விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போர் முனையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரன் பற்றிய தகவல்களால் தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வியாசர்பாடியில் அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது.
இந்த சம்பவங்களால் சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னையில் 110 பேரை இணை கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மத்திய சென்னை இணை கமிஷனர் ரவிகுமார் 72 பேரை கைது செய்தார். சென்னை முழுவதும் இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.