ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஆசிய ஒன்றியம் ஒன்றின அவசியம் பற்றி ஆசிய தலைவர்கள் மாநாட்டில் இன்று (ஒக்ரோபர் 24ல்) உரையாடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசிய நாடுகள் அண்மைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விரைவில் மீண்டதை சாதகமாகக் கொண்டு கிழக்காசிய ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹற்அயாமா தெரிவித்துள்ளார். இது உலகை வழிநடத்திச் செல்வதற்கான அபிலாசையக் பூரணப்படுத்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆசிய ஒன்றியத்தில் தென்கிழக்கு ஆசிய ஆசியான் நாடுகளின் கூட்டும் அவற்றையொட்டிய பிரதேச பங்காளி நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், சவுத்கொரியா நியுசிலாந்து, அவுஸ்ரோலியா ஆகியனவும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இந்த ஆசிய ஒன்றியத்தில் அமெரிக்காவையும் இணைத்துக் கொள்ள ஜப்பான் முயற்சிக்கின்றது. அது தொடர்பான விவாதம் தாய்லாந்தில் நடைபெறும் மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அரசியல் பொருளாதார வலயத்தை 2015ற்குள் ஆரம்பிப்பது பற்றி இம்மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றது.