ஹரி போட்டர் புத்தகம் எழுதிய பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங், பிரிட்டன் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனின் பிரபல பெண் எழுத்தாளர் ஜே.கே.ராவ்லிங் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களின் மனம் கவர்ந்தஇ ‘ஹரி போட்டர்’ புத்தகங்களை எழுதியதால் பிரபலமானார்.
ஹாரி போட்டர் புத்தகம் எழுதியதன் மூலம் கிடைத்த வருவாயால் பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ராவ்லிங்கும் இடம் பெற்றுள்ளார்.
ஜே.கே.ராவ்லிங்கிற்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. வரும் மே 6ம் தேதி நடக்கவுள்ள பிரிட்டன் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ள விஷயங்களை மேடைகள் தோறும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.