பாதெனிய – அநுராதபுரம் வீதியை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க சமர்பித்திருந்தார்.
இத்திட்டத்தின் கீழ் பாதெனிய அநுராதபுரம் வீதியின் 80 கிலோ மீட்டர் தூரம் மறுசீரமைக்கப்படவுள்ளது கொரியா எக்ஷிமி வங்கியின் கடனுதவித்திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 5722 மில்லியன் ரூபா இதற்குச் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.