மலை யகப் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரேந்தும் பகுதிகளான காசல் ரீ, மவுசாகலை,கென்யோன், விமலசுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களில் அதிகளவிலான வெள்ளநீர் சேர்ந்துள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஸ்கெலியா பகுதிகளிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக் குள்ளாகியுள்ளனர். அத்துடன், பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழை காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் மலையகத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்படலாமென கட்டிட ஆராய்ச்சி நிலைய புவியியல் பிரிவு தெரிவித்துள்ளது.