இன்று (Aug 08 2010) மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரம்புக்கணையை சொந்த இடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பயணம் செய்து கொண்டிருந்த இவர்களின் முச்சக்கரவண்டி எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்துள்ளவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.