இடம்பெயர்ந்த மக்கள் வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சில பாடசாலைகள் முன்பிருந்த அதன் சொந்தக் கட்டடங்கிளிலேயே இயங்க ஆரம்பித்துள்ளன.
செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கடந்த செவ்வாய் கிழமை தொடக்கம் இயங்க ஆரமபித்துள்ளது. உடுத்துறை மகாவித்தியாலயம், மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியன எதிர்வரும் வாரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை, மாமுனை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, எனபனவும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.