”வன்னி முகாம்கள் நல்லமுறையில் இயங்குகின்றது. மீள்குடியேற்றம் நல்லமுறையில் நடக்கின்றது” அவுஸ் பிரதமரின் விசேட பிரதிநிதி

John_McCarthyநவம்பர் 12ல் மனிக் பாம் முகாமுக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய பிரதமரின் விசேட பிரதிநிதி ஜோன் மக்காத்தி ”நாங்கள் நேரடியாக நிலைமைகைளப் பார்வையிட்டது பயனுள்ளதாக இருந்தது” என்று தெரிவித்ததுடன் ”அங்கு கண்ட விடயங்கள் தங்களை ஊக்கப்படுத்தி உள்ளது” என்றும் குறிப்பிட்டார். ”முழுமையாகப் பார்க்கையில் முகாம்கள்நல்ல முறையில் இயங்குககின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நல்லமுறையில் நடைபெறுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் படகு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ள நிலையில் அவ்வாறு அகதி அந்தஸ்துக் கோரி வருவொரைக் கட்டப்படுத்தும் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் அவுஸ்திரேலிய இலங்கை அரசுகள் கைச்சாத்து இட்டன. அதற்காகவே அவுஸ்திரேலியப் பிரதமரின் விசேட தூதுவர் இலங்கை வந்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரி கடந்த ஒரு மாதகாலமாக கடலில் தவிக்கும் இரு தொகுதிப் படகு அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முயற்சி எடுத்து வருகின்றது. அதற்கு பிரித்தானிய பிரதமரின் விசேட தூதுவர் டெஸ் பிரவுணியும் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *