வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிவாரண உணவப்பொருட்கள் வழங்கப்படவில்லை. நிவாரண உதவிகளிலேயே தங்கி வாழும் இம்மக்கள் இதனால் பெரும் துன்பங்களுக்குள்ளாகியுள்ளனர். தங்களது பங்கீட்டு அட்டைகள் மீளாய்வு செய்யப்பட்டு இருமாதங்களுக்கு மேலாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
வுலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இருபது வருடங்களாக அகதி முகாம்களிலும், உறவினர் மற்றும், வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்ந்து வருகின்றனர். பல குடும்பங்கள் தொழிலின்றி வருமானமின்றி நிவாரணத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. இந்நிவாரணம் வழங்குவதில் எற்பட்டுள்ள தாமதம் காரணமாக இம்மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.