2015 ம் ஆண்டாகும் போது எமது நாட்டின் சீனிக்கான தேவையில் 50 சதவீதத்தினை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் சீனி உற்பத்தி செய்யும் ஆலைகள் ஐந்து புதிதாக ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அநுராதபுரத்தில் இரண்டும், குருநாகலை, சியம்பலாண்டுவ, பிபிலை பிரதேசங்களில் ஒவ்வொன்று வீதமும் இவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலதிக பயிர்ச் செய்கை அபிவிருத்தி அமைச்சர் தர்மதாச பண்டார தெரிவித்தார்.
ஒரு தொழிற்சாலையினை அமைக்க கணிப்பிடப்பட்டுள்ள செலவினம் 3000 மில்லியனாகும். மேலும் ஒவ்வொரு ஆலையிலும் தினம் 2500 தொன் கரும்பு அரைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பிபிலை- சியவலா கொட பிரதேசத்தில் அமைக்கப்படும் சீனி ஆலைகளின் நிர்மாணப்பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.