ஏ – 9 ஊடாக அம்பியூலன்ஸ் சேவை நேற்று ஆரம்பம்

ஏ -9 தரை வழியினூடாக நோயாளிகளை சிகிச்சைக்காகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்தார். ஏ- 9 தரைப்பாதை ஊடாக வரையறைக்கு உட்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்து உட்பட ஏனைய சில போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆயினும் தற்போது அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் நோயாளர்களை யாழ் குடாநாட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தாவினது பெரு முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சென் ஜோன்ஸ் சேவைக்குரிய அம்பியூலன்ஸ் வண்டி மூலம் நேற்று இ. சீவரத்தினம் எனும் நோயாளர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *