தேவதாசனின் உண்ணாவிரதம் : ”கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி” நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள்

K Thevathasanதிரு. மனோ கணேசன் எம். பி. மற்றும் திரு. குமரகுருபரன் ஆகியோர் திரு. தேவதாசனின் கோரிக்கையை நீதி அமைச்சர் திரு. அத்தாவுட செனிவிரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அமைச்சரின் பணிப்பின் பேரில் நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள் நியூ மகசின் சிறைச்சாலைக்குச் சென்று தேவதாசனைச் சந்தித்தனர். அவரது கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி மொழி அளித்து உண்ணாவிரதத்தைக் கை விடும்படி கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தேவதாசனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து செல்வதைக் கண்ட சக அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தைக் கை விடும்படி அவரை வலிந்து வற்புறுத்தியதை தொடர்ந்து நேற்று 20-11-2010 இலங்கை நேரம் பிற்பகல் 3:00 மணிக்கு தேவதாசன் பழரசம் அருந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நூற்றுக் கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் (இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்) வருடக் கணக்காக விசாரணையின்றி தடுத்துவைக்கப் பட்டுள்ள நிலையை அனைத்து மக்களுக்கும் தெரியப் படுத்துவதும் இக்கொடும் சட்டத்தை இலங்கையின் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கி நாட்டின் அனைத்து மக்களும் உண்மையான சுதந்திரத்துடன் வாழ உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை மக்கள் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி தனக்கும் சக அரசியல் கைதிகளுக்கும் நீதி கிடைக்க உதவ வேண்டும் என்பதே தனது பணிவான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

Related News:

தேவதாசனின் உண்ணாவிரதம் : ”கோரிக்கையை விரைவில் தாம் நிறைவேற்றுவதாக உறுதி” நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள்

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். 

சிறையில் இருந்து க தேவதாசன்: சிறைக்கு வெளியே மக்களுக்காகப் போராடியவர் சிறைக்குள் தனக்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறார்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *