புலி உறுப்பினர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு!

epdp-sec.jpgபுலி உறுப்பினர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் பகிரங்க அழைப்பு!

புலிகள் இயக்க உறுப்பினர்களே!

நீங்கள் மக்களின் பக்கமா?
அல்லது உங்கள் தலைமையின் பக்கமா?…
சுயமாக சிந்தித்து தீர்மானம் எடுங்கள்!

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஓர் பகிரங்க அழைப்பு!

தூக்கிய துப்பாக்கிகளும், மனித வெடிகுண்டுகளும் விடுதலையை ஒரு போதும் பெற்றுத்தராது! நான் சொல்லும் அறிவாயுதத்தையும் உங்கள் கருத்தில் எடுத்து ஒரு கணம் நீங்கள் சித்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது.

நீங்கள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்களை நான் புலிகள் என்று ஒரு போதும் கருதவில்லை. எமது தேசத்தின் புதல்வர்களாகவே நாம் உங்களை பார்க்கின்றோம். நாம் நேசிக்கும் எமது மக்களின் பிள்ளைகளாகவே நாம் உங்களை கருதுகின்றோம்.

உங்களில் பலர் புலித்தலைமையினால் பாலாத்காரமாக ஆயுதப்பயிற்சிக்கு பிடித்து செல்லப்பட்டவரகள். புலித்தலைமையின் தவறான பரபுபுரைகளை நம்பி நீங்களாகவே விரும்பியும் உங்களில் சிலர் புலித்தலைமையோடு இன்னமும் இணைந்திருக்கிறீர்கள். இதை நான் புரிந்து கொள்கின்றேன்.

உங்களில் பெருந்தொகையானவர்கள் அமைதியை விரும்புகின்றீர்கள். சமாதானத்தை விரும்புகின்றீர்கள். அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வை விரும்புகின்றீர்கள்.

ஆனாலும் உங்களில் சிலர் இன்னமும் புலித்தலைமையின் அழிவு யுத்தத்திற்கும் வன்முறைக்கும் தொடர்ந்தும் பலியாகி வருவது கண்டு நான் மனத்துயரம் அடைகின்றேன்.

முடிவற்று தொடரும் அழிவு யுத்தத்திற்கு நீங்கள் மட்டும் பலியாகவில்லை. புலித்தலைமையின் அழிவு யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அவலங்களையும்,  அழிவுகளையும் சந்தித்து வருகின்றார்கள்.

யாருக்காக நீங்கள் யுத்தம் நடத்துவதற்கு புலித்தலைமையால் தூண்டிவிடப்பட்டீர்களோ அதே மக்கள் இந்த அழிவு யத்தத்தினால் பேரவலங்களை சந்தித்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எமது மக்கள் இன்று சொந்த வீடிழந்து. சொந்த நிலமிழந்துää சொந்தங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதற்கு புலித்தலைமையே பிரதான பொறுப்பு என்பதை நீங்கள் உணராமல் இருந்துவிட முடியாது.

அதற்காக சாதாரண புலி உறுப்பினர்களாகிய உங்களை நான் தவறு என்று கூற விரும்பவில்லை. உங்களை அழிவு யுத்தம் நடத்துவதற்கு தூண்டி விட்டுக்கொண்டிருக்கும் புலித்தலைமையே இன்று வரை எமது மக்களுக்கு மாபெரும் வரலாற்று துரோகங்களை இழைத்து வருகின்றது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலி உறுப்பினர்களாகிய உங்கள் மீது குற்றம் சுமத்தியது கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். புலித்தலைமையே எமது மக்களுக்கு துயரங்களை சுமத்தி வருகின்றுது என்றுதான் நான் எப்பொழுதும் கூறி வருகின்றேன்.

புலிகளின் பிரச்சினை வேறு! தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு! அது போலவே புலித்தலைமையின் பிரச்சினை வேறு! புலி உறுப்பினர்களாகிய உங்களின் பிரச்சினை வேறு என்றுதான் நான் இன்னமும் கருதி வருகின்றேன்.

நீங்கள் இளவயதானவர்கள். தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாறு உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சமாதானத்தையும், அமைதியையும்,  அரசியல் தீர்வையும் விரும்பும் எங்களை எமது மக்களின் உரிமைக்கு எதிரானவர்கள் என்றே புலித்தலைமை உங்களுக்கு பரப்புரை செய்து வருகின்றது.

ஆனாலும் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

ஆயுதப்போராட்டம் என்பதை நான் முழுமையாக நிராகாரிப்பவன் அல்ல. நாங்களும் அன்று ஆயுதம் ஏந்தி எமது மக்களின் உரிமைக்காக போராடியிருந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனாலும் ஆயுதப்போராட்டம் என்பது புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனியியக்க கொள்கையினால் தடம் புரண்டு திசை மாறிப்போயிருந்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்,

புலித்தலைவர் பிரபாகரன் தான் மட்டும் தலைவர் என்று கருதி எமது விடுதலைக்காக போராட புறப்பட்ட அனைத்து தமிழ் தலைவர்களையும் கொன்றொழித்த கொடுமைகளை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் முதற்கொண்டு ஐனநாயக வழியில் போராடிக்கொண்டிருந்த அனைத்து தமிழ் தலைவர்களையும் புலித்தலைவர் பிரபாகரனே கொன்றொழித்து வந்திருக்கின்றார்.

இது வரை கொல்லப்பட்ட எந்தவொரு தமிழ் தலைவர்களையும் புலித்தலைமையே கொன்றொழித்திருக்கின்றது. எந்தவொரு தமிழ் தலைவர்களையும் அரச படையினர் கொன்றொழித்த வரலாறு கிடையாது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட தமிழ் தலைவர்களை மட்டுமன்றி, அயிரக்கணக்கான சக இயக்க போராளிகளை மட்டுமன்றி,  தம்மோடு முரண்பட்டு நின்று ஏன் என்று கேள்வி எழுப்பிய உங்களது சொந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரையும் புலித்தலைமையே இறுதிவரைக்கும் கொன்றொழித்து வந்திருக்கின்றது.

இவ்வாறு சொந்த இனத்தையே கருவறுத்து வருகின்ற புலித்தலைமை தமிழ் பேசும் மக்களுக்காகவே தாம் யுத்தம் நடத்துவதாக கூறி வருவதை நீங்கள் நம்புகின்றீர்களா என்று நான் உங்களிடம் கேட்கின்றேன்.

தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப்போராட்டம் என்பது தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் வன்முறைக்களமாக மாறிää எமது போராட்டம் திசை வழி மாறி சென்றிருந்த போதுதான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு எமக்கு ஏற்பட்டிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் வரைக்கும் உங்களது புலித்தலைமை 652 உறுப்பினர்களை மட்டுமே யுத்த களத்தில் பலிகொடுத்திருந்தது. ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை பயன்படுத்த தவறிய உங்களது புலித்தலைமை இந்திய அமைதிப்படையோடு யுத்தத்தை தொடங்கியிருந்தது.

இதனால் யுத்த களத்தில் பலி கொடுக்கப்பட்ட உங்களைப்போன்ற புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 2008 நவம்பர் வரைக்கும் 22 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து சென்றிருக்கின்றது. இந்த தொகை இன்று இன்னும் பல ஆயிரங்களை தொட்டு நிற்கின்றது.

புலித்தலைமையின் அடங்காத யுத்த வெறியினால் இதுவரை பலிகொடுக்கப்பட்ட உங்களது சக உறுப்பினர்களை நான் புலிகளாக ஒரு போதும் கருதியதில்லை. அவர்கள் அனைவருமே எமது தேசத்தின் புதல்வர்கள். அவர்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன்.

அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதை புலித்தலைமை நடை முறைப்படுத்தியிருந்தால் பலிகொடுக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 652 ஆகவே இருந்திருக்கும். கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்திருக்கும். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமானவர்கள் உங்களது புலித்தலைமைதான் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை,  சந்திரிகா புலிகள் பேச்சு வார்த்தை,  ரணில் விக்கிரமசிங்க புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்,  என்று தொடர்ந்து இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச புலிகள் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சந்தர்ப்பங்களும் கனிந்து வந்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கிடைத்த சந்தர்ப்பங்களை உங்களது புலித்தலைமை சரிவரப்பயன் படுத்தியிருக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் இன்று உங்களது உறவுகளான எமது மக்கள் பேரவலங்களை சந்திக்க வேண்டிய துயரம் நடந்திருக்காது. உங்களோடு கூட இருந்த உங்களது சக உறுப்பினர்களை நீங்கள் பறி கொடுத்திருக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்திருக்காது.

இழந்த நிலங்களை தாம் மறுபடியும் மீட்போம் என்று புலித்தலைமை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கூறி வந்திருக்கிறது. யாரை நம்பி புலித்தலைமை இந்த வாக்குறுதிகளை எமது மக்களுக்கு கொடுத்து வந்திருக்கின்றது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கைவிட்டு ஓடிய நிலங்களை மறுபடியும் மீட்பதற்கு புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களையே புலித்தலைமை களத்தில் இறக்கி பலிகொடுத்து வருகின்றது. ஆனால் புலித்தலைவைர்களும் சரி,  அவர்களுக்கு சுயலாப நோக்கில் ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரி தங்களது பிள்ளைகயை யுத்த களத்திற்கு அனுப்பியிருந்தார்களா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தங்களது பிள்ளைகளை மட்டும் பொத்தி வளர்த்துக்கொண்டு,  வெளிநாடுகளில் உயர் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்து விட்டு ஊரார் விட்டுப்பிள்ளைகளான உங்களை மட்டும் யுத்த களத்திற்கு அனுப்பி புலித்தலைமை பலி கொடுத்து வருகின்றது.
இது போலவே புலிகளின் தயவில் சுயலாப அரசியல் நடத்தி வரும் தமிழ் தேசிய கூட்டைப்னிரும் தங்களது பிள்ளகளை மட்டும் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு எமது தயாக தேசமெங்கும் யுத்த சூழலை தூண்டிவிடடு அப்பாவி மக்களான அடுத்தவன் பிள்ளை மட்டும் யுத்த களத்திற்கு பலி கொடுத்து வருகின்றார்கள்.

இதனால் கண்ட மிச்சம் என்ன என்பதை நீங்கள் இன்று உணர்ந்திருப்பீர்கள். அழிவுகளும், அவலங்களும் மட்டும் தான் எமக்கு மிஞ்சியிருக்கின்றன. எமது சொந்த மக்களை பலி கொடுக்கும் துயரங்களே இங்கு மிஞ்சியிருக்கின்றன. கொன்று பலியாக்கப்பட்ட எமது தேசத்தின் இளைஞர் யுவதிகளின் சமாதிகளே இங்கு எஞ்சியிருக்கின்றன.

போராட்டம் என்பது நாங்களும் போராடினோம் என்ற வீராவேசத்தை விளம்பரப்படுத்துவதற்காகவோ,  அன்றி சுயலாப நோக்கங்களுக்காகவே அல்ல. அடைய வேண்டிய உரிமைகளை அடைவதற்காகவே போராட்டம் நடத்தப்பட வேண்டும். இது வரை புலித்தலைமை பெற்றுத்தருவதாக கூறிய விடுதலையை உங்களுக்கு பெற்றுத்தந்தார்களா என்று நான் உங்களிடம் கேட்கிறேன்.

இழந்தவற்றை பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த புலித்தலைமை இருந்ததையும் இழந்து போய் எமது தமிழ் சமூகத்தையே நடத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது புலித்தலைமை. இருந்த நிலங்களையும் இழந்து, வளங்களையும் இழந்து,  பலங்களையும் இழந்து,  எமது சமூகத்தின் பெருமைகளையே அழித்து சிதைத்திருக்கின்றது புலித்தலைமை.

இந்த அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் அடுத்தவர்கள்தான் காரணம் என்று புலித்தலைமை பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து வருகின்றது.

உனது கால்களில் குற்றிய முட்கள் ஒவ்வொன்றும் யாரோ தூவி விட்டவைகள் அல்ல. அது என்றோ ஒரு நாள் உனக்கு நீயே தூவி விட்டவைகள். இவ்வாறு தமிழில் ஒரு அறிவுரை உள்ளதாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இது போலவே புலித்தலைமை இன்று இருந்த நிலங்களையும் கைவிட்டு ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் புலித்தலைமை தாமாகவே தமது வரலாறெங்கும் விட்ட தவறுகள்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பண்டைக்காலத்தில் யுத்தம் புரியும் அரசர்கள் தமக்கு எதிராக வரும் வாள் வீச்சுக்களையும்ää வேல் வீச்சுக்களையும் தாம் வைத்திருக்கும் கேடயங்களால் தடுத்து நிறுத்துவார்கள். ஆனால் புலித்தலைமை இன்று தம்மை நோக்கி நடத்தப்படுகின்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அப்பாவி மக்களின் உயிர்களையே கேடயமாக பயன்படுத்தி வருகின்றது.

ஆகவேதான் இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எமது மக்களான உங்களது உறவுகளை புலித்தலைமை சுதந்திரமாக வெளியேற விடாமல் அவர்களை தம்மை பாதுகாப்பதற்கான மனித கேடயங்களாக தடுத்து வைத்திருக்கின்றது.

மக்களை காப்போம், மண்ணை மீட்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த புலித்தலமை தங்களது அடங்காத யுத்த வெறிக்காக சாதரண உறுப்பினர்களாகிய உங்களையே களப்பலி கொடுத்து வருகின்றது.

அமைதிப்பேச்சின் ஊடாக அர்த்தமுள்ள அரசியல் தீர்வையே புலித்தலைமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக யுத்தத்தின் மூலம் தாம் வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொடுத்திருந்த புலித்தலைமையினால் எந்த இலக்கையும் அடைய முடியாமல் அழிவுகளை மட்டும் எமது மக்களுக்கு உருவாக்க முடிந்திருக்கிறது.

இது எம்மிடையே தீராத மனத்துயங்களை உருவாக்கியிருக்கின்றது. நான் இன்னொரு அரசியல் சார்ந்தவன் என்பதற்காக புலித்தலைமையை பிழை என்று கூற வரவில்லை. போட்டி அரசியலுக்காக இந்த கருத்துக்களை நான் கூற வரவில்லை. அவலப்படுகின்ற எமது மக்களின் நலன்களில் இருந்தும்ää அநியாயமாக பலி கொள்ளப்படுகின்ற புலிகளின் உறுப்பினர்களாகிய உங்களது நலன்களில் இருந்தும்தான் நான் இந்த கருத்துக்களை கூறுகின்றேன்.

என் அன்புக்கும் நேசத்திற்கும் உரிய இளையோர்களே!

உங்கள் விருப்பங்களுக்குமாறாக நீங்கள் பாலாத்காரமாக புலிகள் அமைப்போடு இணைக்கப்பட்டிருக்கலாம், இன்னும் உங்களில் சிலர் நீங்களாகவே புலிகள் இயகத்தின் சுயலாப அரசிலை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர்களோடு விரும்பியும் இணைந்திருக்கலாம். இதை என்னால் உணர முடிகின்றது.

உங்களது தியாகங்களை நாம் ஒரு போதும் கொச்சைப்படுத்த விரும்பியவர்களல்ல. உங்களது அர்ப்பண உணர்வுகளை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் நீங்கள் புரிகின்ற தியாகங்கள் எமது மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.
ஆனால் இருந்த உரிமைகளையும் பறி கொடுப்பதற்காகவே புலித்தலமை உங்களை பலி கொடுத்து வருகின்றது. வெறும் அழிவுகளுக்காகவே புலி உறுப்பினர்களாகிய உங்களது தியாகங்களை புலித்தலைமை பயன்படுத்தி வருகின்றது.

ஆகவே நான் உங்களிடம் கோருவது ஒன்றை மட்டும்தான். உங்களை தற்கொலை குண்டு தாரிகளாக புலித்தலைமை என் மீது ஏவி விட்டிருந்தாலும்,  உங்களது கைகளில் கெலைக்கருவிளை திணித்து எங்கள் தோழர்களை உங்கள் தலைமை கொன்றொழிக்குமாறு உங்களை தூண்டி விட்டிருந்தாலும எமது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உங்களையும் எனது பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன். எமது தேசத்தின் புதல்வர்களாகவே கருதுகின்றேன். எமது மக்களின் பிள்ளைகளாகவே நான் உங்களை கருதுகின்றேன்.

நீங்கள் தமிழ் பேசும் மக்களின் நிம்மதியான வாழ்வை விரும்புபவர்களாக இருந்தால்,  உங்களது உறவுகள் ஒரு சமாதான தேசத்தில் வாழ வேண்டும் என நீங்கள் விரும்பினால். வெறும் அழிவுகளை மட்டும் தந்து கொண்டிருக்கும் உங்கள் ஆயுதங்களை கையளித்து அமைதி வழிக்கு திரும்மாறு நேசக்கரம் நீட்டி உங்களை அழைக்கின்றேன்.

சமாதான தேசதத்தையே நாம் விரும்பகின்றோம். அமைதியையும்,அரசியலுரிமை சுதந்திரத்தையும் நாம் விரும்புகின்றோம்.

எமது மக்களுக்கு உயிர் வாழும் உரிமை வேண்டும்.

சுதந்திரமாக எமது மக்கள் எமது தேசமெங்கும் நடமாட வேண்டும். சுதந்திரமாக எதையும் பேச வேண்டும் சுதந்திரமாக எமது மக்கள் தொழில் புரிய வேண்டும்.

பிரியமுடன்

தோழர் டக்ளஸ் தேவானந்தா

செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

  • nantha
    nantha

    தோழர் நீங்கள் பல தடவைகள் ஏற்கனவே கேட்டபோதும் எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தனவே மீண்டும் உங்களது வேண்டுகோளை விடுக்கிறீர்கள் இந்தப் ……. புலிகளின் காதுகளில் எட்டுமா? என்பது சந்தேகமே!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோள் புலிகளுக்கு புரியுமோ என்னவோ?? ஆனால் மக்களை நேசப்பவர்கள் புலிகளிலிருந்தால் அவர்களுக்கு நிச்சயம் புரியும்.

    Reply
  • kuru
    kuru

    புலிகளின் தலைமை தவறு என்பது உண்மைதான்.ஆனால் ஆயுதங்களை ஒப்படைத்த பின்பு இலங்கை அரசு தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?கிழக்கு மாகாணத்தில் உரிமைகளை வழங்கி முன்மாதிரியாக காட்டியிருந்தால் இப்போது இப்படி அழைப்பு விடுக்காமலே பலர் முன்வந்திருப்பார்களே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குரு உங்கள் கேள்வி நியாயமானது தான். இலங்கை அரசு புலிகளின் அட்டகாசங்களை முடிவிற்கு கொண்டு வந்த பின், தற்போதுள்ள நிலைமையில் அரசு ஒரு நியாயமான நிலைப்பாட்டிற்கு வந்தேயாக வேண்டிய நிலையே உள்ளது. அரசு தவறாக நடக்க முற்பட்டால், அப்போது அரசிற்கெதிராக புலம்பெயர்ந்துள்ள மக்கள் போராட்டங்களை நடத்தலாம். அப்போது வெளிநாடுகளும் தற்போது கண்ணை மூடிக்கொண்டிருப்பது போல் இருக்கவும் முடியாது. தற்போதைய உடனடித் தேவை வன்னியில் புலிகளின் பிடியில் மாட்டுப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களை உயிரிழப்புகளிலிருந்து காப்பாற்றுவதேயாகும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //இலங்கை அரசு தமிழருக்கு நியாயமான உரிமைகளை வழங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்// குரு
    உண்மை தான் இதில் யாரும் சந்தேகிக்க முடியாது. இந்தியா சர்வதேசத்தின் நல்லசக்திகளின் அழுத்தம் நிர்பந்தத்தின் மூலமாக கடந்தகாலத்தில் யுத்தம் உயிர் இழப்புகள் பொருளாதர பின்அடைவுகளின் விளைவாக அரசாங்கம் சிறுபான்மை இனங்களுக்கு ஒரு தீர்வை வைக்கவேண்டும். வைக்கும். நிச்சயம் அது முழுமையான தீர்வாக இருக்கப் போவதுதில்லை. அது அரையும் குறையுமான தீர்வாகவே இருக்கப்போகிறது. தொடர்ந்து போராடுவதின் மூலமாகவே முழுமையை அடைந்திடமுடியும். அது புலிபோராட்டமாகவும் த.தே.கூட்டமைப்பின் போராடத்தை முற்று முழுதாக நிராகரிப்பதின் மூலமாகவே சாத்தியமாகும். ஜனநாயக வழிவகைப்பட்டதே போராட்டம்.

    இலங்கை போன்ற நாடுகளுக்கு மாகாணங்களுக்கு சுயயாட்சியை ஐக்கியஇலங்கைக்குள் பெற்றுக்கொள்வதே சகலஇன மக்களுக்கும் தீர்வாக இருக்கமுடியும் இதுவே இனப்போராட்டத்தின் வெற்றியாகவும்முடிவாகவும் இருக்கமுடியும். இதற்கான தலைமைகளை தெரிவுசெய்வதே தமிழ்மூஸ்லிம் மக்களுடைய கடமையாக இருக்கிறது. இதற்கு டக்கிளஸ் தேவாவை தெரிவு செய்யுங்கள் என்று யாரும் கேட்கவில்லை. இதற்கு அவர் முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் என்றே கேட்கப்படுகிறது.

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    WORLD WE ARE LIVING TODAY THERE IS SO MANY POLITICIANTS THEY ARE MAKING A STATMENT TO .. OTHERS .HE IS LIVING IN LUXURY LIFE IN CAPITAL OF SRILANKA.HIS PARTY BELIVED TO BE GOVERN JAFFNA PEISULA THERE IS NO JOB,NO DEVELOPMENT AND MANY PEOPLE WHO ENGAGEING IN CRIMES.FORCES EVERYWHERE,PEOPLE LIVE IN FEAR.

    HE IS NOT AN ANGEL EITHER,HE PRETEND TO BE LEADER BUT I DONT LOOKED HIM THAT WAY. THESE PEOPLE COUILD DO MANY THINGS FOR OUR PEOPLE,THER ARENT DONE,THEY NEVER WILL…………….

    Reply
  • murugan
    murugan

    புலியின் அழிவிற்குப் பின்னால் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் தொடர இருக்கிறது. ஆனால் அது இரத்தமும தசையும் கண்ணீரும் சிந்த நடைபெறப் போவதில்லை.

    Reply
  • thurai
    thurai

    புலிகள் ஈழத்தமிழினத்தைப் பிடித்துள்ள நோய். தமிழினம் முதலில் அந்தநோயிலிருந்து விடுபடவேண்டும். விடுதலை,உருமைகள், சமாதான்ம் என்பதெல்லாம் தமிழினம் நோயின்றி தன் காலில் நிற்கத் தொடங்கிய பின்னரே பேசப்படவேண்டும்.

    துரை

    Reply
  • இளங்கோ
    இளங்கோ

    டக்ளஸ் உக்ஙளுக்கு பின்னால் ஆயுதம் தூக்கியவர்களில் நானும் ஒருவன். ………………… தமிழ் மக்களுக்கு எதிரானலும் பரவாயில்லை இனவாதியுடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக செயற்படுவீர்கள் என நான் நினைக்கவில்லை. ……………………………..

    நீங்கள் உண்மையில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டால் எப்படி 10 லும் குறைய வாக்குகள் பெறு மகிந்தவின் அனுசரணையில் பாராளுமன்றம் சென்றீர்கள்? இது தானோ சனநாயகம்? அப்போ படித்த சிவப்பு புத்தகங்களின் நிலை என்ன? எமது கிராம நூலகங்களையே சிவப்பு நூலாக மாற்றிய பெருமை உங்களையே சேரும்? இதனை லெனின் கேள்விப்பட்டால்……..

    Reply
  • kural
    kural

    போரை நிறுத்து! அரசியல் தீர்வை முன்வை! :கலாநிதி விக்ரமபாகு
    [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 10:46.48 AM GMT +05:30 ]
    தமிழ் மக்கள் தற்போது இன அழிப்பு போருக்கு முகம் கொடுத்து நிற்கின்றனர். பிரந்திய சர்வதேச சக்திகளின் ஆதரவோடு மூர்க்கத்தனமான போரை மகிந்தர் அரசு தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது. இவ்வாறு இடதுசாரி முன்னணி கட்சி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    போர் தொடர்பான சர்வதேச நியமங்களையெல்லாம் தூக்கி வீசிவிடடு நாள் தோறும் கொத்துக் கொத்தாக தமிழ் மக்களை கொலை செய்து கொண்டிருக்கினறது.
    தினமும் சராசரியாக 50 பேர் கொலை செய்யப்படுகினறனர். 150 பேர் காயமடைகினறனர்.

    மறுபக்கத்தில் உணவுப் பொருட்களை அனுப்பாது போர் அபாயத்தில் இருக்கும் மக்களை பட்டினி போட்டுச்சாக வைக்கின்றது. உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை வழங்காது சாகடிக்கின்றது.

    அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வந்தவர்களை உறவினர்களுடன் கூட பேச விடாது முகாம்களில் அடைத்து வாட்டி வதைக்கினறது. இஞைர்களை கைது செய்து சிததிரவதை செய்கினறது.

    பிராந்திய சக்திகளும், சர்வதேச சக்திகளும, தத்தம் அரசியல் நலன்களுக்காக தொடர்சசியான மௌனத்தில் உள்ளனர். வலிமையான அழுத்தங்கள் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. சர்வதேச நிறுவனங்கள் எழுப்பும் குரல்களையும் இச் சக்திகள் மௌனமாக்க முயல்கின்றன.

    இந்நிலையில் இவ் நச்சுச் சூழலிருந்து தமிழ் மக்களையும் தமிழ் தேசிய அரசியலையும் அதன் வழியான தமிழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் உடனடியாக விடுவித்தாக வேண்டும்.

    இதற்கு பரந்தளவிலான உலகளாவிய வேலைத்திடடங்கள் தேவை. மகிந்தர் அரசிறகு எதிராகவும் அவர்களுக்கு உதவும் பிராந்திய சர்வதேச சக்திகளுக்கெதிராகவும் உலகம் தழுவிய முற்போக்கு, ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமே அதனை சாத்தியமாக்க முடியும்.

    இப்பணிகளை எற்கனவே புலர் பெயர்நத நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும் ஆரம்பித்து விட்டனர். தினமும் பல்வேறு போராட்டங்களை நடாத்தி உலகின் மனச்சாட்சியை தட்டியெழுப்பிக் கொண்டிருகிருக்கின்றனர்;.

    இப் பணியில் ஓர் பகுதியையாவது கொழும்பு வாழ் தமிழ் மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டாமா? கொழும்பு தமிழ் மக்கள் தனிதது எவற்றையும் இன்றைய சூழலில் செய்து விட முடியாது அவ்வாறு செய்ய முயன்றால் தமது வெறிததனங்களை ஏவிவிடுவதற்கு மகிந்தர் அரசு ஓரு போதும் தயங்காது.

    எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொள்கை ரீதியாக ஏற்று செயற்படும் தென்னிலங்கைச் சக்திகளின் துணையுடன் தான் நாம் செயற்பட முடியும்.
    அந்த தென்னிலங்கை சக்தி யார்? என நாம் தேட வேண்டுமா? முழுத் தென்னிலங்கையும் மகிநதரின் இன அழிபபு யுத்தத்திறகு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கம் போது ஓரேயொரு தென்னிலங்கை சக்தி மட்டும் 1970 களிலிருந்து இலங்கையில் மட்டுமல்ல முழு உலகமும் வலம் வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கினறது.

    ”தமிழனுக்குப் பிறந்தவன்” என பேரினவாதிகள் கேலி செய்த போதும, உயிர் அச்சுறுத்தல்கள் விடுத்த போதும், எதற்கும் அஞ்சாது குரல் கொடுத்துக் கொண்டிருக்கினறது.
    சோசஸிசம் பேசிய பாரம்பரிய இடதுசாரிகள் எல்லாம் மகிந்தரின் தாழ்வாரத்தில் ஓதுங்கிய நிலையில் புதிய இடதுசாரிகள் என தம்மை கூறிக் கொள்ளும் ஜே.வி.பியினர் மகிந்தரின் இன அழிபபு யுத்தத்திறகு சாமரை வீசும் நிலையில் போருக்கு எதிராக வன்மையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கினறது.

    இன்றைய இனஅழிப்பு சூழலில் உலகெங்கும் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஓரு தென்னிலங்கை குரல் தேவை!

    போரை நிறுத்து, அரசியல் தீர்வை முன்வை என கொள்கை வழி நின்று செயல்படும் கொள்கைக் குரல் தேவை!

    கொழும்பு வாழ் சேரிப்புற, தோட்டப்புற ஏழைத் தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசியல் அரங்கிற்கு கொண்டு வர ஒரு இடதுசாரிக்குரல் தேவை!

    தென்னிலங்கையில தமி்ழ மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை முன் கொண்டு செல்வதற்கு ஒரு வலிமையான அரசியல் தளம் தேவை!

    இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய க் கூடிய ஒரேயொரு தென்னிலங்கை அரசியல்வாதி கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மட்டுமே!
    கொழும்பு மாவட்டத்தில் தமிழர் அரசியலை பலப்படுத்துவோம் !

    தமிழ்த்தேசிய அரசியல் அபிலாசைகளுக்காக உலகளாவிய அளவில் செயற்படும் இலட்சக்கணக்கான உள்ளங்களோடு நாங்களும் கரம் கோப்போம்!

    போரை நிறுத்து அரசியல் தீர்வை முன்வை என மகிந்தர் அரசின் செவிப்பறை கிழிய குரல் எழுப்புவோம்!

    கொழும்பு வாழ் ஏழைத் தமிழர்களின் பிரச்சனைகளை அரசியல் அரங்கத்திற்கு கொண்டு வருவோம்!

    தமிழ்த்தேசிய அரசியலுக்கு சார்பான சிங்கள சக்திகளை வலுப்படுத்துவோம்!

    இவ்வாறு இடதுசாரி முன்னணிக்கட்சி விடுத்த தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Reply
  • thevi
    thevi

    எப்படி 10 லும் குறைய வாக்குகள் பெறு மகிந்தவின் அனுசரணையில் பாராளுமன்றம் சென்றீர்கள்?

    அப்போது நடந்த தேர்தலில் பல நுற்றுக்கணக்கான கள்ள வோட்டுக்கள் மக்களை மிரட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு போடப்பட்டன. அப்படி கள்ள வோட்டுப் போட்டவர்களை நேரடியாக நானறிவேன். டக்ளஸிற்கு பத்து வோட்டுக்கள் என்றாலும் அது புலிக் குண்டர்களுடன் அடிபடடு உதை வாங்கி கிடைத்த பெறுமானம் உடையவை. கிளிநொச்சியில் வோட்டுப் போட்டதற்காகவே ஒரு பொது மகன் விரலை இழந்த சூழலில் பத்து வோட்டுக்களின் பெறுமதி இளங்கோ போன்றவர்களுக்கு அற்பமாகத்தான் தெரியும்.

    Reply
  • jaffna man
    jaffna man

    எது என்னவோ பிரபாகரன் தான்தோன்றித்தனமாக இந்த மக்களை வதைத்து தனத கடைசி சுய நலத்திற்கும் இந்த தமிழ் மக்களை சித்திரவதை பண்ணியுள்ளார் எத்தனையோ சந்தர்ப்பம் வந்தும் தனது பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்களிடம் உறதிப்படத்திக் கொள்ளாத தலைவராக இன்று வரையில் அதோட வேற புலம் பெயர் ……….. அவருக்கு அங்கீகாரம் கேட்கிறார்கள் எந்த அடிப்பழடயிலும் இது சர்வதேசம் ஏற்காது என்பத தெரிந்த விடயம் தலைவற்ர ஆட்களே தலைவருக்கு சர்வதேசத்திடம் மன்னிப்பு கேட்கினம்.

    ஆனால் தோழர் டக்ளஸ்க்கு 10 எண்டாலும் மக்கள் வாக்கு பெற்று ஜனநாயகப்படி பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றார் அவரும் தேவைப்பட்டடிருந்தால் உங்கட தலைவரைப்போல காட்டுக்குள்ளே ஒளித்திருந்து நீச்சல் தடாகம் கட்டி………………..
    இன்று வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்தில் மக்களிடம் கேட்டால் தெரியும் யார்தலைவர் என்று தலைவர் மக்களின் காகை பிடுங்கி தனது ஆட்களுக்கு பகிர்ந்து ஆயுதங்களை வாங்கி அரச படைகளிடம் பறி கொடுத்தார் டக்ளஸ் யாழில் தலித்துக்களின் வாழ்வை உயர்த்தியுள்ளார் தலித்துக்கள் என்றுமே எதிர்பாத்திராத மாற்றங்களையும் தனது அமைப்பின் மிகப் பெருபான்மையானவர்களாகவும் உள்வாங்கியுள்ளார்.

    இப்ப செல்லாக்காசாக உள்ள பிரபாகரனைப் பற்றி பேசி போராட்டம் நடாத்திப் பிரயோசனம் இல்லை மக்ளை வாழவைத்திற் கொண்டிருக்கும் டகளஸ்டன் சேர்ந்து உருப்படியான வேலைகளை பார்ப்பதே சரியானதாகும்.

    Reply
  • BC
    BC

    //jaffna man- இப்ப செல்லாக்காசாக உள்ள பிரபாகரனைப் பற்றி பேசி போராட்டம் நடாத்திப் பிரயோசனம் இல்லை//

    பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்ற தானே புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

    Reply
  • msri
    msri

    டக்கிளசிற்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்!
    புலி உறுப்பினர்களுக்கு வேணடுகோள் விடுப்பதை விடுத்து> நீர்…… மகிந்தாவிடம் போரை நிறுத்தி> அர்த்தமுள்ள அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமா? அதைச்செய்தால் கீழ்மட்ட புலி உறுப்பின்ர் மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமே புலியை இல்லாதாக்குவார்கள்! இத்திராணி உங்களுக்குண்டா?

    Reply
  • Kullan
    Kullan

    மக்கள் என்றும் மக்களாகவே இருக்கிறார்கள். சிங்களமக்களில் ஏற்பட்ட கசப்பே புலிகளை வளர்த்ததும் வாலைப்பிடித்ததும். புலிவாலைப் பிடித்தால் விட இயலுமே. இதுதான் இன்று மக்கள் நிலை.
    நானும் டக்கிலஸ்டம் ஒன்று கேட்கவிரும்புகிறேன். நீங்கள் மக்களின் பக்கமா அல்லது சிங்களப் பேரினவாதத்தின் பக்கமா? அறிவாயுடம். சிரிப்புக்குரியது. இங்கும் அறிவை ஆசானாக்காது ஆயுதமாக்கவே விரும்புகிறீர்கள். அறிவாயுதத்தின் விளைவுகளில் ஒன்றுதான் அணுக்குண்டு என்றறிக.

    Reply
  • damilan
    damilan

    டக்ளஸின் அழைப்பை அவர் பற்றிய விருப்பு வெறுப்புக்கப்பால் வாசித்துப் பார்க்கும் போது அதில் தெளிவாகத் தெரிவது மனிதாபிமானம். இதற்கு முன் அவர் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை தலைமையையே சாடி வந்தார்.

    இவரின் அழைப்பு புலிகளின் காதில் எட்டாவிட்டாலும் மனசாட்சியுள்ளவர்னில் காதில் எட்டும். உரிமைகள் பற்றி ஆயுதம் துர்க்கியவர்களிடம் இருந்தே இன்று உரிமைகள் கேட்க வேண்ய நிலையில் உள்ளது. இன்று சாதாரண வடகிழக்கு மக்களுக்கு தேவையான உரிமைகள் இவைதான்
    1. உயிர் பற்றிய அச்சமின்மை
    2. வெடிச்சத்தங்கள் கேட்காமலிருத்தல்
    3. தமது உறவுகளை இழக்காமல் இருத்தல்
    4. பேச்சுச் சுதந்திரம்
    5. சோதனைச் சாவடிகள் இல்லாத பிரயாணம்
    6. சொந்த வசிப்பிடம்
    7. சுயமான தொழில்
    8. கல்வி வசதி
    9. ஆறுதலான வார்த்தை
    10. நாளை பற்றிய நல்ல நம்பிக்கை

    இதுதான் அடிப்படையாக இருக்கிறது. இவ்வாறான பிரச்சினைகள் எல்லாம் வெளிநாட்டில் இருப்பவர்களது அடிப்படைப் பிரச்சினையாக இருக்கும் என்று கருத வாய்ப்பில்லை.

    Reply