விருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்ளும் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சுதந்திரக் கட்சி செயலாளருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஐ. ம. சு. முன்னணிக்கு கிடைக்க உள்ள வெற்றிக்குக் களங்கம் ஏற்படும் வகை யில் செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழஹப்பெரும, இரு மாகாணங்களிலும் எமக்குக் கிடைக்கவுள்ள பாரிய தேர்தல் வெற்றிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படாதிருக்குமாறு கட்சி ஆதரவாளர்களை கோருகிறோம். கெளரவமான வெற்றி யையே நாம் விரும்புகிறோம். கெளரவமற்ற முறையில் அதிகாரம் கிடைப்பதை நாம் விரும்பவில்லை என்றார்.