24

24

மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பெற்றோலிய கூ. தா. ஊழியர் பிரச்சினை: ஜனாதிபதி 26ம் திகதி ஊழியர்களுடன் பேசுவார் – சபையில் பெளஸி தகவல்

0000fawzi_minister.jpgஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டுத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவாரென்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவித்த அமைச்சர் பெளஸி, அதுவரை சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தைக் கைவிடுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே. வி. பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி யொன்றுக்கு அமைச்சர் பெளஸி பதில் அளித்தார்.

தற்போது சட்டப்படி வேலை செய்யும் ஊழியர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கியுள்ளதாகக் கூறிய அவர், ஊழியர்களின் தொழிற்சங்க அலுவலகம் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஆசிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஆசிய ஒன்றியம் ஒன்றின அவசியம் பற்றி ஆசிய தலைவர்கள் மாநாட்டில் இன்று (ஒக்ரோபர் 24ல்) உரையாடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசிய நாடுகள் அண்மைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விரைவில் மீண்டதை சாதகமாகக் கொண்டு கிழக்காசிய ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹற்அயாமா தெரிவித்துள்ளார். இது உலகை வழிநடத்திச் செல்வதற்கான அபிலாசையக் பூரணப்படுத்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆசிய ஒன்றியத்தில் தென்கிழக்கு ஆசிய ஆசியான் நாடுகளின் கூட்டும் அவற்றையொட்டிய பிரதேச பங்காளி நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், சவுத்கொரியா நியுசிலாந்து, அவுஸ்ரோலியா ஆகியனவும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இந்த ஆசிய ஒன்றியத்தில் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்ள ஜப்பான் முயற்சிக்கின்றது. அது தொடர்பான விவாதம் தாய்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அரசியல் பொருளாதார வலயத்தை 2015ற்குள் ஆரம்பிப்பது பற்றி இம்மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்காக கப்பலில் வந்த பொருட்கள் அமைச்சர் அமீர் அலியால் பொறுப்பேற்பு

இடம் பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்க கப்பலில் வந்த பொருட்களை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அரிசி, மா, நூடில்ஸ், டின் உணவு, டின் மீன், தேயிலை, சீனி, பால் மா, குழந்தை உணவு, பழச்சாறு மற்றும் உலர் உணவுப் பொதிகள் இந்த பொருட்களில் அடங் கியிருக்கின்றன.

இந்த பொருட்களின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப் பப்பட்டு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து நூற்றி இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான இப்பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்க செயலணித் தலைவர் திஸ்ஸ அபேவிக்ரம ஒப்படைத்தார்.

இந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக தொண்டர் குழு ஒன்று தயாராக இருப்பதாக திஸ்ஸ அபேவிக்ரம தெரிவித்தார். இந்த பொருட்கள் வவுனியா அரச அதிபரூடாக விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

2010: இடைக்கால கணக்கறிக்கை நவ.3 இல் சமர்ப்பிப்பு; 5இல் வாக்கெடுப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

26parliament.jpg2010ம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் திகதி சமர்ப்பிக்கப்படும் இந்த இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நவம்பர் மாதம் 5ம் திகதி வரையும் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது நவம்பர் மாதம் 5ம் திகதி பின்னேரம் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களின் கதவுகள் திறக்கப்பட்டால் உதவிகள் தேடிவரும்

வன்னி முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதனால் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதில் தயக்கம்காட்டுவதாக ஐ நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதவி வழங்கும் அமைப்புகள் உதவிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆனால் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அவர்களை எரிச்சலடைய வைப்பதாகவும் ஐ நாவில் வதிபவரும் இலங்கைக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவருமான நெயில் புனே தெரிவித்தார்.

ஒக்ரோபர் 9 புள்ளிவிபரங்களின்படி 245 000 பேர் இன்னமும் மீள்குடியமர்த்தப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக ஐ நா மதிப்பிட்டு இருந்தது. ஆனால் ஒக்ரோபர் 22ல் 41 000 பேரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் குடியமர்த்தப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

கடந்த யூலையில் இடம்பெயர்ந்த அகதிகளின் 185 திட்டங்களுக்கு 270 மில்லியன் டொலர்கள் தேவைப்பட்டதாக குறிப்பிடும் நெயில் புனே அரசு 155 மில்லியன் டொலர்களுக்கான வழியை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார். முகாம்கள் திறந்தவிடப்பட்டால் பெருமளவிலான உதவி செய்யும் அமைப்புகள் உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களின் சாட்சியங்கள் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

A_Barber_in_Chettikulamவன்னி முகாம்களின் நிலை தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றது. அம்மக்கள் சார்பாக பேசுவதாகவும் எழுதுவதாகவும் கற்பிதம் செய்கின்ற பலர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுடன் அவற்றை திரிபுபடுத்தி அங்குள்ள யதார்த்தத்தில் இருந்து புலம்பெயர் மக்களை அந்நியப்படுத்தி வைத்துள்ளனர். வன்னி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தங்கள் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற கோரிக்கைகள் அம்மக்களின் சார்பில் முன்வைக்கப்படுகின்றன. நாடுகடந்த தமிழீழம் முதல் வன்னி முகாம் மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் உதவுவது துரோகத்தனம் என்பது வரை புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் பரந்துவிரிந்தள்ளது.

ஆகவே அங்குள்ள மக்களின் வாழ்நிலையின் உண்மைத்தன்மையை அறிவது மிக மிக முக்கியமானது. அதனை அறிந்து கொள்வதன் மூலமே மக்களுக்கான தேவைகளையும் கோரிக்கைகளையும் அறிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்காக அம்மக்களை ஆட்டிப்படைக்க முடியாது. அதனைக் கருத்திற்கொண்டு அண்மைக் காலமாக வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள பலருடனும் வவுனியாவில் வதிபவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இவர்களில் சிலருடன் பல மணித்தியாலங்களாக பேசுவதும் வழக்கமாகிவிட்டதொன்று. அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவரவே இவற்றை வெளியிடுகிறோம்.

ஓக்ரோபர் 6ல் மூன்று நாட்கள் வெளியே வந்து தங்கும் அனுமதியுடன் வந்தவருடன் தொலைபேசி மூலம் உரையாடும்போது அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வவுனியாவிலும் முத்தையன் கட்டிலும் வியாபாரியாக இருந்தவர். தனது இரண்டு வயது குழந்தையுடன் தான் தப்பி வந்து இடையில் ஏதும் நடந்தாலுமென்று, அங்கேயே நின்று பின்னர் புலிகளினால் ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட மக்களுடன் முள்ளிவாய்க்கால்வரை சென்றார். பின்னர் மே மாதம் பத்தாம் திகதியளவில் பெருந்தொகையாக இடம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தவர். தனது முகாம் வாழ்க்கை பற்றி இவ்வாறு சொன்னார்.

”நான் செட்டிக்குளம் ராமநாதன் காம்பில் இருக்கின்றேன். செட்டிக்குளம் டிஸ்றிக்கில் ஆனந்தகுமாரசாமி முகாம், ராமநாதன் முகாம், அருணாசலம் முகாம், Zone 4, வீரபுரம், கதிர்காமர் முகாம், Zone 5 என காம்ப்புகள் இருக்குது. ராமநாதன் காம்பில் 65 000 பேர் இருக்கிறோம். அங்கு பெரும்பாலான கட்டுப்பாடு பொலிஸ்தான். ஆமியும் வந்து போவார்கள்.

சாப்பாடு, தண்ணி, ரொய்லெட் வசதி வந்த புதிதில் மிகமோசம். இப்ப பிரச்சினை இல்லை. முந்தி நாங்கள் கொஞ்ச கொஞ்சப் பேராகச் சேர்ந்து ரேன் வைத்து மாறி மாறி எல்லாருக்குமாய் சமைப்போம். இப்ப எல்லாரும் தனித்தனிய குடும்பமாய்த்தான் சமைக்கிறோம். ஓவ்வொரு வியாழனும் World food சமையல் சாமான்கள் தருவார்கள். தண்ணீர் பைப் வசதி இருக்குது. ரியூப் வெல் அடிச்சு வைத்திருக்கிறார்கள். குடி தண்ணீர் கிடைக்கிறது. மரங்களை வெட்டி மண்றோட்டுகள் போட்டிருக்கிறாங்கள். கறண்ட் இருக்குது. பிள்ளைகள் படிக்கப் போகினம். ரென்ட்டுகளை வீடுகளாய் கட்டிவிட்டால் மாதிரிக் கிராமம்தான். ரென்ட் சரியான வெக்கையாய் இருக்கும். நாங்கள் பெரியஆட்கள் சமாளிப்பம். குழந்தைகள்பாடு சரியான கஸ்டம். மழை வந்தால் பெரிய சிக்கல் இந்த ரென்டுகள் தாங்காது. அதுதான் தொல்லை. வெய்யில் நேரங்களில் ரென்ட்டுக்குள் இருக்கேலாது அவ்வளவு வெக்கை.

மெனிக்பார்ம் பிரச்சினைகள்பற்றி கேட்டபோது ”நீங்கள் சொல்லுமாப்போல பெரிய பிரச்சனையாக நான் கேள்விப்படவில்லை. வன்னிக்குள் நடந்ததை விடபெரிசாய் என்ன நடக்கப் போகுது. காம்புக்குள்ளே சின்னச் சின்னதாய் பிரச்சினைகள நடக்கும்தானே. சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கிற சனத்துக்கு வேற வேலை இல்லைத்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் சண்டை வரும்தானே. நீ புலி. அவன் புலி எண்டும் சண்டை வரும். சனங்கள் உங்கை சும்மா சும்மா கதைக்கினம்போல.

ஆமிக்காரன் ஆட்களை பிடிக்கிறது ஏத்திக்கொண்டு போறாங்களாமே எனக் கேட்டபோது ”எனக்குத் தெரிய நான் அப்படி எங்கட காம்பில் கேள்விப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விசயங்கள் நடந்திருக்கும்.

புலிகள் பற்றி ஒருத்தரும் கதைப்பாரில்லை. இலக்க்ஷன் பற்றி ஒருத்தருக்கும் அக்கறையில்லை. நான் நினைக்கிறேன் ரணில்தான் வருவாரெண்டு. காம்புக்கு டக்ளஸ்தான் ரெண்டு மூண்டுதரம் வந்தார். உதவிகள் கேட்டால் செய்வார். அந்த ஆள் யாழ்ப்பாணத்துக்கு நிறையச் செய்கிறார். எங்களுக்கு தேவை அபிவிருத்தி. அதை அவர் செய்கிறார் அது எங்களுக்கு நல்லது தானே.”

”எப்படி நீங்கள் வெளியே வந்தீங்கள்” என கேட்டபோது: ”அரசாங்கத்தின் லெட்டரோடை காம்புக்கு வெளியே வந்து மூன்று நாள் தங்கலாம். பிறகு திரும்ப வேணும். நான் அப்படி ரெண்டு மூண்டு தரம் வந்தனான். அடிக்கடி வந்தால் சந்தேகப்படலாம் என்பதால் ஏதும் தேவைக்காக வந்துபோவேன். அப்படி எல்லாரும் வரலாமோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு வந்து தங்க இடமிருக்குது சொந்தக்காரர் இருக்கினம் வாறேன். எல்லாருக்கும் அப்படி யாரையும் தெரிந்திராதுதானே. வந்தும் என்ன செய்வது. நான் வெளியே வந்து எனது குடும்பம் தங்க இடம் வேலை ஒன்று கடையில் எடுக்க அலுவல் பார்க்கிறேன். காம்பை விட்டு வெளியே போக கச்சேரியில் போர்ம் கொடுத்திருக்கிறேன். ஆமி கொமாண்டர் சைன்பண்ணி வந்ததும் போகலாம். சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கினம். எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் போனகிழமை போய்விட்டார். நான் இரண்டு வயதுப் பிள்ளையுடன் இருக்கிறேன். இந்த மாதக் கடைசிக்குள் நானும் போய்விடுவேன். ஊரில் தங்க இடம் இருக்கு. அங்கும் விதானையார் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுவினம் இப்படி பலர் போய்விட்டார்கள்.

குழந்தைகளோடை இருக்கிறவை முதல் ஊனமுற்றோர் இரண்டாவது கர்ப்பிணியாட்கள் மூன்றாவது என படிப்படியாய் ஒவ்வொரு காம்பிலும் இருந்து வெளியேபோக விடுகிறார்கள். அவர்களை வேறை காம்பில கொண்டு போய் வைத்திருப்பதாக நான் அறியவில்லை. எல்லாரையும் ஒரேயடியாக வெளியே விட ஏலாதுதானே. ஆட்களை விசாரிச்சு விசாரிச்சுத்தான் விடுவாங்கள்.

வெளியில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறவை போவினம். இல்லாதவை வெளியே வந்து என்ன செய்வது. எப்படிச் சீவிப்பது. வெளியில வாடகைவீடு 10 000, 15 000 என்று கேட்பார்கள். சாப்பாட்டுச் செலவு வேலை என்று எல்லாத்துக்கும் எங்கை போவது. இவ்வளவு காசு கொடுக்க இயலாத, அப்படியான ஆட்கள்தான் பெரும்பாலான ஆட்கள். அவர்கள் போனால் வன்னிக்குத்தான் போவம் இல்லாவிட்டால் எங்கும் போகமாட்டம் என்று பின்னடிக்கினம்.

என்னிடம் கைத்தொலைபேசி இல்லை. வைத்திருக்க விடமாட்டாங்கள். வைத்திருப்பவையும் ஒழித்து வைத்துத்தான் கதைப்பது. நான் உங்களுக்கு மற்றைய காம்பில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுத்துத்தாறன் கதையுங்கோ” என்றார்.

”ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குப் போவதில் தடையில்லை. சில பிள்ளைகள் ஒரு முகாமில் இருந்து மற்றமுகாமுக்குப் போய்ப் படிக்கிறார்கள்” என்றார்.

(இந்த தொலைபேசி அழைப்பில் எம்முடன் பேசியவர் ஒக்ரோபர் 12ம்திகதி முகாமிலிருந்து வெளியேறி தற்போது யாழ் கோவில்ப்பற்று பகுதியில் தனது பிறந்து வளர்ந்த வீட்டில் தனது உறவினர்களுடன் இணைந்துள்ளார்)

கதிர்காமர் முகாமின் உள்ளே இருக்கும் ஒருவருடன் ஓக்ரோபர் 8ல் தொடர்பு கொண்ட போது….

தனது கைத் தொலைபேசியை மற்றவர்களுக்கு கொடுத்து எம்முடன் கதைக்க உதவுபவர்களில் ஒருவர் மாவீரர் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் (அவரே சொன்னார்). ஜுன் மாதத்தில் எம்முடன் கதைக்கும்போது அவரின் பார்வையில் – இப்படித்தான் புலி வீழ்ந்தாலும் காலத்துக்கு காலம் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. இவர் சரளமாக கதைக்கமாட்டார். அது அவர் தன்மை என்பதே என் அனுமானம். ஒக்ரோபரில் கதைக்கையில் அவர் எதுவுமே கதைக்கப் பிரியப்படவில்லை. ”என்னத்தை அண்ணை சொல்ல” என்று மிகவும் மனச் சோர்வுடன் சலித்துக் கொண்டார். ”எனக்குப் பக்கத்தில் இப்ப நிக்கிறவர் நல்லாய்க் கதைப்பார். அவரிடம் கொடுக்கிறேன். கதையுங்கோ” என்றார்.

அந்த புதியவர் என்னிடம் ”நீங்கள் யார்? என்ன செய்கிறியள்?” என்று விபரம் கேட்டபோது நாம் என்ன செய்கிறோம் என்று சொன்னேன். ”ஏன் அண்ணை தேசம் எண்டு சொல்லுறியள். கோதாரி எண்டு சொல்லுங்கோ. இவ்வளவு காலமும் நடந்தது கோதாரி இல்லையோ?. கண்டறியாத போராட்டம். சனம் பற்றி யார் நினைச்சது. தாங்கள் தாங்கள் தங்கட நலனுக்குப் போராட்டம் என்று சனத்தைச் சாகடிச்சுக் கொண்டு தங்கட குடும்பத்தைப் பார்த்தவை. போராட்டம் நடத்தியிருந்தால் இப்பிடியா முடிஞ்சிருக்கும். என்ன பிள்ளைகளுக்கு சாப்பாடு உடுப்பு படிப்பு இதுக்குத்தான் அண்ணை இப்ப போராட்டம். எங்களுக்கு மொழி, சாதி இது என்னண்ணை?. சிங்களமொழி, சனங்கள் என்ன பிழை எண்டு சொல்லுங்கோ. சனங்கள் – மனிசர் எண்ட நினைப்பு இல்லாமல் எல்லாம் நடத்தியவையள். நடந்ததுகள் நினைவுக்கு வந்தால், திருப்பி யோசிச்சால் அழுகை வருகிறது. இளம் குழந்தைகள் பொடியன்கள் பிள்ளைகள் எல்லாம் அநியாயம். இயற்கைக்கு ஒத்து வராமல்தான் இப்படி இந்த திருவிழாவை இயற்கை முடிச்சு வைச்சது” என்றார்.

முன்னர் ஈபிஆர்எல்எப் ஆதரவாளராக இருந்த 42 வயதான வசாவிளானைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளுடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தவர். இவர் தற்போது கைவசம் எதுவுமேயில்லாமல் எதிர்காலம் என்ன என்று நிச்சயம் இல்லாமல் தற்போது கதிர்காமர் முகாமில் இருக்கிறார்.

”தனிநாடு யார் அண்ணை கேட்டது. எல்லாமே புலிகளின் பம்மாத்தும் சுத்துமாத்தும் தானே. வன்னியில் இருந்த சாதாரண சனத்திடம் தனிநாடு என்ற நம்பிக்கை எண்டைக்குமே இருந்ததில்லை. புலிகளின் தொடர்ச்சியான கெடுபிடிகளே இருந்தது. புலிகள் கோவில் திருவிழா செய்வது போலவே எல்லாம் செய்தார்கள். யாரும் ஏன், எது, எப்படி என்று கேட்கமுடியாது. சொல்லும் எல்லாத்துக்கும் ஓம் சொல்ல வேணும்.

எப்பசரி மக்களின் கருத்துக்களைக் கேட்டார்களா? தாங்கள் செய்வது சரியா என்று யாரிடமும் கேட்கவில்லையே? யாருக்கும் எதுவும் தெரியாது. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டு இப்ப தெரியுது இவையளுக்கு என்ன தெரியும் எண்டு” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”முகாம்களுக்கு வெளிநாட்டு ஆட்கள் வந்து பார்த்ததாக கேள்விப்பட்டேன்” என்று நான் பேச்சை வளர்த்தேன். ‘நான் சந்திக்கவில்லை. டக்ளஸ் இப்பவும் வந்து மக்களின்ரை அபிப்பிராயத்தைக் கேட்கிறார். அவர் ஓ.கே. வளைந்து கொடுத்து செயல்படுகிறார். இப்ப எங்களுக்குத் தேவை உதவிகள். அதைப்பற்றி அபிப்பிராயம் கேட்கிறார். அரசியல் கதைப்பதேயில்லை. எல்லாம் வெளியே வந்தபின் அரசியல் கதைப்போம். இப்ப என்ன அவசரம் என்றார். அவர் சொல்லுறது சரிதானே இப்ப உள்ளது எங்கட பிரச்சினைகள்.

நான் வன்னியில் இருக்கும்போது 2 சாரம் 2, 3 சேட்டு இதைவிட ஒரு துவாய்; வேற எதுவுமில்லை. பிள்ளைகளுக்கு கொஞ்ச உடுப்பு. பழைய கொட்டில்தான் எங்கட வீடு. வேலையில்லை. புலிகளுக்கு வேலை செய்தா சம்பளம். கூலி வேலை. இப்ப வேலையில்லை. காம்பில் சாப்பாடு உடுப்பு தண்ணீர் எல்லாம் கிடைக்கிறது. பிள்ளைகள் படிக்கினம். ஆனால் அகதிமுகாம் எண்டு பெயர். பிள்ளைகள் எப்ப சரி ரெயினை புது பஸ்களை கண்டவையோ?

வன்னியில் நான் புலிகளுக்கு பதிவுக்கு கொடுத்தது சொந்தப் பெயரல்ல. ஊரில் இருந்து வரும்போதே நானும் எனது மனைவியும் இப்படித்தான் எண்டு யோசிச்சு கொடுத்தம். இல்லாவிட்டால் என்னை ஈபிஆர்எல்எப் என்று சுட்டுப் போட்டிருப்பாங்கள். இப்ப ராணுவத்திடம் எல்லாம் சொல்லி உண்மையான பெயர் கொடுத்துள்ளேன். என்னுடைய அரசாங்க அடையாள அட்டையை திண்ணை மண்ணுக்குள் புதைத்து மெழுகிவைத்திருந்தேன். இப்பத்தான் அதைப் பாவிக்கிறம்.

எனக்கு வேறு இடத்திலும் ஆட்கள் இல்லை. வேறு இடங்களுக்கு போக முடியாது. போனாலும் சாப்பாடு வீடு எல்லாத்துக்கும் என்ன செய்வது. எனது யாழ்ப்பாண வீடு இருந்த இடம் இப்ப இராணுவ முகாம். வீடு எல்லை அடையாளமே இல்லாமல் உள்ளது. திரும்பிப் போக அங்கு இடமில்லை. என்ன செய்யலாம் திடீரென்று போ என்றாலும் எங்க போறது ஒண்டுமே தெரியாத நிலவரம்.

வன்னிக்கு திரும்பப் போகமாட்டேன். புலிகளிடமிருந்த மிதிவெடிகளின் அளவு எனக்கல்லோ தெரியும். அவ்வளவும் ஊர் தேசம் எல்லாம் புதைச்சாங்கள். எல்லாம் மழை வெள்ளத்துக்கு மூடுப்பட்டிருக்கும். யாரோ துப்பரவு பண்ணித்தான் தீரவேணும். இனிமேல் வன்னிக்குள் போய் காலை கையை உயிரை இழப்பது புத்திசாலித்தனம் இல்லை. என்னை வெளியே விட்டாலும் வன்னிக்குப் போகமாட்டேன். நான் என்ன மடையனோ வன்னிக்குள்ள குடும்பத்தைக் கொண்டுபோய் கால் கையை முறிக்க. வன்னிக்குத் திரும்பப் போனால் அந்த கொலை மரண சம்பபவங்கள்தான் எங்களுக்கும் எங்கட பிள்ளையளுக்கும் திரும்ப திரும்ப நினைவுவரும். நான் வவுனியா மதவாச்சி அல்லது அனுராதபுரம் போய் இருப்பனே தவிர திரும்ப வன்னிக்குப் போகமாட்டேன். எங்கட சொந்த பந்தங்கள் எங்கே எண்டு தெரியாது எப்படி கண்டுபிடிக்கிறது.

முகாம்கள் மூடவேணும். மூடுவது என்றால் எல்லோருக்கும் எப்படி வசதிகள் செய்து கொடுக்கப் போகினம். யார் பொறுப்பு. புலி இல்லை. அரசாங்கத்திடம் எப்படிக் கேட்பது. அவனை – சிங்களவனை – கொல்ல திட்டம் போட்ட இனம் எண்ட பெயர் எங்களுக்கு. எப்படிக் கேட்க முடியும். 25 வருஷம் சனத்தின்ரை வாழ்க்கை அனியாயம். 3 வருஷம் இந்த அகதிமுகாமில இருக்கலாம். பிரச்சினையில்லை. இருக்கிற வீடு ரென்ட் சரியில்லை. மழை காத்து எண்டால் பிரச்சினை. மற்றும்படி தண்ணி கக்கூசு பிரச்சினை.

முன்னர் கொழும்பில் விவேகானாந்தா மேட்டில் கொஞ்சநாள் இருந்தனான். அங்க பொதுக் கக்கூசு தான் அண்ணை பாவித்தனான். அப்பிடியும் சீவித்த எங்களுக்கு இது என்ன புதிசோ?. இப்ப கக்கூசு அது இது எல்லாம் எங்களுக்கு பழகிப்போச்சு. அதைவிட கக்கூசு எல்லாம் திருத்தியாச்சு.

காம்பிற்கு வந்த புதிசில மன அழுத்தம் – மனப்பிரச்சினை – பெரிதாக இருந்தது. இப்ப அப்படியில்லை. வெளிநாட்டில் உள்ள புலிகள் ஆட்கள் என்ன செய்கினம். புலி முடிஞ்சா போராட்டம் முடிஞ்சுதாமோ? எங்களைப்போல சனங்கள் கஸ்ரப்பட்ட நாடுகளில் எப்பவுமே போராட்டம்தான். இந்தியாவில் சேரிப்புற மக்கள் வாழ்வது என்ன வாழ்க்கையோ?. அது போராட்டம்தானே. அதோடை பார்க்கையில் நாங்கள் இருக்கிற முகாம்களில் சாப்பாடு கிடைக்கிறது.

அவரிடம் ”உங்கள் அனுபவங்கள் கண்டது கேட்டவை எல்லாத்தையும் எழுதமாட்டீங்களா” எனக்கேட்டதற்கு எனக்கு அப்படி எழுத பெரிசாய் வராது. பேசுவேன். 30 வருஷமாக உலகத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. எல்லாம் ஒரு இருண்ட காட்டில் இருந்த மாதிரி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வாழ்ந்திட்டோம்.

(இந்த நண்பர்கள் இன்றும் அகதிமுகாமில் இருக்கிறார்கள்)

இவர்களது வாக்கு மூலங்கள் மட்டுமல்ல இன்னும் பலவும் தேசம்நெற் இல் வெளிவரும். உள்ளதை உள்ளபடி அவர்களுடைய மொழியிலேயே பதிவு செய்ய முயற்சிக்கின்றோம். அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் பட்டதுன்பங்களையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வார்த்தைகள் இன்றி திக்குமுக்காட வேண்டியுள்ளது. குற்ற உணர்வில் மனம் குமைகின்றது. அவர்களிடம் கேள்விகளைக் கேட்கின்ற மனத்துணிவு வருவதில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை அவதானமாக கேட்டுக்கொண்டோம்.

வன்னி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

மெல்ல வெளிவரும் நிஜங்கள் – வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் : த ஜெயபாலன்

தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்

எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்! : கப்பல் அகதிகளின் கோரிக்கை.

Tamil_Boat_Refugeesகடந்த அறுபது வருட காலமாகச் சிங்கள பௌத்த இனவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள்ளாகி வரும் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பாக இயங்க உலகின் எந்த அரசும் சரியான முறையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மனித உரிமை மீறல்களைச் செய்து வந்த இலங்கை அரசின் இனவாதத்தின் உச்சக்கட்டமாக அண்மையில் நடைபெற்ற யுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் காவு கொண்டுள்ளது.

குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். பலர் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையுமே இழந்துள்ளார்கள். கல்வி உரிமைகளை இழந்துள்ள சிறுவர்கள், தம் வாழ்வியல்புகளை இழந்த பல உறவுகள் என்று தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காது.

யுத்தம் முடிவுற்றதாக அரசு கூறிவரும் நிலையில் 250 000க்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் அகதிமுகாம் என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில் படும் கோரக் காட்சிகளை கண்டு உலகமே இன்று அதிர்ந்து போயுள்ளது. கண்டனங்களைத் தெரிவிக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் இன்றும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் அழிக்கப்படுகின்றார்கள்.

அவர்களது வாக்குமூலம்:

உறவுகளையும் வாழ்வியல்புகளையும் இழந்து பாதிப்புற்ற நாம் எம் உயிரையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை நாட்டை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்து மற்றும் வாழ் உரிமைகளை வழங்கும் நாடு அவுஸ்திரேலியா என்ற நம்பிக்கையில் அந்நாடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கடந்த 11-10-2009 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு எமது பயணம் திசைமாற்றப்பட்டு இந்தோனேசியாவில் அமைந்துள்ள மேராக் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். ஆறு மாதக் குழந்தை முதல் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட அறுபத்தாறு வயதுள்ளவர் வரை கடலில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு கிழமைகளாக உலகின் ஒரு நாடாவது எம்மை ஏற்றுக்கொள்ளாதா என்று காத்திருக்கிறோம்.

பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழக் கூடியதாகவும் மற்றும் 400க்கும் மேற்பட்ட மொழிகள் பழக்கத்தில் உள்ளதாகவும் இருக்கும் இந்தோனேசியாவில் சிறுபான்மை மொழிகள்கூட தேசிய மொழியாக இருப்பது போன்ற ஜனநாயக முறைகள் பழக்கத்தில் உள்ளதை அறிந்து எமது ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். எவ்வித குற்றங்களையும் புரியாது அகதிகளாக வந்த எம்மை தடுப்பு காவலில் வைக்க முயல்வது எம்மை மட்டுமல்லாது எமக்கு ஆதரவு தரும் தமிழ் பேசும் முழுச்சமூகத்தையுமே துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாகி உரிமைகள் மறுக்கப்பட்டு உறவுகள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தேடிச்செல்வது எம்மை தடுப்பு காவலில் வைக்காது எமது இளையோரின் கல்வி உயிருக்கு உத்தரவாதம் மற்றும் இதர உரிமைகளை வழங்கக்கூடிய ஒரு நாட்டையே.

ஏதாவது ஒரு அரசு எமது துயர நிலையை அறிந்து ஜக்கிய நாடுகள் சபை மூலம் அல்லது ஏதாவது ஒரு முறையில் ஆவனை செய்யும்வரை நாம் கப்பலை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது தேவைகளையும் அவலத்தையும் உணர்ந்து எமது உரிமைகளை வழங்கக்கூடிய அகதி அந்தஸ்து வழங்கும் ஒரு நாடு எம்மை ஏற்றுக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு கப்பலிற் காத்திருக்கிறோம்.

· இந்தோனேசிய, அவுஸ்திரேலிய வாழ் மக்கள் மற்றும் அங்குள்ள தொழிற் சங்கங்கள் மனித உரிமை அமைப்புக்கள் பென்கள் அமைப்புக்கள் தயுவுசெய்து எமது துயர் அறிந்து எமது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம்.

· மனித உரிமைக்காக குரல்கொடுக்கும், ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்கும் உலகெங்கும் இருக்கும் அமைப்புக்கள் எமக்கு முடிந்தளவு உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

· தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் வாழும் எமது சகோதர சகோதரிகளிடமும் எம்மைப் போலவே இலங்கை அரசின் அடக்குமுறைக்கு பலியாகி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களை எங்களுக்காக குரல்கொடுக்கும்படியும் உரிமையுடன் கேட்டுகொள்கின்றோம்.

எமது குரல் கேட்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எமக்கு ஆதரவு கோரி வரும் திங்கள் 26-10-2009 அன்று கப்பலில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம். எமக்கு வேறுவழி தெரியவில்லை. நாம் எமது இந்தக் கோரிக்கையைத் தமிழ் ஒருங்கமைப்பு மூலமாகவும், தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு மூலமாகவும் உங்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

._._._._._.

Tamil_Boat_Refugeesஇந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாக உள்ளது. இலங்கைத் தமிழர்களை ஏற்றிக் கொண்டு மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒக்ரோபர் 10ல் இந்தோனேசிய அதகாரிகளால் தடுக்கப்பட்டது. அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இவர்கள் இந்தோனேசிய அதகாரிகளால் தடுக்கப்பட்டதை அடுத்து அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுமதிக்க வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் இந்தோனேசியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே இக்கப்பல் அகதிகளின் விபரங்களைத் திரட்டி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு ஒக்ரோபர் 18ல் அறிவித்து இருந்தது.

தங்களுக்கு ஏதாவது நாடு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று கோரி கப்பலில் இருந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். தங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் அவரகள் உண்ணாவிரதத்தை பின்னர் கைவிட்டனர். இம்மக்களுடைய கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கக் கோரி லண்டணில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது பற்றிய விடியோச் செய்தி: http://www.youtube.com/watch?v=Qbr5kgJK3_E

இது பற்றி தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது:

Continued Persecution of Tamil Speaking People must STOP.

Protest Called by Tamil Solidarity

Tamil_Boat_RefugeesTamil-speaking refugees on a boat off the Indonesian coast have contacted Tamil Solidarity. Their continued suffering and the denial of their rights demands an urgent response.

Join the Tamil Solidarity protest

Monday 26 October 2009 – 4:00 pm

Australia House, Strand, London W2B 4LA

War and Aftermath:
Over the last year the brutal oppression of the Tamil-speaking people in Sri Lanka by the Sinhala nationalist government has reached new levels of horror. Under the Rajapakse regime these people have faced an unending nightmare. It is estimated that over 20,000 people were killed in the last week of the war alone.

Since the government declared the end of the war in May 2009 over 300,000 people have been forcefully detained in concentration-style camps and denied the right to return to their homes.

It is estimated that among those incarcerated, without proper access to shelter, food and medicine, are 31,000 children. While the government was prepared to pour an estimated $5 million per day into its vicious war effort, little is spent to protect those in the camp against the oncoming monsoon floods which threaten a humanitarian catastrophe.

While around the world the Tamil diaspora conducted a ferocious anti-war campaign, governments in the west and in Asia remained deaf to the suffering of the Tamil-speaking people in Sri Lanka, preferring to maintain trade links with and sell arms to the Sri Lankan government.

Suffering Continues:
Now, forced by these horrendous conditions, a small number of Tamil-speaking people have managed to escape. Around the world there will be shock and anger to hear that these people, who have seen their families massacred, have so far been denied the refuge they seek.

Over 250 Tamil-speaking people remain on a boat in Merak harbour, Indonesia. 207 Sri Lankan asylum-seekers are held at the Immigration Detention Centre at Kuala Lumpar International Airport, and there are 108 Sri Lankan refugees detained at Pekan Nanas Immigration Detention Centre in Malaysia. After Canadian authorities intercepted a ship the 76 men on board were taken to jail for questioning.

Not only have these governments not acted decisively to assist the traumatised Tamil-speaking people, but they have extended their detention. That it has been suggested they be returned to Sri Lanka, to the situation they have fled, is a further indictment of the international ruling elite who has no interest in acting in the interests of ordinary people.

Solidarity Needed:
Tamil Solidarity has been in contact with the people on the boat in Merak harbour and calls for immediate solidarity action to assist their appeal for refuge. We call for a protest outside the Australian embassy in London and other countries to expose the rotten role of this government. It is clear that it is actions like this, of ordinary people in the Tamil diaspora and all communities in the trade unions, universities, schools and colleges, that are required to build a movement against the camps, against the racist discrimination against refugees and against governments who stand in the interests of big business and the rich no matter the consequences for ordinary people.

Tamil Solidarity:
For the rights of all workers and oppressed people in Sri Lanka.

Contact Senan on 07908050217 or on senan@tamilsolidarity.org

Related News: APPEAL FROM TAMIL PEOPLE FROM THE BOAT HELD AT MERAK ON THE NORTH-WESTERN TIP OF JAVA, INDONESIA : Tamil People from the boat