இலங்கையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம் கார்டு’களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிற நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்ககு வரவுள்ளதாக தொலைபேசித் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்லிட்ட தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ‘சிம்’களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் டிசெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தாம் பயன்படுத்தும் ‘சிம்’களை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறு பதிவு கொள்ளப்படாதவர்களின் ‘சிம்’கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.