வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கண்டி யாழ்ப்பாணத்துக்கான ஏ 9 வீதியில் புதிதாக எட்டு எர்பொருள் நிறப்பும் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்ர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான 180 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு அமைய இந்த நிலையங்கள் இமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்துக்காக 150 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.