கனடாவில் பொதுக் கல்விச்சபை உறுப்பினர் தெரிவு. களத்தில் வனிதா நாதன்

Vanitha_Nathanவனிதா நாதன், நீண்டகால மார்க்கம் நகரவாசியான இவர் ‘மாணவரை முதன்மைப் படுத்துவோம்” எனக்கூறி தனது தேர்தல் பரப்புரைக்காக பெற்றோரையும் மாணவரையும் நேரிற் சந்திக்கப் புறப்படுகிறார். சமூக சேவைப் பணியாளர், போதைப் பொருட்களுக்கு அடிமையான இளையோர் ஆலோசகர், பெற்றோருக்கான பயிற்றுனர், குடும்ப வன்முறைத் தீர்வு ஆலோசகர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர் மற்றும் முதியோர் குழு ஒழுங்கமைப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்ட இவர் புறொக் பல்கலைக்கழக உளவியல் இளமானிப் பட்டதாரியாவார். வனிதா நாதன் தற்போது ‘யுத் லிங்க்” அமைப்பில் யோரக் பிரதேச சமூக சேவைகள் பிரிவிலும் யோர்க் பிரதேச குடும்ப சேவைகள் பிரிவிலும் பணியாற்றி வருகிறார். பெற்றோர், மாணவர் ஈடுபாட்டையும் புரிந்துணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் யோர்க் கல்விச் சபையின் 7 மற்றும் 8ஆம் பிரிவுப் பொதுக் கல்விச் சபையின் உறுப்பினரால் இப்பிரதேச மாணவரை பெரும் சாதனைகள் செய்யத் தூண்ட முடியும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

மார்க்கம் பொதுக்கல்விச் சபை 7, 8ஆம் தொகுதி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட
வேட்பாளர் பதிவை முதலாவது நாளியே மேற்கொண்ட வனிதா ‘இந்த தேர்தல் வெற்றியானது ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட முறையிலேயே அடையப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். ‘வீட்டுக்கு வீடு சென்று கல்விச் சேவைகள் தொடர்பாக பேசுவது என்பது கல்விச் சபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் என் ஈடுபாட்டையும் கடின உழைப்பையும் எடுத்துக் காட்டுவதாக அமையும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்விச் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமே ஒரு கல்விச் சபை உறுப்பினரின் கடமையாக அமைந்துவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தவும் பெற்றோரினதும் மாணவரதும் குரலாய் ஒலித்திடவுமே நான் இப் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இப்பதவி சமூகத்திற்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து அர்பணிப்போடு செயற்படுவேன்.

வனிதாவின் தேர்தற் பரப்புரையானது குடும்பங்களோடு கல்விச் சபைகளின் தொடர்பாடல் மிகவும் சிறப்பானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அத்தோடு சமூகத்தின் தேவைகளையும் கருத்துக்களையும் சரியான முறையிற் பிரதிபலிப்பது கல்விச் சபை உறுப்பினரின் முக்கிய கடமையாகும் என்பது இவரின் உறுதியான எண்ணம்.

பெற்றோர் மாணவருடனான தொடர்ச்சியான தொடர்பாடல்கள் மூலம் பொதுக் கல்வியை நாம் பலமாக்குவதுடன் அதைச் சிறப்பாகச் செயற்படவும் செய்யமுடியும். ஆனால் இந்நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    இதில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லையெனில் வாழ்த்தி வழி வகுக்கலாம்;

    Reply