வன்னியில் இறுதிப்போரின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட ஏழாயிரம் வரையிலான மோட்டார் சைக்கிள்கள் தற்போது உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இறுதிப்போர் நடைபெற்ற இடமான மாத்தளன் தொடக்கம், முள்ளிவாய்க்கால் வரையிலுள்ள பகுதிகளில் பொது மக்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களைக் காட்டி இவ் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், அதிகமான வாகனங்களின் உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்ட நிலையிலேயே இவ்வாகனங்கள் காணப்படுவதாக வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாகனங்களை ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளச் செல்லும் பொது மக்கள் வாகனங்களின் நிலையைக் கண்டு ஏமாற்றடைவதாக கிளிநொச்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.