வடமாகாண தமிழ் இலக்கிய விழா திட்டமிட்டபடி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று தினங்களுக்கு கிளிநொச்சியில்  நடைபெறும் என யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கிய விழாவுக்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து திருமறைக்கலாமன்றமும், யாழ்.மத்தியகல்லூரியும் சில நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.  இவ்விழாவில் ஆளுநர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பேராளர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக விபரங்களை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 0213266990 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *