புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவுள்ளதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் முதல் இரண்டு குற்றவாளிகளாக புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத்தகவல் குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஜீவ் கொலை வழக்கு விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பூர்வமான முடிவை மேற்கொள்ள நீதிமன்றத்தை அணுகுவோம் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர்; தெரவித்துள்ளார்.
palli.
கார்த்திகேயா உன் தலை உருள போகிறது. வழக்கு திசை மாறுகிறதாம். அப்படியாயின் உங்களால் தண்டனை பெற்றவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர கூடுமல்லவா?? ஏற்க்கனவே சுப வீரபாண்டி தங்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என பேசியவர். இந்த சந்தர்பத்தில் இது நெருப்பாக போகுமா?? அல்லது உங்களது வாததிறமை புகையாக்கி விடுமா??
பார்த்திபன்
பல்லி தலையங்கத்தை மட்டும் பார்த்தவிட்டு கருத்தெழுதாமல் கட்டுரையையும் வாசித்துவிட்டு எழுதலாமே?? பிரபாகரன், பொட்டம்மான் போன்றவர்கள் இறந்தது மரபணுப் பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டால் ராஜீவ் கொலைவழக்கு முற்றுப் பெறலாம் அல்லது பிரபாகரன் பொட்டம்மான் போன்றவர்களின் மேலுள்ள குற்றப்பத்திரிகை முடிவிற்கு வரலாமென்பதையே கட்டுரை சுட்டிக் காட்டியிருக்கின்றதென்பதை புரியாதவரா நீங்கள்??
மாயா
பல்லியும் இப்ப பகிடி விடுது.
பிரபாகரனும் , பொட்டு அம்மானும் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டால் இந்திய அரசு இந்த பைலை மூடிவிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது.
rooto
மாற்றுகருத்து ஜனநாயகவாதிகள் எல்லாம் இங்கயா இருக்கிறீங்க?? சரி உங்கட எல்லாற்ற வேலையும் முடிஞ்சுதுதானே?? அப்புறம் அடுத்தது என்ன??
chandran.raja
மாற்றுக் கருத்தாளர்களுக்கு புலிஎதிர்பாளர்கள் சிங்களஅரசு ஆதரவாளர் எனவும் அழைப்பதுண்டு. அப்படி அழைப்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்?. ஈழம்வாழ் தமிழ்மக்கள் நின்மதிவாழ்வையே விரும்பினார்கள். விமானக்குண்டு வீச்சு இல்லாதிருக்க வேண்டும் இடபெயர்வு இல்லாதிருக்க வேண்டும்.செல்லடி எறிகணை இல்லாதிருக்க வேண்டும்.. இன்றும் இனிமேலும் மேலே குறிப்பிடடவை நிச்சியமாக நடந்தேறமாட்டாது. அந்த வகையில் மாற்றுக்கருத்தாளர்களின் தற்காலிக விருப்பம் பூர்த்திசெய்யப் பட்டுள்ளது.
Raj
இனித்தான் எல்லாம் ஆரம்பம் !
பார்த்திபன்
rooto
எனி உங்களைப் போல மிசச்சமிருக்கிற “மாட்டுக்கருத்துவாதிகளை” என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
palli.
பார்த்திபன் இதுதான் சின்ன பிள்ளைதனம் என்பது. புரியாவிட்டால் அது பற்றி பேசாமல் இருக்கலாம் அதை விட்டு பல்லிக்கு பல்லுவிளக்க புறப்படலாமா?? நான் ஏன் இதில் காத்திகேயன் என்பவரின் பெயரை எடுத்தேன். என்பது கூடவா புரியவில்லை. பல்லி ஒன்றும் பரபரப்பு பாட்டியல்ல. பல்லிக்கும் ஈழ விடுதலை அது பற்றிய பிரச்சனைகள் ஒரு வீதமாவது தெரியும். ஆகவே பல்லிக்கு பாடம் சொல்லுவதை விட்டு நடக்க போவது என்ன என்பதில் அக்கறை செலுத்தவும்.
palli.
மாயா பல்லி விடுவது பகிடிதான். ஆனால் அதிலும் சில அர்த்தம் இருக்கும். //பிரபாகரனும் , பொட்டு அம்மானும் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டால் இந்திய அரசு இந்த பைலை மூடிவிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது//
இந்திய அரசு பைலை மூடலாம் ஆனால் எந்த குற்றம்மும் செய்யாமல் பல ஆண்டுகள் சிறை இருந்த பலர் பைலை புதிதாக தொடங்ககூடும். அது தங்களுக்கு புரியவில்லையா?? பாதிக்கபட்டவர்கள் ஒன்றும் தேசத்தில் பின்னோட்டம் விடுநண்பர்கள் அல்ல. மிக பெரிய கல்விமான்கள்.
thurai
//மாற்றுகருத்து ஜனநாயகவாதிகள் எல்லாம் இங்கயா இருக்கிறீங்க?? சரி உங்கட எல்லாற்ற வேலையும் முடிஞ்சுதுதானே?? அப்புறம் அடுத்தது என்ன??//
தமிழீழம் பிடித்துத்தர்ரமென்று சொல்லி, புலத்துத் தமிழரின் பணத்தையும் விழுங்கி, வன்னியையும அழித்தவர்கள் இனியென்ன செய்யப் போகின்றார்களெனெ ஆவலுடன் காத்திருக்கிறோம்.
துரை
palli.
இதுகூடவா தெரியாது துரை. இதுவரை ஈழத்து மாணவர்களை அழித்தார்கள். இப்போது புலம் பெயர் மாணவர்களை அழிக்க தொடங்கி விட்டனர். மொத்தத்தில் அழிப்பு இவர்களது குல தொழிலோ.