யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

UoJ_Signboardஆசியாவின் முதலாவது உயர்தர தங்கிப்படிக்கும் பெண்கள் பாடசாலை (1824 இல் உடுவிலில்) ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில்தான். 1848 ம் ஆண்டிலேயே பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிக்கு சமனான மேலைத்தேய மருத்துவக் கல்லூரி சாமுவேல் கிறீன் என்பவரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியும் இதுதான்.

1864 ம் ஆண்டிலிருந்து இம்மருத்துவக் கல்லூரியில் தமிழ்மொழியை மருத்துவக் கற்கைக்கான ஊடக மொழியாக்கிய மகத்தான புரட்சியையும் அமெரிக்கரான சாமுவேல் கிறீன் சாதித்தார். 1823 ம் ஆண்டு வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்குருத்துவக் கல்லூரியின் தரம் பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஈடாக இருந்ததை தான் கண்டதாக அக்கல்லூரிக்கு 1848 ம் ஆண்டு விஜயம் செய்த சிறந்த பயண எழுத்தாளரும் பிரித்தானிய உயர் சிவில் அதிகாரியுமான ஜேம்ஸ் எமர்சன் ரெநன்ற் எழுதியிருக்கிறார்.

இக்குருத்துவக் கல்லூரியின் சிறப்பான மாணவர்தான் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியும் தமிழ் பதிப்புத்துறையின் தந்தையும் சிறந்த தமிழறிஞருமான சி.வை.தாமோதரம்பிள்ளை. (சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1857 ம் ஆண்டில் கலைமாணிக்கான (B.A) இறுதியாண்டுப்பரீட்சை எழுதிய சீ.வை. தாமோதரம்பிள்ளை டீ.வை.விசுவநாதபிள்ளை ஆகிய இருவரே. இருவரும் வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி மாணவர்கள். இருவருமே சித்தியடைந்தனர். தாமோதரம்பிள்ளை அதிக புள்ளிகள் எடுத்தமையால் முதலாவதாக குறிப்பிடப்பட்டு அதனால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்) யாழ்ப்பாணத்தின் மேற்கூறிய எல்லா சாதனைகளுக்கும் உரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களான கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினருக்கே (American Missionaries) யாழ்ப்பாணம் கடமைப்பட்டது.

இவ்வளவு சிறப்பான கல்வி வரலாற்றையுடைய யாழ்ப்பாணத்தில் உருவான பல்கலைக்கழகம் சீரழிந்து போனமைக்கான காரணங்கள் என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்பபாணத்தில் இரண்டாம்தர மூன்றாம் தர (Secondary and tertiary education) கல்விக்கான சிறப்பான நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் முழுமையான பல்கலைக்கழகம் இலங்கையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானிய சாம்ராச்சியத்தின் முத்தாகவும் முடியாகவும் இந்தியா இருந்ததாலும் அன்று உலகின் இரண்டாவது பெரிய நகரமாக கல்கத்தா இருந்ததாலும் கல்கத்தா மும்பாய் சென்னை ஆகிய நகரங்களிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 1974 ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே யாழ் வளாகம் உருவாக்கப்பட்ட போதும் 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இயங்கிவரும் ஏனைய இலங்கைப் பல்கலைக்கழகங்ளோடு ஒப்பிடுகிறபோது மிகப்பின்தங்கிய சீரழிந்த பல்கலைக்கழகமாக இருப்பது யாழ் பல்கலைக்கழகம்தான்.

பின்தங்கலுக்கும் சீரழிவுக்குமான காரணங்களை பகுத்தாராய்ந்து அறிவதற்கு இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றை பின்வரும் இரண்டு காலங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.
புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை)
புலிப்பாசிச காலம்(1986 இலிருந்து இன்றுவரை)

புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை)

1974 ம் ஆண்டிலிருந்து 1977 ம் ஆண்டுவரை யாழ் வளாகத்தின் தலைவராக இருந்தவர் க.கைலாசபதி. தனது முதலாவது கட்டுரையில் த.ஜெயபாலன் பின்வருமாறு கூறுகிறார்.

Kailasapathy_K_Prof“யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார்.”

கைலாசபதியைப் பற்றி ஜெயபாலன் எழுதியவைகள் எல்லாம் அதீதமான மிகை மதிப்பீடுகள். மிகத் தவறானவைகள். சனத்தொகை பெருகுகிறபோது பல்கலைக்கழக வளாகங்களை விரிவாக்குகிற வழமையான கல்வி அமைச்சின் நடவடிக்கை காரணமாகவே யாழ் வளாகம் நிறுவப்பட்டது. இலங்கையின் மூன்றாவது பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததால் அங்கு ஒரு வளாகம் நிறுவவேண்டிய தேவை நீண்டகாலமாகவே இருந்துவந்தது. யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதியின் தரிசனத்தில் உருவானது என்பதும் அதனை அவரே நிறுவினார் என்பதும் வேடிக்கைக்குரிய கூற்றுக்கள். கைலாசபதி வளாகத்தலைவர் மட்டுமே என்பதால் அவரது அதிகாரம் மிக மட்டுப்படுத்தப்பட்டது. யாழ் வளாகத்தில் உருவாக்க வேண்டிய துறைகளை தீர்மானித்தது அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக துணைவேந்தரும் யுனிவேசிட்டி செனட் சபையும் கல்வி அமைச்சுமே. எல்லா வளாகங்களிலும் மூவின மாணவர்களும் கற்கும்படி இருப்பது அன்றைய கல்விகொள்கை வகுப்பாளாகளின் நடைமுறையே தவிர அது கைலாசபதியின் நடவடிக்கை அல்ல.

நியாயப்படி பார்த்தால் கைலாசபதிக்கு அன்றைய யாழ் வளாக தலைவர் பதவி கிடைத்திருக்கவே முடியாது. சிரேஷ்ட அடிப்படையிலும் அறிவு மற்றும் திறன் அடிப்படையிலும் கைலாசபதி கடைசியிலேயே இருந்தார். தனிநாயகம் அடிகளார் (1913-1980). சீ.ஜே.எலியேசர் (1918-2001). சின்னப்பா அரசரட்ணம்.(1930- 1998) ஜெயரட்ணம் வில்சன் (1928-2000) போன்றவர்களின் திறமைகளோடும் சாதனைகளோடும் ஒப்பிடுகிறபோது கைலாசபதியினுடையவை மிகச் சாமானியமானவை. மேற்கூறிய பேராசிரியர்கள் சர்வதேச ரீதியாக தங்களை நிலை நிறுத்தியவர்கள். மிகச்சிறப்பான அமெரிக்க கனேடிய ஆஸ்திரேலிய மலாய பல்கலைக்கழகங்கள் மேற்கூறியவர்களின் திறமைகளை இனங்கண்டு மேற்கூறியவர்களை தங்கள் பல்கலைக்கழக பேராசியர்களாக்கின. துறைத்தலைவர்களாக்கின. துறைசார்ந்த நூல்களை எழுதுமாறு அவர்களைப் பணித்தன. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாரதி பாடியது இதனைத்தான். இன்றும் இப்பேராசிரியர்கள் எழுதிய நூல்கள் மிகச்சிறப்பானவையாக இருக்கின்றன. கைலாசபதி எழுதிய நூல்கள் அவர் வாழ்நாட்காலத்திலேயே நிராகரிக்கப்பட்டன. Literary cognition இல்லாத இலக்கிய விமர்சகராக இருந்ததும் காய்தல் உவத்தல் இல்லாத புலமையாளராக இருப்பதற்குப்பதில் மார்க்ஸிய சித்தாந்த ஓதுகைக்கு(Marxist indoctrination) ஆட்கொள்ளப்பட்டவராக இருந்ததும் கைலாசபதி ஒரு academic ஆக தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்.

சு. வித்தியானந்தன் கைலாசபதியின் பல்கலைக்கழக ஆசிரியரும் கைலாசபதியைவிட சீனியரும். இருந்தும் கைலாசபதி குருவை விஞ்சிய சீடப்பிள்ளையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்கு வித்தியானந்துடனேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கைலாசபதிக்கே தனக்கு நியாயப்படி யாழ் வளாகத்துக்கான தலைவர் பதவி கிடைக்காது என்பது நன்கு தெரிந்திருந்தது. ஆனால் கைலாசபதி குதிரை வியாபாரத்திலும் (Horse trading) அரசியல் காய் நகர்த்தல்களிலும் மிக வல்லவராக இருந்தார். இடதுசாரி கூட்டு சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த போது இடதுசாரித் தொடர்புகள் மற்றும் அமைச்சர் குமாரசூரியர் என்பவர்களைப் பயன்படுத்தி புகுந்து விளையாடலானார். 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கைலாசபதியும் சிவத்தம்பியும் புறக்கணித்தனர். ஜனநாய அடிப்படையில் மாநாட்டுக் குழுவினர் அதனை யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்று தீர்மானித்தனர். அதனைப் புறக்கணித்து தான் கலந்து கொள்ளாததையெல்லாம் ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தி அதேயாண்டு ஆகஸ்டில் யாழ் வளாகம் திறக்கப்பட்டபோது தலைவர் பதவியை அடித்துப்பறித்தார்.

Thaninayagam_Adikalதொலைதூரப் பார்வையும் புலமையும் மிக்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவர்களும் அமுக்கக் குழுக்களும் தமிழர் மத்தியில் அன்றிருந்திருந்தால் நான் மேலே குறிப்பிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கடைமையாற்றிய, கடமையாற்றிக் கொண்டிருந்த நான்கு பேராசிரியர்மாரை அணுகி அவர்களிலொருவரை வளாகத்தலைவராக்க முயற்சித்திருக்கலாம். 1974 ம் ஆண்டு தனிநாயகம் அடிகளாருக்கு 61 வயது. தமிழாராய்ச்சி மாநாடுகளை சர்வதேச மயப்படுத்தியதிலும், தமிழையும் தமிழியலையும் உலகப் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாக்கியதிலும், தமிழை செம்மொழியாக்கியதிலும் அடிகளாரின் பங்கு அளப்பரியது. அவர் 1974 யாழ் வளாக தலைவருக்கு பொருத்தமானவர்களில் ஒருவரல்லவா.

கைலாசபதி வெளிப்பூச்சுக்குத்தான் மார்க்ஸிஸ்ட். உள்ளுக்குள் தடித்த சைவ வெள்ளாளர் என்பதையும் யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து வந்தவர் என்பதையும் பயன்படுத்தி அரசியல் செய்தவர். 2006 ம் ஆண்டுக்கு முதல் சைவ வேளாளர் அல்லாத எவரையும் பல்கலைக்கழக கவுன்சில் துணைவேந்தராக சிபாரிசு செய்ததில்லை.

முதற்கோணல் முற்றும்கோணல் என்ற அடிப்படையில் முற்றிலும் ஒரு அரசியல் நியமனமான கைலாசபதியின் வளாகத் தலைவர் பதவியிலிருந்தே யாழ் பல்கலைக்கழக சீர்கேடு ஆரம்பிக்கிறது. கைலாசபதி ஒரு நன்கு அறியப்பட்ட ஸ்திரி லோலர்(womanizer) அவரது மாணவிகளாக இருந்து பின்னாட்களில் விரிவுரையாளர் பேராசிரியர் ஆன பெண்களோடு அவருக்கு இருந்த உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது. இங்கு பாலுறவு காரணமாக விரிவுரையாளர் தெரிவில் பாரபட்சங்கள் காட்டப்படடிருக்க அதிக வாய்ப்புண்டு. மேலும் மேலிடத்தில் உள்ளவரே இவ்வாறு நடந்துகொள்ளும்போது கீழிடத்தில் உள்ளவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ய அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையேற்படும்.

மாணவியொருவரின் சம்மதத்தோடு பல்கலைக்கழக அதிகாரி அல்லது விரிவுரையாளர் பாலுறவில் ஈடுபட்டாலும் இதனைப் பணயமாக வைத்து ஊழல்கள் இருதரப்பிலிருந்தும் புரியப்பட்டு கல்வித் தராதரங்கள் சமரசம் செய்யப்பட வாய்ப்புள்ளதால்தான் இவை பாரிய குற்றச்செயல்களாகக் கருதப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காணப்படுகிற ஒரு முக்கியமான கொடூரமான அநீதி என்னவென்றால் ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எழுதிய பரீட்சைக்கு தனக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது என்றால் தனது விடைத்தாளை பெற்றுப் பார்ப்பதற்கோ அல்லது அதனை மீளத்திருத்துமாறு கேட்பதற்கோ உரிமையற்றிருப்பதுதான். 25 புள்ளி எடுத்து ஒருவருக்கு 75 புள்ளி வழங்குவதற்கும் இதன் மறுதலையைச் செய்வதற்கான அதிகாரமும் விரிவுரையாளர்களிடம் உண்டு. Transparency, freedom of information என்பன ஏறத்தாள முற்றாகவே பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. பாலுறவையும் இதனோடு இணைக்கிறபோது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எவ்வளவு மோசமான நரகங்களாக இருக்கமுடியும் என்பது புரிகிறதல்லவா.

UoJ_Sivathamby_K_Profகைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழ்ச்சூழலில் மிகவும் உயர்த்தி மதிப்பிடப்பட்ட (Over estimated) புலமையாளர்கள் (Academics). இலங்கை போன்ற மூன்றாம் உலநாடுகளில் காலனியாதிக்கத்திற்கு பிற்பட்ட சுதந்திர எழுச்சிக்காலத்தில் மார்க்சிசம் ஒரு சர்வ நிவாரணியாகக் கருதப்பட்டதோடு மிகப்பிரபல்யமான தத்துவமாகவும் மோஸ்தராகவும் இருந்தது. மார்க்ஸிய பேராசிரியராக தன்னை அடையாளப்படுத்துகவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மேதைகளாக கருதப்பட அதில் வெற்றிகரமாக கப்பலோட்டியவர்கள்தான் பதியும் சிவமும். அவர்களுடைய எழுத்துக்களுக்கூடாகவும் அவர்கள் உருவாக்கிய மாணவர்கள் ஊடாகவும் அவர்களை மதிப்பிடுகிறபோது மிஞ்சுவது ஏமாற்றம்தான்.

Vithiyanandan_S_Prof1977ம் ஆண்டு யாழ் வளாக தலைவராக சு. வித்தியானந்தன் ஆக்கப்பட்டதும் ஒரு அரசியல் நியமனந்தான். பல்கலைக்கழகம் இரண்டு பிரிவுகள் இருக்கிற ஒரு அரசியல் கட்சிபோல ஆக்கப்பட்டது. இரு தரப்பினருமே தங்கள் அணிக்கு விரிவுரையாள் தெரிவுகள் மூலம் ஆட்சேர்த்தார்களே தவிர பொது நன்மைக்காக பல்கலைக்கழகம் நடத்தவில்லை. இவர்களுடைய அரசியலுக்கு வெளியிலிருந்துதான் பல்கலைக்கழகத்தில் நடந்த சாதனைகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தினுடைய கல்விப்புரட்சி கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையாலும் கிறிஸ்தவ குருத்துவக் குல்லூரிகள் ஊடாகவே அக்காலத்தில் மூன்றாந்தரக் கல்வி பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தமையாலும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிலும் குறிப்பாக உரோமன் கத்தோலிக்கர் அல்லாத அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் கல்வியில் சாதித்தது அதிகம். இம்மரபில் வந்த கிறிஸ்தவ கல்வியாளர்களான சீலன் கதிர்காமர், நிர்மலா ராஜசிங்கம், ராஜினி திராணகம, சுரேஷ் கனகராஜா, தயா சோமசுந்தரம் போன்றவர்கள்தான் கைலாசபதி மற்றும் வித்தியானந்தன் மரபுக்கு அப்பால் நின்று சாதித்தவர்கள் அல்லது சாதிக்க முயன்றவர்கள். ஏ.ஜே.கனகரட்னா கைலாசபதியைவிடத் திறமையானவர். ஆனால் அவரிடம் கைலாசபதியிடமிருந்த சுறுசுறுப்பும் சாதிக்கவேண்டும் என்றவெறியும் இருந்ததில்லை. இருந்தும் ஏ.ஜே.கனகரட்னா நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கிய மாணவர்களாக நிர்மலா ராஜசிங்கம், சுரேஷ் கனகராஜா ராஜன் ஹ_ல் முதலியவர்களைச் சொல்லலாம். நோம் சொம்ஸிக்கு ஒரு Tanya Reinhart மாதிரி கனகரட்னாவுக்கு மூன்று versatile academics மாணவர்களாக கிடைத்தது பெருங்காரியம்தான். இந்திரபாலா ஒரு விதிவிலக்கு. ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரல்ல.

புலிப்பாசிச காலம் (1986 இலிருந்து இன்றுவரை)

1986 ஏப்ரல் மேயில் ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகளின் பாசிசத்தன்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

பாசிசம் எப்படி செயற்படுகிறது என்பதைக் கண்டடைவதற்டகான ஒரு அருமையான case study ஆக இக்காலத்து யாழ் பல்கலைக் கழகத்தைக் கொள்ளலாம். பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள்.

1986 நவம்பரில் விஜிதரன் புலிகளால் கடத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டதோடேயே புலிப்பாசிசம் பல்கலைக்கழக ஆட்சிக்கு வரவில்லை. 1986 நவம்பரிலிருந்து 1989 டிசம்பர் வரை பல்கலைக்கழகம் தன் சுயாதீனத்தை பேணுவதற்கு கடுமையாகப் போராடியது. பலமான சுயாதீனமான பல்கலைக்கழகத்துக்கு பலமாக மாணவர் சங்கம் அவசியம். பாசிசம் தொழிலாளர் சங்கங்கள் மாணவர் சங்கங்கள் என்பவற்றிலேயே முதலில் கைவைத்து அவற்றை அடித்து முறித்து ஆட்சி எடுக்கும். 1988 ஜூலையில் யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனைக் கொலை செய்த புலிகள் 1989 செப்டம்பரில் விரிவுரையாளர் ராஜினி திராணகமவைக் கொலை செய்தார்கள். இவைகளுக்கப்பாலும் 1989 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அன்ரன் வின்ஸ்லஸ் என்கிற மாணவரும், மாணவர் சங்கமும் பல்கலைக்கழக சுயாதீனத்தை பேணுவதற்காகக் கடுமையாகப் போராடினார்கள்.

1990 ம் ஆண்டு ஜூனில் விடுதலைப் புலிகளால் போர் தொடங்கப்பட்டதும் புலிகள் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை நெருங்கி “ இலங்கை அரசாங்கம் ஒரு இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கெதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் போரை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படும் படியும் மக்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் பின் ஒருங்கிணையுமாறும் வேண்டி” ஒரு தீர்மானத்தை மாணவர் சங்கத்தால் நிறைவேற்றுமாறு கேட்டார்கள். இத்தீர்மானம் நிறைவேற்றப் படாவிட்டால் மாணவர் சங்கம் கலைக்கப்படும் என்று மிரட்டவும் செய்தார்கள். சங்கத்தலைவர் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட்டார். பிரேரணை 145 க்கும் 115 இடைப்பட்ட வாக்குவித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. புலிகள் இதனை மீண்டும் வாக்குக்கு விடுமாறு கேட்டனர். இரண்டாவது தடவையும் புலிகளின் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர் புலிகள் அன்ரன் வின்ஸ்லஸ்ஸை அணுகி தாங்கள் வேண்டியபடி தயாரித்த தீர்மானத்தில் பலாத்காரமாக அவரது கையெழுத்தை வைப்பித்தனர். இதன்பின்னர் வின்ஸ்லஸ் மற்றும் அவரது மாணவர் சங்க கூட்டாளிகளும் மாணவர் சங்கத்திலிருந்து ராஜினாமாச் செய்தனர். (அன்ரன் வின்ஸ்லஸ் இப்போது ரொறன்ரோ நகரில் வசிக்கிறார்) இதற்குப்பிறகு மாணவர் சங்கம் புலிகளுக்குச் சேவகம் செய்யும் பொம்மை அமைப்பாக்கப்பட்டது.

ராஜன் ஹூல் சிறிதரன் முதலிய விரிவுரையாளர்கள் புலிகளால் கொல்லப்பட இருந்ததால் கொழும்புக்குத் தப்பிச்சென்றார்கள். செல்வி மனோகரன் போன்ற பல யாழ் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாளர்களும் மனச்சாட்சியின் கைதிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள். அயோக்கியர்களும் சாமானிய தரத்திலுள்ளவர்களுமே (Mediocrity) பாசிசம் பரவும் நிலத்தில் ஓங்கித் தழைப்பார்கள். அயோக்கியர்களின் பாலியல் முதலிய குற்றச்செயல்களை பணயமாக வைத்து அவர்களிடமிருந்து நிபந்தனைகளற்ற சேவகத்தை பாசிசம் பெற்றுக்கொள்ளும். திறமையானவர்களும் நல்லவர்களும் ஒதுங்கியோ ஓடியோ கொல்லப்பட்டோ விடுவதால் திறமையும் தரமுமற்ற சாமானியர்கள் பாசிசத்தை அண்டி நக்கிப்பிழைத்து அடிமைச்சேவகம் செய்து தழைப்பார்கள்.

திறமையான ஒருவரை புலிக்குப் “போட்டுக்கொடுப்பதன்” மூலம் அவரின் இடத்தை எடுக்கலாம். க.சிதம்பரநாதன் செல்வியை புலிக்குக் காட்டிக் கொடுத்துத்தான் செல்விக்கு கிடைக்கவிருந்த விரிவுரையாளர் பதவியை தான் எடுத்தார். ஸ்டாலினின் பாசிச ஆட்சிக்குச் சேவகம் செய்த மைக்கல் கலினின் மற்றும் லவ்றென்ரி பெரியா ஆகிய இருவரும் பாலியல் கொடூரங்களைச்செய்த இரண்டு பெண் பித்தர்கள். ஸ்டாலின் இக்குற்றங்களைச் செய்ய அனுமதித்து அவற்றை அவர்களுக்கெதிரான பணயமாக வைத்திருந்தார். நடராஜா முரளிதரன (சுவிஸ் – கனடா) குமரன் பத்மநாதன் மற்றும் கேணல் கருணா ஆகியோர் இயக்கத்திலிருந்து விலக்கப்பட அல்லது விலக்கப்பட்ட பின்னர்தான் அவர்களது பாலியல் லீலைகளை புலிகள் பகிரங்கப்படுத்தினார்கள் அல்லவா. யாழ் பல்கலைக்கழகத்தில் என் சண்முகலிங்கம் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதையும் இதே பின்னணியில்தான் அணுகமுடியும். 1995 ம் ஆண்டு குடாநாடு இராணுவத்தால் கைப்பற்றப்படும்வரை புலிகளுக்கு தீவிரமான சேவகம் செய்தவர் சண்முகலிங்கம். விஜிதரனை சித்திரவதை செய்து கொன்ற கிட்டு கடலில் இறந்தபோது “ கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல எவருமே இல்லையா” என்ற அஞ்சலிக் கவிதையை கிட்டுவுக்கு எழுதியவர்தான் சண்முகலிங்கம் (பார்க்க : தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு)

UoJ_Posterஇவ்வாண்டு ஜூன் மாதம் மேலுள்ள துண்டுப்பிரசுரத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வெளியிட்டனர். புலிகள் அழிக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப்பிறகே மாணவர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் இயங்கக்கூடிய சூழல்வருகிறபோது இது வெளிவருவது குறிப்படத்தக்கது. இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் செல்லையா இளங்குமரன், கிருஸ்ணபிள்ளை விசாகரூபன், என்.வீ.எம். நவரத்தினம், கே. அருந்தாகரன் ஆகியோர்.

UoJ_Elankumaran_C_Drசெல்லையா இளங்குமரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் புள்ளிவிபரவியல் பயிலும் கலைத்துறை மாணவிகள் பலரையே இவர் இலக்கு வைத்து பாலியல் வதைகளும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் புரிபவர். இவருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பட்டப்பெயர் கரும்புடையன். இவரது குடுப்ப உறுப்பினர்கள் அல்லது சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள் என்பதையும் தனது பலமாக குற்றங்கள் புரியும்போது உபயோகிப்பவர். இவரது குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்ததால் 1995 ம் ஆண்டளவில் மாணவர்கள் துணைவேந்தரிடமும் விடுதலைப் புலிகளிடமும் முறையிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கும் வேறு வழியின்றி இளங்குமரனைத் “தூக்க”வேண்டியதாயிற்று. எனினும் அவ்வாண்டே யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதால் புலிகள் இவரை விடவேண்டியதானது. பின்னர் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தபின்னர் புலிகளோடு கள்ள ஒப்பந்தமும் செய்துகொண்டுவந்த இளங்குமரன் யாழ் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டார். முதலில் கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார். இக்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிறுவனமயப்பட்டு விட இளங்குமரனும் தொடர்ந்தார்.

UoJ_Arundaharan_Kதமிழ் விரிவுரையாளர் க.அருந்தாகரன் முள்ளியவளையைச் சேர்ந்தவர். இவரது பல சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள். இவர் இரண்டாந்தரக் கல்வி கற்றுக் கொண்டிருக்குப்போதே பாலியல் குற்றம் ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டவர். அருந்தாகரனின் சக மாணவியான முள்ளியவளை செங்குந்தா வீதியைச் சேர்ந்த புலேந்திரன் என்பவரின் மகள் கர்ப்பிணியானாள். அவளது கற்பத்திற்கு காரணம் யார் என்று கேட்கப்பட்டபோது அப்பெண் அருந்தாகரனையே அடையாளங் காட்டினாள். அருந்தாகரன் இதனை முற்றாக மறுத்துவிடவே அப்பெண் கர்ப்பிணியாகவே தற்கொலை செய்துகொண்டாள். பல முள்ளியவளை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் தமிழ் விரிவுரையாளர். நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவரும் விடுதலைப்புலிகள் சார்பானவராகத் தம்மைக் காட்டிக்கொண்டவர்.

சங்கீதபூசன் என்.வீ.எம்.நவரத்தினம் இசைத்துறையைச் சேர்ந்தவர். குறிப்பட்டவர்களில் வயது அதிகமானவரும் இவரே.

UoJ_Ganeshalingam_K_Tயாழ் பல்கலைக்கழகம் அயோக்கியர்கள் கள்ளர்கள் பொறுக்கிகள் என்போரின் கடைசிப்புகலிடமானது புலிப்பாசிச காலத்தில்தான். பரஸ்பரம் பாலியல் மற்றும் வேறு குற்றங்கள் பணயமாக வைக்கப்பட இரண்டு தரப்பும் சமரசம் செய்துகொள்கிறது. ஒருவருடைய குற்றத்தை மற்றவர் மறைக்க இதற்குப் பிரதியுபகாரமாக வேறு உதவி எதிர்பார்க்கப்படுகிறது. என். சண்முகலிங்கத்தின் பாலியல் குற்றத்தை பணயமாக வைத்து இதே குற்றச் செயலைச் செய்த கே.ரீ. கணேசலிங்கம் மறுபடியும் சமூகவியல் துறைக்கூடாக மறுபடி உள்வாங்கப்படுகிறார். இவ்வாறே இளங்குமரனும் உள்ளே வந்தார்.

செங்கை ஆழியான் எனப்படுகிற க. குணராசா இலங்கை நிர்வாக சேவையிலிருந்தபோது செய்த மரக்கடத்தல் ஊழலுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதோடு இலங்கை நிர்வாக சேவையிலிருந்து விலக்கப்பட்டவர். இத்தகைய குற்ற வரலாற்றையுடைய செங்கை ஆழியானுக்கு பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி வழங்கப்பட்டது. இவர்களில் சிலரின் குற்றங்களை பணயமாகவைத்து புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டு இவர்களை இரகசியமாக தங்களுக்கான புலனாய்வு இராணுவம் மற்றும் அரசியல் வேலைகளை செய்துதருமாறு பணிக்கிறார்கள். இந்த கோலங்கள் தொடர்ந்துதான் யாழ்பல்கலைக்கழகம் சீரழிந்திருக்கிறது

UoJ_Visakaruban_K_Drஇதிலும் மேலுங் கொடூரத்திற்குரியது என்னவென்றால் பாலியல் குற்றங்களைச்செய்கிற குற்றவாளிகளான விசாகரூபனும், கே.ரீ கணேசலிங்கமும் மாணவர்களின் உளவள ஆலோசகராக (Counsellor) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்லையா இளங்குமரன் உள்வாங்கப்பட்டது மட்டுமின்றி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

என்.சண்முகலிங்கத்தின் பாலியல் தொல்லைகள் பல. யாழ்பல்கலைக்கழக மாணவியொருவர் சண்முகலிங்கத்தின பாலியல் தொல்லை தாங்காது யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு விலகி தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று தன் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். இப்போதைய துணைவேந்தரின் உண்மையான பெயர் சண்முகலிங்கம். ‘ம்’ இல் முடிகிறது. உத்தியோக பதிவுகளிலிருப்பது அப்படித்தான். தன் வயதைக் குறைத்துக் காட்டவேண்டும் என்பதற்காக பலவித உளச்சிக்கல் குறைபாடுகளுள்ள இவர் சண்முகலிங்கன் என்றே ‘ன்’ போட்டு தன்னுடைய நூல்களிலெல்லாம் தன்பெயரை எழுதுகிறார். சடைமயிர் வளர்த்து இருப்பது இவரின் இன்னுமொரு இளமையாகும் பிரயத்தனம்.

நல்லவரும் வல்லவருமான ஒரு துணைவேந்தரையே வேண்டிநிற்கிறது யாழ் பல்கலைக்கழகம்.

“திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்யவேண்டும்”

– பாரதி

இம்முறை துணைவேந்தர் பதவிக்கு என்.சண்முகலிங்கம் என். ஞானகுமாரன் எஸ்.சத்தியசீலன் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். யாழ் பல்கலைக்கழகத்தை சீரழித்ததிலும் அங்கு இடம்பெற்ற குற்றச் செயல்களிலும் ஹூல் தவிர்ந்த மூவருக்குமே பங்குண்டு.

UoJ_Gnanakumaran_N_Profஞானகுமாரன் கலைப்பீடாதிபதி. கலைப்பீடத்தில்தான் அதிகளவு பாலியல் குற்றங்கள் இடம்பெறுகின்றன. இக்குற்றங்களுக்கான பொறுப்பை பீட அதிபர் என்ற வகையில் ஞான குமாரனும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஞானகுமாரன் துணைவேந்தராக வந்தால் பாலியல் குற்றங்கள் மேலும் தொடர்ந்து நடக்க அனுமதியளிக்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஞானகுமாரனுடைய சகோதரர் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்பதால் அவரூடாக ஜி.எல்.பீரிசிடமும் மேலும் ஜனாதிபதியிடமும் கெஞ்சி மண்டாடியாவது துணைவேந்தராக வர கடும் பிரயத்தனம் செய்கிறார் ஞானகுமாரன். ஞானகுமாரன் சண்முகலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூவருமே திறமை அடிப்படையில் மிகவும் சாமானிய சூனியங்கள். இன்று பல்கலைக்கழகம் ஒரு பாலியல் வதைமுகாமாகி விட்டது. ஒரு யாழ் பல்கலைக்கழக பேராசிரியருடைய மனைவி இப்போது இளைப்பாறிவிட்ட இன்னொரு பேராசிரியருடன் பாலியல் தொடுப்பிலிருந்தே தனது பல்கலைக்கழக பதவியை தங்கவைத்துக் கொண்டார். கணவனுக்கு மட்டுமல்ல முழு பல்கலைக்கழக சமூகத்திற்கும் தெரிந்த பரகசியம் அது. இன்னொரு தமிழ்ப்பேராசிரியர் பழைய நிலமானிய சமூக ஸ்டைலில் பல்கலைக்கழக மாணவியை வைப்பாட்டியாக வைத்திருக்கிறார். சண்முகலிங்கமும், சத்தியசீலனும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள். தரமான பல்கலைக்கழகம் எதிலுமே கலாநிதிப்பட்டம் பெறுமளவுக்கு திறமையற்றவர்கள் இருவரும். இந்தியாவில் பெறப்பட்ட ஞானகுமாரனின் கலாநிதி பட்டமும் மிகச் சாமானியமானதுதான். லிங்கமும் குமாரனும் சீலனும் யாழ் பல்கலைக் கழகத்திலிருக்கும்வரை திறமையானவர்கள் எவரையுமே யாழ் பல்கலைக்கழகத்தினுள் அனுமதிக்கப் போவதில்லை. இவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழகம் மேலும் சீரழியப்போவது உறுதி.

இன்று நாம் ஒரு கால்நூற்றாண்டு கொடும்போர் முடிந்த யுக சந்தியில் நிற்கிறோம். நல்லவரும் வல்லவருமான ஒருவர் அதுவும் வெளிநாட்டார் அவர்தம் திறமையை வணக்கம் செய்த ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலில் சீ.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கிவைத்த செழுமையான பாரம்பரியத்தின் சிறப்புக்களையெல்லாம் கொண்டுள்ள ஒருவர் விஞ்ஞானத்திலும் (Engineering) மெய்ஞானத்திலும் (Humanities) பாண்டித்தியம் உடைய ஒருவர் ஆதியில் இந்து முதாதையரிலிருந்து வந்த ஆதித்தமிழனின் கருப்புத்தோலையுடைய ஒருவர் நம் கல்வி சமூகத்திற்கு சேவை செய்ய வந்திருப்பது நாம் முன்செய்த தவத்தின் பயனாலல்லவா? ஒரு வாழ்நாள் காலத்தில் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்கும் இவ்வாறானதொரு அரும் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடுவோமாயின் ஈழ தமிழ் சமூகம் கற்காலத்திற்கு திரும்பிப் போவது உறுதி.

பேராசிரியர் ரட்ணஜீவன் துணைவேந்தராக வருவதால் கிடைக்கும் பெருநன்மைகள்.

1. குற்றச்செயல்களும் சீரழிவுகளும் மிகுந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து வருபவர் கண்ணியமானவர் என்பதால் யாழ் பல்கலைக்கழகத்துக்கு புனர்வாழ்வழித்து அதனை முன்னேற்றுவார்.
2. எந்திரவியல் பேராசிரியர் என்பதால் எந்திரவியல்துறை முதல்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் தழைத்தோங்கும்.
3. சர்வதேச ரீதியாக நன்கு அறியப்பட்ட புலமையாளர் சாதனையாளர் என்பதால் சர்வதேசரீதியாக புகழ்வாய்ந்த தரமான தமிழர் தமிழரல்லாத துறைசார் அறிஞர்களை யாழ்பல்கலைக் கழகத்துக்குள் கொண்டுவருவார்.
4. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிக அளவில் புலமைப் பரிசில்களை வெளிநாடுகளில் பெற்றுக் கொடுக்குமளவுக்கு சர்வதேச ரீதியில் செல்வாக்கான பெயரையும் தகுதிகளையுமுடையவர்.
5. யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டு உதவிகளை அதிக அளவில் பெற்றுக்கொடுக்கக் கூடியவர்.
6. சமூகவிஞ்ஞானத்திலும் பாண்டித்தியம் உடையவர் என்பதால் விஞ்ஞான சமூகவிஞ்ஞான துறைகளிடையே நிதி பங்கிடப்படும்போது சமநிலையைப் பேணுவதோடு கலை மற்றும் சமுகவிஞ்ஞானவியல் துறைகளையும் முன்னேற்றுவார்.
7. யாழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியான தராதரத்துக்கு உயர்த்துவார்.
8. புதிய கற்கை நெறிகளை யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக்கூடியவர்.
9. கல்விசார் சுதந்திரத்தை(Academic freedom) அதிகளவில் மதிக்கக்கூடியவர்

UoJ_Shanmugalingan_N_Profலிங்கமோ குமாரனோ சீலனோ துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டால் வரப்போகிற இன்னொரு ஆபத்து ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி வெடிக்கலாம் என்பதே. புலிப்பாசிசம் பல்கலைக்கழக வட்டத்துக்குள் இப்போது இல்லை என்பதால் மாணவர் சுயாதீனமாக இயங்குகிறார்கள். இன்றைய இணைய யுகத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு அநீதி உடனேயே இணையம்மூலம் உலகம்பூராகவுள்ள பல்லாயிரம் பேருக்கு தெரியவர வாய்ப்புண்டு. சுவாமி நித்தியானந்தாவின் பாலியல் லீலை சண் ரீவியிலும் யூரியூப்பிலும் வெளிவந்தமாதிரி யாழ் விரிவுரையாளரின் அக்கிரமும் வெளிவராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது செல்வாக்கை நல்ல காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். ஒரு காலத்தில் புலியின் காலில் விழுந்த இவர்கள் இப்போது அமைச்சரின் காலில் விழுகிறபோது அதனால் அமைச்சர் கிறங்கக்கூடாது. பிரபாகரனைப்போல வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட ஒரு கொடுங்கோலனாக வருவதா அல்லது வரலாற்றில் நிலைக்கும் தலைவராக வருவதா என்பது அமைச்சரின் முடிவுகளிலேயே தங்கியிருக்கிறது. யாழ் பல்கலைக்கழகத்து யார் துணை வேந்தராக வருவதை அமைச்சர் விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது. மக்கள் எல்லாவற்றையும் மிக அவதானமாக் கவனித்து வருகிறார்கள். சண்முகலிங்கம், சத்தியசீலன், நந்தகுமாரன் போன்றவர்கள் துணைவேந்தராக தெரிவு செய்யப்படுவதற்கு அமைச்சர் தேவானந்தாவின் உதவி இருக்குமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதயன் பத்திரிகை போன்றவைகள் அமைச்சருக்கெதிரான வலுவான பிரச்சாரமாக இதனை உபயோகிக்கலாம். அமைச்சரின் செல்வாக்கும் மாணவர் மற்றும் அவர்தம் பெற்றோரின் மத்தியில் வலுவாகக் குறையலாம்.

அன்று ஆசியாவின் முதலாவது உயர்தரப்பெண்கள் பாடசாலை உருவான யாழ்ப்பாணத்தில் இன்று துணைவேந்தராம் என். சண்முகலிங்கம் என்கிறவர் ஒரு மாணவியை பல்கலைக்கழக மொட்டை மாடியில் பட்டப்பகலில் வல்லுறவு செய்ய கேட்க நாதியற்றிருக்கிறது யாழ் சமூகம்.

இனியொரு விதிசெய்வோம்
அதை என்னாளும் காப்போம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

Show More

Your email address will not be published. Required fields are marked *

78 Comments

  • தமிழன்
    தமிழன்

    ஜெயபாலனின் தொடர் விவாத அரங்கின் வழியில் நட்சத்திரன் செவ்விந்தியனின் கட்டுரைடும் வந்து சேர்ந்திருக்கின்றது. முழுமையானதொரு கருத்தியல் பார்வையைக் கொண்டிருக்காவிடினும், குற்றவாளிகளை அடையாளம் காட்டத் தவறாது முனைகின்ற வகையில் நட்சத்திரனின் எழுத்துக்கள் மெச்சப்படுகின்றன.

    எனினும், யாழ் பல்கலை தொடர்பான அவதூற்று நிலைகளை மட்டும் பூரண பார்வைக்குட்படுத்தாது – நிதி மோசடி, மனித உரிமை மீறல்கள், நிழலுகப்பயங்கரவாதம், கொள்கையற்றிருத்தல், விடயக் களவாடல், ஆக்கபூர்வமான சிந்தனைகளை நசுக்கல் போன்ற யாழ் பல்கலையின் மற்றைய இழிநிலைப் பரிணாமங்களையும் – சுட்டிக் காட்டியிருத்தல் நல்லதே…

    நட்சத்திரனின் //ஆதியில் இந்து முதாதையரிலிருந்து வந்த ஆதித்தமிழனின் கருப்புத்தோலையுடைய ஒருவர் நம் கல்வி சமூகத்திற்கு சேவை செய்ய வந்திருப்பது நாம் முன்செய்த தவத்தின் பயனாலல்லவா?// என்கின்ற கூற்று சற்று சிந்திக்க வைக்கின்றது.

    கருநிறம் மட்டும் ஹூலை தகுதியானவராக்கிவிடவில்லை – அவர் ஒரு சிறந்த கல்வியாளர்… நல்ல ஆசிரியர்… அதுதான் அவருக்கு பொருத்தமான அடையாளம்.

    “கருமை”… மற்றும் “கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி மாயைகளை” இன்னமும் முற்கொண்டு செல்லுதல் என்பது நம்மை நாமே பின்னடையச் செய்தலாகவே காணப்படுகின்றது.

    எது எப்படியாயினும்… சைவ/இந்துத்துவ மாயைகளிலிருந்து விலகி நோக்கக்கூடிய, தொலைநோக்குடைய பார்வையைத் தன்னால் நிர்வாக இயந்திரத்துக்கு வளங்க முடியும் என்று ஹூல் நினைத்தால், அது வரவேற்கத்தக்கதே.

    தனது நடுநிலைமையில் இருந்து பேராசிரியர் ஹூல் சற்றுத்தானும் தளம்பினால், இந்தத் தளம் அவரைச் சாடி விமர்சிக்க ஒரு போதும் தயங்காது (உ+ம்: கனகநாதன் சம்பந்தப்பட விடயங்கள் போன்றன). அப்போது அமிலத்திலும் வன்மையான உண்மையின் சாரமான வார்த்தைகளுக்கும், கருத்துக்களுக்கும் பேராசிரியர் பதிலளிக்க வேண்டி இருக்கும். அப்படி நடக்கமாட்டாது என நம்புவோம்.

    பார்வைகள் அகலட்டும்… புதிய ஆக்கபூர்வமான பாதையில் நன்மையின் பல பரிமாணங்களும் துலஙட்டும்…

    புதியதொரு உலகம் செய்வோம்.

    நன்றிகள் நட்சத்திரன்…

    தமிழன்

    Reply
  • london boy
    london boy

    //அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது செல்வாக்கை நல்ல காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். ஒரு காலத்தில் புலியின் காலில் விழுந்த இவர்கள் இப்போது அமைச்சரின் காலில் விழுகிறபோது அதனால் அமைச்சர் கிறங்கக்கூடாது. பிரபாகரனைப்போல வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட ஒரு கொடுங்கோலனாக வருவதா அல்லது வரலாற்றில் நிலைக்கும் தலைவராக வருவதா என்பது அமைச்சரின் முடிவுகளிலேயே தங்கியிருக்கிறது// நட்சத்திரன் செவ்விந்தியன்

    நன்றி இதை துணிந்து அமைச்சர் டக்ளஸ்டம் கேட்க வேண்டிய நேரம் இது

    அமைச்சர் நிதானமாக முடிவுகள் எடுக்க வேண்டும்

    Reply
  • நந்தா
    நந்தா

    நட்சத்திரனின் அவதானங்கள் உண்மையானவை என்பதில் எனக்குச் சந்தோஷமே தோன்றுகிறது.

    தமிழரசுக் கட்சி யாழ் பலகலைக் கழகம் அமைவதை எதிர்த்தபடியால் அந்தக் கட்சியின் ஆதரவாளராக இருந்த கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் தலைவராக முடியாமல் போய் விட்டது.

    வித்தி அவர்கள் கைலாசபதியை விட தகுதியும் தராதரமும் உள்ளவர். அவரைக் கூட புலிகள் படுத்தியபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. ஆயினும் கைலாசபதியின் வேன்டுதலின் பெயரால் யாழ் பல்கலைக் கழகம் அமையவில்லை.

    தரப்படுத்தலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்க வேண்டும் என்ற சிரிமாவோ அவர்களின் ஊக்கம் காரணமாகவே அது அமைக்கப்பட்டது. அது அந்த அம்மையாரை நேரடியாகச் சந்தித்துப் பேசிய பொழுது கிடைத்த தகவல்.

    தரப்படுத்தலுக்காக ஊர்வலம் போன சமூகம் கிடைத்ததை சீரழித்துவிட்டு இன்னமும் சீரழிய வேண்டும் என்று அலைவதுதான் தாங்க முடியாத எரிச்சல்!

    இரத்தின ஜீவன் வருகை யாழ் பல்கலைக் கழகத்தை உயர்த்தும் என்றே நம்புகிறேன்.

    Reply
  • maheshan
    maheshan

    யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பல்கலைக்கழக தில்லுமுல்லுகளைப் பற்றி மூச்சுவிட மாட்டார்கள்.

    Reply
  • aathav
    aathav

    “யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமையவேண்டுமென்பதில் மிகத் தீவீரமாக செயற்பட்டவர் கைலாசபதி” என்ற ஜெயபாலனின் கூற்று முற்றிலும் உண்மையே! இதை அன்றைய சூழலில் வைத்து மதிப்பிட வேண்டும். இந்து-தமிழ் பல்கலைக்கழகம் என தமிழ்த்தேசியம் அடிபட> அதற்குள் இப்பல்கலைக்கழகம் அமைய தீவிரமாக செயற்பட்டவர் கைலாசபதி! இதற்காக அவர் வீட்டிற்கு கைக்குண்டும் வீசப்பட்டது! அந்நேரத்தில் செவ்விந்தியன் குறிப்பிடும் “இத்தகுதியானவர்கள்” எல்லாம் நடுங்கி ஓடி ஒழித்தவர்கள்தான்! இக்காலகட்டத்தில் செவ்விந்தியனுக்கு தகுதி இருந்தாலும் அவரும் ஓடித்தான் இருப்பார்! இது நிற்க ஓர் பல்கலைக்கழகம் அமைய ஓர் பேராசிரியர் இடதுசாரிக் கூட்டை–அரசின் உதவியை நாடுவதில் என்ன தவறு? 74-ல் யாழப்பாணத்தில் நடைபெற்றது தமிழ் ஆராய்சி மாநாடா? அல்லது கலைஞர் நடாத்தியது போன்ற களியாட்ட விழாவா? கைலாசபதிக்கு ஏற்பட்டது போன்ற பெண் தொடர்புகள் (உண்மை- கேள்வி-ஞானம் ஒருபுறமிருக்க)தங்களுக்கும் ஏற்பட்டால் தாங்களும் தவற விடமாட்டீர்களே! தவக்கோலத்தில் இருந்து கதைகள் சொல்ல முற்படாதீர்கள்! அதுவும் தேவர்கள்-முனிவர்களில் இருந்து நித்தியானந்தா வரை தீர்வில்லாமல் தொடராய்த் தொடர்கின்றதே!

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    இரத்தின ஜீவனுக்கான பிரச்சார துண்டுப் பிரசுரமாக கட்டுரை மாறி விட்டமை வருத்ததிற்குரியதே.. அவரைத்தவிர துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடும் மற்றவர்களிடம் உள்ள முக்கிய குறைபாடு அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு சிறிய கடிதமேனும் எழுத முடியாமல் உள்ளமை.. இதே காரணத்தினால் தான் சண்முகலிங்கம் மீது பாலசுந்தரனார் அளவில்லா செல்வாக்கு செலுத்துகிறார். கொழும்பிலிருந்து வரும் சிங்களவர்களின் முன் தமது “தெறமை” அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் முன்னிலையில் அறிவார்ந்த மெளனம் காத்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள்.
    அரசியல் கலப்பில்லாத சமூக அக்கறை, ஆழ்ந்த அறிவு, நிர்வாகத் திறன், தனிநபர் ஒழுக்கம் என்பவை கொண்ட எவரும் துணைவேந்தர் பதவிக்கு வரலாம்.. வெளிநாட்டு உதவி என்பதெல்லாம் நல்ல விசயம் தான்.. ஆனால் முதலில் உள்ளூர் மனநிலையும் கல்வி பற்றிய அணுகுமுறையும் மாற்றப் பட வேண்டும்..

    கட்டுரையைப் படித்தபின் எனக்கு எழுந்த சந்தேகங்கள் சில:

    செவ்விந்தியன் குறிப்பிட்ட வெளிநாட்டார் பாராட்டிய தமிழ் அறிஞர்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக யாழ்ப்பாண வளாகத்தின் தலைவர் பதவியை ஏற்றிருப்பார்களா? ( வித்தியானந்தன் உட்பட)

    வளாகம் ஆரம்பிக்கப்பட்ட பின்பும் அது தமிழர் கூட்டணியின் தலைவர்களின் தொடர் தாக்குதலுக்கும் கண்டனத்திற்கும் ஆளாகிக் கொண்டிருந்ததே இதற்கு என்ன காரணம்..?

    கைலாசபதிக்கும் வித்தியானந்தனுக்கும் உள்ள திறமை வேறுபாட்டை சரியான ஆதாரங்களின்றி கணிப்பது நன்றெனப் படவில்லை. யாழ். பல்கலைக் கழகம் அதிக காலம் வித்தியானந்தனின் கட்டுப் பாட்டில் தான் இருந்தது.. இந்தக் காலத்தில் தான் அது ஒரு செக்கண்டரி ஸ்கூலின் அடுத்த நிலை என்ற தரத்திற்கு மாற்றப் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது..

    Reply
  • Rajasingham
    Rajasingham

    What is being revealed seems to be only a tip of an iceberg. ‘Kamasutra’ seems to have become the specialty subject of the Jaffna University? Sex seems to have become an obsession. The faculty are definitely the predators. However, are some students willing accomplices? Is sex being traded as a commodity for gaining better marks? The vice that made ‘Kuthirai Gajendran’ a graduate, needs to be also identified.

    The LTTE used accusations of sexual misconduct as a tool to disgrace and destroy whom they considered their enemies. they went out of the way to concoct photographs to destroy persons and reputations. Further, the stories I have heard of sexual misconduct within the ‘puritanical’ LTTE and other so-called liberation organizations, were shocking. Is there something wrong with our society, to produce such distortions? A society that was once famed for its intellect and values, dictated by refined minds, seems to drawing its inspiration and direction from the genitals!

    The Jaffna University has indeed become a hell hole, not only of mediocrity, but all types of perverse and unrighteous behaviour. I reminded of Auvayar’s,

    ‘Neeralavey Aahumaam Neerambal———-‘ poem. It is time Tamils looked within themselves for an answer.

    Dr.Rajasingham narendran-

    Reply
  • Che. Yalpanan
    Che. Yalpanan

    //What is being revealed seems to be only a tip of an iceberg. ‘Kamasutra’ seems to have become the specialty subject of the Jaffna University?//

    Well I have to endorse what Dr. Narendran says… whilst adultery and misconduct seems to be a tools of control and manipulation that is used by those wielding power in the University of Jaffna… there are obviously other aspects that have contributed to the derogatory situation that prevails.

    I wish that this forum would refrain from being a gossip column such as the SUN paper in Britain – and starts to move on the investigation of ideology, ethics and developmental mandates.

    The ones who are abusing their seats of power in the UoJ are doing it for financial benefits. I think Thesamnet also has the moral and ethical responsibility of bringing these frauds into the limelight.

    A lot of money that is meant for curricula and student welfare gets spent on sending the so called academics on shopping-sprees in a western country.

    Reply
  • நந்தா
    நந்தா

    இடது சாரி அரசியலை ஆதரிப்பவன் என்ற வகையில் கைலாசபதியுடன் பரிச்சயம் உண்டு. ஆயினும் அவர் எழுத்தில் காட்டிய இடதுசாரி ஆவேசங்களை வாழ்வில் அனுசரிக்கத் தவறியவர்.

    அரசியல் செல்வாக்கு என்பது எப்பொழுதும் உண்டு . ஆயினும் இந்த “மெத்தப்” படித்தவர்களுக்கு தங்களுக்கு அளிக்கப்பட்ட “வேலை” என்பதனை செம்மையாக செய்ய முடியாமல் போனது மாத்திரமின்றீ அந்த வேலையின் மூலம் கிடைத்த அதிகாரங்களைத் “துஷ்பிரயோகம்” செய்து மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றியது எப்படி நியாயமாகும்?

    சந்தர்ப்பம் கிடைத்தால் திருடன் திருடுவான். அது அவனது தொழில். ஆனால் “கல்வி” பற்றிய தொழிலில் இறங்கியவர்கள் அந்தநோக்கத்தை விடுத்து “காமத்திலும்”, “திருட்டுக்களிலும்” இறங்கியது அவர்களின் ஜென்ம வாசனையா? ஜீன் கோளாறா? யாழ்ப்பாணத்துப் படித்தவர்கள் என்பவர்கள் “சாதாரண” சைக்கிள் திருடனுக்கு ஒப்பானவர்களா?

    மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனக்களை மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் நேர்மையாக நடத்த வக்கில்லாத ஒரு சமூகம் “தனிநாடு” கிடைக்க வேண்டும் என்று அழுவதன் நோக்கம் என்ன?

    காமம் காதல் என்பன ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் இயல்பான பிரச்சனைதான். ஆனால் “பரீட்சையில்” பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டி “கற்பை” விலை பேசிய இந்த தமிழ் அறிவாளிகள் சாதாரண சைக்கிள் திருடர்களை விட மோசமானவர்கள்.

    இரத்தின ஜீவனுக்கு பிரச்சார மேடை என்ற கருத்து முற்றிலும் மோசமானது. இரத்தின ஜீவன் வந்தால் தங்களது வளக்கமான “கொள்ளைகள்” பாதிக்கப்பட்டு விடும் என்று பல யாழ் பல்கலைக் கழக “வியாபாரிகளும்”, “திருடர்களும்” அங்கலாய்ப்பது உண்மை! தமிழ் கலாச்சாரம் என்று வானாளவ கோஷம் போடுபவர்கள் தமிழ் மக்களிடையே உள்ள “அதி உயர்” கல்விக் கேந்திரத்தில் “காபரே”நடனம்தான் நடை பெறுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்குக் கல்வி தேவையில்லை. ஆனால் கல்விக்கு கல்வியும் ஒழுக்கமும் கண்டிப்பாகத் தேவை!

    குதிரை கஜேந்திரன் போன்றவர்களின் கூடாரமாக யாழ் பல்கலைக் கழகம் இருந்தது என்பதை எப்படி “கல்வி” பெரிது என்று கருதும் அல்லது தமிழர்களின் மேன்மைத்தனம் பற்றி கதைப்பவர்கள் ஜீரணிக்கிறார்கள்? அது மாத்திரமின்றி அந்த வகையானவர்களுக்கு சகல உதவிகளையும் “லஞ்சமாக” கொடுத்து அவர்களின் நிழலில் சகல சமூக பிறழ்வுகளையும் செய்தவர்கள் இன்னமும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி!

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //A lot of money that is meant for curricula and student welfare gets spent on sending the so called academics on shopping-sprees in a western country.//Che. Yalpanan on October 2, 2010 2:48 pm

    தோழர் ‘செ’ யாழ்ப்பாணன்… இதனையும் கேளுங்கள் –

    சண்முகலிங்கன் துணைவேந்தராக பதவியேற்றதன் பின்னர் எங்கெல்லாம் பெயரறியப்படாத முக்கியமற்ற சிறு பல்கலைக் கழகங்கள் உள்ளனவோ, அங்கு எல்லாம் தனது ஆராய்ச்சிக் கட்டுரை வாசிக்கவென வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வருகின்றார். பெரிய பல்கலைக்கழகங்கள் மழைக்கு ஒதுங்கக்கூட தம் கட்டடங்களுக்குள் சண்முகலிங்கனை அனுமதிக்காது. அது சண்முகலிங்கனுக்கும் நன்றாகத் தெரியும்.

    இங்கு சண்முகலிங்கன் என்னும் ‘லிங்கம்’ ஒருநாளுமே இலங்கையில் பெயர்குறிப்பிடப்படும்படியான ஒரு ஆராய்ச்சி மாநாட்டிலும் ஒரு வசனம் கூட ஆய்வு சம்பந்தமாக கதைத்ததில்லை.

    அண்மையில் தென்னாபிரிக்கா சென்றுவந்த சண்முகலிங்கன் அங்குள்ள மசாய் பழங்குடியினருக்கு துர்க்கையம்மன் வழிபாடு பற்றிச் சொல்லிக் கொடுத்திருப்பாரா? தெரியவில்லை.

    ஆய்வு என்பது ஒரு பேராசிரியரின் முக்கிய கடமையாகும். ஆய்வுக்கட்டுரை என்பதனை ‘விக்கிபீடியாவில்’ சுட்டெடுக்கும் விடயங்கள் கொண்டு முடித்து விடலாம் என நினைக்கும் சண்முகலிங்கன்.. பல்கலைக்கழக நிதியில் இலவச வெளிநாட்டு பயணம் செல்கின்றார். இதுவும் VC பதவி தரும் இன்னொரு வசதிதான் போலும்.

    2009ல் வவுனியா வளாகத்தின் ஆய்வு மாநாட்டில் சண்முகலிங்கன் ஒரு உரையாற்றினார் (உணர்ச்சி பூர்வமாக) – அதுவும் ஆங்கிலத்தில் (வெந்தும் வேகாத வசனங்கள் கொண்டு) – அவற்றைக் கேட்டு விட்டுச் சென்று இணையத்தில் விக்கி பீடியாவில் “சமூக அபிவிருத்தியும் ethicsம்’ என்று தேடிப்பார்க்க வந்ததே… அப்படியே சண்முகலிங்கன் பேசிய வசனங்கள் அனைத்தும்.அப்படியே அட்சர சுத்தமான பிரதியெடுப்பு அது (ஈயடிச்சான் கொப்பி என்று சொல்லுவார்களே, அதுதான் இது).

    பேராசிரியர் சண்முகலிங்கனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு – “கெளரவ விக்கிபீடியா” எஙன்ற பட்டம் கொடுத்து மாலை சூடுவோமா? அதனைச் செய்தாவது பதவியுயர்வு பெறுவதற்கு நிச்சயமாக ஒரு ஈனப்பிறவி காத்திருக்கும் யாழ் பல்கலையில். இப்படியான விடயங்களில் சண்முகலிங்கன் கால் கழுவ வாளியும் கையுமாக தயாராக – ஓடிப் போய் முன்னிற்கக் கூடியவர்தான் பெளதிக பீடாதிபதி கந்தசாமி – தன்னைத் தானே சுயவிளம்பரம் செய்து, கதிரையைப் பிடித்து வைத்திருப்பதில் இவர் ராஜபக்சேவை விடச் சிறந்த (மந்திர)தந்திரவாதி!

    “சமயம் படித்தவர்கள் வர்த்தகம் படிப்பிப்பதும், விவசாயம் படித்தவர்கள் சமயம் படிப்பிப்பதும்…” இது யாழ் பல்கலையில் மட்டும்தான் சாத்தியமாகும். யாழ் பல்கலையில் கர்நாடக சங்கீத வித்துவானொருவர் கூட கணிதம் படிப்பிக்கலாம் – அதற்கும் சண்முகலிங்கன் தர்பாரில் தாரளமாகவே இடமுண்டு.

    துர்க்கையம்மன் ஆசி பெற்ற சண்முகலிங்கன் பரியை (குதிரையை) நரியாகவும் நரியைப் பரியாகவும் மாற்றக்கூடிய ரசவாதிதான்! அவர் வந்த வழியும் அதுதானே!

    Reply
  • Kanthan
    Kanthan

    நட்சத்திரன்,
    You missed an important fact about one of the Vice Chancellor candidates, ஞானகுமாரன், that he was the coordinator for External degrees for some years back, owing his irregularities (during his period there were several candidates whom they were awarded with degree without attending examinations) he was removed from the position. Further, his professorship appointments was earlier discussed in some other forum.

    In this circumstance, if he become as the Vice Chancellor of the University of Jaffna what would happen to the University?

    “கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார்”

    No, he was chased away from the Dept. of Mathematics and Statics owing to his sexual misconduct. At that time he was in a Temporary position and he had been assigned to conduct lectures for Arts Faculty Students in Basic Mathematics.

    Recruiting to him to the permanent post in the Dept. of Economics, was done by Balakrishnan during is tenure as the Dean of the Faculty of Arts. The Vice Chancellor was Late Prof. Thurairajah.

    Reply
  • Kumar
    Kumar

    நானும் ஜீவன் போன்ற ஒருவர் வெளியில் இருந்து வரவேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இங்கு பின்னூட்டமிடுபவர்களில் பெரும்பாலானோர் யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு காலும் எட்டிப்பார்க்காதவர்கள் என்றே படுகிறது. கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான் என்ற பழமொழியும் காகம் காகமாய்ச் சத்தி எடுதானாம் என்ற கதையும் தான் ஞாபகம் வருகிறது. புலிகளின் எதிரியான ஒருவரை எப்படியாவது VC ஆக்கிப்போடவேண்டும், புலிவால்களை ஒரு கை பார்க்கவேண்டும் என்ற ஆவலில் மஞ்சள் பத்திரிகையின் தரத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதுகிறீர்கள். புலிகளிற்கு எதிராகவே போராட்டம் செய்த மாணவர்கள் ஏன் இதற்கு எதிராக போராட்டம் செய்ய முடியாமல் உள்ளது என்று யோசித்தால் இதில் உள்ள புழுகுகள் பல வெளிவரும். ஆராவது உண்மையான சம்பவங்களை உண்மையான பெயருடன் வெளியிடும் வரை இதை வதந்தி என்றே கொள்ளவேண்டும். ஜீவன் ஹூல் வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காவிடில், அவரும் உடந்தை என்று உடனே கூறுவீர்களா? அல்லது 30 வருட லாச்சாரத்தை 3 வருடத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்று சப்பைக்கட்டு கட்டுவீகளா. எனக்குத்தெரிந்தவரை யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் பாலாத்காரம் என்பது எந்த விதத்திலும் சராசரிக்கு மேல் இல்லை என்றே கூறுவேன்.

    Reply
  • Kanthan
    Kanthan

    Kumar on October 3, 2010 8:08 am
    “கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தான்…. புலிகளின் எதிரியான ஒருவரை எப்படியாவது VC ஆக்கிப்போடவேண்டும்”

    No, the situation is different. Now, the University in a pathetic condition. If you can please go and see the situation and report. So far, there are several facts have not published. These are few. All of the above facts could be proved beyond any doubt. There are several reasons not to publish there actual names, but the facts are true by records.

    Definitely Prof Hoole is not behind these. These efforts are made by individuals on the betterment of the community. From these comments you can sense most of them are from insiders. I can assure for your comments there is no, not even a single, evident.

    “எனக்குத்தெரிந்தவரை யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் பாலாத்காரம் என்பது எந்த விதத்திலும் சராசரிக்கு மேல் இல்லை என்றே கூறுவேன்”

    Then what do you mean? So, we don’t need to consider the matter.

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //இங்கு பின்னூட்டமிடுபவர்களில் பெரும்பாலானோர் யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு காலும் எட்டிப்பார்க்காதவர்கள் என்றே படுகிறது//Kumar on October 3, 2010 8:08 am

    யாழ் பல்கலையுள் எட்டிப் பார்க்காமல் இருப்பதனால் தான் பின்னூட்டமிடும் அனேகர், இன்னமும் நியாயபூர்வமாக சிந்திக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள்.

    அவர்களும் யாழ் பல்கலையில் சிலகாலம் தரித்திருந்தால் – அவர்களுக்கும் யாழ் பல்கலையின் புல்லுருவித் தொத்து வியாதி பீடித்திருக்கும். அதன் பின் அவர்களும் இளங்குமரன், சண்முகலிங்கன்,கந்தசாமி, புவனேஸ்வரி போன்ற மற்றவர்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்பிறவிகளாகத்தான் மாறிவிடுவர்.

    இங்கு, ஃகூல் தான் அறுதியான ரட்சகர் என்று ஒருவரும் சொல்ல வரவில்லை – சண்முகலிங்கனோ கந்தசாமியோ உபவேந்தராக வருவதிலும் பார்க்க ஃகூல் போன்றதொருவர் பரவாயில்லை என்றுதான் சொல்ல வருகின்றோம்.

    நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடத்துக்குக் கூட தரமான வகையில் உரையாடும் ஆற்றலற்ற இளங்குமரன்.. புவனேஸ்வரி லோகனாதன் போன்றதொருவர் கூட எதிர்காலத்தில் துணைவேந்தராக வரக்கூடிய அபாயம் காத்திருக்கின்றது. அதன் பின் Kumar, “யாழ் பல்கலைக் கழக கதவுகளை மூட வேண்டும்” என்று நீங்களும்தான் குரல் கொடுப்பீர்கள்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….தரப்படுத்தலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்க வேண்டும் என்ற சிரிமாவோ அவர்களின் ஊக்கம் காரணமாகவே அது அமைக்கப்பட்டது. அது அந்த அம்மையாரை நேரடியாகச் சந்தித்துப் பேசிய பொழுது கிடைத்த தகவல்…//

    தரப்படுத்தலினால் பாதிக்கப்பட்ட தமிழ்மாணவர்கள் யாழ்பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட்டு ‘வரப்பிரசாதம்’ வழங்கப்பட்டதா? நல்ல ஜோக்? ஸ்ரீலங்காவில் எந்த மூலையில் வேறுபல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது?(அதுவும் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவருக்கு)

    நீங்கள் அவரைச் சந்த்தித்துப் பேசும்போது அவர் ‘நல்ல மனநிலையில்’ இருந்திருப்பார் போலுள்ளது. ஜெயவர்த்தனபுர ஆசுப்பத்திரியில் இருந்த கட்டிலையே வீட்டுக்கு கொண்டுபோனவரல்லவா? வரப்பிரசாதமாக பல்கலைக்கழகமாம்?நல்லாக ஜோக்கடிக்கிறியள்

    Reply
  • முருகவேள்
    முருகவேள்

    குமார் உங்கள் எழுத்துக்களிலேயே நீங்கள் முரண்படுகிறீர்கள்.
    //புலிகளின் எதிரியான ஒருவரை எப்படியாவது விசி ஆக்கிப்போட வேண்டும் புலிவால்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மஞ்சள் பத்திரிகையின் தரத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதுகிறீர்கள்.//

    //எனக்குத் தெரிந்தவரை யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் பாலாத்காரம் என்பது எந்த விதத்திலும் சராசரிக்கு மேல் இல்லை என்றே கூறுவேன்.//

    குமார் உங்கள் சராசரியின் அளவீடு என்ன?

    முன்னைய கட்டுரைகளில் பாருங்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்கின்ற பெண்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்கள் புலிகள் காலத்திலும் பணியாற்றியவர்கள். யாரும் அவர்கள் மீது பழிபோடவில்லை.

    இங்கு தவறானவர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் முன்பு புலிகளுடன் இருந்தவர்கள். இவ்போது தங்கள் தேவைக்காக ஆளும்தரப்புடன் ஒட்டிக்கொண்டவர்கள்.

    நீங்கள் இங்கு யாரைக் காப்பாற்ற விளைகிறீர்கள்?

    Reply
  • நந்தா
    நந்தா

    தரப்படுத்தலால் பல்கலைக் கழகம் போக முடியாதவர்களுக்கு முதலில் யாழ்ப்பாணத்தில்த்தான் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது. பின்னரே இலங்கையின் வேறு பகுதிகளில் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டன.தரப்படுத்தல் யாழ் மாணவர்களை மாத்திரம் பாதித்த பிரச்சனை அல்ல!

    வேறு பல்கலைக் கழகங்களுக்கு போகும் தகுதி அவர்களுக்கு இருக்கவில்லை.

    ஆயினும் கருணானிதி, கோபாலசாமி போன்றவர்களுக்கும் தமிழ்செல்வன் போன்றவர்களுக்கும் துதி பாடுபவர்கள் பல்கலைக் கழகத்தை அரச செலவில் அமைத்த சிரிமாவோவுக்கு நன்றி சொல்லக் காணோம்.

    யாழ் மக்களின் பிரதினிதிகள் யாழ் பல்கலைக் கழகம் தேவையில்லை என்று கறுப்புக் கொடி பிடித்தார்கள். தங்களுடைய மக்களை அந்த பல்கலைக் கழகத்துக்குப் போக வேண்டாம் என்றும் “பகிஷ்கரியுங்கள்” என்றும் மானத்துடன் கேள்க்காமல் மவுனம் சாதித்துப் பின்னர் தங்கள் வால்களுக்கு “உத்தியோகம்” கொடுங்கள் என்று அலைந்தது கேவலமாகப் படவில்லையா?

    2000 வருட வரலாற்றுப் பாரம்பரியம் என்று கப்ஸா விடுபவர்கள் யாழ் பல்கலைக் கழக வரலாறு வரும் போது சிரிமாவோ பண்டாரனாயக்காவின் பெயரை எங்கும் குறிப்பிடுவது கிடையாது. சில வேளைகளில் அது “கள்ள” உறுதி எழுதும் யாழ் பாரம்பரியம் ஆக இருக்கலாம்.

    Reply
  • Ajith
    Ajith

    Dear Seventhian,

    May I ask you few questions?

    Under which government the famous first high school for girls, the first western medical school and Jaffna college were established in Jaffna?

    (1)British (2)Sinhala state.

    Who brought Sinhala only, standardisation of university admissions in Sri Lanka.
    Why was there no University in North East of Sri Lanka between 1948 and 1976?
    We all can remember the burning of Jaffna library one of the best in Asia was burnt by Sinhala state and Jaffna was under Sinhala military occupation since then. The reason for the full destruction of tamils education is because of the Sinhala states planned destruction. Why you are hiding those realities that destroyed tamils infractures and livelihood of tamils, not the sex scandals as you describe. Jaffna was captured by SriLanka military in 1995. LTTE withdrew from Jaffna in 1995. Douglas was in power with both UNP, SLFP and Rajapakse regime. Since 1995 upto now , number of abductions, murders, rapes, ransom were happened in Jaffna and Colombo including murders of TNF MPs Raviraj, Josep Pararajasingham, GG Ponnambalam UNP Maheswaran and journalsits. Whose fasict rule happened during this period?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தரப்படுத்தலால் பல்கலைக் கழகம் போக முடியாதவர்களுக்கு முதலில் யாழ்ப்பாணத்தில்த்தான் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது….//
    ஒருவேளை நீங்கள் பல்கலைக்கழகத்தையும் , பல்தொழில் நுட்ப நிறுவனத்தையும் போட்டு குழப்புகிறீர்கள்! அப்படிப்பார்த்தாலும் யாழ்பல்கலைக்கழகம் அமைய முன்னரே கொக்குவில் தொழில் நுட்ப நிறுவனம் அமைந்துவிட்டது.

    Reply
  • Sakthi
    Sakthi

    பல்கலைக்கழகங்களும் பாலியல் வக்கிரங்களும் !! எஸ்.எம்.எம்.பஷீர்

    “உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
    நிரை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
    வரைதாழ் இலங்கு அருவி வெற்ப – அதுவே
    சுரை ஆழ அம்மி மிதப்ப.”

    ( பழமொழி நானூறு )

    இப்போது பெரும் பரபரப்பாக தமிழ் இணையத்தளமொன்றில் வெளியான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரிய பெருந்தகைகள் சிலரின் பாலியல் சேஷ்டைகள் சில்மிஷங்கள் எம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. அந்த தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் செல்லையா இளங்குமரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எனது புருவத்தை உயர்த்தின, அதன் விளைவாகத்தான் இந்தக்கட்டுரையும் உருவாயிற்று

    பேராதனைப் பல்கலைக்கழகமும் (University of Peradeniya) இனக்கற்கைகளுக்கான சர்வதேச மையமும் (International Centre for Ethnic Studies (ICES) )சேர்ந்து சுவீடனிலுள்ள கோதன்பேர்க் பல்கலைக்கழகம் (University of Gothenburg –Sweden ) உபாசலா பல்கலைக்கழகம் Uppsala University –Sweden ) ஆகியவற்றின் அனுசரணையுடன் “சமாதானமும் அபிவிருத்தியும் மீதான இலங்கை மாநாடு” ( Sri Lankan Conference on Peace and Development ) 23-25 ஆகஸ்து மாதம் 2009 கண்டியில் நடந்தது. இலங்கையில் உள்ள பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் , சிரேஷ்ட விரிவுரையாளர்கள் , ஆய்வாளர்கள் , சமாதான தன்னார்வ தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்கள் , ஸ்கண்டிநேவிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் என பலதரப்பட்டோரின் ஆய்வு கட்டுரைகள் கருத்து பரிமாற்றங்கள் அங்கு இடம்பெற்றன, அம்மாநாட்டில் நான் சமர்ப்பித்திருந்த “சமாதானச் செயற்பாட்டில் , சமாதான கட்டுமானத்தில் , சமாதான உருவாக்கத்தில் பிளவுபட்ட கிழக்கு மாகாண சபை ஸ்தாபிதமும் ; யுத்த பின்னரான அனுபவங்களும் ” என்ற தலைப்பிலான எனது ஆய்வுக்கட்டுரையும் தேர்ந்தெடுக்கப பட்டிருந்ததால் நானும் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன் அப்போதுதான் முதன் முதலில் அம்மாநாட்டில் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கலந்து கொண்டு தமது துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை இரு சிரேஷ்ட விரிவுரையாளர்கள் சமர்ப்பித்திருந்தனர்.

    அவர்களில் ஒருவரான சிரேஷ்ட விரிவுரையாளர் செல்லையா இளங்குமரன் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகான சபை தேர்தல் யாழ் மாநகர சபை தேர்தல்கள் ஆகியன மக்களின் விருப்பினை பிரதிபலிக்கவில்லை , தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்றும் தனது ஈ.பீ தீ பீ ,(EPDP) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) வெற்றி பெற்றமை சரியான முறையில் நடந்த தேர்தலில் அல்ல என்றும் தனது ஆதரவு- எதிர்ப்பு அரசியலை துல்லியமாக வெளிப்படுத்தி தனது பதவி கல்வி வழங்கிய அதிகாரத்தை கொண்டு அங்கு வந்திருந்த வெளிநாட்டு கல்விமான்களுக்கு தமது அரசியல் கருத்துக்களை அயல் நாட்டுக்கு காவிச்செல்ல உதவினார். ஆனால் பின்னர் நான் நீங்கள் எல்லாம் புலிகளின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று கேட்டபோது தாங்கள் புலிகளுக்கு எதிராக வாய்திறக்க முடியாத கையாலாததனத்தையும் தாங்கள் புலிகளுக்கு நகைகளை நிர்ப்பந்தத்தில் வழங்கியது பற்றியும் கூறினார். ஆனால் இவருக்கு பின்னால் வேறு ஒரு வரலாறு ஒன்று என்பதாக இன்னுமொரு தமிழ் இணையத்தளத்தில் நட்சத்திர செய்விந்தியன் எழுதிய கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளார்.

    “செல்லையா இளங்குமரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் புள்ளிவிபரவியல் பயிலும் கலைத்துறை மாணவிகள் பலரையே இவர் இலக்கு வைத்து பாலியல் வதைகளும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் புரிபவர். இவருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பட்டப்பெயர் கரும்புடையன். இவரது குடுப்ப உறுப்பினர்கள் அல்லது சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள் என்பதையும் தனது பலமாக குற்றங்கள் புரியும்போது உபயோகிப்பவர். இவரது குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்ததால் 1995 ம் ஆண்டளவில் மாணவர்கள் துணைவேந்தரிடமும் விடுதலைப் புலிகளிடமும் முறையிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கும் வேறு வழியின்றி இளங்குமரனைத் “தூக்க”வேண்டியதாயிற்று. எனினும் அவ்வாண்டே யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதால் புலிகள் இவரை விடவேண்டியதானது. பின்னர் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தபின்னர் புலிகளோடு கள்ள ஒப்பந்தமும் செய்துகொண்டுவந்த இளங்குமரன் யாழ் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டார். முதலில் கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார். இக்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிறுவனமயப்பட்டு விட இளங்குமரனும் தொடர்ந்தார்.”

    சிறுவர் பாலியல் துஸ்பிரயோக (Pedophilia ) குற்றச்சாட்டில் கைதான விரிவுரையாளர் கணேசலிங்கம் போன்ற பிருகிருதிகள் மூலம் முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்த பல்கலைகழக பாலியல் வக்கிரங்களை பார்க்கின்றபோது எனது பல்கலைக்கழக காலங்களும் ஞாபகத்துக்கு வந்தன . பேராதனைப் பல்கலைக்கழக மாணவ காலத்தில் ஒரு தமிழ் சிரேஷ்ட புவியியல் விரிவுரையாளரின் பெண் பித்து பற்றி அவருக்கு இரையாக போன பெண் ஒருவர் பற்றி எங்கள் காலத்தில் முணுமுணுப்புக்கள் எழுந்தன. அவ்வாறே ஒரு சிங்கள விரிவுரையாளரின் அவரது பாலியல் இச்சைக்குள்ளான ஒரு சிங்கள மாணவி பற்றியும் செய்திகள் பரகசியமாகின. பெண்கள் மத்தியில் பல்லிளித்து கதாநாயகனாக பவனிவந்த அந்த விரிவுரையாளர் பற்றிய செய்திகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அறிந்த செய்திதான். மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற இன்னுமொரு தத்துவஞானி விரிவுரையாளரும் (மேனைகை ஆட்டம் கண்டு தவம்குலைத்த விசுவாமித்திரன்) கூட பேராதனை பல்கலைக்கழகத்தில் பரவலாக அறியப்பட்டவர். அதனால் நாட்டை விட்டே அவர்கள் இருவருமே வெளியேறிவிட்டார்கள்.

    இன்னுமொரு தமிழ் ஆண் முகாமைத்துவ விரிவுரையாளர் தனது விரிவுரையின் போது முஸ்லிம்களிடையே காணப்படும் பிரதான இரண்டு மதப்பிரிவு பற்றி (முகாமைத்துவத்திற்கும் முஸ்லிம் மதப்பிரிவிற்கும் சம்பந்தம் என்ன அப்போது ஏற்பட்டது என்பதை என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை!!) ஷியா பிரிவினர் பற்றி குறிப்பிட்டபின் அடுத்த பிரதான பிரிவினரை சொல்வதில் நாணம் கொண்டு மாணவ மாணவியரை சில்மிஷ புன்முறுவலுடன் அரைக்கண் சிமிட்டி நோக்கி அப்பிரிவினர் குறித்து சொல்லப்படும் சொல்லை சொல்லி , சில மாணவர்களையும் மகிழ்வித்து மாணவியர்களை சங்கடப்படுதியதுடன் , அச்சொல்லை அழுத்தி அழுத்தி கூறி அச்சொல் பாமர கொச்சை வழக்கில் பாவிக்கப்படும் அர்த்தத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள அவர் அன்றும அதற்கடுத்த விரிவுரையிலும் செய்த பாவனைகள் , நளினங்கள் அவருக்கு ” ஆண்மை” இருக்கிறதை உறுதி செய்ய செய்தது போல் தோன்றியது. அவரது அந்த பாவனைகள், அவர் அதனை அழுத்தி கூறி அடைந்த அற்ப சந்தோசங்கள் அன்றுபோல் இன்றும் எனது மனதில் அசிங்கமாக பதிந்திருக்கின்றன. பல்கலைகழகம் பாலியலும் கற்பிப்பதுண்டு ஆனால் பாலியல் வக்கிரம் கொண்ட சில பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆசைக்கு பலியாகும் பெண்களை வெறுமனே இருவர் சம்பந்தப்பட்ட உரிமை பிரச்சினையாக அல்லாது அதிகாரத்தை துஸ்பிரயோகம் பண்ணும் ஒரு கடினமான குற்றமாக தண்டிக்கும் விடயமாக அணுகப்பட வேண்டும. பல்கலைக் கழகங்களில் ராஜாக்களாக பவனிவரும் பல ஆசாடபூபதிகள் ஆசிரியர்களாக மட்டும் செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் இன்றைய சூழல் மாணவர்களால் திட்டமிட்டு பயன்படுத்தப்பட வேண்டும் . இப்போது தேவை விரிவுரையாளர்களின் சொந்த “அரசியல்” போதனை அல்ல , வெறுமனே தேசியத்தின் பேரால் இன உணர்வின் பெயரால் தூண்டப்பட்டு சிந்தனைச் சுரண்டல் செய்யப்பட்ட மாணவர் சமுதாயம் மனித விழுமியங்களுக்கான நேர்மையான சுயேச்சையான போராட்டங்களை இனிமேல்தான் செய்யவேண்டும். அரச பல்கலைக்கழக ஆசான்கள் அரசிடம் சம்பளம் வாங்கி மாணவர்களுக்கு சேவை புரியும் ஊழியர்கள் என்பதை மனதிலிருத்தி செயற்படாவிட்டால் மாணவர்கள் போர்க்கொடி எழுப்பவேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.-நன்றி தேனி-

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    புலம்பெயர் ஆர்வலர்கள் இணையத் தளங்கள் வழியாக எவ்வளவு தான் பெரும் பிரயத்தனப்பட்டு கட்டுரைகளும் பின்னூட்டங்களும் எழுதினாலும் அங்கே பல்கலைக் கழகத்தினுள்ளே சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒரு சிறு மாறுதல்கூட இல்லை என பல்ககைக் கழகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் சொன்னார்..இங்கே எவர்தான் யோக்கியர்..? என்ற தோரணையே எல்லோரிடமும் பரவலாக மண்டிக் கிடப்பதாக அவர் சொன்னார்..மாணவர்களிடம் கூட ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற உத்வேகத்தைக் காண முடியவில்லையாம்..ஒவ்வொரு பேராசிரியர் மற்றும் விரிவுரையாளரும் தமக்கு மேலிடங்களில் எவ்வளவு செல்வாக்கு உண்டு என்ற கதைகளை தொடர்ந்து அவிட்டு விடுவதால் தமது எதிர்காலம், உயிர் என்பன பற்றி மாணவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்களாம்… ஆனால் ஒரு விஷயம் முக்கியமானது..கெளரவ கலாநிதிப் பட்டத்தை பெற்றுக்கொள்ள அமைச்சர் உறுதியாக மறுத்து விட்டார் என்றும், அதனால் பட்டம் கொடுத்து மகிழ. மகிழ்விக்க இன்னொருவரை பல்கலைக் கழகம் அவசரமாகத் தேடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்…

    Reply
  • நந்தா
    நந்தா

    பல்கலைக்கழகத்துக்கும் தொழில்நுட்ப கல்லூரிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பவர்கள் அவற்றை தெரிந்தவர்களிடம் படித்துவிட்டு எழுதுவது நல்லது!

    Reply
  • Kumar
    Kumar

    உங்களால் இலட்சியமான (ideal) ஒரு சமுதாயத்தைக் காட்டமுடியுமா? நாங்கள் ஒரு real சமுதாயத்தைத் தான் உருவாக்க முடியும்.
    பாலியல் வதை என்பது எல்லாக் காலங்களிலும் எல்லா பல்லலைக்கழகங்களிலும் எல்லா நாட்டிலும் உள்ளதே. அதற்கு தண்டனையும் சட்டப்படி உண்டு தான். ஆனால் எல்லாவற்றையும் மீறி ஒரு அளவுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கழிவறைகளிலும் “ sexual harassment is a punishable offense” என்ற வாக்கியத்தைக் காணலாம். எல்லா இடமும் இது இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. எனது வாதம் என்னவெனில், பேராதனையிலும், கொழும்பிலும், மற்றவிடங்களிலும் உள்ள பாலியல் வதைகளுடன் ஒப்பிடும் போது, யாழ் பல்கலையில் ஒன்றும் மோசம் இல்லை. இது உள்நோக்குடன் ஊதிப்பெருப்பிக்கப்படுகிறது. ஹூலின் மனைவியும் ஒரு தெற்குப் பல்கலைகளகத்தில் பாலியல் இம்சைப்படுத்தப்பட்டததாக அவரே கூறியுள்ளார். “பொம்பிளைக்கள்ளன்” என்ற குற்றச்சாடை ஆதாரம் இல்லாது எவர் மீதும் சுமத்தலாம் என்ற யாழ்/தமிழ் காலாச்சாரமும் இதற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம் possessiveness. Jaffna students see a handsome staff as a competitor. They start rumours. பேராசிரியர் துரைராஜா, பேராசிரியர் குணரத்தினம், பேராசிரியர் குமாரவடிவேல் போன்ற நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்போனவர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? தயவுசெய்து அறிவியல் ரீதியான கரணங்களை முன்வைத்து உங்கள் வாதங்களை தொடருங்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    குமார்:
    எல்லா இடங்களிலும் திருட்டுநடை பெறுகிறது. அதற்காகத் தண்டனை இல்லை எங்கிறீர்களா?

    கனடாவில் அப்படியான பாலியல் தொல்லைகள் நிரூபிக்கப்படும் பட்சதில் விரிவுரையாளரும் சரி, மாணவனும் சரி கம்பி எண்ணுவதுடன் கனடாவில் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படிப்பிக்கவும் முடியாது, படிக்கவும் முடியாது!

    Reply
  • seyon
    seyon

    இந்த கொமென்ட் எல்லம் சூடு சுரனை உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும். அறநனைந்தவர்களுக்கு கூதல் என்ன குளிர் என்ன.–seyon

    Reply
  • Kumar
    Kumar

    நந்தா, அதைத்தான் நானும் கூறினேன். குற்றங்களை நிரூபிக்கவும் தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்யவும் வேண்டுமே ஒழிய gossip கதைப்பதால் ஒரு நன்மையும் இல்லை. நிரூபிக்க முயற்சி செய்யாமல் இருப்பதற்கு காரணம் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

    Reply
  • seyon
    seyon

    While endorsing the views of Sevvinthiyan I highlight some more facts on the article
    1. After Prof.Thurairajah the University of Jaffna unfortunately did not get a Vice Chancellor with a ‘Vision’. Prof.Balasundarampillai, Prof.Mohanadas and at last now prof Shanmugalingam sat on the VC’s chair without proper way. All of them just run the day to day work and not given a leadership. All three persons conducted the administration with the help of some administrative staff. The administrative officers specially the Bursar (Mr Kanagaratnam) gave some privileges’ for them and then run the administration as they wish. These dummy VCs signed the papers without any knowledge. The Establishment branch and finance branch misled the vcs time to time

    2. Prof Shanmugalingam not fit for the post of even Head of the department. During his headship period if any projects or proposals requested he never respond due to nil of knowledge. But he now perform the vc post !!!. He talk with people as a ‘Saddampiyar” Never listen others view. When any one tries to express their views he never allows and started his uttering. He prepared even his CV and application with the help of others.

    3. Prof Sathiaseelan also has the same caliber. He does not have any knowledge to prepare a report in any matter. He sign the papers as produced by others.

    4. Prof.Gnanakumaran as mentioned in the article and comments mess up all matters. He was chased away from external branch due to misconduct. After elected as Dean of the Faculty he did not do any thing for the development of the Faculty. He continued as coordinator of the QEF of IRQUE project which was initiated by late prof Krishnarajaj by his hard work, Prof Gnanakumaran put his name as coordinator and as a beneficiary. He got 300,000 money for inter university visit and has 5days visits to 4 universities. Finally he prepared fault receipts for the above said money and claimed. The LTS office found that all bills were altered and not reliable. But this matter was closed without any problems or raising any clarifications with the support of Prof.Shanmugalingam and Prof Kandasamy, Prof Gnanakumaran is called as Colombo Dean. During his deanship period he spent half the days in Colombo. The Faculty run with acting Dean. He promised when he contested for deanship he promised to bifurcate the faculty of arts and to create a faculty for Ramanathan Academy but up to now not taken any steps on these matters. With this features he contest for VC post. But he may come because this kind of appointments is done in Jaffna University only.

    5. As pointed out by sevvinthiyan the Arts Faculty leads in sexual harassment as the faculty has excess staff and they have no academic works. In some departments the students numbers are less than staff. The academic staff always on the road / Senior Common Room. They take only 35/40 minutes lectures for the one hour lecture programme, they simply cancel lectures . students as a results get less works and they too have unwanted business.

    6. Since most of the problems are created from faculty of arts it should be restructured. Staff who are not do their works properly should be sent home, faculty should have a dean with leadership qualities and development oriented.
    All these are possible if Prof Hoole comes as Vice Chancellor. We are waiting for the “CHANGE”

    Reply
  • Rajasingham
    Rajasingham

    The main problem seems to be that many do not know what a university should be- this includes the faculty, students and the general public. If the University is considered a ‘School at a higher level’ serving as a ‘degree factory’, what is happening to the universities in Sri Lanka in general, is inevitable. University education is not for everyone. Higher education is a right to be earned through not only passing the Advanced levels, but through demonstration of aptitude and capability. The money we spend on providing the so-called university education to the multitude is a waste. A university graduate, should be an ornament for the degree he holds. We consider degree- sometimes even a Ph.D can be purchased- an ornament, although it sits on a very unsuitable person.

    The faculty in a university should be not only qualified, but worthy of that qualification. Every Dick,Tom and Harry, should not become a university teacher, because he has some or other got various degrees. A Ph.D or Master’s thesis is reviewed by peers and the individuals are further subjected to rigorous scrutiny before being selected for university teaching, in even half decent universities. I wonder how the Jaffna University has been awarding Ph.D’s? What is worse is such people have been made Vice Chancellors! The Jaffna University and probably many other universities in Sri Lanka are unfit to award even Bachelor’s degrees.

    What afflicts the Jaffna university in particular is that it had to survive on what was available- though of poor quality- during the long years of civil war. This statement however refers to a majority in the faculty. I am aware that there are some faculty of high calibre at the Jaffna University, despite the ravages of war. To remove weeds and refashion the faculty is a long term effort and requires visionary leadership.

    The political interference at Jaffna University is high and hence it has become a den of ‘low grade’ political stooges too. This is a case of double jeopardy! Only enlightened public pressure can resolve these problems over time. It is as in economics, an issue of supply and demand. If there is a demand for higher standards and better quality, they will become available.

    I have been teaching at universities and am aware of attempts by students to influence faculty by flaunting their sex (Viswamithrar-Menakai syndrome). Some faculty succumb, but many do not. However, it appears that at the Jaffna University a disproportionately large number of faculty are sexual predators- a reflection of their mediocrity. The breakdown in social order and value system in Tamil society in general, may be also making many students pander to the needs of these predators, as an easy path to a worthless degree.

    -Dr.Rajasingham Narendran-

    Reply
  • m sabaratnam
    m sabaratnam

    நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில சண்முகலிங்கத்துக்கு சரியான கெடிக்கலக்கமாம். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் அத்தனைபேரையும் தன்னைச்சுற்றியே வைத்திருந்தாராம். படங்களில சண்முகலிங்கத்தின்ரை பயம் வடிவாத்தெரியுது. விதைச்சதை அறுக்கததானே வேணும் சண்முகலிங்கம்.

    சபாரத்தினம்

    Reply
  • mayavan
    mayavan

    இக் கட்டுரை குறித்த ஒலருவரை நல்லவராக்கி அவருக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்ற தொனியில் உள்ளது. பிறர் மீது குற்றங்கள் சுமத்துவதை விட்டு விட்டு குற்றங்களினை ஆதார பூர்வமாக நிரூபித்து அதற்குரிய தண்டனைகளினை வழங்கும் பொறுப்பினை மக்களிடம் கையளியுங்கள். மக்கள் தீர்ப்பே சிறந்தது.
    உண்மையில் நீங்கள் சமூக அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் இவ்வளவு காலமும் ஏன் தங்களால் இவ் விடயம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வில்லை? சந்தா;ப்பத்துக்கு ஏற்றவாறு நீங்கள் கருத்துக்களை தொpவிக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டிய நபரின் பதவிக்காக பக்க சார்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்த்து சமூக அக்கறையுடன் செயற்படுங்கள்.

    இன்னொரு விடயத்தினை குறிப்பிட விரும்புகின்றேன் தற்போது ஒரு பெண் தனித்து இரவு வேளைகளில் அச்சமின்றி செல்ல முடியுமா என்பதை என்னிபாருங்கள். தற்காலத்தில் தான் கொள்ளைகளும் கொளைகளும் தலைதூக்கியுள்ளது. தங்க நகைகளினை அணிந்து ஒருவர் தனியாக செல்லமுடியுமா? கோயில்களில் நடந்த திருட்டுகள் தொடா;பாகவும் ஆள் இல்லாத வீடுகளில் மாணவர்களின் திருவிளையாடல் தொடா;பாகவும் பத்திரிக்கைகளில் வரும் செய்தி தங்களின் கண்ணுக்கு தொpவதிர்லையா? இவ்வாறான குற்ற செயல்கள் முன்னொரு போதும் நடந்ததில்லையே… ஒருகணம் சிந்தியுங்கள்… ஏன் முரண்டுபிடிக்கின்றீர்கள்

    பல்கலைக்கழக சமூகமே இவ்விடயத்தில் ஏன் மெளனம்? மாற்றான் ஒருவன் தன் சுய நலத்துக்காக எம்மை ஏலம்போடுகிறன். தயவு செய்து உங்கள் மெனத்தை களயைுங்கள்.–mayavan nallavan

    Reply
  • Chandrakumar
    Chandrakumar

    மேலுள்ள எழுத்து /விடயம் காலங்காலமாக கிழக்கின் மைந்தர் களுக்கு ஊனமுற்றவர்கள் எறியும் உண்மை!. இளங்குமரன் சார்பாக வீசப்பட்ட மலம், சேறு தவறானது . இளங்குமரனுக்கு பாசிஷ புலிகளின் தொடர்பு உள்ளது! அதனால் தன்செயலை தொடர்ந்தார் என்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்! யாழ்பல்கலை கழகத்தில் தன் உயர்வு முன்னேற்றத்தை தடுக்க பலர் சதிசெய்து அவமானப்படுத்தினர் என வேதனைப்பட்டதை நானறிவேன். காரணம் அவர் பலகாலநண்பன்! பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு பல்கலைகழக நிர்வாகம் தண்டனை கொடுத்திருக்குமே , அவை நடந்ததா ? புலிகளின் ஒரு சாராரின் கேவல செயல் என்பதும் தெரிந்ததே ! இளங்குமரனின் கல்வி , சேவை , அனுபவம்,ஆகியவற்றுக்கு அமைய என்றாவது பதவி உயர்வை கொடுக்க துணை இருந்தார்களா ? உண்மைகளை எழுதுஙகள் ! நன்றி . சந்திரகுமார்.(சந்திரன்) ஜெர்மனி.

    Reply
  • Sri Ram
    Sri Ram

    “இளங்குமரனின் கல்வி, சேவை, அனுபவம்,ஆகியவற்றுக்கு அமைய என்றாவது பதவி உயர்வை கொடுக்க துணை இருந்தார்களா ? உண்மைகளை எழுதுஙகள் ! நன்றி “. சந்திரகுமார்.(சந்திரன்) ஜெர்மனி.

    பாலியல் குற்றத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுபவருக்கு பதவி உயர்வு கொடுக்கவேண்டுமா சந்திரன். இளங்குமரன் மட்டக்களப்பு என்றாலும் திருமணம் செய்தது யாழ்ப்பாணப்பெண்ணை. மட்டக்களப்பு என்பதற்காக அவருக்கு மலம் வீசப்படவில்லை. அவரின் பாலியல் குற்றங்கள் வெகுவாக அறியப்பட்டவை. குற்றச்செயல்களில் ஈடுபடும் மிகுதி நால்வரும் வடமாகாணம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் சந்திரன். அருந்தாகரனும் தனது ஊரான முள்ளியவளையில் பெண் எடுக்கமுடியாததால் யாழ். கல்வியங்காட்டுப் பெண்ணையே மணமுடித்திருக்கிறார்.

    சிறிராம்

    Reply
  • நந்தா
    நந்தா

    குமார்:
    பலகலைக் கழகநடை முறைகளில் “பாலியல்” சேஷ்டைகளுக்குத் தண்டனை இலங்கயில் உண்டா என்பது தெரியவில்லை. அப்படி இல்லையெனில் “காவாலிகள்” தப்பியோட வாய்ப்பு உண்டு.

    கணேசலிங்கம் போன்றவர்கள் நீதி மன்றத்துக்குப் போனபின்னர் வாதி ஆஜராகவில்லை என்று அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் கனடாவில் வாதியின் வாக்கு மூலம், மருத்துவ சான்றிதழ் மாத்திரம் போதும். எனவே இலங்கை பீனல் கோடில் காணப்படும் ஓட்டை அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

    யாழ் பிரக்கிராசிகள் திருடர்களுக்கு சாதகம் செய்யும் வீரர்கள். எனவே யாராவது ஒரு பிரக்கிராசி “நேர்மை” என்பதை கவனத்தில் எடுக்காத வரயில் குற்றவாளிகள் கும்மாளம் தொடரும்!

    Reply
  • Chandrakumar
    Chandrakumar

    திரு சிறிராம்! ” பாலியல்குற்றத்தில் தொடர்சியாக ஈடுபடுபவருக்கு பதவி உயர்வு கொடுக்கவேண்டுமா? “” இளங்குமரனின் பாலியல் குற்றங்கள் வெகுவாக அறியப்பட்டவை”. என தெரிவிக்கும் நீங்கள், எப்போது நடந்தது என காலத்தை தெளிவாக தெரிவிப்பீர்களா? அப்படியானால் எதற்காக அதற்குரிய தண்டனை கிடைக்க செயல் படவில்லை? அப்படி ஏதாவதுதண்டனை கிடைத்ததா? எப்போது? (உண்மையான பெயரில் உண்மையை எழுதுங்கள்) கல்விகள் உயர்வானது! அதனை யாரும் கெடுக்க கூடாது! மேலும் மேலை நாடுகளில் இன்னலின்றி சுகமாக வாழ்ந்தவருக்கு பதவி கொடுக்க வேண்டுமா? ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவை! இயற்கை! பதிலை எதிர்பார்கிறேன் ! சந்திரன்.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    இளங்குமரன், சண்முகலிங்கன் போன்றோரின் குற்றங்கள் ஏற்கனவே தெளிவக நிருபிக்கபட்ட உண்மைகள். ஆனால் இதுவரை தண்டிக்கபடவிலை காரணம் உயர் பதவியில் இருந்தவர்கள். மேலும் இளங்குமரன், சண்முகலிங்கன் ஆகிய இருவரும் கல்வியில் சிறந்தவர்கள் இல்லை என்பது பல்கலையில் உள்ளவர்களுக்கு தெளிவக தெரியும்.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    பேராசிரியர் தர்மரத்தினம் (முன்னாள் விஞ்ஞான பீடத் தலைவர்) போன்ற பண்பாளர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தார்கள் என்பது இன்று ஒரு வியப்பான செய்தியாகி விட்டது..வித்தியானந்தனுக்குப் பதிலாக தர்மரத்தினம் நியமிக்கப் பட்டிருப்பாரேயானால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆசியாவின் சிறந்த பல்ககைக் கழகங்களில் ஒன்றாக மிளிர்ந்திருக்கும் என்பதில் எவருக்கும் வேறு கருத்து இருக்க முடியாது… அவருக்குப் பின்னால் விஞ்ஞான பீடத்திலிருந்து தலைமை தாங்க வந்தவர்கள் அனைவருமே சாதாரண மனிதப் பண்புகள் தானும் அற்றவர்களாக, பலமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப் படவேண்டியவர்களாகவே நடந்துகொண்டார்கள்.அவர்களை ஒரு கற்றறிந்த சான்றோர் என்று கிஞ்சித்தும் கருதமுடியாத அறிவிலிகளாக அவர்கள் நடந்து கொண்டமைக்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. துணை வேந்தராக இருந்த பேராசிரியர் துரைராஜா நிர்வாகத்தை இயந்திரவியலில் இருந்து பிரித்துப் பார்க்கக்கூடிய அறிவற்றவராகவே பணியை நிறைவு செய்தார்..அதையும் மீறி தமது சுயலாபம் கருதி பல்கலைக் கழக நிர்வாகத்தில் புலிகளின் தலையீட்டை அனுமதித பெருமகன் அவர்..

    கைலாசபதிக்குப் பின்னர் பன்முக ஆளுமைகளுடன் பாடப் புத்தகங்களுக்கு வெளியே நிர்வாகத்திறனை அறிந்திருந்த துணைவேந்தர் எவரும் பதவிக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.. இதன் காரணமாகவே பேராசிரியர் ஹூல் போன்ற ஒருவர் துணை வேந்தராவதை ஆதரிக்க வேண்டும்.. அவர் வெறுமனே பல்கலைக் கழக பதவிக்கு மட்டும் போட்டியிடவில்லை. தமிழ் மாணவரது கல்வி நிலை ஆரம்ப வகுப்புக்களில் இருந்தே மாற்றியமைக்கப் பட வேண்டும் என்ற தூர நோக்குடையவராகவே தென்படுகிறார்.. அவரை அமைச்சர் டக்ளஸ் ஆதரிக்கிறார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை..வடக்கிற்கு நல்லது செய்ய விரும்பும் டக்ளஸ் அவரை ஆதரித்தாலும் கூட அது ஒரு நல்ல விஷயம் தான்.. திறமையாளர் ஹூலை இலங்கையின் வேறு பல்கலைக் கழகத்திற்கு நியமித்தால் நாடே உருப்படும் என்ற வாதம் அபத்தமானது..

    Reply
  • Chandrakumar
    Chandrakumar

    இன்றுகாலை 10:57 இக்கு சிறிராம் என்பவருக்கு (இளங்குமரன் சம்பந்தமாக, மற்றவரை நானறியேன்!) நான் கால அடிப்படையில் பதிலைஎழுத கோரியிருந்தேன். அதற்குபதிலாக, பலர் எழுதினர். சம்பவத்தைப்பற்றி மட்டுமே! நன்றி! நம்பகூடியதல்ல! எனக்கு அறிவு இல்லை என்பது இன்றுதான் உண்மையாக புரிகிறது! காரணம் கோட்டு, சூட்டுபோட்டு வசூலித்து வணங்காமண்ணை இன்னலில் தவிக்கும் ஈழ தமிழருக்கு கடலில் அனுப்பிய அறிவாளிகள் கூட்டத்தைப் போல், பாசிசதலைவர் உரையை மொழிபெயர்க்கும் அறிவாளி போல், கதை, கட்டுரைக்கு பதில் எழுதிய அழகை ரசித்தேன்! உண்மைக்கல்ல என மெளனமானேன். நடத்தை சீர்கேட்டுக்கு தண்டனை என்பது நீதிமன்றத்தில் மட்டும் கொடுக்கப்படுவதல்ல என்பதை அறியாத அப்பாவி என்பவரும் எழுதினார்! ஏதோ நடப்பது நடக்கட்டும்! வாழ்க தமிழர் பண்பும், அறிவும், கலாச்சாரமும்!– சந்திரன்.

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear Chandrakumar,

    I wish to bring your kind notice that Illankumaran is a well known criminal at the University of Jaffna. It could be proven beyond any doubt. But, the way you are arguing just like before courts of law. As everybody know that the fact is by argument itself anybody could be proven that he/she may be innocent the truth is truth nothing could be leveled against to that.

    Further, I hope that you are not concerned about human rights violation, since Illankumaran did his sexual abuse using his lecturer position by way of intimidating the students with their examination results. If it happens to your next kith and kind what would be your reaction? Please, do not come out with this type of argument any more here. Also, you should bear in your mind that the thesamnet is not a court. This web site is to explore the truth without any bias not to hide culprits.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    சந்திரகுமார், இளங்குமரன் புலிகளால் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது இக்கட்டுரையில் குறிப்பிடபட்டுள்ளது, இது தொடர்பாக இளங்குமரன் ஏற்கனவே தனது நண்பர்களிடம் (மது போதையில்) சொன்ன விடையம் இதுதன்.

    // புலிகளிடம் : என்னைவிட பெரிய முதலைகள் எல்லாம் பல்கலையில் இருக்கும்போது ஏன் என்னை மட்டும் பிடித்து வைத்து இருக்கின்றீர்கள்?
    அத்துடன் புலிகள் தன்னை விட்டுவிட்டார்கள் என்று//

    அவர் கூறியதின் உட்பொருளை புரிந்துகொண்டல் நான் இங்கு வேறு எதுவும் கூற தேவை இல்லை.

    Reply
  • Ajith
    Ajith

    இளங்குமரன், சண்முகலிங்கன் போன்றோரின் குற்றங்கள் ஏற்கனவே தெளிவக நிருபிக்கபட்ட உண்மைகள். ஆனால் இதுவரை தண்டிக்கபடவிலை காரணம் உயர் பதவியில் இருந்தவர்கள். அப்பாவி

    Dear writer, Can you please explain in Which Sri Lankan court those allegations were proved and When? Is it a law in Sri Lanka that those who are in top posts should not be punished? Who has the power to make decisions. When I spoke to a friend in University circles of Jaffna he said that a team of visitors from some countries recently visited to Jaffna during Presidential election. They arranged something ……. to President’s Son on the request of another tamil minister in order to get support for Prof Hoole. What you are going to say about such allegations?

    Reply
  • Rohan
    Rohan

    தாமிரா மீனாஷி // “அவர்களை ஒரு கற்றறிந்த சான்றோர் என்று கிஞ்சித்தும் கருதமுடியாத அறிவிலிகளாக அவர்கள் நடந்து கொண்டமைக்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. துணை வேந்தராக இருந்த பேராசிரியர் துரைராஜா நிர்வாகத்தை இயந்திரவியலில் இருந்து பிரித்துப் பார்க்கக்கூடிய அறிவற்றவராகவே பணியை நிறைவு செய்தார்..அதையும் மீறி தமது சுயலாபம் கருதி பல்கலைக் கழக நிர்வாகத்தில் புலிகளின் தலையீட்டை அனுமதித பெருமகன் அவர்..” /

    நிர்வாகத்தை இயந்திரவியலில் இருந்து பிரித்துப் பார்த்தல் என்பதன் மூலம் தாமிரா மீனாஷி சொல்ல வருவது என்ன?

    சுய லாபம் கருதி என்று சொல்லுகின்ற தாமிரா மீனாஷி தமது மருத்துவத் தேவைக்கே பணம் இல்லாதிருந்ததை அறிவாரோ என்னவோ.

    அவர் புலி அபிமானி என்பது வெளிப்படை – ஆனால் அவர் என்ன யாராக இருந்தாலும் புலித் தலையீட்டை யாரும் தவிர்த்திருக்க முடியாது.

    Reply
  • Chandrakumar
    Chandrakumar

    காந்தன் எழுதியதை புலம்பெயர் அறிவு ஜீவிகள் மொழிபெயர்க்க முடியுமா? தேசமென தமிழில் உள்ளதால் நான்தமிழில் எழுத்தாக்கினேன்!
    அப்பாவி! இளங்குமரன் மதுவை தொடுவதில்லை! “இளங்குமரன் ஏற்கனவே தன் நண்பர்களுக்கு தெரிவித்தார்” என்பதும் உண்மையற்ற கற்ப்பனை! உங்களைப் போன்றவர்கள் சொந்த பெயரை மறைத்து, அறிவாளிகள் எனும் முகமூடிக்குள் வேஷம் போடுவதின்பின் மக்களை அழிக்க எதையும் செய்யும் பக்குவம் கொண்டவராக உணரமுடிகின்றது ! உண்மையை உண்மை பெயரோடு எழுதுங்கள்! தன் எழுத்தை அனைவரும் நம்பியாகவேண்டுமென வாசகர்களை ஏமாற்றாமல், சினிமாவில் கற்பனை கதாசிரியர்கள் தேவை! அதற்கு முயலவும் ! அப்பாவி இளங்குமரன் / சண்முகலிங்கம் / அறிவில்லாதவர்கள் என தன் அறிவை சமர்பித்துள்ளார் ! நாங்கள் முட்டாளாக இருப்பதால்தான்; உங்களை அறிவாளியாக உணரமுடிகின்றது! கேள்விக்குரிய பதிலை கொடுக்காத, தூங்குவதை போல்நடிக்கும் அறிவாளிகளுக்கு என் கேள்விகள் எருமை மாட்டில் மழை பெய்தது போல் இருக்கும் என்பதையும் நானறிவேன்! நன்றி ! சந்திரன் .

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    //அப்பாவி! இளங்குமரன் மதுவை தொடுவதில்லை! //Chandrakumar on October 10, 2010 12:16 pm

    இளங்குமரன் மதுவை அருந்தும் போது நானே பார்த்துள்ளேனே. வேறு என்ன வேண்டும்.

    நீங்கள் இளங்குமரன் இற்க்கு வக்காலத்து வாங்கிறீர்களா அல்லது காட்டி கொடுக்கிறீர்களா?

    Reply
  • Chandrakumar
    Chandrakumar

    அப்பாவிஅவர்களே!
    இளங்குமரன் மதுவை அருந்தும்போது, தான் பார்த்ததாக கூறுவதை, உங்களை போன்றவர்களின் பார்வை கோளாறு என அறிய முடிகிறது! மற்றும் இளங்குமரனுக்கு வக்காலத்து வாங்கிறீர்களா? அல்லது காட்டிகொடுக்கிறீர்களா? என உங்களை, நானென கருதியுள்ளீர்கள்! என்றும் காட்டி கொடுக்கும் நிலையை நேசித்த சரித்திரம் என்னில் கிடையாது என்பதை இன்று முதல் அறிந்து கொள்ளவும் ! கேள்விக்கு தரமான பதிலை கொடுக்க முடியாத வங்கிரோத்து தனத்தை எழுத்தில்விடாதீர்கள் ! நீங்கள்தான் சரியான ஜனநாயகவாதி எனநினைக்க தோன்றுகிறது ! அறிவான தமிழரை அசிங்கபடுத்த யாரும் முனைய மாட்டார்கள் ! ஆனால்,நீங்கள் ?? ஏற்கனவே தவறுகளை சுட்டிக்காட்ட தவறியதால் ஏற்பட்ட இலாபம் என்ன என்பதை உங்களை போன்றவர்கள் அறிய முடியாது ! சந்தர்ப்பவாத நிலையை சுவாசிப்பவர் ! எனநினைக்கிறேன் ! சந்திரன் !

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    Dear Chandrakumar,
    “கேள்விக்கு தரமான பதிலை கொடுக்க முடியாத வங்கிரோத்து தனத்தை எழுத்தில்விடாதீர்கள்”

    First of all you should make sure that whether you had raised a question and then expect an answer.

    “அறிவான தமிழரை அசிங்கபடுத்த யாரும் முனைய மாட்டார்கள்”

    I kindly request you to read his Ph.d dissertation and his so called publications first and then decide his academic caliber. Further, this has been already discussed in some other forums (related to the University of Jaffna) so that please kindly read the comments at least.

    You are doing the same blunder as Shanmugalingan and others. Anyhow, you go to University of Jaffna and say aloud what you said here and show the results. Ok. Bye

    Reply
  • Veluppillai
    Veluppillai

    “தற்போது ஒரு பெண் தனித்து இரவு வேளைகளில் அச்சமின்றி செல்ல முடியுமா என்பதை என்னிபாருங்கள். தற்காலத்தில் தான் கொள்ளைகளும் கொளைகளும் தலைதூக்கியுள்ளது. தங்க நகைகளினை அணிந்து ஒருவர் தனியாக செல்லமுடியுமா? கோயில்களில் நடந்த திருட்டுகள் தொடா;பாகவும் ஆள் இல்லாத வீடுகளில் மாணவர்களின் திருவிளையாடல் தொடா;பாகவும் பத்திரிக்கைகளில் வரும் செய்தி தங்களின் கண்ணுக்கு தொpவதிர்லையா? இவ்வாறான குற்ற செயல்கள் முன்னொரு போதும் நடந்ததில்லையே… ஒருகணம் சிந்தியுங்கள்… ஏன் முரண்டுபிடிக்கின்றீர்கள்”

    – மாயவன்.

    புலிகள் போன்ற பாசிஸ்டுகள் தங்களது பாசிஸ காலத்தில் வழிப்பறித்திருடர்கள் கொலையாளிகள் வல்லுறவு காமுகர்கள் ஓடு பிரித்தும் கன்னக்கோல் வைத்தும் திருடும் திருடர்கள் மோசடிக்காரர்கள் போன்றவர்களுக்கு குற்ற விலக்கு அளித்து அவர்களை தங்களது முழுநேர ஊழியர்கள் ஆக்கிவிடுவதால் அக்காலத்தில் அவர்களின் தொல்லை இல்லை. கணேசலிங்கம் சண்முகலிங்கம் இளங்குமரன் போன்ற வல்லுறவு காமுகர்கள் புலிகளின் காலத்தில் பல்கலைக்கழகத்தில் கொடிகட்டிப் பறக்கும்போது வெளியுலக்கத்தில் இக்குற்றங்கள் குறைவது நியாயந்தானே.
    -வேலுப்பிள்ளை.

    Reply
  • Ragunathan
    Ragunathan

    அண்மையில் நடைபெற்ற எம் M ED தெரிவில் பாரிய ஊழல்கள் நடந்தது. குமரன் சுபாசினி சுதாகர் சாயிஜனனி ஆகியொருக்கு குறுக்கு வழியில் அனுமதி வழ்ங்கப்ப்ட்டது. இவர்க்ளுக்கு சேவை மூப்பு இல்லை. சத்தியசீலன் தம்பதிகளின் ஊழலுக்கு இதுநல்ல உதர்ரணம். இது பற்றி அராய்ந்து எழுதவும யாழ் பல்கலைக்கழக உழல்களில் இதுவும் ஒன்று.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    //இது யாழ் பல்கலையில் மட்டும்தான் சாத்தியமாகும். யாழ் பல்கலையில் கர்நாடக சங்கீத வித்துவானொருவர் கூட கணிதம் படிப்பிக்கலாம் //

    அதுதான் B.Ed (Colombo)பட்டம் பெற்ற சண்முகலிங்கன் இப்போது சமுகவியல் பேராசிரியர் ஆகிவிட்டரோ!!! இப்போது அங்கு நடப்பது இதுதானோ? நல்லது நாம் விரைவில் முன்னேறிவிடுவோம்…

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //அதுதான் B.Ed (Colombo)பட்டம் பெற்ற சண்முகலிங்கன் இப்போது சமுகவியல் பேராசிரியர் ஆகிவிட்டரோ!!! இப்போது அங்கு நடப்பது இதுதானோ? நல்லது நாம் விரைவில் முன்னேறிவிடுவோம்…//

    அப்பாவியின் அங்கலாய்ப்புக்கு பதில் சொல்லத் தொடங்குவதன் மூலம், திரு. ரகுநாதன் அவர்களின் முறைப்பாட்டுக்கும் ஒரு பதில் அளிக்க முடியும்.

    சண்முகலிங்கன் பி.எட் பட்டதாரி. அதுவும், அந்தநாளில், கொழும்பில் வெளிவாரியாக படித்துப் பட்டம் பெற்றவர். கொழும்பில் சண்முகலிங்கன் வெளிவாரிபட்டமாணவனாக இருந்த போது – மனோன்மணி சபாரெத்தினம் அவர்களின் அனெக்சில் தங்கியிருந்தாராம். மனோன்மணி அக்காவும் தம்பி சண்முகலிங்கம் பர்றியும் பல பல கருத்துக்கள் நிலவுகின்றன.

    பேராசிரியராக சபாரெத்தினம் அம்மையார் இருந்ததன் செல்வாக்கைப் பயன்படுத்தியே, சண்முகலிங்கன் பல விடயங்களை சாதித்துக் கொண்டார்.

    பின் யாழ் பல்கலையுள் சண்முகலிங்கன் நுழையக் காரணமானவர் சர்வதேச அளவில் புல்லுருவி என்று அடையாளம் காணப்பட்டுவிட்ட பாலசுந்தரம்பிள்ளை. பி.எட் படிப்பில் ஒரு பாட அலகு சமூகவியலின் அறிமுகம் என்பதாகும். இதனைப் படித்திருந்தமையாலும், ஒரு சைவ வேளாண் உயர்குடி ஆண் என்று தன்னை நிறுவிக் கொண்டதாலும் சண்முகலிங்கன் யாழ் பல்கலையுள் நுழைந்தார்.

    இன்னமும் தனது ஆணாதிக்க மேலாதிக்கத்துவத்தை சண்முகலிங்கன் பலவித துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதன் மூலம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றார் (இதனை தேசம்நெற் பலகோணங்களிலும் நிறுவியுளது).

    யாழ் பல்கலையில் பேராசிரியராகுவதற்கு உங்களுக்கு உங்கள் தொழில்ரீதியான அறிவும் தகமையும் தேவையில்லை அப்பாவி அவர்களே! நீங்கள் சைவ வேளாண் உயர்குடி புல்லுருவியாக உங்களை அடையாளம் காட்டினால் மட்டும் போதும். உதாரணமாக திரு. அப்பாவி அவர்கள் “எல்லாம் தெரிந்த சுவாமித் தம்பி துறையில்” கூட பேராசிரியராகலாம் – அது நீங்கள் எந்தளவிற்கு ஊழல் செய்கிறீர்கள் என்பதனை பொறுத்தது.

    இது இப்படியாக இருக்க, எம்.எட் படிப்பு பற்றிய சில விளக்கங்கள்:

    1. எம்.எட் படிப்புக்கு பரீட்சகராகவும், இணைப்பாளராகவும் இருப்பவர்/இருந்தவர் வவுனியா வளாக முதல்வரான இ.நந்தகுமாரன். இவர் ஒரு வணிகவியல் பி.ஏ, எம்.ஏ பட்டதாரி. ஆராய்ச்சி அனுபவம் இல்லாதவர். கல்வித்துறை தொழினுட்பம், உளவியல் என்பது பற்றி ஒரு மண்ணும் அறியாதவர்.
    2. நந்தகுமாரன் ஒரு பரீட்சகராக (அதுவும் எம்.எட் ஆய்வுக்கு) இருக்கும் பட்சத்தில் சுபாசினியும், சாயிஜனனியும் எம்.எட் பெற்றதில் எதுவும் புதுமையில்லைத் தானே?
    3. இங்கு சாயிஜனனியும், சுபாசினியும் யாரின் உறவுக்காரர்கள் என்பதனையும் ஆய வேண்டும். ஏனெனில், யாழ் பல்கலை இன்று புல்லுருவிகளின் ‘குடும்ப வியாபார கேந்திரமாக’ விளங்குகின்றது.
    4. அடுத்ததாக பாலசுந்தரம்பிள்லைக்கு சண்முகலிங்கம் வழங்கி உள்ள டி.லிட் பட்டம். இது ஒரு லஞ்சம் தான். அதில் சந்தேகமில்லை. ஆனாலும், டி.லிட் பெறுவதற்கு பாலசுந்தரம்பிள்லை என்னெவென்ன கட்டுரைகளை எழுதினார்? அவருக்கு விஞ்ஞான எழுத்துத் துறையிலோ, வேறெந்த ஆக்கவியல் துறையிலோ பரிட்சயமும் அனுபவமும் இருக்கிறதா?
    5. டி.லிட் என்பது டொக்டர் ஒஃப் லெட்டர்ஸ் என்பதன் சுருக்கம். எழுத்தாழம், கருத்தியல் காத்திரம், எழுத்தில் புதுமை போன்ற விடயங்களுக்கும் பாலசுந்தரம்பிள்ளைக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா?

    சண்முகலிங்கன் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவும், ஆளணி சேர்த்து அரசியலில் ஈடுபடவும் கொடுத்துத் தெளிக்கின்ற இலஞ்சங்களே இவை.

    ஆனாலும், ஓய்வு பெற்ற பேராசிரியை சபாரெத்தினம் அம்மையாரின் நிலைதான் பாவம். அவருக்கு எப்போது தான் தம்பி சண்முகலிங்கம் ஒரு கெளரவ கலாநிதிப்பட்டம் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை! “அக்கா”வின் வாலைப் பிடித்து முன்னேறிய தம்பிகாரன் இப்படி நன்றி மறந்து நடக்கலாமா?

    இவ்வளவும் இருக்கும் போது திரு. அப்பாவியவர்கள் எப்படித்தான் சண்முகலிங்கனின் பி.எட் பட்டத்தையும் அவரின் சமூகவியலுக்கான பொருத்தப்பாட்டையும் பற்றி கருத்து தெரிவிப்பீர்கள்?

    பாலசுந்தரம் பிள்ளை சண்முகலிங்கத்தையும் இ. நந்தகுமாரனையும் உள்வாங்கினார். சண்முகலிங்கம் தனது அடுத்த சந்ததிப் புல்லுருவிகளுக்கு ஊடுருவ வாய்ப்பு வழங்கினார். அதே போல, இ. நந்தகுமாரன் – தமது முதுமானிப்பட்டங்களில் குழறுபடி செய்து, ‘இவர்கள் தகுதியில்லாதவர்கள்’ என்று ஒதுக்கப்பட்ட எஸ். குகனேசன், புவனேஸ்வரி லோகனாதன் ஆகிய அடியாட்களுக்கு இடம் கொடுத்தார்.

    இன்று யாழ் பல்கலைக்கு “புல்லுருவிக் கல்வி நிலையம்” என்று பட்டம் சூட்டி விடலாம் போல இருக்கின்றது.

    சண்முகலிங்கம் நந்தகுமாரன் போன்ற களவாணிப் பேர்வழிகளின் ஊடுருவலின் விளைவாக 2009ம் ஆண்டில் யு.ஜி.சி (university grants commission) யாழ் பல்கலைக்கழகத்தில் முதுமானிப்பட்டங்களுக்கு கல்வி புகட்டுவதற்கு தடையும் விதித்திருந்தது. இதையும் ரகுநாதன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Reply
  • ragunathan
    ragunathan

    M.ED தெரிவில் ஊழல் செய்த்தது சத்தியசீலனும் மனைவி அனுசியாவும் தான். இவர்களே வலம்புரி விஜயசுந்தரத்துக்கும் M.ED குறுக்கு வழியில் எடுத்துக் கொடுத்தன்ர். மேலும் தமிழ் விரிவுரையாள்ர் குமரனின் ம்னைவி சுபாசினிக்கும் புவியியல் விரிவுரையாளர் சுதாகரின் மனைவி சாயிஜனனிக்கும் எடுத்துக் கொடுத்ததும் இவர்களே.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    // டி.லிட் என்பது டொக்டர் ஒஃப் லெட்டர்ஸ் என்பதன் சுருக்கம். எழுத்தாழம், கருத்தியல் காத்திரம், எழுத்தில் புதுமை போன்ற விடயங்களுக்கும் பாலசுந்தரம்பிள்ளைக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா?//

    அவை ஏதும் இல்லை என்பது பட்டமளிப்பு விழாவில், ஞானகுமாரன் இன், பாலசுந்தரம்பிள்ளை பற்றிய அறிமுகவுரையில் தெரிகிறதே. அதனால்தான் நான் அந்த கேள்வியை கேட்டேன். இப்படியான தகுதியில் அந்த பட்டம் வழங்க எப்படி பரிந்துரைக்கப்பட்டது? யார் இதை பரிந்துரைத்தார்?

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    புவனேஸ்வரி, பாடசாலை வாதியாராக குப்பை கொட்டிக் கொண்டிருந்த தன் தம்பி செல்லத்துரை நித்தியானந்தன் மாஸ்ரருக்கு வவுனியா வளாகத்தில் நெற்வேக் அட்மினிஸ்ட்றேடர் வேலை வாங்கிக் கொடுத்தும் உள்ளார். நெற்வேக் அட்மினிஸ்ட்றேட்டர் பதவி என்றால் அவ்வளவு இளக்காரமானதா?

    ஒருவித தகுதியுமே இல்லாத காந்தமூர்த்தி என்கின்ற யாழ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நிதியாளரின் மகள் பிரணவமலருக்கு கொஸ்றல் வார்டன் நிரந்தர பதவியும் எடுத்துக் கொடுத்தார்.

    காந்தமூர்த்தி இப்போது ஸ்பெசல் கொண்ட்றாக்ட்டில், வவுனியா வளாகத்துக்கு புறொக்குயுமன்ற் ஒஃபீசராக (Procurement Officer or Consultant), அரசாங்கத்தின் வடக்கின் வசந்த திட்டத்தின் சகல நிதிகளையும் கையாண்டு – முதல்வர் நந்தகுமாரனுக்கு பணம் சம்பாதிக்க உதவியும் வருகின்றார். இதில் சண்முகலிங்கத்துக்கு பங்கிருக்குமா? இல்லையா?

    புவனேஸ்வரிக்கு சார்பாக பின்னின்றால் சுபீட்சமான வாழ்வு நிட்சயம். யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை பொறுத்தவரையில் புவனேஸ்வரி லோகனாதன் ஒரு ‘கிங் மேக்கர்’. புவனேஸ்வரியைக் கண்டால் சண்முகலிங்கமும் தொடை நடுங்குவாராம். அதில் பிழையில்லைத் தானே? எவருக்குமே ஒரு நிழலுகப் பெரும்புள்ளியைக் கண்டால் பயம் வருவது இயல்புதானே?

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //அவை ஏதும் இல்லை என்பது பட்டமளிப்பு விழாவில், ஞானகுமாரன் இன், பாலசுந்தரம்பிள்ளை பற்றிய அறிமுகவுரையில் தெரிகிறதே. அதனால்தான் நான் அந்த கேள்வியை கேட்டேன். இப்படியான தகுதியில் அந்த பட்டம் வழங்க எப்படி பரிந்துரைக்கப்பட்டது? யார் இதை பரிந்துரைத்தார்?//அப்பாவி on October 15, 2010 6:50 am

    இந்தக் கேள்விக்கு விடை எவருக்குமே தெரிந்தது தானே… “சண் எனக்கு இந்த முறை ஒரு டி.லிட் ஒன்று தந்து விடும், எனக்கும் மேடையேறி பலநாளாகுது” என்று பாலசுந்தரம்பிள்ளையே (வாய் கூசாமல்) சண்முகலிங்கத்திடம் கேட்டிருப்பார். இது தெரியாதா?

    இங்கு செனட், இலங்கையின் சனாதிபதி எல்லாவற்றுக்கும் மேலான அதிகாரமுள்ள ஒருவர் அல்லவா பாலசுந்தரம்பிள்ளை? யாழ் பல்கலையைப் பொறுத்தவரைக்கும், கருத்தாவும் இயக்கு சக்தியும் (அதாவது புல்லுருவிக் கூட்டத்தின் இயக்கு சக்தி) அவரே!

    பாலசுந்தரம்பிள்ளை தானே தனக்கு டி.லிட் பட்டம் கொடுத்த விடயம் அனைவருக்கும் தெரியும். பாலசுந்தரம்பிள்ளையின் கட்டளையை செயற்படுத்திய அடியாள் சண்முகலிங்கம், அடியாளின் “கோலயா” அல்லது அள்ளக்கை ஞானகுமாரன்.

    எனக்கும் ஒரு டாக்டர் பட்டம் கிடைக்காவிட்டாலும் ஒரு நர்ஸ் பட்டமாவது சண்முகலிங்கன் தருவாரென்றால் அவருக்கு ஆமாம் போட நானும் தயார்தான்!

    Reply
  • mahajanan
    mahajanan

    அக்.11-14 வரை நடந்த மகாஜனா விழாக்கொண்டாட்டங்களில் சண்முகலிங்கம் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பதை யாராவது உறுதிப்படுத்தமுடியுமா?
    சண்முகலிங்கம் அக் 17 கனடாவில் நடைபெறவுள்ள மகாஜனா கொண்டாட்டத்திற்கு செல்கிறாரா இல்லையா?
    கனடாவில் அப்படியே அகதி அந்தஸ்தும் எடுத்துவிடும் நோக்கமும் சண்முகலிங்கத்திற்கு இருக்கலாம். சர்வதேச நீதிமன்றத்தில் அக்கடமிக் குற்றங்கள் செய்த சண்முகலிங்கம் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும். முன்னை நாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இவ்விவாதத்தில் கலந்துகொள்ளவேண்டும்.

    -மகாஜனன்.

    Reply
  • mal
    mal

    அருந்தாகரன் இளங்குமரன் ஆகியோரின் முன்னோடிகள் இருவ்ர் உள்ளனர். அவர்களைக் குறிப்பிடத் தவறிவிட்டீர்க்ளே. அவர்கள் வேறு யாருமல்லர் புவியியல் துறை இராஜேஸ்வரனும் (எஸ் ரீ பி) சுதாகருமே ஆவார்கள்

    Reply
  • Veluppillai
    Veluppillai

    பின்வரும் செய்தி உயர்வு இணையத்தில் அக். 8 வந்த யாழ் பல்கலைசம்பந்தப்பட்ட முக்கிய செய்தி

    “வெள்ளிக்கிழமைஇ 08 அக்டோபர் 2010 08:33
    யாழ்;ப்பாணம் திருநெல்வேலிப்பகுதியில் இடம்பெற்ற தனியார் வங்கிக் கொள்ளை ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர் யாழ் பல்கலைக்கழக உயரதிகாரி ஒருவருடைய மகன் என்பது அம்பலமாகியுள்ளது. அண்மையிலேயே திறக்கப்பட்ட குறித்த தனியார் வங்கியில் இரவு நேரம் கொள்ளையிட முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். பிடிபட்ட ஒருவர் குறித்த தனியார் வங்கியின் பணியாளராவார். ஏனையவர் பொதுமகனாவார்.

    அண்மையிலேயே குறித்த வங்கியில் இவர் இணைந்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. இவர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர் யாழ் பல்கலைக்கழக அதி உயரதிகாரியினது மகன் என்பதனைக் கண்டு பிடித்துள்ளனர். ஏற்கனவே யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த உயரதிகாரியின் தொடர்புகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையிலேயே வங்கிக் கொள்ளை முயற்சி தொடர்பாக அவரது மகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது தொடர்பான செய்திகளை பிரசுசுரிக்க வேண்டாமென உள்ளுர் நாளிதழ்களுக்கும் குறித்த உயரதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.”

    hவவி://றறற.ரலயசஎர.உழஅ/னைெநஒ.pரி?ழிவழைnஃஉழஅ_உழவெநவெரூஎநைறஃயசவiஉடநரூனைஃ5229:2010-10-08-08-36-07ரூஉயவனைஃ43:ழெசஅயட-நெறளரூஐவநஅனைஃ18

    -வேலுப்பிள்ளை.

    Reply
  • Veluppillai
    Veluppillai

    “அருந்தாகரன் இளங்குமரன் ஆகியோரின் முன்னோடிகள் இருவ்ர் உள்ளனர். அவர்களைக் குறிப்பிடத் தவறிவிட்டீர்க்ளே. அவர்கள் வேறு யாருமல்லர் புவியியல் துறை இராஜேஸ்வரனும் (எஸ் ரீ பி) சுதாகருமே ஆவார்கள்”

    -மல்.

    கலைத்துறையில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமெனினும் மற்றத்துறைகளிலும் இக்குறைபாடுகள் காணப்படுகின்றன. கணிதத்துறை விரிவுரையாளரான வடமராட்சியைச்சேர்ந்த சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாமீதும் பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்டு.

    -வேலுப்பிள்ளை.

    Reply
  • saie
    saie

    Is it possible to use the official car of the vice chancellor to use for pick up his child to school and to send his wife to school? Whether the vc can participate all religious and small functions and sng a song?

    He heee all are possible at university of jaffna

    Reply
  • Veluppillai
    Veluppillai

    ஒக்.29 ஆம் திகதி அமைச்சர் தேவானந்தா யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்து யாழ் பல்கலைக்கழக சீர்கேடுகள் சம்பந்தமாக ஆவனசெய்ய கலந்துரையாடியுள்ளாளார். அமைச்சர் முறைப்பாடுகளை காதில் வாங்குபவராக இருப்பது
    அவரின் நல்லியல்புகளைக்காட்டுகிறது.

    “நல்ல சந்தர்ப்பங்கள் எட்டியுள்ள நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தை சிறப்புற முன்னேற்ற வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

    29.10.2010 – வெள்ளிக்கிழமை

    யாழ் பல்கலைக்கழகத்தை நல்ல திசைநோக்கி முன்னெடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் தற்போது எட்டிவரும் நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்களை ஒழுங்கு முறையில் சரிவரப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற வேண்டும் எனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

    இன்று பிற்பகல் யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக் கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும் என்பதை இங்கு சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொண்டு இப்பல்கலைக்கழகத்தை எமது மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் முன்னேற்ற நாம் அனைவரும் தயாராக வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    இக்கூட்டத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ”

    _ஈபிடிபி நியுஸ் அக்.29.

    -வேலுப்பிள்ளை.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    “யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும்..”

    அல்ல தளம் அமைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அடுத்த தலைமுறையினர் இப்போது உள்ளவர்களை விட படு மோசமனவர்களாக வருவார்கள் என்பதற்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது.

    கலை பீடத்தை சேர்ந்த சில விரிவுரையாளர்கள் எனப்படுவோர் தொலைபேசி முலமாக Gnanakumaran மற்றும் Sathiyaseelna இற்காக பிரச்சாரம் செய்கின்றார்களாம்!

    இது அரசியல் கட்சிகளை விட மோசமன செயல் என்பது மறுப்பதிற்கில்லை.

    எல்லாம் எதற்காக குறுக்கு வளியில் பதவிகளை அடையத்தான். சமுகம் எக்கேடு கெட்டால் என்ன?

    Reply
  • Veluppillai
    Veluppillai

    யாழ் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் தேவானந்தா சென்று நேற்று சந்திப்பொன்று நடந்துள்ளது

    ” சர்வதேச இளைஞர் மாநாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் கலந்து கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

    07.11.2010 – ஞாயிற்றுக்கிழமை

    அடுத்த மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள அனைத்து பல்கலைக்கழக மற்றும் இதர இளைஞர்களை ஒன்றிணைந்து சர்வதேச இளைஞர் கலாசார மாநாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகள் பங்கு பெறுவது தொடர்பாக துறைசார்ந்த மாணவ ஒன்றியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று மாலை நடைபெற்றது.

    இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துரையாற்றும் போது சர்வதேச இளைஞர் கலாசார நிகழ்வானது இனங்களுக்கிடையே சமத்துவம் ஐக்கியம் நட்பு மற்றும் ஒற்றுமையை பேணிப் பாதுகாப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

    அத்துடன் வெளிநாட்டுத் தொடர்புகள் வெளிநாடுகளின் கலை கலாசாரம் கல்வி உள்ளிட்ட துறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதுடன் பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழக மாணவர்களுடனான தொடர்புகள் மூலம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அது மட்டுமல்லாமல் உங்களது உண்மையான கருத்துக்களை சரியான பக்கமாகவும் சரியான சிந்தனை மூலமும் வெளிப்படுத்தும் போது அது பல்கலைக்கழக மாணவர் சமூகத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமூகத்திற்கும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    அத்துடன் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச இளைஞர் கலாசார மாநாடு சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

    அதன் பிரகாரம் அந்தந்த இடங்களுக்கேற்ப கலை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

    யாழ் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 17ம் திகதி கலாசார நிகழ்வு நடைபெறும் என்றும் இதேபோன்று ஏனைய பல்கலைக்கழங்களிலும் கலாசார நிகழ்வுகள் நடைபெறும் என்றும் டிசம்பர் 13 முதல் 23 வரை இந்நிகழ்வுகள் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் உயர் கல்வியமைச்சின் மாணவப் பிரதிநிதிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.

    இக்கலந்துரையாடலில் பேராசிரியர் விசாகரூபன் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் வேல்நம்பி விரிவுரையாளர் சிவராஜா மற்றும் சட்டத்தரணி ரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ”

    -ஈபீடீபீ நியுஸ் 07.11.2010 ஞாயிற்றுக்கிழமை.

    -வேலுப்பிள்ளை.

    Reply
  • Che Yalpanan
    Che Yalpanan

    //இக்கலந்துரையாடலில் பேராசிரியர் விசாகரூபன் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் வேல்நம்பி விரிவுரையாளர் சிவராஜா மற்றும் சட்டத்தரணி ரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.// Veluppillai on November 8, 2010 3:19 am

    It is surprising (indeed) to see that Messers. Vishakarooban, Velnambi and Sivaraja have the guts to appear at public forums, and have the nerves to represent the UoJ – after all of what has been reported of them by Thesamnet.

    These people are never going to change, and they will see that they manage to keep a firm clutch of the administrative system for their mean-survival and benefits.

    It is obvious that the forum (initiated) by Thesamnet is beginning to lose its momentum – what we need (now) are the insights into the ideologies and possibly into the domain of ethics (in research and academia) so that we can develop a concurrent, conducive effort to revitalize the UoJ. I am sure the likes of Messers. Velupillai, Thevarasa, Appavi and etc. will agree on this.

    Mr. Thevarasa, I think you have given us lot factual information on the negative aspects of the UoJ. Good. But, we are not reporters here in this forum – and we are not going after news scoops… What we need at this time is critical and creative thinking on development. Can anyone contribute in these regards please?

    A request to Prof. Hoole… Sir,a man of your standing should contribute to this forum. It is (indeed) for the betterment of the society for which you have decided to sacrifice your illustrious career in the western world… Please…

    I hereby suggest some plausible topics on which we can develop discourse in this forum:
    1. ethics in research and teaching
    2. social responsibility of the UoJ
    3. the future of the UoJ as a repository of knowledge
    4. the standing of the UoJ as a central node of Tamilian cultural and intellectual identity in Sri Lanka

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //Mr. Thevarasa, I think you have given us lot factual information on the negative aspects of the UoJ. Good. But, we are not reporters here in this forum – and we are not going after news scoops… What we need at this time is critical and creative thinking on development. Can anyone contribute in these regards please?//Che Yalpanan on November 8, 2010 2:43 pm

    செ. யாழ்ப்பாணன் அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி. மிகவும் முக்கியமான பரிமாணங்களில் நம் பார்வைகள் திசை திரும்பவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

    ஆயினும், சில சமயங்களில் கருத்தியல் வாதத்திற்கும், விழிப்புணர்வுச் சிந்தனைகளுக்கும் வலுவூட்டவென சமகால நிகழ்வுகள் பற்றிய செய்தி அறிக்கைகள் தேவைப்படுகின்றன. அதனையே நான் செய்து வந்திருக்கின்றேன். குறிப்பாக யாழ் பல்கலையின் வவுனியா வளாகம் தன் புற நகர் தன்மையின் (out of the main area of interest location) அடிப்படையில் தனது ஊழல்களை மறைத்தும் உண்மைகளை நசுக்கியும் வந்திருக்கின்றது. இந்த விடயம் என்னாலும் திரு. அப்பாவியாலும் வெளிக்கொணரப்பட்டு இருக்கின்றது.

    உண்மைகள் வெளிப்படும் போது புல்லுருவிகள் அஞ்சுவர் – உதாரணமாக வவுனியா வளாகத்தில் செல்லத்துரை நித்தியானந்தனும் (http://www.vau.jfn.ac.lk/Staff_Profile/Faculty/Applied_Science/Department/Physical_Science/Mr.%20S.%20Nithiyanandam.php) அவரது சகபாடியும் சேர்ந்து தேசம்நெற்றினை தடை செய்தமை. இந்த வகையில் தற்போது வவுனியா வளாகம் அதி பயங்கரமான குழப்ப நிலையில் இருக்கின்றது என்பது அறியக் கிடைக்கின்றது. தேசம்நெற்றின் பார்வை காரணமாக எஸ். குகனேசன், புவனேஸ்வரி லோகனாதன், இ. நந்தகுமாரன், சிறீதரன் (சிரேஸ்ட பதிவாளர்) போன்ற பழம்பெரும் ஊழல் பெருச்சாளிகள் தளர்ந்து போயிருப்பதாகவும், அதன் காரணமாக தம்க்குள்ளேயே கட்சிப் பூசல்களை வளர்த்துக் கொள்வதாகவும் அறியக் கிடைக்கின்றது. சமீபகாலமாக, வவுனியா வளாகத்தில் பல்லாண்டு காலமாக இருக்கின்ற ஒரு குறிப்பிட்ட மனிதரை குறிவைத்து… “அவர்தான் தேசம்நெற்றுக்கு தகவல் தருபவார்” என்று குற்றம் சாட்டி – அவருக்கெதிராக கையெழுத்து மனுப் போராட்டம் நடத்துவதாக அறியக் கிடைக்கின்றது. நல்ல விடயங்களுக்கு கையெழுத்துப் போராட்டம் நடத்துவது ஒரு வழி என்றால், குகனேசன் போன்றோர் தம் ஊழல்களை மறைக்க கையெழுத்துப் போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் யாரிடம் முறையிடுவர்? உச்ச நீதி மன்றத்திலா? அது முடியாது தானே! அவர்களால் அண்ணன் சண்முகலிங்கத்திடம் மட்டுமே குறைப்பட்டு முகம் சுழிக்க முடியும்.

    ‘பாரபட்சமற்ற உண்மையை தேட வேண்டிய பல்கலையில்’, உண்மையை வெளிக்கொணர்ந்த தேசம்நெற்றுக்கு நல்ல வரவேற்புத்தான் கிடைக்கின்றது போங்கள்! எந்த அளவிற்கு அவர்கள் முடி மறைக்க எத்தனிக்கின்றார்களோ… அந்த அளவிற்கு உண்மை வெளிப்படும்… உதாரணமாக சூழல் பாதுகாப்புக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாக படம் காட்டும் புவனேஸ்வரி லோகனாதன் வவுனியா சாஸ்திரி கூழாங்குள வீதியில் பத்தினியார் மகிழங்குளத்தின் கரையோர வடிநிலத்தில் 2/3 ஏக்கர்களை சுருட்டி மதில்கட்டி அபகரித்துள்ளார் என்பதும் ஒரு வெளிப்படுத்தப்பட வேண்டிய உண்மைதான்.

    தேவராசாவும், ஜெயபாலனும், அப்பாவியும், வேலுப்பிள்ளையும், நட்சத்திரனும் வவுனியா வளாகத்தில் சம்பளம் வாங்குவதுமில்லை. அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டுமில்லை. உண்மைகளை வெளிக்கொணர எத்தனிக்கும் அவர்களின் பேனாக்கள் உறங்கப் போவதுமில்லை. இது தமிழ் பேசும் சமூகத்தினரின் நியாயமான அபிவிருத்திக்கான போராட்டம் – அது தொடரும். இங்கு குகனேசன்களுக்கும் சண்முகலிங்கன்களுக்கும் ஒருநாளும் இடமில்லை!

    Reply
  • Suppan
    Suppan

    Che Yalpanan on November 8, 2010 2:43 pm,

    Your ideas are excellent, please advice the Vavuniya Campus Teachers’ Association to prepare a document based on your ideas not to prepare garbage in the name of White Paper. First of all the members (Teachers) of the trade union must have vision and mission before publishing any reports. Without such thing they are trying run their business as party politics.

    Please kindly advice them.

    Reply
  • Che Yalpanan
    Che Yalpanan

    //Your ideas are excellent, please advice the Vavuniya Campus Teachers’ Association to prepare a document based on your ideas not to prepare garbage in the name of White Paper. First of all the members (Teachers) of the trade union must have vision and mission before publishing any reports. Without such thing they are trying run their business as party politics.//Suppan on November 9, 2010 11:42 am

    As it has been pointed out again and again, the VCTA is a mask for corrupted people to hide behind and perform their negative tasks. I doubt whether the VCTA has the knowledge or the vision to think about a creative and cohesive future for the UoJ.

    Mr.Suppan do you think (that there is a remote possibility) whether Kopperunthevi Kalainathan, President,VCTA will understand the word “academic ideology”? With 3rd grade politics, and lack of intelligence these people are driving the final nails on the coffin to spear-head the demise of the UoJ. I strongly feel that the likes of Prof. Hoole et al., should step in for saving this institution.

    Reply
  • kamali
    kamali

    பல்கலைக்கழகம் பேராசையர்களால் நிறைந்துள்ளது போலும்.அதனால் அநியாயங்ள் மலிந்துவருவதாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் விளங்கி மருந்து வழங்கக்கூடிய குறைதீர் அதிகாரிகள் வர வேண்டியது தவிர்க்க முடியாத அவசியம்.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    கோப்பெருந்தேவி கலைநாதனைப் பற்றிக் குறிப்பிடும் போது திரு. டாக்டர் T. மங்களேஸ்வரனையும் பற்றி குறிப்பிட வேண்டி இருக்கின்றது. இவர் இ. நந்தகுமாரன் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஒருவருக்கு தலையும் ஒன்னொருவருக்கு வாலும் காட்டிக்கொண்டு தன் சுயலாபத்துக்காக எதனையும் விற்று வாங்கக் கூடியதொரு வியாபாரி.

    தனது பி.எச்.டி பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வறிக்கையினை இவர் இற்றை வரையில் பல விதமாக உருமாற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆய்வுக்கட்டுரைகளாக பல பல மாநாடுகளில் மேடையேற்றி உள்ளார்.

    ஆய்வு என்றால் என்ன? என்றே யோசிக்க முடியாத இந்த மனிதர், தற்போது நிர்வாகத்துக்கும் ஆமாம் போட்டு விட்டு வவுனியா வளாக ஆசிரியர் ஒன்றியத்தின் (VCTA) முனைப்பானதொரு தூணாகவும் தன்னை காட்டிக் கொள்வார். இவரது பொழுதுகள் அநேகம் வளாகத்தில் கழிவதில்லை, இவர் வவுனியாவெங்கிலும் பரவிக்கிடக்கின்ற சிறு சிறு அரச சார்பற்ற சமூக நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி காசு பண்ணுவதில் வல்லுனர்.

    வியாபாரத்தில் இவர் இ. நந்தகுமாரனுக்கும்; ‘ஆமாம் போடுவதில்’ எஸ். குகனேசனுக்கும் சளைக்காதவர்… ஆனாலும், அனேகரும் இவர் உள்ளார்த்தமானதொரு பயங்கர மனிதர் என்று புவனேஸ்வரியின் வாரிசாகவும் இவரைப் பார்க்கின்றனர். பிரச்சினைகளை தூண்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காயக் கூடிய தந்திரவாதி இவரே!

    மங்களேஸ்வரனுக்கும் VCTAஇனது white paperக்கும் பெரியதொரு தொடர்பு இருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகின்றது. மங்களேஸ்வரனின் அடுத்த இலக்கு வவுனியா வளாக முதல்வர் பதவியாகவும் இருக்கக் கூடும். அதற்காகவென்று குட்டையைக் குழப்பி விடவும் கூடியவர் இவர்.

    Reply
  • Velupillai
    Velupillai

    பின்வருவது தமிழ்வின் இணையத்தில் யாழ்.பல்கலைக்கழகம் சம்பந்தமாக வந்த செய்தி

    “யாழ். பல்கலை.வவுனியா வளாகத்தில் ஏராளம் முறைகேடுகள்: அனைத்து பல்கலை.மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு 13 நவம்பர் 2010

    யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரை மண்டபம் மற்றும் ஏனைய வசதிகள் போதுமான அளவில் இல்லை என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

    அதன் காரணமாக போதுமான வசதிகள் இன்மையைக் காரணம் காட்டி, அண்மையில் அவ்வளாகத்துக்கு தெரிவான 150 மாணவர்களின் பதிவை மேற்கொள்வது கூட நிர்வாகத்தினால் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் மாணவர் அமைப்பு தலையிட்டதன் காரணமாக குறித்த மாணவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

    இதற்கிடையே வளாகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தங்கு விடுதியானது ஐந்து கிலோ மீற்றருக்கும் அப்பால் அமைந்துள்ள ஒரு சாதாரண வீடு என்று சுட்டிக் காட்டும் மாணவர் அமைப்பானது, அங்கு உணவு மற்றும் குடி நீர் பற்றாக்குறை தீவிரமாக நிலவுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றது.

    எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தென்னிலங்கை பல்கலைக்கழக வளாகங்களின் வசதிகளைப் போன்று வவுனியா வளாகத்தின் வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. “– -தமிழ்வின்.

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    இதுவரை காலமும் யாழ் பல்கலையில் இராமரநாதன் நுண்கலை கல்லூரியில் தான் ஊழல்கள் அதிகம் என கருதப்பட்டு வந்தது ஆனால் இப்போது வவுனிய வளகத்தில்தான் ஊழல்கள் அதிகம் காணப்படுகின்றது. காரணம் தற்போது உள்ள முதல்வர் இ. நந்தகுமாரன மற்றும் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம்.

    இச்சங்கத்தின் முக்கிய உறுப்பினரான கலாநிதி கிருஸ்ணகுமார் என்பவர் ஒர் துறைத் தலைவர், இவர் ஒரு ஊழல் பேர்வழி என்பதற்கு அப்பால், கீழ்மட்ட ஊழியர்களின் உருமைகளை நசுக்குவதில் பெயர் போனவர். இவர் கூல் அவர்களுக்கு நெருக்கமானவரும் கூட.

    Reply
  • Kanthan
    Kanthan

    The reason for the above allegation is lack of infrastructure facilities available at the Campus. It could have been at least partially resolved by the first Rector Mr N.Balakrishnan during his tenure in 1997-2000. But, he did not make any effort rather he was the obstacle in that process. Also, note that Mr R.Nanthakurmaran, present Rector is a close associate of Mr Balakrishnan, at that time he was the Dean of the Faculty of Business Studies.

    Then, during her tenure of Prof Mrs R.Mageswaran lot of effort were taken to develop such facilities. But, unfortunately these efforts were foiled by the VCTA by misleading the students of the Campus. In this scenario Dr S.Krishnakumar, Mr S.Kuhanesan, Mrs Puvaneswary Loganathan and Mrs Koperumthevi Kalainathan were active participants. Actually the reason was their personal. Mr R.Nanthakumaran, present Rector, was an underhand in this scenario. This activities were highly criticized during that time and even after by others especially by the subsequent Rector as well.

    Now, the main culprit behind the scene is Dr S.Krishnakumar, actually he is trying to postpone the academic activities by showing that the Dept. of Physical Science do not have adequate facilities to enroll the new students for the current academic year. He was trying to postpone until January 2011. Again, there are some personal reasons of Dr Krishnakumar to delay this process.

    Reply
  • தேவராசா
    தேவராசா

    //மங்களேஸ்வரனுக்கும் VCTAஇனது white paperக்கும் பெரியதொரு தொடர்பு இருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகின்றது. மங்களேஸ்வரனின் அடுத்த இலக்கு வவுனியா வளாக முதல்வர் பதவியாகவும் இருக்கக் கூடும். அதற்காகவென்று குட்டையைக் குழப்பி விடவும் கூடியவர் இவர்.//அப்பாவி on November 12, 2010 3:42 am

    திரு. அப்பாவி தங்களுக்கு மங்களேஸ்வரன் வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக பதவியேற்ற கதை இன்னமும் தெரியாதா?

    தேசம்நெற் முதலாயவற்றில் தன்னை கூறு போட்டு அலசிவிடுவார்கள் என்கின்ற பயமும், தனது வியாபாரங்கள் தடைப்பட்டுவிடும் என்கின்ற கரிசனையும் காரணமாக மங்களேஸ்வரன் பீடாதிபதி பதவியை வேண்டாம் என்று மறுத்திருந்தார். ஆனாலும், அவரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பீடாதிபதியாக பதவியேற்கச் செய்து விட்டார் இ. நந்தகுமாரன்.

    பீடாதிபதியாக பதவியேற்ற மங்களேஸ்வரனுக்கு இ. நந்தகுமாரன் (முதல்வர், வவுனியா வளாகம்) முன்வைத்த கட்டளைகள்:
    1. வருகின்ற துணைவேந்தர் தேர்தலில் சண்முகலிங்கனுக்கு வாக்களிக்க வேண்டும்
    2. தொடர்ந்தும் தம் புல்லுருவி வலையமைப்பை பேணி நியமனங்கள் முதல் நிதியாள்கை வரை எக்கச்சக்கமான ஊழல்கள் செய்தலுக்கு பூரணமாக ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு மங்களேஸ்வரன் தற்போது பீடாதிபதியாக அரசோச்சுகின்றார்.இ. நந்தகுமாரனின் அரசியல் சதுரங்கம் இங்கு பாராட்டப் படத்தான் வேண்டும். Side lining the attack முறையில் அவர் அதிகாரத்தின் பிடியை தம் குழுவுக்குள் வைத்திருக்க மங்களேஸ்வரனை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்துவார். படிப்பறிவதிகமில்லாத எஸ். குகனேசன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் அதிபதியாக இருக்கும் போது – தன் கையை மேலோங்கச் செய்ய டாக்டர் பட்டம் பெற்ற மங்களேஸ்வரனை ஒரு கருவியாக்கும் நந்தகுமாரனின் தந்திரம் மெச்சத்தக்கதுதான். இங்கு குகனேசன் எவருக்கும் ஆமாம் போடுவார். அதனால் அவர் ஒரு வெறும் வெற்று வேட்டாகவே கருதப்படுவார்.

    இவ்வளவும் இருக்க, ‘ஆமாம் போடுவதில்’ உலகப்புகழ்பெற்ற குகனேசன் (இவர் ஒரே நேரத்தில் தனது டியூட்டரியில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சமயபாடமும் படிப்பித்து அதே நேரத்தில் பீடாதிபதியாகவும் கடமை புரியக் கூடிய வித்தகர்) – சண்முகலிங்கனின் செல்வாக்கு குறைந்து வருவதாக அனுமானித்து அண்மைக்காலங்களில் சண்முகலிங்கனை வெளிப்படையாக தூஷித்து வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

    குகனேசன் இன்னும் கொஞ்சக்காலத்தில் எஸ். குகனேசன் தேசம்நெற்றின் விசிறியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றும் இல்லை. வேலியில் நின்று தலையாட்டும் பச்சோந்தியானவர் குகனேசன் சுயநலச் சிகரம்.

    கட்சித் தாவல்கள், அதிகார அழுத்தம் மூலம் துணை வேந்தர் தேர்தலை திசை திருப்ப முயற்சித்தல் (உ+ம்: மங்களேஸ்வரனின் நியமனம்) போன்ற 3ம் தர அரசியல் செயற்பாடுகள் தற்போது ஏராளமாக வவுனியா வளாகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

    மறுபுறம் எழுதி மூக்குடைப்பட்டுப் போய் கிருஸ்ணகுமாரும் ஜெயசீலனும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். புவனேஸ்வரி லோகனாதன் அண்மைக்காலங்களில் அடக்கி வாசிப்பதாக தெரிகின்றது. புவனேஸ்வரி பதுங்குவது அவ்வளவு நல்லதற்கல்ல… ஏதாவது அரசியல் சூட்சுமம் இருக்கக் கூடும்.

    நண்பர் வேலுப்பிள்ளை, 150 மாணவர்களை சேர்த்துக் கொள்தல் நல்லது தான் – ஆனால், அவர்காளுக்கு படிப்பிக்க தளவாட மற்றும் மனிதவள வசதி இருக்கின்றதா? நிச்சயமாக எஸ். குகனேசனும், புவனேஸ்வரி லோகனாதனும் கற்பித்தால் ஒரு மாணவரும் உருப்படவே மாட்டார்கள்.

    புவனேஸ்வரியை ஒருநாளும் ஒரு ஆசிரியராக நினைத்தும் பார்க்க முடியாது என்று வவுனியா வளாகத்தை சீரழித்தவர்களில் முதன்மையான ஜே.சி.என். ராஜேந்திரா வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டிருக்கின்றார் – ஒரு போது.

    செய்வதையெல்லாம் செய்து விட்டு திறந்த பல்கலையில் தஞ்சம் புகுந்து நல்ல பிள்ளைக்கு நடித்துக் கொண்டிருக்கும் ராஜேந்திராவும் சண்முகலிங்கனுக்கு ஆதரவு வழங்குவாரா மாட்டாரா? தெரியவில்லை. சுப்பன் இது பற்றி விளக்கமாகக் கூறலாமே?

    ராஜேந்திராவின் பிள்ளைச்செல்வம் பேறு பெற்றது. அதற்கு அவர் ஒரு தந்தையாக உலகில் சிறந்ததையே வளங்குவார். அப்படியாயின், அந்த 150 மாணவர்களும்? அவர்களையும் பல கஸ்டத்தின் மத்தியில் தானே அவர்கள் பெற்றோர் பல்கலைக்கு கல்வி பயில அனுப்புவார்கள். பெற்றோர்களின் வயிற்றெரிச்சல் குகனேசனையும், புவனேஸ்வரியையும் சும்மா விடாது!

    Reply
  • Suppan
    Suppan

    Reference to Thevarasa, it is observed that Dr J.C.N. Rajenthira, whom he was the Dean, Faculty of Applied Science, committed lot of irregularities in General Administration and Financial Administration. Also, he did not take single hour of Lectures during his employment at the Vavuniya Campus.

    For the present state (devastated) of the Faculty of Applied Science, Rajenthira is responsible along with Kanganthan. Since, he was not interested in the development of the Faculty, rather he played politics during his tenure as the Dean of the Faculty. Actually, Mr Kuhanesan was promoted by himself for his personal reasons even though there were some other persons who were capable and dedicated to the development of the Faculty. In fact, Kuhanesan was not an active member in the Dept., and even now, but he was promoted by surpassing other active members.

    Mrs Puvanesvary Loganathan do not have adequate knowledge in Environmental Science or in its Research Environment, since she is an Agriculture Science Graduate. Apart from that she does not have enough Research background not even in Agriculture Science. Further to her there are two other Agriculture Science Graduates (with the same background as Mrs Loganathan) are employed to teach Environmental Science. In fact there is not even a single Environmental Science Graduate. In view of this situation how one could expect to have a better education from this institution.

    Reply
  • Velupillai
    Velupillai

    யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கருந்தரங்கில் அமைச்சர் தேவானந்தா கலந்துகொண்டுள்ளளார். பின்வருவது ஈபீடீபீ செய்தி.

    “யாழ் பல்கலைக்கழகம் அதன் மகுட வாக்கியத்திற்கமைவாக முன்னேற்றம் காண வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 15.11.2010 – திங்கட்கிழமை

    எமது கலை கலாசாரம் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

    யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற மீள் இணக்கத்திற்கும் மேம்பாட்டிற்குமான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றம் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவிக்கையில் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மகுட வாக்கியத்திற்கு அமைவாக அதன் கல்விப் பயணத்தில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்தும் அதேவேளை கடந்த கால யுத்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டவர்களால் அந்தத் தளத்திலிருந்து நாம் முன்னேற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

    அந்த வகையில் எமது கலை கலாசாரம் பண்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விசார் அனைத்துச் செயற்பாடுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

    பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் துணைவேந்தர் சண்முகலிங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சென்னை சாய்ராம் பல்கலைக்கழக பேராசிரியர் மாறன் கருத்துரையாற்றினார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர். ”

    ஜெயபாலனின் கடைசி கட்டுரையை அமைச்சர் வாசித்திருக்கிறார் போலுள்ளது. படத்தில் அமைச்சருக்கு மாலை போடுவது பாலியல் குற்றங்களைச் செய்யும் விசாகருபனா? யாராவது உறுதிப்படுத்தவும்

    -வேலுப்பிள்ளை.

    Reply
  • S.Ganesharajah
    S.Ganesharajah

    கே.ரி.ராஜசிங்கம் இப்போது பச்சை இனவாதமும் மததுவேசமும் பேசுகிறார். ஒரு இந்துதான் யாழ் பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராக வருவதற்கு பொருத்தமானவராம். முன்னர் புலிகள் ரட்ணஜீவன் கூலின் நியமனத்தை 2006 ல் எதிர்த்தபோது ராஜசிங்கம் கூலுக்கு ஆதரவாக தனது ஏசியன் றியுபுனில் எழுதியவர். அப்போது கூல் என்ன இந்துவாகவா இருந்தார். யாரிடம் பணம்பெற்று யாரின் விருப்பை பிரதிபலித்து இப்படி ராஜசிங்கம் எழுதுகிறாரோ தெரியவில்லை.

    Reply
  • Velupillai
    Velupillai

    நேற்று நாடாளுமன்றத்தில் யாழ் பல்கலைக்கழகம் பற்றி விவாதம் நடந்துள்ளதாம் பின்வருவது மாவை பேசியது.

    சர்வதேசத் தரத்திற்கு மாற்றப்படவுள்ள பட்டியலில் யாழ்.பல்கலைக்கழகம் இடம்பெறாமைக்கு கண்டனம் சபையில் மாவை சேனாதிராஜா விசனம்

    இலங்கையில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்களை சர்வதேச தரம் மிக்கவையாக மாற்றவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அவற்றில் யாழ்.பல்கலைக்கழகம் இணைத்துக் கொள்ளப்படாமைக்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைபின் யாழ்.மாவட்ட எம்.பி.மாவை சேனாதிராஜா இந்த 6 பல்கலைக்கழகங்களிலும் முதலாவதாக யாழ்.பல்கலைக்கழகத்தை இணைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

    பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயர் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறியதாவது;
    வட பிரதேசம் வரலாற்று ரீதியாகக் கல்வியில் வளர்ச்சி பெற்ற மக்கள் சமுதாயத்தைக் கொண்டது.ஜனாதிபதி 6 பல்கலைக்கழகங்களை உயர்தரத்தில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். இவை எல்லாம் தென் பிரதேசங்களை சேர்ந்தவை .இந்த இடத்தில் நாம் எமது கல்வியின் பெருமையை இழந்துள்ளதாகவே கருதுகின்றோம்.வடக்கு மக்களின் கல்வி ஆளுமையை அளவீடு செய்து பார்த்தால் அதற்கேற்ற வகையில் யாழ்.பல்கலைக்கழகம் உயர்த்தப்படவில்லை.

    யாழ்.பல்கலைக்கழகத்திற்கோ அல்லது வடக்குஇகிழக்கு பல்கலைக்கழகங்களுக்கோ ஏன் ஜனாதிபதியோ அல்லது இந்த அரசோ நிதி ஒதுக்கவில்லை. எமது பிரதேச பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் இந்திய அரசை நம்புவது ஏன்? சகல பகுதி மக்களைப் போல் யாழ்.மக்களும் அரசுக்கு வரிசெலுத்துகின்றனர். வேலைவாய்ப்பில்லாத நிலையில் பட்டதாரிகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
    பட்டதாரிமாணவர்கள் கற்ற கல்விக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. கல்விக்குச் சம்பந்தமில்லாத துறைகளில் வேலைகளில் இணைக்கப்படுவதால் அவர்கள் தமது திறமையை இழக்கின்றனர்.இந்த நிலை மாற்றப்படவேண்டும்.பட்டதாரிகளுக்கு மூன்று வருடங்களுக்குள் வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.ஏழை மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
    வெளிநாடுகளில் முடிதிருத்துவதற்கு கூட பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள் உண்டு. இந்தியாவை எடுத்துக் கொண்டால் விவசாயத்துறைஇதொழில்நுட்பம் என ஒவ்வொன்றுக்கும் பல்கலைக்கழகங்கள்இ இவை வெளிநாடுகளுடன் கூட்டிணைந்துள்ளன.இவற்றில் படித்துப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு உடனடியாகவே வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
    விவசாயத்துறைஇ கடற்துறை அவற்றுக்கு பொருத்தமான திட்டங்களை கொண்டுள்ள பல்கலைக்கழகங்களை நாம் உருவாக்க வேண்டும். வடக்குஇகிழக்கு இவற்றுக்கு ஏற்ற இடம்.மன்னார்இ திருகோணமலைஇ வவுனியாஇ முல்லைத்தீவு போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை.கடல் ஆராய்ச்சிஇ விவாய ஆராய்ச்சி இந்த நாட்டுக்கு முக்கிய தேவை. இவற்றை அமைப்பதற்குச் சிறந்த பிரதேசமாக வவுனியா உள்ளது.ரஜரட்டையில் ஒரு பல்கலைக்கழகம் இருக்க முடியுமானால் ஏன் வவுனியாவில் ஒரு பல்கலைக்கழகம் இருக்க முடியாது.
    வவுனியா மாவட்டத்தில் கடல் ஆராய்சிஇவிவசாய ஆராய்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும். சிறந்த கல்லூரிகளை இனம் கண்டு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படவேண்டும். வடக்குஇ கிழக்கில் உள்ள தொழில்நுட்பக்கல்லூரி வெளிநாட்டு தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைக்கவேண்டும்.

    -குளோபல் தமிழ் நியுஸ்

    Reply
  • ranjakumar
    ranjakumar

    யாழ் பல்கலைக்கழகத்தை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னேற்றவுள்ளதாக கூறியிருக்கிறாராம் கல்விஅமைச்சர். பார்க்க பின்வரும் செய்தி
    “யாழ். பல்கலைக்கழகம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச மட்டத்திற்கு தரமுயர்த்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.
    வரவுசெலவுத் திட்டத்தின் உயர்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்களை அரசாங்கம் அபிவிருத்தி செய்கிறது. ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தை இந்த அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து ஒதுக்கியுள்ளது எனக் கூறினார்.

    அதற்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, யாழ். பல்கலைக்கழகத்தை அரசாங்கம் ஒதுக்கவில்லை எனவும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அப்பல்கலைக்கழகம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளது. எனவும் கூறினார்.”
    ( மீனகம் டொட் கொம்)

    நல்ல செய்திதான் இப்போது அதற்குப் பொருத்தமாகத்தான் ஜனாதிபதி ஜீவன் கூலை துணை வேந்தராக நியமித்திருக்கிறார்.

    ரஞ்சகுமார்.

    Reply
  • rohan
    rohan

    //கலைத்துறையில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமெனினும் மற்றத்துறைகளிலும் இக்குறைபாடுகள் காணப்படுகின்றன. கணிதத்துறை விரிவுரையாளரான வடமராட்சியைச்சேர்ந்த சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாமீதும் பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்டு.//

    சிறிசற்குணராஜா இப்போது வெளிநாடொன்றில் இருப்பதாகக் கேள்வி. அவர் சாதித் துவேஷம் காட்டுவதாக சில கணித பீட மாணவர்கள் முணுமுணுத்ததாக நினைவுண்டு. பாலியல் குற்றச்சாட்டுக்கள்? தெரியவில்லை!!

    Reply
  • Velupillai
    Velupillai

    “சிறிசற்குணராஜா இப்போது வெளிநாடொன்றில் இருப்பதாகக் கேள்வி. அவர் சாதித் துவேஷம் காட்டுவதாக சில கணித பீட மாணவர்கள் முணுமுணுத்ததாக நினைவுண்டு. பாலியல் குற்றச்சாட்டுக்கள்? தெரியவில்லை!!”/ -ரொஹான்.

    சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இளங்குமரன் மீதான பல்மடங்கு அதிகமானவை என்றில்லாதபோதும் அவர்மீதான சில பாலியல் குற்றச்சாட்டுக்கள் மிக வலுவானவை. யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரையே அவர் “காதலித்து” மணமுடித்துக்கொண்டார் என்பதும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியது. இவரின் மனைவி யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராக உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தன் வசியத்திற்குட்பட்ட பெண் மாணவிகள் மீதான இவரின் பாலியல் குற்றங்கள் அம்பலத்திற்கு வருகிறபோது அம்மாணவியின் போய்பிறண்டிற்கு பெஸ்ட் கிளாஸ்ட் குடுத்து தன் தலையைக் காப்பாற்றிக்கொள்வது இவரின் ரேட் மார்க்காம்.
    -வேலுப்பிள்ளை.

    Reply