ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஏற்பாட்டில் நோன்பு துறப்பதற்கான இப்தார் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் கலந்துகொண்ட பெரும் திரளான முஸ்லிம் பிரமுகர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.
மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா இங்கு உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அயராத முயற்சியின் காரமான இன்று நாட்டில் அமைதி நிலவுவதாகவும் அதனால் இது போன்ற வைபவங்களை பெரும் சிரமங்களின்றி நடத்தக்கூடியாக இருப்பதாகவும் கூறிய அவர் இந்த இப்தார் ஏற்பாட்டுக்காக முஸ்லிம்கள் சார்பில் அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.