நாட்டுக்கு சுமையற்றதாக ஐ.ம.சு.மு அமைச்சரவை அமைய வேண்டும் – நிமலின் யோசனைக்கு ஏகமனதாக அங்கீகாரம்

sandanaya.pngபொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் அமைச்சரவை நாட்டுக்குச் சுமையற்றதாக அமைய வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகர்கள் ஏகமனதாகத் தீர்மானமொன்றை நேற்று முன்தினம் நிறைவேற்றினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அபேட்சகர்கள் உறுதிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்படி யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை அமைச்சர் சி. பி. ரட்நாயக்கா வழிமொழிந்தார். அதனை தொடர்ந்து இந்த யோசனை ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *