல் மட்டுமில்லை, உண்மையான UOJ இன் வளர்ச்சியே என்று கருதலாம். தொடர்ந்து பல வருடம் ஜனாதிபதி விருது வாங்கும் ஆராய்ச்சியாளர்களும் அங்கு உள்ளனர் என்பது ராஜதுரைக்கும் மற்றும் நளிமுக்கும் (மற்றும் பலர்) நன்கு தெரியும் என நினைக்கின்றேன். அப்படியிருக்க, ஒட்டுமொத்தமாக UOJ இன் மேல் சாணி அடிப்பதில் ஒரு வித நியாயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனானப்பட்ட ஹாவார்ட் பல்கலைகழகத்திலையே ஊழல் என்று சமீபத்தில் வந்த செய்திகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அதற்காக சண்முகலிங்கத்திற்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். அவர் எந்த அரசியல் சக்தியின் உதவியுடன் கதிரையைப் பிடித்தவர் என்று தேசத்தில் விமர்சிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

    Reply
  • N. ஞானகுமாரன்
    N. ஞானகுமாரன்

    //குதிரை ஓட்டத்துடன், கல்விக்கடை(tutory) நடத்தல், பரீட்சை வினாத்தாள் வெளியாக்கம், வினாத்தாள் திருத்த நிலையத்தில் (paper correction centers) ஆள் வைத்து புள்ளி ஏற்றல் என்ற பல்வேறு விடயங்கள் யாழ் சமூகத்தை பொறுத்தவரை ஒரு வெளிப்படை இரகசியம். இது ஒரு சமூகத்துக்கு எதிரான குற்றச்செயல் என்பதை எந்த பாடசாலை வெறுத்து ஒதுக்கிறது? மாறக கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன.//

    டியூட்டறிகள் பற்றி நிஸ்தார் முக்கியமான உதாரணம் சொல்லி இருக்கிறார். டியூசன் மனப்பாங்கு பல்கலைக்களக லெக்சறராக வந்த பிற்பாடும் சிலருக்கு விட்டுப் போகாது. யாழ்ப்பாண பல்கலைக்களகத்தின் பிறயோக விஞ்ஞாண பீடத்தின் டீன் எஸ். குகனேசன் என்பவர் பெரிய முக்கியமான பதவியில் இருந்தாலும் கூட தனது பெக்கல்றிக்கு பக்கத்திலே, அருகாமையில் ஒரு டியூட்டறி நடத்தி வருகிறார். இந்த செயலுக்கு சட்டபூர்வமான அணுமதி இருக்கிறதா?

    ஒரு விரிவுறையாளர், பெக்கல்றியின் தலமை அதிகாரி என்ற வகையில் இவர் கல்வி உலகத்துக்கு ஒரு உதவியும் செய்யுறது இல்லை. மாறாக அவரது பொழுதுகள் அநேகம் அவரது டியூட்டறியின் முன்னேற்றம் பற்றி யோசிக்கிறதிலேதான் செலவாகுது. இவரும் அவர்ட டியூட்டறியில சின்னப் பிள்ளைகளுக்கு பாடங்களை விளங்காமலே மனப்பாடம் பண்ணி ‘சப்பித் துப்பும்’ முறைபற்றித் தான் சொல்லித் தருகிறாராம்.

    Reply
  • Aaivu
    Aaivu

    Dear Kumar,

    “தொடர்ந்து பல வருடம் ஜனாதிபதி விருது வாங்கும் ஆராய்ச்சியாளர்களும் அங்கு உள்ளனர் என்பது ராஜதுரைக்கும் மற்றும் நளிமுக்கும் (மற்றும் பலர்) நன்கு தெரியும் என நினைக்கின்றேன். அப்படியிருக்க, ஒட்டுமொத்தமாக UOJ இன் மேல் சாணி அடிப்பதில் ஒரு வித நியாயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை”

    Not more than one or two people do their research as the consequence of their Ph.d program. The training and knowledge are acquired form the Universities in abroad (UK or USA) not form the UOJ. The argument is, why the so called UOJ is lacking in its effort?

    Further, the objective of this debate is to promote and acquire those kind of people in the system.

    As you know if this situation continue for some years, the said category would be eliminated by this University administration. As such, we demand for a good administration for the betterment of our society.

    Dear Kumar, first of all you should understand the situation in UOJ; how they deteriorating the academic goals and other social factors.

    Reply
  • Suppan
    Suppan

    “அதற்காக சண்முகலிங்கத்திற்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். அவர் எந்த அரசியல் சக்தியின் உதவியுடன் கதிரையைப் பிடித்தவர் என்று தேசத்தில் விமர்சிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை.”

    Not only Shanmugalingan but also Mohanathas were appointed as Vice-Chancellors by the President owing to Doglus Devanantha influence. Both of of them were 3rd on the list (University council preference) and their academic background is extremely corrupted. Because of Balasuntharmpillai both of them were appointed as Professors. These are the similarities between them owing such reason Devantha manipulated in their appointment as Vice-Chancellor.

    Reply
  • குணசிங்கம் பரணிதரன்
    குணசிங்கம் பரணிதரன்

    //Ph.D.; MBA போன்ற பட்டப் படிப்புகள் குறைந்த நாளில், நிறைந்த பணத்தில் பெறலாமிந்த வெளிநாடுகளில் என்பதை மறந்து, திடீரென யாழ் பல்கலைக்கழகப் பற்று வந்து, தொடர்கட்டுரை நியாயம் பிளக்கிற சூட்சுமமென்ன?// (தமிழ்வாதம் on August 21, 2010 3:03 am )

    //ஆனானப்பட்ட ஹாவார்ட் பல்கலைகழகத்திலையே ஊழல் என்று சமீபத்தில் வந்த செய்திகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.// (Kumar on August 21, 2010 6:38 am )

    தமிழ்வாதம், குமார் என்பவர்கள் இருவராலும் கூறப்பட்டுள்ள மேற்படி கருத்துக்கள் – “வெள்ளைக்காரன் சீரழித்தான், தொடர்ந்தும் சீரழிக்கின்றான் என்பதனால் நாங்கள் சீரழிந்தோம்” என்று சொல்லித் தப்ப முயற்சிக்கும் தமிழ் கல்விமான்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் யுக்தியாகும்.

    எங்கு சென்றாலுமே, அங்கங்கெல்லாம் உள்ள கீழ்த்தரமான விடயங்ளைப் பற்றி மட்டுமே அறிந்து கொண்டு கெட்டழிந்து குட்டிச்சுவராகப் போகின்றோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உலாவரும் மனப்பாங்கு மாறினால் தான் எல்லாமே சாத்தியமாகும்.

    எம்.பி அல்லது மினிஸ்டரைச் சரிக்கட்டி வேலை நியமனம் பெற எத்தனிக்கின்ற சராசரிக்கும் கீழானதும், சிந்தனையாளர்களால் தொடர்ந்தும் சாடப்படுகின்றதுமான ஈனத்தனமான – இலங்கைத் தமிழ் சமூகத்தில் புற்று நோயாகப் புரையோடிப் போய்விட்ட ஒரு மனப்பாங்கையே தமிழ்வாதம் அவர்களின் // Ph.D.; MBA போன்ற பட்டப் படிப்புகள் குறைந்த நாளில், நிறைந்த பணத்தில் பெறலாமிந்த வெளிநாடுகளில் என்பதை மறந்து, திடீரென யாழ் பல்கலைக்கழகப் பற்று வந்து, தொடர்கட்டுரை நியாயம் பிளக்கிற சூட்சுமமென்ன?// // என்கின்ற கருத்து வலியுறுத்துகின்றது. இது வேதனைக்குரிய விடயம். வருந்துகின்றேன்.

    “பிழைகளை விட்டிருக்கின்றோம்…… அதனால் பாதிக்கப்படுள்ளோம். அவற்றை உணர்ந்து திருந்தி முன்னேறக் கடமைப் பட்டுள்ளோம்”, என்பதனை ஏற்க மறுக்கின்ற பழமைவாதப் பெருமைக்காரத்தனம் மாறாவிட்டால் ஒன்றுமே மிஞ்சப் போவது இல்லை!

    நண்பர் ‘ஆய்வு’ சுட்டிக் காட்டியது போல, “ஏன், யாழ் பல்கலைக்கழகத்தில் தரமான ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடிய சூழல் இல்லை?” என்பது பற்றி நிலவரங்களை அறிந்து தெளிந்த பின்னரேயே கதைத்தல் நல்லது. யாழ் பல்கலைக்கழகத்தில்…… ஓரிருவர் வெளிநாட்டில் சென்று கலாநிதிப்பட்டங்கள் பெற்றுத் தொடர்ந்தும் வெளிநாட்டு இணைப்புகள் மூலம் ஆய்வுகளை செய்கின்றார்கள்தான். அதை இல்லை என்று சொல்ல வரவில்லை!

    ஆனால், ஏன் ஓரிருவர் மட்டுமேதான் அப்படியான வகையில் சாதிக்க முடிகின்றது? உண்மையான கல்விக்களமாக யாழ் பல்கலைக்கழகம் காணப்படுமேயாயின் – அங்குள்ள குப்பன், சுப்பன் யாவருமல்லவா சாதித்துக் காட்டுவார்கள்?

    மேலும், ‘அந்த ஓரிருவர்’ ஏன் தமது ஆய்வுகளை யாழ் மண்ணிலோ, வடபிராந்தியத்திலோ செய்வதில்லை? வெளிநாடுகளில் உள்ள தம் சகபாடிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளிலேயே தம் ஆய்வுகளை முடித்துக் கொள்கின்ற இவர்கள் – யாழ் பல்கலைக்கழகம் தருகின்ற சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு, வேறொரு நாட்டுப் பல்கலைக்கழகத்துக்கல்லவா உழைத்துக் கொடுக்கின்றார்கள்?? அப்படியாயின், இவர்களும் ஒருவகையில் சற்றுப் படித்த சண்முகலிங்கன்கள் தான் அல்லவா?

    இலங்கையின் வடக்குப் பிராந்தியத்துக்கு எது தேவை? எது தேவையில்லை? என்கிற அடிப்படையறிவுமே இல்லாமல் – வேறொரு நாட்டின் வசதி மிகுந்த ஆய்வுகூடங்களில் இவர்கள் செய்கின்ற ஆய்வுகளால் – யாழ்ப்பாணத்தில் சுபீட்சம் வந்து கொட்டப்போகின்றதா?

    அந்த ‘ஓரிருவரும்’ உண்மையான கல்வியாளர்கள் என்றால், யாழ் மண்ணிலேயே ஆய்வுக்களங்களை நிறுவி, ஆய்வுகூடங்களை விருத்தி செய்து, பாரபட்சமற்ற அறிவின் தேடலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதற்காகத்தான் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் என்ற பதவியும் சம்பளமும் கிட்டுகின்றது. இந்த ஓரிருவருக்கும்….. “ஏழைகளுக்கு பாண் சாப்பிட வசதியில்லையா? ஐயோ பாவம்…. அவர்களை அப்படியென்றால் கேக் சாப்பிடச் சொல்லலாமே” என்று சொல்லிப் பிரெஞ்சுப் புரட்சியின் போது கழுத்தறுபட்ட அரசி மேரி அன்றெனெற்றுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    // தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழ்த்தேசிய அகமுரண்பாடுகளை களைந்து கொள்ளவும் ஆயுதப் புரட்சியொன்றே சரியான வழியென்பதை, நிஷ்டையிலிருந்து எழுந்து சிந்தியுங்கள்.// (தமிழ்வாதம் on August 21, 2010 3:03 am)

    இங்கு எந்த “ஆயுதம்” பற்றிச் சொல்ல வருகின்றீர்கள் திரு. தமிழ்வாதம் அவர்களே? அரசியல், ஆயுதம், அவற்றுடனிணைந்த வெறித்தனம் என்பவற்றால் சீர்குலைந்த இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் அறிவார்த்தமாகச் சிந்தித்து, விழிப்புணர்வு அடைந்து, கடினமான உழைப்பின் அடிப்படையில் முன்னெறுவதுதான் சரியான வழி. அதனைத்தான் நிஸ்தாரும், ஜெயபாலனும் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். ஆகையால், திரு. தமிழ்வாதம் அவர்கள் ஆயுதம் என்று ‘புத்தகங்களையும்’, ‘பேனாக்கள்’, ‘பென்சில்களையும்’ மட்டுமே சொல்கின்றார் என்றுதான் நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தானே….. திரு. தமிழ்வாதம் அவர்களே??

    ஸ்டைலான கதாநாயகன் – வில்லனுக்கெதிராக வீறுகொண்டெழுந்து போராடி, போராட்டத்துக்கு நடுவே மும்பாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகியுடன் இரண்டு டூயட்டுக்கள் பாடியாடி, மூன்று மணித்தியாலத்தில் சூரசம்ஹாரம் செய்து சுபம் என்று முடிப்பதற்கு – இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை ஒன்றும் கோலிவுட் மசாலாப்படமல்ல! அதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    விடயம் விளங்காமலும், நசுக்கப்பட்டவர்களின் வேதனைகள் புரியாமலும், சமாதானம், நல்லிணக்கம் பற்றிய புரிந்துணர்வு அல்லாமலும்…… ஆயுதம்… ஆயுதம் என்று வெறுமனே கூறுவது சமூக விரோதச்செயல்! இந்த விவாதமேடை ஒரு கல்விநிறுவனத்தின் முன்னேற்றப் போக்குப் பற்றிய அலசல் மட்டுமே – இதற்குள் தேவையில்லாத வறட்டுச் சித்தாந்தங்களை கொணர்ந்து திணிக்க ஒருவருக்குமே உரிமையில்லை!

    சிந்தித்துச் செயல்படுதல் அனைவருக்குமே நல்லது…. அது பேராசிரியர் ஹூலாகவிருக்கட்டும், ஜெயபாலனாகவிருக்கட்டும், நிஸ்தாராகவிருக்கட்டும், தமிழ்வாதமாக இருக்கட்டும், நளிமாக இருக்கட்டும் – அனைவருக்குமே பொருந்தும்!

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    நண்பர் தேவராசா!
    நீங்கள் என்னை உங்கள் தமிழால் திட்டுகிறீர்களா அல்லது ஏளனம் செய்கிறீர்களா என்பது எனக்கு புரிவதற்கு கொஞ்சம் கடினமாக உள்ளது, இருந்தாலும் நீங்கள் எழுதியதிற்கு கட்டாயமாக பதில்தர வேண்டிய நிலையில் என்னைத்தள்ளிவிட்டுள்ளீர்கள், ஆகையினால் பண்ணாடைக்கும் பணங்கள்ளுக்கும் இருக்கும் தொடர்பை நீங்கள் நிட்சயமாக அறிந்திருப்பீர்களென நான் நம்புகின்றேன். அதேபோல cut and paste மூலம் எனது கருத்தை நீங்கள் மாற்றமுயல்வதையும் உணர்கிறேன். மலாயன் கபேக்கும் – கொத்துறொட்டி கடைகளுக்கும் உள்ள தொடர்பை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது போவதற்கு, நீங்கள் யாழ்மையவாதிகளை புரிந்துவைத்திருப்பது அவ்வளவுதான். இருந்தாலும் உங்கள் அறிவை கூர்மையாக்க சில கேள்விகளுடன்:

    கொத்துறொட்டி யாழ்ப்பாணத்தின் எந்த பிரதேசங்களில் முதலில் அறிமுகமாகியது?

    மாட்டிறைச்சிக்கும் யாழ் – சைவவேளாளர்களுக்கும் என்ன சம்பந்தம்?

    இன்று(modified) கொத்துறொட்டி சாப்பிடாத அல்லது வீட்டிலேயே இரகசியமாக செய்து சாப்பிடாத யாழ் – சைவவேளாளர்கள் இருக்கிறார்களா?

    அன்றும் இன்றும் யாழ் பல்கலைக்கழகம் எந்த மணப்பாங்குடன் நிர்வகிக்கப்படுகிறது?

    இந்த கேள்விகளினூடாக மலாயன் கபேக்கும் – கள்ளுக்கொட்டிலுக்கும் – யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் – யாழ்மையவாத ஆதிக்கச மூகத்திற்கும் உள்ளதொடர்பை உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன்.

    ஓரு கொசுறுக்கேள்வி:
    யாழ் – கலட்டியில் கள்ளுக்குடிப்பவர்கள் யார்?

    Reply
  • nantha
    nantha

    “நல்ல சம்பளம் உள்ள உத்தியோகம்” என்பது இலங்கையில் பொதுவான எண்ணம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அந்த எண்ணம் சற்று அதிகம்! அரசியல் ரீதியாக “யாழ்ப்பாண மக்கள்” யாழ் பல்கலைக் கழகம் அமைவதை எதிர்த்தனர். அவர்களுடைய தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்த பல்கலைக் கழக திறப்புவிழாவிற்கு வருகை தந்த அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரனாயக்காவிட்கு கறுப்புக்கொடி காட்டினர்.

    பரமேஸ்வராக் கல்லூரியையும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியையும் அரசு பொறுப்பேற்றதை தூற்றினர். பின்னர் அதே அரசியல்வாதிகள் தங்கள் ஆக்களை “உத்தியோகத்தில்” அமர்த்த சகல மந்திரிமாரையும் அணுகினர். யு என் பி அரசு பதவி ஏற்றதும் தங்கள் “செல்வாக்கினால்” யாழ்ப்பாணக் கல்லூரியை “தென்னிந்திய திருச்சபை” திரும்ப எடுத்துக் கொண்டது. பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் இந்த தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த முக்கியஸ்தர்.

    பல்கலைக் கழகம் தமிழர்களுக்கு நன்மை செய்விக்காது என்ற கொள்கையுடைய அரசியல் போக்குக் கொண்டவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களும் பின்னர் உத்தியோகத்துக்கு முண்டியடித்தது “வெறும் சம்பளத்துக்கே” ஒழிய அந்த சமூக முன்னேற்றத்துக்கல்ல. கொழும்பில் இருந்த அரசுக்கு சாமரம் வீசித் தங்கள் பதவியை “தங்க” வைப்பதில் அங்கு உத்தியோகம் பெற்றவர்கள் நடந்து கொண்டார்களே ஒழிய சமூக முன்னேற்றம் பற்றிச் சிந்திக்கவில்லை. புலி வந்தால் புலிக்கு ஆதரவு, எலி வந்தால் எலிக்கு ஆதரவு என்ற கோட்பாடே யாழ் பல்கலைக் கழகத்தின் “ஜீவநாடி” கோட்பாடாக அமைந்தது.

    அந்த நாட்களில் நயினாதீவைச் சேர்ந்த இராசநாயகம் என்பவர் அந்த பல்கலைக் கழகத்தின் முழுநேர மாணவர். ஆனால் அவர் யாழ் கல்வித்திணைக்களத்திலும் முழுநேர சம்பளம் பெறும் ஊழியர். இலங்கையின் சட்ட முறைப்படி இது எப்படி சாத்தியமானது? இரண்டு அரசு நிறுவனங்களும் இந்த சட்டமீறலைக் “கண்டுக்கவே” இல்லை. பின்னர் இந்த இராசநாயகம் ஒரு புலி முக்கியஸ்தர். இது ஒரு உதாரணம் மாத்திரமே. இவ்வாறான “மோசடிகள்” பல்கலைக் கழகத்தில் குதிரை கஜேந்திரன் வரை நீடிக்கிறது. இந்த மோசடிகளை ஆதரிப்பவர்கள் எப்படி அந்த அரச நிறுவனத்தை சமூகத்துக்குப் பயன் உள்ளதாக மாற்ற முடியும்?

    Reply
  • Rajasingham
    Rajasingham

    The word ‘University’ represents something universal and whole. University education is something that makes a person whole. It ties together everything a person had learned in school and makes it a force that benefits the person and community. Universities should produce graduates who are capable of thinking critically, rationally and productively. Universities should produce graduates who can question the status-quo ,take knowledge to a higher level and catalyze the required changes in society.

    The word education is derived from the Latin word ‘Educere’, which basically means to stand up. Education must make a person stand up and question. To be educated is to be knowledgeable, skilled, cultured (with refined minds, morals and tastes), experienced and wise. A University should provide the environment where the ‘professors’ who fit the above criteria, inspire the young and set them on course to surpass them in all these attributes and endeavours. A University should harness the fire in youth, to produce the next generation of leaders and doers in every field. The community served by such a University, would be progressive and prosperous. The graduates of such a University will remove the weeds strangling a society in every generation.

    Is our education system geared to produce such persons. Our schools are cram-shops and our universities are greater cram shops. Where are the staff at the Jaffna University to provide the leadership required for the youth trying to become ‘Whole’? Buildings do not make a University. It is the quality of the ‘Professors’ and ‘Students’ that make an outstanding University. I am sure there are plenty of students who have the potential, but how many faculty are there to inspire, set an example and guide them.

    The late Prof. Kanagasabapathy, the first professor of mathematics at the Jaffna University, was one such man. He inspired an entire generation of youth at Peradeniya University and made them realize their potential. I was one beneficiary.

    It is time to re-kindle the light at the Jaffna University. As one of the contributors has pointed out, the young Universities led the drive to make Israel a success in many fields. The Universities in most western countries have successfully played this role. In India universities are beginning to play this role, although yet mired in the ‘Cramming’ mud!.

    Dr.Rajasingham Narendran

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    நிஸ்தார்! மகாராணி என்பது பரம்பரையாக வரும் பதவியே தவிர அறிவாளி என்ற அர்த்தத்தில் அல்ல. மீண்டும் சமன்பாட்டில் கோட்டைதான்.
    தெகிரான் பல்கலைக்கழகத்தை தெரிந்த அளவிற்கு யாழ் பல்கலைக்கழகத்தையும் அறிய முயற்சித்திருக்கலாம்.
    யாழ் பல்கலைக்கழகத்தை பள்ளிக்கூடமாக்கிற பாமரத்தனத்திற்கும், றின்கோ டீம்’ கதைக்கும் என்ன வித்தியாசம்? அடிமைகளின் நரகலைத் தேடி எழுதுகிற பிழைப்பு யாருக்கு சேவகம் செய்ய?
    இஸ்ரேலிய பல்கலைக்கழகம் அரபு இஸ்லாமிய பேரினவாதத்தில் அடிமைப்பட்ட பள்ளிக்கூடமல்ல என்பதை பட்டம் போட்டு எழுதுபவரும், பந்தம் பிடித்து எழுதுபவரும் பகுத்தறிந்து கொள்ளவேண்டும்.
    ஆயுதத்தை வரையறை செய்து விட்டு, அடுத்த கணமே அதை சமுக விரோதச் செயலாக குறிசுடும் சித்தாந்தம் யாருக்கு வரும்?
    கோலிவுட்டையும், போலிவுட்டையும், கோடம்பாக்கத்தையும் மசாலா பண்ணுகிற மண்டை எவருக்கு உண்டு?
    உரிமைகளைக் கொடுக்கிற
    (…….கருத்துக்களை தெரிவிக்க எவருக்கும் உரிமையிருக்கின்றது தானே? குணசிங்கம் பரணிதரன் on August 20, 2010 6:17 am )
    பறிக்கிற
    (……..இதற்குள் தேவையில்லாத வறட்டுச் சித்தாந்தங்களை கொணர்ந்து திணிக்க ஒருவருக்குமே உரிமையில்லை! குணசிங்கம் பரணிதரன் on August 21, 2010 11:34 am ) ‘ரிமுட் கொன்றோல்’ இயக்கிகளுக்கு கருத்துக் களம் எதற்கு?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    / No amount of secret weeping by Vaiko can take away his guilt in the downfall of the LTTE. It was he who spoiled chances of an India sponsored ceasefire

    Q: What do you mean? What did Vaiko do or not do in this matter?

    A: While I was trying to bring about a ceaefire on one side the political commissar Nadesan (Balasingham Mahendran) was also trying for one. At one stage pro-LTTE sympathisers in the DMK (Dravida Munnetra Kazhagham) like chief minister Karunanidhi’s daughter and Rajya Sabha MP, Kanimozhi along with the Catholic priest Fr. Jegath Gaspar Raj had been negotiating with Central govt minister P.Chidambaram about a possible ceasefire/– DBS.JEYARAJ.COM(K.P.?). //– இலங்கைத் தமிழரிடையே, பிழிந்து பிழிந்து அழும் தொலைக்காட்ச்சி தொடர் நாடகங்கள் இல்லை என்ற குறையை ஜெயராஜ் தீர்த்துவைத்து கொண்டிருக்கிறார். எல்லோரும் நெடியவனின் ஆளாக வேண்டும் என்ற அதிபுத்திசாலித்தனமான ஐடியவோ?.

    /டெமோக்கிறசியின் அறியாமை மற்றும் அவசரத்தன்மை தொடர்பாக என்னால் பரிதாபப்படத்தான் முடிகின்றது.“மு. வரதராசனாரும்…. கல்கியும் எழுதிய எழுத்துக்களின் அடிப்படையில் யாழ் மண்ணும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களும் பற்றிய பிரமிப்பு என்னிடம் 1960களில் இருந்தே ஊற்றெடுக்கத் தொடங்கியது… ஆயினும், யாழ் மண்ணின் தற்போதைய நிலையும் சிதிலப் போக்கும் என்னை வருந்தவைக்கின்றது./–
    யாழ்பாணத்திலிருந்து சில கிலோமீட்டரே தூரமுள்ள இந்தியாவிலுள்ள இடத்தை பூர்வீகமாக கொண்ட எனக்கே தெரியாதபோது, வேலூரில் பிறந்த மு.வரதராசருக்கு, நாகராஜனுக்கு? தெரிவதால் பிரயோசனமில்லை!. கல்கி அவர்கள் நான் மதிக்கும் எழுத்தாளர், அவர் தப்பாக சொல்லியதாக ஞாபகம் இல்லை.

    என்ன தமிழரும்? – முஸ்லீம்களும் ஒன்றுபடுவது போல் தெரிகிறது, அதுவும் “கேனிபாலிஸத்தின்” அடிப்படையில்?!, நீங்கள் ஒன்று பட்டாலே வயித்தை கலக்குதய்யா (பிரேமதாஸா காலத்தை எண்ணி). இங்கே கருப்பொருள் முக்கியமான காலக்கட்டம், நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், உங்கள் போக்கிற்கே விட்டாகிவிட்டது, ஆதரித்து அசிங்கமும் பட்டாயிற்று, விஷயம் தெரிந்தவர்கள்? எரிகிற வீட்டில் பிடிங்கின வரைக்கும் இலாபம் என்று பிழைத்துக் கொண்டுவிட்டனர்!. பல்கலைகழகம் சமுதாயத்தை திருத்துகிறதோ, சமுதாயத்தை பல்கலைகழகம் திருத்துமோ? தெரியாது. “தமிழ் மேடை” என்பதில் “கூத்தாடி” நாறடித்து விட்டாகிவிட்டது. இனி தமிழ் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தேவையில்லை!. “தமிழ் மேடையை” சுத்தம் செய்ய முடியாது. அந்த மேடை அடித்து நொறுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து!.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    …../எப்போதோ முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மருதூர் கனி கூட்டணியினரை ” வெற்றிலை பாக்கு வைத்து” அழைத்த போது அலட்சியப்படுத்திய கூட்டணியினர்தான் இன்று தம்பி தவறிப்போனபின் “சம்பந்தம் கலக்க” முனைப்புடன் செயற்படுகிறார்கள். (“தமிழ் முஸ்லிம் கட்சிகள் தங்களது தனித்துவத்தை பாதுகாப்பினை பிரதேச உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்து ஒன்று சேர்ந்து ஒரே குரலில் குரல் கொடுக்காத வரைக்கும் வட கிழ்க்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தமிழ் கட்சிகள் முஸ்லிம்களின் உரிமைகளை அங்கீகரிக்க விரும்பவில்லை.”
    ( ஆதாரம்: தமிழ் டைம்ஸ் (Tஅமில் Tஇமெச் )- மருதூர் கனி -மார்ச் 1993)./–எஸ்.எம்.எம்.பஷீர்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தமிழ்கட்சி எது? முஸ்லீம் கட்சி எது? அல்லது சிங்களகட்சி தான் எது?? புலிகள் அழிந்த பின்பும் இது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே நினைக்கிறேன். இனங்களின் பிரிவினையும் பிரித்துவைத்தலும் இங்குதான் தோற்றம் பெறுகிறது. மதங்கள் மதஅடையாளங்கள் ஒவ்வொரு இனங்களின் சுதந்திரமான போக்குகள். அது அரசியல் விஷயங்களில் தலையிடலாமா?
    எவ்வளவு தான் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் இலங்கைஒரு பெளத்தநாடு என்று சொல்வதும் தவறானதே! சரி இதை உடனடியாக தீர்க்கமுடியாது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. இது காலப்போக்கில் மாற்றம் அடைந்தே தீரவேண்டும். இல்லையேல் இலங்கையை ஒரு சுபீட்சம்முள்ள நாடாக கருத முடியாது.
    சரி. இதுபுறம் இருக்க.. தமிழ்மக்களுக்கும் முஸ்லீம்மக்களுக்கும் என்ன பிரச்சனை? சாரத்தில் ஒன்றுமே இல்லை. அவர்கள் இருவருமே இந்த இலங்கையில் ஒரு முன்மாதிரியை கடைப்பிடிக்க முடியும். அவர்கள் இருவரும் சேர்ந்து தம்மை ஏன்? “இலங்கை ஜனநாயகக் கட்சி” என்று அழைக்கக்கூடாது? இது முற்போக்கான சிந்தனையுள்ளவர்களுக்கு எனது தாழ்மையான கருத்து. இன்று உள்ள நிலைமைகளில் இதைவிட வேறு தெளிவான பாதை கிடைப்பதும் கண்டுபிடிப்பதும் கஷ்ரமான காரியமாவே உள்ளது. இதுவே தற்போதைக்கு இனங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கான வழி. இல்லையேல் வர்க்கப்போராட்டம் வரை காத்திருக்க வேண்டியது தான். அந்த நேரத்தில் இந்த தலைமுறை உயிருடன் இருக்குமா? என்பதும் சந்தேகமே!. இது கட்டுரையோடு முழுமையாக சம்பந்தப் படாவிட்டாலும் நிஸ்தார் டெமெக்கிராசியின் கவனிப்புகளுக்காக…

    Reply
  • nantha
    nantha

    Dr. Rajasingam:

    Is israel a success story? How? USA gives two billion dollar cash every year to Israel FREE ( evry Jew get 15,000 Dollars very year free). Why? I never heard any Israel born Jew ever become a Nobel Prize winner.

    USA pumps billions to Israel “for their interest in the region”.

    If USA stops those billions, the success story of Isreal is over within a week!

    Reply
  • தேவராசா
    தேவராசா

    தளபதி,
    கலட்டியில் கள்ளுக் குடிப்பவர்கள்தான் தபால்பெட்டி ஒழுங்கையிலும் ஒளிந்து நின்று கள்ளுக் குடிக்கிறார்கள் என்பதும், சண்முகலிங்கன் யாழ்ப்பாண நகரை ஹொண்டா சலி (Honda Chaly) மோட்டார் சைக்கிளில் வலம் வருவார் என்றும் தெரிந்து அறிந்து வைத்துக் கொள்வது பெரிய சாதனையல்ல!

    யாழ்ப்பாண சைவ வேளாளர்களின் ஆணாதிக்கமும் இன்ன பிற அட்டூழியங்களும் பற்றி இந்த விவாதக் களம் நிறையத் தடவைகள் அலசி ஆராய்ந்து விட்டாயிற்று. அவர்கள் சைவம் பேசிக் கொண்டு மாட்டிறைச்சிக் கொத்துரொட்டி சாப்பிடுகின்றார்கள் என்று திரும்பத் திரும்ப உதாரணம் காட்டிக் கொண்டே இருத்தலால் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மற்றும் இலங்கைத் தமிழ் சமூகமும் விழிப்புணர்வு பெறுமென்று நான் நினைக்கவில்லை.

    நிஸ்தார் எதிர்காலம் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளை தூண்டுவதற்காகவேதான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். எதிர்காலம் பற்றி சிந்திக்க முயலாமல், ஏற்கனவே ‘பிழை’ என்று அடையாளம் காட்டப்படு விட்ட விடயங்களையே மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருப்பது……. இன்னமும் இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் தனது முன்னேற்றம் பற்றி சிந்திக்கத் தொடங்கவில்லை என்பதற்கான சிறந்த உதாரணம்.

    ‘கண்ணதாசன்’ என்கின்ற கவிஞரைத் தெரியுமா? தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு மாத இதழுக்கு நேயர் பதில்கள் எழுதி வந்த காலத்தில் – ஒரு வாசகர், “நடிகைக்கும் நடிகையின் கணவருக்கும் என்ன சம்பந்தம்?” என்கின்ற ‘மிகவும் முக்கியமான’ சமுதாயத்துக்கு தேவையான கேள்வியைக் கேட்டிருந்தாராம். தமிழிலக்கியம், கவிதை என்கின்ற தளங்களில் பயணித்துக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு மேற்படி கேள்வி கோபத்தை வரவழைத்து விட்டது. அதற்கு அவர் “சிங்கம் மார்க் சீயாக்காய் பவுடர் தூள் என்கின்ற வியாபாரத் தயாரிப்பில் சிங்கத்துக்கும் சீயாக்காயிற்கும் உள்ள தொடர்புதான் நடிகைக்கும் அவரது கணவருக்கும் இருக்கிறது!” என்று ஏளனமாக பதில் எழுதினாராம்.

    ‘சிங்கத்துக்கும் சீயாக்காயிற்கும் தொடர்பு ஏற்படுத்துவது போலத்தான்’ கல்வி நிறுவனமொன்றின் எதிர்காலம் பற்றிய அலசலினுள் தேவையில்லாத விடயங்களைக் கொண்டுவந்து புகுத்த எத்தனிக்கின்ற DEMOCRACY, தமிழ்வாதம் என்பவர்கள் செய்துகொண்டிருக்கின்ற “வீண்வாதம் “காணப்படுகின்றது.

    அதிலும் தமிழ்வாதம் என்கின்ற அன்பர், தன்னைக் கடுமையாக விமர்சித்த குணசிங்கம் பரணிதரன் என்பவரின் வசனங்களைக் கொண்டு நிஸ்தாரைச் சாடியிருக்கின்றார். என்னதொரு ஆக்கபூர்வமான யுக்தி இது?

    “சிங்கம்…. சீயாக்காய்” என்கின்ற வகையில் மொட்டாந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் கொண்டே இருப்போம். அதுதான் நமது முன்னேற்றத்துக்கு தேவையானது. யோசித்துப் பாருங்கள். உண்மைகள் புலப்படும்.

    Reply
  • nantha
    nantha

    பிரிட்டிஷ் ஆட்சியில் முஸ்லிம்கள் ” கிறிஸ்தவர்களோடு” சேர்ந்து பெரும்பான்மை பௌத்தர்களோடு சண்டித்தனம் செய்து பார்த்தார்கள். அதே கிறிஸ்தவர்களோடு சேர்ந்து தமிழர்களும் சண்டித்தனம் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இன்னமும் “பாகிஸ்தான்” சிண்ட்ரோமை விட்டு வெளியே வரவில்லை. தமிழர்களும் “மகாராணி” தோத்திரத்தை விட்டு வெளியே வரவில்லை.

    இலங்கையில் முஸ்லிம்கள் கொக்கறல்ல தென்னை மட்டையடி வரை “சமூக” முன்னேற்றம் கண்டுள்ளனர். தமிழர்கள் தங்களைப் படித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு படிப்பறிவில்லா கிரிமினல்களைத் “தலைவா” என்று போற்றும் வரை முன்னேறியுள்ளனர். இந்த “நாகரிக” செயல்பாடுகளைச் செய்ய ஒரு பல்கலைக் கழகம் இவர்களுக்கு அவசியமா என்பது பற்றி ஆராச்சி செய்து விட்டு இந்த பல்கலைக் கழக விவகாரத்தை ஆராய்வது நல்லது!

    Reply
  • தவம்
    தவம்

    தேசம்நெற்றில் யாழ்ப்பாண யூனிவேர்சிட்டி பற்றி கட்டுரைகள் நிறைய வந்திருக்கின்றன. எனக்கு விரிவுரையாளர் பேராசிரியர் அளவுக்கு பெரிதாக கல்வியறிவு இல்லை, சாதாரண ஓய்வு பெற்ற அரசாங்க உத்தியோகஸ்தன். சிவில் பொறியியல் டிப்ளோமாவை அம்பாரை ஹாடி கொலீச்சில் இருந்து பெற்றுக் கொண்டு 37 வருடம் அரசாங்க உத்தியோகஸ்தனாக இருந்தவன். எனக்கு கம்பியூட்டரில் தமிழ் டைப்பிங் தெரியாது. ஆனாலும் ஒரு முக்கிய உதாரணத்தை சொல்ல வேண்டும் என்பதால் வேறொருவரிடம் சொல்லி எழுதுவிச்சு தருகிறேன்.

    //அந்த நாட்களில் நயினாதீவைச் சேர்ந்த இராசநாயகம் என்பவர் அந்த பல்கலைக் கழகத்தின் முழுநேர மாணவர். ஆனால் அவர் யாழ் கல்வித்திணைக்களத்திலும் முழுநேர சம்பளம் பெறும் ஊழியர். இலங்கையின் சட்ட முறைப்படி இது எப்படி சாத்தியமானது? இரண்டு அரசு நிறுவனங்களும் இந்த சட்டமீறலைக் “கண்டுக்கவே” இல்லை// என்று nantha உதாரணம் காட்டியிருக்கிறார். இந்த நியாயமற்ற சட்டவிரோத வேலைகளை யூனிவேசிட்டி மாணவர்கள் மட்டும் செய்வது இல்லை. வவுனியா கம்பசில் விரிவுரையாளராக கடமையாற்றும் MRS. புவனேஸ்வரி லோகநாதன் என்கின்றவர் வட மாகாணத்திலேயே மிகப் பெரிய ஒரு கட்டுமான ஒப்பந்தக்காரக் கொம்பெனிக்கு அத்தியகட்சராகவும் இருக்கிறார். ஒரு தனிநபர் இலங்கை அரசாங்கத்தின் சம்பளம் பெறும் முழுநேர உத்தியோகஸ்தராக இருந்து கொண்டு இன்னொரு வியாபாரத்திலும் முழுநேரமாக ஈடுபடுதல் சட்ட விரோதமானது.

    புவனேஸ்வரி லோகநாதன் தனது பல்கலைக்கழக விரிவுரையாளர் அந்தஸ்தினைப் பாவித்து வவுனியாவில் நடக்கின்ற பெரிய கட்டுமான ஒப்பந்தப் பணிகளை தனது கம்பெனிக்கு இழுத்தெடுக்கக் கூடியவர். இங்கு இன்னொரு வேடிக்கை. வவுனியா கம்பசின் புதிய வளாகக் கட்டிடங்கள் பம்பைமடு என்னும் இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் செய்வது புவனெஸ்வரி லோகநாதனின் கம்பெனியே. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே வேலை செய்தபடி, அந்த நிறுவனத்துக்கு வருகின்ற நிறையப் பணம் புரளுகின்ற கொண்ட்றாக்ட்களை எல்லாம் சுருட்டி எடுத்தல் சட்டப்படி சரியானதானா? இது தொடர்பாக அரசாங்க ஓடிட் டிப்பார்ட்மென்ற் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனது கல்வி அந்தஸ்து, பதவி என்பவற்றின் அடிப்படையில் புவனேஸ்வரி லோகநாதன் வவுனியா அரச பொது வைத்தியசாலைக்கு சொந்தமான காணிகளைக் கூட அபகரித்துள்ளார். மாணவர்களுக்கு ஒழுக்கம் வழிகாட்ட வேண்டிய பதவியிலுள்ளவர் ஒருவர் செய்யக் கூடிய செயல்களா இது?

    தனது கட்டுமான கம்பெனிக்கு வவுனியா வளாகத்தில் பட்டம் பெறும் மாஜி-மாணவர்களை வேலைக்கமர்த்தி அவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் அடிமாட்டு வேலை வாங்குவார். 37 வருட அனுபவம் உள்ள என்னை மாதம் 5000 ரூபாவுக்கு தனது கம்பெனிக்கு வேலை செய்ய வருமாறும் கூப்பிட்டவர். இவரது கம்பெனியில் தொளிழாளர்கள் சரியான கஸ்டத்துடன் தான் வேலை செய்கிறார்கள்.

    இவர் வவுனியா கம்பசிலும் நிறைய அநியாயம் செய்கிறார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். சாதாரண பாடசாலை ஆசிரியராக வேலை செய்த, ஒருவித குவாலிபிக்கேசனும் இல்லாத அவரது இளைய சகோதரனை வவுணியா கம்பசின் நெற்வேக் அட்மினிஸ்ரேட்டராக நியமனம் செய்து விட்டவர். இந்தப் பெண்மணியின் அட்டூளிய நடவடிக்கைகள் பற்றியும் தேசம்நெற் கவனம் செலுத்த வேண்டும். விரிவுரையாளர் என்ற பதவியை துஸ்பிரயோகம் செய்து பிரத்தியேக லாபம் காணும் சட்ட விரோத செயல்கள் இது.

    Reply
  • Kandeepan
    Kandeepan

    //என்ன தமிழரும்? – முஸ்லீம்களும் ஒன்றுபடுவது போல் தெரிகிறது, அதுவும் “கேனிபாலிஸத்தின்” அடிப்படையில்?!, நீங்கள் ஒன்று பட்டாலே வயித்தை கலக்குதய்யா (பிரேமதாஸா காலத்தை எண்ணி). இங்கே கருப்பொருள் முக்கியமான காலக்கட்டம், நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், உங்கள் போக்கிற்கே விட்டாகிவிட்டது, ஆதரித்து அசிங்கமும் பட்டாயிற்று, விஷயம் தெரிந்தவர்கள்? எரிகிற வீட்டில் பிடிங்கின வரைக்கும் இலாபம் என்று பிழைத்துக் கொண்டுவிட்டனர்!. பல்கலைகழகம் சமுதாயத்தை திருத்துகிறதோ, சமுதாயத்தை பல்கலைகழகம் திருத்துமோ? தெரியாது. “தமிழ் மேடை” என்பதில் “கூத்தாடி” நாறடித்து விட்டாகிவிட்டது. இனி தமிழ் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தேவையில்லை!. “தமிழ் மேடையை” சுத்தம் செய்ய முடியாது. அந்த மேடை அடித்து நொறுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து!// (DEMOCRACY on August 22, 2010 8:20 am )

    Mr. DEMOCRACY, what are you trying to establish by the above statement? Are you saying that you are fed up with speaking for Sri Lankan Tamil speaking people?

    //யாழ்பாணத்திலிருந்து சில கிலோமீட்டரே தூரமுள்ள இந்தியாவிலுள்ள இடத்தை பூர்வீகமாக கொண்ட எனக்கே தெரியாதபோது, வேலூரில் பிறந்த மு.வரதராசருக்கு, நாகராஜனுக்கு? தெரிவதால் பிரயோசனமில்லை!// (DEMOCRACY on August 22, 2010 8:20 am)

    Does the above statment say that Mr. DEMOCRACY is the one and only authority and ideologist in Sri Lankan Tamil speaking people’s affairs??

    This forum is about a university and its importance to a community which has been fragmented by many alien and insider forces. We are trying to re-build our nation.

    Reply
  • Rajasingham
    Rajasingham

    Dear Nantha,
    Israel is a success story in terms of its agricultural, animal husbandry, industrial development , education, health services, care for the old and the standard of living it has accorded her people.

    The Egypt also receives the same annual grant from the US, as Israel. Israel is part of the geopolitics of the region and the associated rights and wrongs. I sympathize with the plight of the Palestinians. What is beyond doubt is that Israel has world-class Universities, which are producing world-class high calibre graduates. We have much to learn from the Israeli’s in many areas.

    Dr.Rajasingham Narendran

    Reply
  • palli
    palli

    நானும் பல்கலைகளகம் வரை போய் படிக்கவில்லையே என ஏங்கிய நாட்கள் பல; ஆனால் அந்த ஏங்கிய நாட்கள் வீணானவை என இப்போது எண்ண தோன்றுகிறது;

    Reply
  • BC
    BC

    தவம், மகாராணியின் கனவான்கள் உலாவும் எங்களிடையே கம்பியூட்டரில் தமிழ் டைப்பிங் தெரியாவிட்டாலும் உங்கள் முயற்ச்சியை எவ்வளவும் பாராட்டலாம்.

    //கண்ணதாசன்’ என்கின்ற கவிஞரைத் தெரியுமா? //
    உதாரணம் சொல்வதற்கு கொள்கையற்ற கண்ணதாசனா கிடைத்தார், சமுதாயத்துக்கு தேவையான விடயங்களையா கண்ணதாசன் கவிதை எழுதினார்?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /Does the above statment say that Mr. DEMOCRACY is the one and only authority and ideologist in Sri Lankan Tamil speaking people’s affairs??/-Kandeepan on August 23.
    This is the “contradictory point” I try to mend – out!.If you want to re-built your nation you are most welcome,Iam a foreigner(I thank thesamnet for the immense toleration so far).But if It is “Premadasa syndrome”,you must guarantee that it is not!.I just endorse this /பிரிட்டிஷ் ஆட்சியில் முஸ்லிம்கள் ” கிறிஸ்தவர்களோடு” சேர்ந்து பெரும்பான்மை பௌத்தர்களோடு சண்டித்தனம் செய்து பார்த்தார்கள். அதே கிறிஸ்தவர்களோடு சேர்ந்து தமிழர்களும் சண்டித்தனம் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இன்னமும் “பாகிஸ்தான்” சிண்ட்ரோமை விட்டு வெளியே வரவில்லை. தமிழர்களும் “மகாராணி” தோத்திரத்தை விட்டு வெளியே வரவில்லை…./- Mr.Nanda’s statements.

    இங்கே குறிப்பிடும், சீனிபாணியில் வாழைப்பழத்தை பொரிப்பது, ஓட்டை ஒடைச்சல் பித்தளைக்கு பேறீச்சம்பழம், ஆகியவை பலகலைகழக ஆராய்ச்சியில், மேற்குலக குளிர்நாடுகளில் ஓவ்வொரு பொருளும் “கன்சர்வ்(பதம்) செய்யப்பட்டு” வீணாவது தடுக்கப்பட்டு வியாபாரமாக்கபடுகிறது என்றாலும், தெற்காசிய வெப்ப சூழலில் அதன் குளீரூட்ட செலவு கணக்கில் ஆராயப்படவேண்டும்!.

    ஐ.நா. சபை துவங்கிய 1945 வாக்கில், முக்கியமாக பிரிட்டிஷ், பிரான்ஸ், அதன் மனித உரிமை சட்டத்தை தங்களது பிடியை விட்டுவந்த காலனித்துவ நாடுகளில் வைத்திருக்க (பிரித்தாளும் சூழ்ச்சி?) “முஸ்லீம்களுக்கும், கிரிஸ்தவர்களுக்கும்” ,சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கின. அமெரிக்கா இதில் சிறிது முரண்படுகிறது?.

    இதற்கு ஒப்பவே(ஐ.நா. சட்டம்), எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோர்கள் (அஷ்ரப்பின் தமிழ் ஒற்றுமை?), தமிழர் பிரச்சனையை மடல் விரித்தார்கள்(unfolded).ஐ.நா. வின் சட்டத்திற்கு உட்பட்டு உரிமை பெறுவதற்க்காக “தமிழர் பிரச்சனையா?” அல்லது “சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள(உருவான) பிரச்சனைகளை”, பஞ்சாயத்து செய்வதற்கு உதவியை நாடுவதற்கு தேவையான முன்வைப்புகளை ஏற்ப்படுத்துவதற்கு, “சுய திரிபுகளை(INTERPRETATIONS IN WORDS)” செய்யப்பட்ட முயற்சியா இந்த “தமிழர் இனப்பிரச்சனை”?. பல தமிழ்நாட்டுத்தமிழர்கள் (இந்தியா) இதில் உள்வாங்கப்பட்டு குழப்பமடைந்துள்ளனர்!….. எனக்கு அதிகம் கேள்விகள் இல்லை நான் நிறுத்திக் கொள்கிறேன்!.

    இப்படியாக “தமிழினப் பிரச்சனையாக” முன்வைக்கப்பட்ட “திரிபு வார்த்தைகளை”, கலைஞர் கருணாநிதி போன்றோர்கள், ”தமிழின் தங்கங்களாக, தளராத சிங்கங்களாக, தரணிபோற்றும் தளாளராக, தளதளக்கும் தக்காளிகளாக!” அங்கீகரிக்க முயல்வது? எதனால்?. தமிழ்தேசிய? கூட்டணி, கலைஞரின் கலைப்பிடித்து, அவர் எட்டி உதைக்க, உதைக்க தன்னிலை விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள். இந்நிலை ஏன்?. பிரச்சனைகளை உண்மையாக பிரதிபலித்தால், மடியில் கனத்தை காக்க, காலை பிடிக்க வேண்டியதில்லையே?. மனதில் ஏற்ப்படும் இந்த அவமானம், காரியம் முடிந்தவுடன் காலை வாரிவிட அல்லவா நிர்பந்திக்கும்?. உங்களின் கவுரவத்தை தமிழக மக்கள் என்ன சர்வதேச சமூகமும் மதிக்கிறது என்று நினைக்கிறேன்!, அது உங்கள் பிரச்சனையின் கவுரவத்தை!, அதை வைத்துக் கொண்டு “டக்கால்டி வேலை காட்டுவதை” அல்ல!.

    Reply
  • பல்லி
    பல்லி

    கண்ணதாசன் என்கின்ற கவிஞரது அனுபவமே அர்த்தமுள்ள இந்துமதம்; அதைபோல் அவரது அனுபவ சினிமா பாடல்களும் பல உண்டு, அத்தனையும் வெற்றி பாடல்கள்? அன்றய யதார்த்தத்தை தனது பாணியில் சொன்னார் வென்றார்;

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    தேவராசா,
    நான் கண்ணதாசனைப் பற்றியும், ஏன் இன்றைய வைரமுத்துவைப்பற்றியும், இந்த தமிழை வைத்து அவர்கள்செய்த அவர்களது படைப்புக்கள், கவிதைகள், சினிமாப்பாடல்கள் எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக்கொல்வதில்லை. என்னைப் பெறுத்தவரையில், இவர்கள் தமிழை வைத்து வாழத்தெரிந்த மனிதர்கள் என்பது மட்டும்தான் என் அபிப்பிராயம். மேலும் நான் தமிழ்சினிமாவை முன்னுதாரணமாகக்கொண்டு எனது வாழ்க்கையை என்றுமே வாழ்ந்ததில்லை. நிற்க விடயத்திற்கு வருகிறேன்.

    நான் எனது முதலாவது பின்னூட்டத்தில் எமது சமுதாயத்தில் 20 வருடங்களில் நான் கண்ட சமூகமாற்றத்தையும் அதனது வளர்ச்சியும் பற்றித்தான் எழுதியிருந்தேன், அதற்காக சில பொருட்களையும் (பனைஓலைப்பிளா, Glass, Silver cup, Plastic cup) என்பவற்றையும் எடுத்துக்காட்டினேன். அதாவது இந்தசமூகம் எத்தவிதத்திலும் மாறவில்லை என்பதே என் கணிப்பு. அதைவிட எனது பின்னூட்டதின் உட்கருத்து – இந்த சமூகவளர்ச்சிக்கு பெரிதும் தடையாய் இருப்பது இந்த சாதிரீதியான பிற்போக்கான எண்ணங்களும் அதனூடான அடக்குமுறைகளும்தான் என்பதையும், அதற்காகவே நாங்கள் காலத்தை செலவிடுவதையும் – 20 வருடங்களில் நான் கண்ட எமது சமூக வளர்ச்சியாக – யதார்த்தத்தை நகைச்சுவையாகவும் சொல்லவந்தேன்.

    சரி நீங்கள் இப்போது இந்த வட – தமிழர் சமூகத்தில் மாற்றத்தை யாழ் பல்கலைக்கழகத்தினூடாக அல்லது வேறுவிதமாக எப்படி ஏற்படுத்தலாம் என்று கேட்கிறீர்கள் – இதற்கான எனது கருத்து – உலகத்தின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் (யாழ் உட்பட) இயற்கையின் விதிகளைத்தான் பெளதீகமாகவும், உயிரியல் மூலமாகவும் அதன் மாணவர்களுக்கு போதிக்கிறார்கள். பிரபஞ்சம் அல்லது இந்த பூமி உருவான நாள்முதற்கொண்டு அதன் விதிகள்(பெளதீக மற்றும் உயிரியல்) என்றுமே மாற்றப்பட முடியாதவைகளே, ஆனால் அதைக்கற்றுக் கொண்ட மாணவர்களே இந்த இயற்கைவிதிகளை வைத்துக்கொண்டு எமது மனிதவாழ்வை எப்படி மேன்படுத்தலாம் என சிந்தித்தார்கள், அதன் விளைவுகளே Technology or modern technology என விரிவடைந்து, இன்றைய வளர்ச்சிகண்ட நாடுகளாக, சில மனிதச்சமூகங்கள் மற்றைய மனிதச்சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். இந்த வளர்ச்சிகண்ட நாடுகளே அன்றும் இன்றும் எம்மவர்களுக்கு புகலிட தஞ்சமும் வளங்கி வருகின்றன. ஆகவே நீங்களும் சாதிபேதமில்லாது எல்லோரும் ஒன்றுபட்டு எமது மனிதவாழ்வை எப்படி மேன்மைப்படுத்தலாம் என என்றுமே இருக்கப்போகும் இயற்கைவிதிகளை வைத்துக்கொண்டு செயற்பட முன்வாருங்கள் – நாங்களும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பலாம்.

    Reply
  • nantha
    nantha

    தவம் அவர்கள் சொல்வது போல நடை முறையில் இருக்கும் சாதாரண சட்டதிட்டங்களை நேர்மையாக நடைமுறைப்படுத்த தமிழ் மேதாவிகள் தயாராகவில்லை. முதலில், லஞ்ச ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, சட்ட மீறல்கள் என்பனவற்றை ‘தமிழர்களிடையே” ஒழித்து இருக்கும் அல்லது கிடைக்கும் வசதிகளையே தமிழர்களுக்கு கிடைக்க விடாமல் சுருட்டும் தமிழர்களை ஒழிக்காமல் “சமூக நீதி”, சமத்துவம் என்பனவற்றை எங்கே தேடுவோம்?

    Reply
  • Ajith
    Ajith

    If I correctly understood Nisthar’s article, what he is trying to establish is that Jaffna need a social upliftment (not just change) and it is not only the University that can bring the needed change but the change should involve fundamental change in the attitude/ mentality of the society at a whole from the early stages of the childhood. First, we should understand that the so called problems of caste, dowry, fraud, corruption are not only specific to Jaffna or Tamil community but it is widespread in all communities including Sinhalese, Sonagar, Tamils, Christians, Hindus, and Buddhists. In India, these problems are much worse than here. We inherited all these from India.

    There is no doubt that every society needs to change including Tamils. Over the past 60 years since Independence from foreign invaders there were changes (good and bad) in all communities and it takes all the time. We should recognise the fact that neither independence nor political changes over the time brought any good to the nation. The country is more divided than before, suspicion between races has widen, corruption has spread uncontrollable, human rights abuses has grown faster than ever before, justice system and law and order system are fully politicised and all citizens feel that they are insecure under the current system of rule. The need for change within Tamil Community is necessary but we should not link this to the current status of the Tamil community. Some people think that social change can be done within few years or bringing some particular individual to the university. It is a ridiculous thinking that bringing back Prof Hoole back to Jaffna University will change within years and Jaffna become a complete society without any problems. Vice- chancellor should be free from political interference and should represent the society’s political, cultural and social needs. An appointment by Rajapakse (President of Sinhala Sri Lanka) who rejects aspiration of the Tamils clearly demonstrates that he cannot operate independently to the benefit of the society.

    I agree that the starting point for a social change in a society should be early stage of the childhood (school) rather than the latter stage of the adulthood (the University). I do not agree that religious institutions should be the starting point. Firstly the religious institutions and leaders need to change and their way of conducting religions should be revolutionised before taking part in the process of social change. It should be a common place or institution for any child irrespective of caste, religion, and race). The religious place cannot do that function as long as they are confronting each other and it is not a place a where all children of different communities can meet comfortably.

    However, it is true that University should play a key role in producing necessary skills, knowledge, technology that is necessary for the social and economic development of the region, people and future generation. We cannot blame the University or any of the Vice Chancellors or any other individuals for the current status of the university or society or race in this country. Some of us try to put the blame on others and try to capitalise on that to establish their political and personal interest. We need to understand that every one of us responsible for the past and we have no right to blame others. We should understand that the creation of the Jaffna University was happened is not a goodwill gesture of the Sinhala state like the Universities of the South. Jaffna University has to undergo through various obstacles throughout its life.

    Some people think that social change (justice) can be brought within few years or bringing some particular individual to the university will resolve everything. It is a ridiculous thinking that bringing back Prof Hoole to Jaffna University will resolve social injustice within years and Jaffna become a complete society without any problems. Vice- chancellor should be free from political interference and should represent the society’s political, cultural and social needs. An appointment by Rajapakse (President of Sinhala Sri Lanka) who rejects aspiration of the Tamils clearly demonstrates that he cannot operate independently to the benefit of the society. He should be part of local society rather than an envoy of a racist government. To bring about any social justice there should be a strong local administration that reflects society’s needs and aspirations. This administration should have the power to take strong decisions and capability to implement the decisions and programmes. The law and order system should be free from political interference. Unfortunately, under the current central regime it is not possible to achieve such a drastic change.

    Though the writer seems to touch the issue his attitude remains untouchable. It is easy to write about social injustices but it is very difficult to bring about that change. Most of us do not look ourselves. We think we are right and others are wrong. This is the most serious problem within our community rather than the caste and dowry injustices. I will give you an example. Mr. V.P was a communist who talked about caste issues. I had the opportunity to have him as a teacher for some time. The first question was where you from are. The second question was that person (known person) is related to you? Why he asked this question? What his intention was that he wanted to make sure that what my caste is. We are happy to talk in public against the caste injustices but in real life they are also fall into that trap. There is another individual (so called communist) who is currently lives in UK, a SLFP activist who is very associated with Thesamnet participated in the election campaign for Rajapkse openly criticise religion but I have seen various occasions in a temple. There are number of such political and social activist’s just talk but in practice they are worse than others. The real change should come from individuals but the state and institutions should provide necessary support and security to those people who are prepared to revolt from these injustices. For example, a person demands for dowry from a girl, the girl should have the right to reject that man and the law and order system should provide the support and security for that girl. As long as that security is not guaranteed no one will dare to break the cycle.

    I have concerns about the author’s mentality and attitudes. The examples he used in this article highlights his attitude about the Tamil community. There is nothing wrong with Professor Kailasapathy’s dream and LTTE’s dreams to become a world standard University or a separate state for Tamils to liberate Tamils from Sinhala racist state. It is achievable and their effort towards that goal should be praised. Tamils need unity to achieve social justice and liberation, not division.

    Reply
  • Rajasingham
    Rajasingham

    Re: Ajith’s comment:

    In the US and Canada, the University systems I am familiar with,recruitements to the faculty from the rank of Assistant Professor upwards are made through a very elaborate process. Outstanding candidates, from where ever there be, are brought in and interviewed over several months before the final decision is made. Even the families of the promising candidates are invited to evaluate their ability to be part of the university and larger community. New blood is infused into the system at frequent intervals in this way and with them come new ideas and new skills. This is why the best in the world find their place in these universities.

    I thus see no reason why the faculty or the Vice-Chancellor have to be recruited from the local environment. Sir.Ivor Jennings was an outstanding Vice-Chancellor of the University of Ceylon of yore. I feel the University of Jaffna should be freed of its frog-in-the-well mentality. Winds of change and new ideas have to blow through its corridors and lecture rooms.

    I do not know whether Prof. Ratnajeevan Hoole is the best candidate. I am however sure that he is one among several who should be considered. Caste, religion, ethnicity and nationality should have no bearing on such selections. The best must be found and given the environment to do what they have to do. There is a Tamil lady, an Engineer by profession and married to a Sinhalese, who is now a Vice-Chancellor at a University in Canada!
    Dr. Rajasingham Narendran

    Reply
  • Suppan
    Suppan

    According to Ajith on August 23, 2010 9:03 pm
    “I do not agree that religious institutions should be the starting point.”

    If one carefully consider the deep root of a social problem in a country like Sri Lanka the cause is religion. So how can religious institutions would be the starting point rather that is the starting point of a problem.

    Yes, religious education should be eliminated from the School education system, e.g., India and further in France where religious identities are also eliminated from Schools.

    Reply
  • Ajith
    Ajith

    Re:Rajasingham’m comment:
    I agree that suitable candidate for Vice-Chancellor sould be selected through a competitive vigorous selection process irrespective of race, colour, caste, relegion, language as in many developed nations. It is not necessarily from local environment. But he should be familiar with the needs of the society, their aspirations and their culture. Whatever the caliber he has got, he need the support of the people, students and staff. Sri Lankan universities produced a large number of capable tamil professionals in all fields who were respected by all communities. Unfortunately, the situation has changed after Sinhala only policy and most of the appointments are now politicised and non of the true professionals willing to come forward. Prof. Ratnajeevan Hoole may be a capable professional but the people of Jaffna has concerns and suspicion about his political impartiality. He ran away from his responsibility when he was appointed as Vice Chancellor to University of Jaffna by Rajapakse in 2006. There is no doubt that best candidate should be selected considering various selection process, not an appoint to suit the political needs of oppressive regimes.

    Reply
  • nantha
    nantha

    Ratnajeevan Hoole ran away after the warnings of LTTE with DEATH. Normally LTTE never warn their HINDU victims and kill them unexpectedly. Ratnajeevan had the luck and enough time to escape because of the alliance of LTTE with Catholic Church and Ratnajeevan’s own Anglican Church.

    Tamils like Eliezar and A.J.Wilson ran away because they refused to teach in TAMIL medium. Dont blame Sinhala only which brought TAMIL to the schools!

    Reply
  • nantha
    nantha

    Dr.Rajasingam
    Egypt gets the half or less aid what Israel gets from USA and not the “equal” amount.Think about the population of Egypt and Israel!

    Agriculture? Israelis started advising JR on “paddy production” but they squeezed the IMF loans with the supply of war materials to JR government. They trained LTTE how to destroy the “DIVORA” gun boats while selling them to SL government.

    What do the Israelis know about “paddy Production”?

    If a nation gets welfare payments of 15,000 dollars per head every year, the standard of living will be skyrocketted anywhere.

    Sri Lanka or India cannot reach that kind of income in another 1000 years! Because no one is there to give them “FREE”.

    Reply
  • Rajasingham
    Rajasingham

    Re: Ajith’s response:

    Sometimes, it may be easier for an outsider to understand our social needs better than an insider. Insiders, especially in our society, have not been trained both culturally and educationally, to rise above the pettiness, squabbles, selfishness, meanness, cruelty and narrow mindedness that permeates that has become a part and parcel of our lives. This is the norm we have learn to accept and live with. An outsider would be able to see the real issues from a vantage point. When I refer to an ‘outsider’, it does not refer to someone who was part of the ‘Problem’ in the past, but is at present outside the system.
    Dr.Rajasingham Narendran

    Reply
  • ahmed
    ahmed

    Have you ever considered the following facts as few of the many reasons for the poor quality of Jaffna university.
    1.A quality research need good funding. How can you get it in Sri Lanka without government’s help.
    2.Less Government research grants are allocated to UOJ. Several overseas grants were directed to other universities citing LTTE. A postgraduate institute was built at Peradeniya from the money alocated to UOJ (Japanese fund). This happened in 1990-2000 period.
    3.The assistant lecturer’s salary is about SLR25,000 per month. This means $3000 per annum. Western academics get this one month salary in one one day! The senior lecturer’s salary is SLR 50000!
    4. You can’t attract even an indian academic to this salary.
    5. Mass collaboration is the current trend in research. You can see how many institutions from how many countries are in a journal paper. The author numbers are keep on increasing because of mass collaboration.
    6. Even for a theoretical research, you need statistical and mathematical softwares which are ridiculously expensive. Equipments are in billions in SLR. Who can give this money. This is true for other universities as well.

    Reply
  • Suppan
    Suppan

    “If a nation gets welfare payments of 15,000 dollars per head every year, the standard of living will be skyrocketted anywhere.”

    But not in Sri Lanka or India, since those money would be diverted to some peoples’ pocket. That is happening now.

    Reply
  • Rajasingham
    Rajasingham

    Re: Nantha’s recent comment:

    In 2006, the US aid to Israel totalled 2534.53 million dollars and that to Egypt totaled 1796 million dollars. Of these the bulk was military aid in the case of Israel and only 277.53 dollars was economic aid. Of the aid given to Egypt the bulk- 496 million- was economic aid. Egypt also has a huge inflow of money from its citizens working in the middle east. I have worked with Egyptian graduates and professors and have had the opportunity to interact with their Israeli counterparts. Israeli faculty and graduates are head and shoulders above the Egyptians. It is also important to mention that most Egyptian faculty in my field had post-graduate degrees from the US and Europe, whereas the Israeli’s were mostly home grown.

    I believe that while money is also necessary, it not the only factor that makes a good university. At my time as a student and faculty member at Peradeniya, we did not have huge resources. But we had good faculty who did the best with what they had and inspired us to become what we are today. I remember my professor of Parasitolgy (Dr.S.T.Fernando), who exclaimed ‘Beautiful!’ on seeing a bunch of worms in the intestines during a postmortem. It is such teachers who make a University and students bloom!
    Dr. Rajasingham Narendran

    Reply
  • nantha
    nantha

    //But not in Sri Lanka or India, since those money would be diverted to some peoples’ pocket. That is happening now.//

    Are you telling the “donors” too support your theory? Corrupt people give aid to a corrupt/criminal/hidden purpose and keep silence!

    Reply
  • Mohamed SR. Nisthar
    Mohamed SR. Nisthar

    Hi! everyone,
    Thanks for your valuable contributions, but I reitrerate that the piles of the comments still struggle to address the nub of the question, i.e. whether the UoJ can change the society? If so will she get the necessary capability by simply having Pro. Hoole at the top of the hierarchy?

    Reply
  • nantha
    nantha

    Dr. Rajasingam:
    I do not know anything of your “field” but I have some questions for you.

    Why Egypt and Israel get a big chunk of the aid as “MILITARY” AID? Are they in war with other nations every year? As far as both countries are in peace except Israel which kills at least a Palestinian every day. What is happening to the military hardwares they get from USA every year? Are they rotting in armories or used every year? Once Israel dumped them in Lebanon.

    Better compare the military or defense expenditures of other nations.

    Now I guess how LTTE get the Israeli/American weapons in Sri Lanka. So, the USA which claims it is a DEMOCRACY, fight for HUMAN rights etc.. is behind the trouble making in “third” world countries through its proxies. A war or calamity is the need of many GUN makers. Peace is not their priority in Sri Lanka.

    You did not answer why Israel trained LTTE criminals! You believe that “foreiners” know better about Sri Lanka than Sri Lankans.

    Think for a minute how Sri Lanka produce doctors, engineers and other graduates in the hope of serving the nation at the expense of the poor or “uneducated” Sri lankans. What is the net result? Our graduates want to serve “foreiners” and not the people who produce them.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /I remember my professor of Parasitolgy (Dr.S.T.Fernando), who exclaimed ‘Beautiful!’ on seeing a bunch of worms in the intestines during a postmortem. It is such teachers who make a University and students bloom! Dr. Rajasingham Narendran/–
    Mr.Dr.Narendran,”There is difference between BUTCHER and SURGEON”. Under law there is some kind of Police permission is needed (I think is an international practice)to function as a BUTCHER!.
    To surpass(a great weakness in Tamil? society),you have crossed the border.
    There is too much medical Doctors in Tamil society than needed Why?, social status?, Dowry qualification?, parents pressure?, any way I saw many scenes of “exclaims” in Mulliyavaikal mortuaries (eager to learn their profession)!. Remember this Allopathy (Allopathic medicine and allopathy (from Greek suffering) are terms coined by Samuel Hahnemann, the founder of homeopathy. It meant “other than the disease” and it was intended, among other things, to point out how regular doctors used methods that Hahnemann felt had nothing to do with the disharmony produced by disease, merely addressing symptoms, which, in Hahnemann’s view, meant that these methods were harmful to the patients), where thrived in surgeries of Wars particurlarly from sufferings of wars!.I could saw its impact in the society!.

    Reply
  • nantha
    nantha

    Democracy:
    In Tamil society Doctors, Engineers and other high income earners (British creation) think that they know “everything” and higher people in the society.

    These educated people talk much and support the WEST for many reasons but never tell why a Municipal cleaner of the WEST earn more than a BANK clerk in the WEST.

    Think about our cleaners and the bank employees.

    This is a simple comparrison for consideration for the people who advocate for the WEST.

    The Indian or Sri Lankan society is not prepared to respect the LABOUR of their own people. Till that prosperity is always a hoax. Universities are a vehicles to achive HIGH class status for individuals and not benefit the society which produce them for their services!

    Reply
  • Suppan
    Suppan

    Dear ahmed, Your comment on August 25, 2010 8:56 am

    “Even for a theoretical research, you need statistical and mathematical softwares which are ridiculously expensive. Equipments are in billions in SLR.”

    For Qualitative (theoretical) research huge amount of literature such as monographs, journals and text books are important that is impossible in these countries owing to the coast. Computers, Software and other laboratory equipments are needed in quantitative research.

    Moreover, human resources are important for any research. Otherwise, undergraduate degree student projects would be produced as research papers and directed to professorship. The academic should accept comments on their research with open-mind. Academic should identify the problem or scope of the research and contribution clearly. Without any scope nothing could be achieved. These are the factors influencing a good research.

    Reply
  • Rajasingham
    Rajasingham

    The questions are,
    1. The definition of what a university is and an understanding of how it should function.
    2. The interaction between a university and society, and the role of the university in changing society.

    The fundamental flaw in understanding what a university should be arises from the term ‘University’ being translated into ‘Palkalai Kalagam’ or ‘Sarva kala salai’ in Tamil. The translation leads one to understand a ‘University’ as only place where all ‘Arts’ (ultimately even the sciences are arts of sort)are taught. Modern universities are largely a western concept, although their beginnings were in India. Modern universities have links to society and there is a two way relationship. Public benefactors support the University and the university in turn serves the society at large through teaching, research and extension work.

    Research in a University such as that in Jaffna, does not need huge grants or fancy equipment. Research must be geared at the U of J, to solve fundamental problems that beset the people living in the north- whether it be in agriculture, water conservation, health care or other areas. the most important area is technology transfer, where needed and appropriate. Most of these require mainly effort. Computers are no longer a luxury. There are many who will be ready to donate these and the necessary software. The search engines in the internet provide ample scope for reading about modern developments in any field.

    Let us not make money an excuse. If there is a will, a way can be found. I am aware of how the faculty at the Jaffna university malevolently reject every attempt to help them with visiting lecturers and other simple resources. Further, the attachment to certain professions among Tamils was a post-independence development. Before that it was the ‘Civil service’. The civil servants of old claimed that only the dumbest among them took to medicine! ‘Koli meythalum Kornamenthilay meykonum’ was the manthra of the Tamils at one time. Tamils were always seeking security in employment and old age! I hope this attitude has been broken by the turmoil and tragedy we have been through.
    Dr.Rajasingham Narendran

    Reply
  • Yalpanan
    Yalpanan

    Dear Mr. DEMOCRACY,
    This is your statement – //It meant “other than the disease” and it was intended, among other things, to point out how regular doctors used methods that Hahnemann felt had nothing to do with the disharmony produced by disease, merely addressing symptoms, which, in Hahnemann’s view, meant that these methods were harmful to the patients), where thrived in surgeries of Wars particurlarly from sufferings of wars!.I could saw its impact in the society!.//

    Your examples to differentiate butchery from surgery are good. You seem to take to philosophy with gusto. Good.

    But……. Now can you tell me clearly (please) – how the above statement will contribute to the development of an united approach to revitalize and rehabilitate the University of Jaffna?

    What we need to do at this time and place – is to think about where we want to end up. Think about the next best steps forward – re-think, and then make the move. Instead, thanks to your overtly theoretical explanations we are not moving anywhere. We are stuck in the middle, which is similar to the ‘திரிசங்கு சொர்க்கம்’ in Hindu mythology. As usual we are criticizing each other – hiding behind the comforts of our computer screens. Therefore, I strongly suggest this forum to think about the future, learn from the mistakes we have made (so far) and then make the moves forward.

    One question: Everyone can see that Prof. Hoole is highly qualified and possesses qualities that surpass the hideous gangs of Shanmugalingan and Company.

    But, what has he envisioned for the future of the UOJ and consequently for the upliment of our people??? This is a question to Prof. Hoole, and, I think he has the moral responsibility to answer it. This is being asked on behalf of all the desolute people of this war torn north-east of Sri Lanka.

    Prof. Hoole, the above question is for you to answer……

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    தேசத்தின் பின்னூட்டங்கள் ஒரு ஆரோக்கியமான கட்டத்தை அடைந்திருக்கும் இவ்வேளையில், தமிழில் மட்டுமே புரிதலைக் கொண்டிருப்பவர்களுக்காகவும் எனது இன்னுமொரு கருத்தை இங்கு முன்வைக்கிறேன்.

    “வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
    நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்”

    இது எனது ஆரம்பபாடசாலையில் நான் கற்றுக்கொண்டது, ஆனால் இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துகிடப்பதோடு, ஒரு கோட்பாடு இதற்குள்ளாக சொல்லபட்டுள்ளதையும் என்னால் இன்று உணரமுடிகிறது, அதாவது வெறும் அரசியல்மாற்றத்தால்(அரசியல் தீர்வால்) இலங்கைத்தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும், அதன்பின் அவர்கள் எல்லாவிதமான வளர்ச்சியும்பெற்று வாழ்ந்துவிடுவார்கெளென்ற குறுகிய சிந்தனையாளர்களுக்கும், இந்த கவிதை – அது அப்படியல்ல – குடி(நாம்) வளர்ச்சியடைந்தால், எமது பிரதேச அரசும்(வடக்கு – கிழக்கு – மலையகம்) வலுப்பெற்றதாக மாறுமென்பதே இக்கவிதை சொல்லவந்த யதார்தமான கோட்பாடுமாகும். ஆதலினால் முதலில் எமது குடியை நாம் வளர்ச்சிபெற முயற்ச்சிகள் செய்வோமாக!

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    தேசம் தரமான தளம் என்பதை நிரூபிக்க ஆங்கிலப் பின்னூட்டங்கள்தான் காரணமோ தெரியவில்லை. இதேபோல பிரெஞ்ச் மொழியிலும் டொச் மொழியிலும் வேறு பல மொழியிலும் பின்னூட்டங்கள் வரலாம். அப்போது நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். உங்கள் நிலைமை புரிகிறது. முடிந்தால் முயற்சியுங்கள். காரணம் உங்கள் கருத்துக்களுக்கு மேலும் வலுச் சேர்ப்பவையாகவும் இருக்கும்.

    வலம்புரியில் வந்த ஆசிரியர் தலையங்கம் இங்கு சேர்ப்பது பொருத்தமானதாக இருக்கும். “நான்கு மருத்துவ பீட மாணவர்கள் ஒரு வருடத்துக்குள் தற்கொலை”. valampurii.com/online/viewnews.php?ID=9467

    Reply
  • தமிழன்
    தமிழன்

    //தேசம் தரமான தளம் என்பதை நிரூபிக்க ஆங்கிலப் பின்னூட்டங்கள்தான் காரணமோ தெரியவில்லை. இதேபோல பிரெஞ்ச் மொழியிலும் டொச் மொழியிலும் வேறு பல மொழியிலும் பின்னூட்டங்கள் வரலாம். அப்போது நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். உங்கள் நிலைமை புரிகிறது. முடிந்தால் முயற்சியுங்கள். காரணம் உங்கள் கருத்துக்களுக்கு மேலும் வலுச் சேர்ப்பவையாகவும் இருக்கும்.// (ஜெயராஜா on August 26, 2010 4:40 pm )

    தமிழை எழுதத் தெரியாத படித்த தமிழர்கள் ஆங்கிலத்தில் விவாதித்துத் தம் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு என்ன செய்ய முடியும்?

    எங்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும்…. ஏன், இந்த உலகத்தில் உள்ள சகல மொழிகளிலும் ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் தெரியும்… அது மட்டுமே எங்களுக்குப் புரியும்…. அந்த வார்த்தை:- “தொடரும் துயரம்”….

    எங்கள் வாழ்வுகளுக்கு அர்த்தம் வழங்கக் கைகொடுக்கப் போவது யார்தானோ… அது தெரியவில்லை??

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /Dear Mr. DEMOCRACY,But……. Now can you tell me clearly (please) – how the above statement will contribute to the development of an united approach to revitalize and rehabilitate the University of Jaffna?- Yalpanan on August 26, 2010 10:10 am/.
    My answer..நிறுவனப்படுத்தப்பட்ட நகர்வுகளுக்கு(உதா:சிங்கள பவுத்த தேசியம்), ஒரு வித “நிரந்தரத் தன்மை” “ஸ்ட்ராடிஜிக்” அடிப்படையில் உண்டு. அதற்கொப்ப ஒரு நிரந்தர தன்மை அரசியலை மட்டுமே இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்பு வைக்க முடியும் என்பது இராணுவ விஞ்ஞானம்.
    கவிஞர்? மு.க.கனிமொழி, மற்றும் கத்தோலிக பாதிரியார் (லயோலா கல்லூரி, ஐக்கஃப், மாறன் சகோதரர்கள், சோனியா) ஆகியோரின் மே19 முன், பங்குபற்றி வெளிச்சம் பாய்ச்சப் படவேண்டும்!.
    பச்சோந்தியின் நிறத்திற்கு தகுந்த மாதிரி உதட்டில் உள்ள வசனங்கள் மாறும் “இது அரசியலா?” இல்லை “கலைஞனின் தொழிலா?”.பச்சோந்திகள் நிறம் மாறுவதற்கு முன்பு படம்பிடித்து பதிவு செய்யப்படவேண்டும்!.
    விடுதலைப் புலிகளின் புலம்பெயர் சொத்துக்கள், “கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களின்” சர்வதேச சட்ட பாதுகாப்புகளுக்குள் பதுங்கியிருப்பதாக கேள்வி. இது நார்வே நெடியவனிடம் இருப்பதாக சொன்னாலும், சொத்துக்களை கைக்குள் வைத்திருப்பவர்கள், நெடியவனுக்கு தலையையும், கே.பி. – உருத்திரகுமரனுக்கு வாலையும் காண்பித்து விளையாடுகிறார்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ஆயுதம் விற்றது “Franz Joseph Hermann Michael Maria von Papen zu Köningen (29 October 1879 – 2 May 1969) was a German nobleman, Roman Catholic monarchist politician, General Staff officer, and diplomat, who served as Chancellor of Germany in 1932 and as Vice-Chancellor under Adolf Hitler in 1933–1934.” இவரின் கத்தோலிக்க நிறுவனமே!.இதன் வழி வந்தவரே புத்தமத எதிர்ப்புவாதி, சூவீடனை சேர்ந்த “ஜெர்மானியர் பேராசிரியர் பீட்டர் சார்ள்ஸ்”!. இவருக்கு கருத்தியல் பின்புலமாக இருப்பவர்தான் பேராசிரியர் க.சிவத்தம்பி. இவர்கள் இருவரும் சென்ற உலகத்தமிழாராய்ச்சி மாநட்டிலிருந்து வெளீயேற்றப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கலைஞர் கருணாநிதியின் நண்பர்கள்!.
    அதாவது “சிங்கள பவுத்த தேசியத்தின் கொடுமைக்கு?” எதிராக நிரந்தரமான “ஒரு தமிழ்? கருத்தியல்(அரசியல்)” வேண்டும் .ஆனால் அதுவே புத்தமதத்திற்கு எதிரான “The Boxer Rebellion, also called The Boxer Uprising, by some historians or the Righteous Harmony Society Movement in northern China, was an anti-colonialist, anti-Christian movement by the “Righteous Harmony Society” (Yìhétuán),or “Righteous Fists of Harmony” or “Society of Righteous and Harmonious Fists” (known as “Boxers” in English), in China between 1898 and 1901. The uprising took place in response to imperialist expansion involving European opium traders, political invasion, economic manipulation, and missionary evangelism. In 1898 local organizations emerged in Shandong as the result of the imperialist expansion, as well as other internal issues such as the state fiscal crisis and natural disasters.” இத்தகைய பாரம்பரியமாக(பீட்டர் சார்ள்ஸ்) மாறிவிடக்கூடாது……

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இன்றைய தேவை தமிழ் மக்களின் சேவை- Dr.Rajasingham Narenderan Phd,who want to change the Butchery into a surgery!.– http://www.nerdo.lk/?p=565#more-565
    In western countries there is one story,”One white man ask a Hindu,why you people worship a cow,in our country if we put one cow in one side of a machine,sausages will come out on other side.Then the Hindu man replied,if you put sausages in one side could you get a cow on the other side?”.
    Like that we appreciate your rehablitation works but from our long experience in Srilankan issue intransigence,we have this question “n context of “Premadasa syndrome”(KP was involved),comments by him on Vaiko and Nedumaran, Is that “So the paperwork was done quickly and thanks to Mr. Gota bhaya’s support we got NERDO registered on July 6th. The chairman is Mr. S.Thavaratnam the president of the Northern Fishermen’s Society Federation. I am the NERDO secretary.”…
    does’t mean ,”the starting of a proxy war” against Indian establishments(on Indian fishermen first), using the ex -LTTE cadres?.”

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear தமிழன், Your comments on August 27, 2010 12:38 pm :

    “தமிழை எழுதத் தெரியாத படித்த தமிழர்கள் ஆங்கிலத்தில் விவாதித்துத் தம் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு என்ன செய்ய முடியும்?”

    Language is not an issue, the issue is how we get out of this trap. This type ideology was preached by the LTTE, then they started International Schools in Vanni and there was a lot of competition for admission among the LTTE’s carders children.

    Writing in Tamil is not a problem and writing in Tamil using Computer is a problem. Further, to the above, Tamil is a highly fer-tailed Language, so that it not easy to write, without grammatical mistakes and in a literal form.

    Reply
  • nantha
    nantha

    DEMOCRACY:
    Your question must be answered by many. When LTTE was stooges of Premadasa, LTTE arrested Tamil Nadu Fishermen and handed over them to Sri Lankan Navy and LTTE claimed that Indians are invading into Sri Lankan waters.

    LTTE was created for the purpose of attacking India from the South by the US/UK Axis. India is still the target of WEST because Indians are still the BIGGEST Gold consumers on Earth.

    Now LTTE is firmly footed in Tamil Nadu. Your “suspician” has reasonable doubts about this NERDO under KP!

    Reply