தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்று மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *