இடம்பெயர் பறவைகள்: சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 பேர் கைது

புத்தளம் நவதங்குளம் பகுதியில் சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 நபர்களை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் கடும் குளிர்காலத்தையிட்டு பறவைகள் அபயம் தேடி இலங்கை போன்ற நாடுகளுக்குள் இடம்பெயர்ந்து வருவதுண்டு.

இவ்வாறு சைபீரியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள ஒருவகை வாத்துகள் (சைபீரியன் டக்) நான்கை சுட்டுக் கொன்றதாலேயே இவர்கள் நான்கு பேரும் கைதாகினர். வாத்துக்களை சுடுவதற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 டபிள் பெரல் துப்பாக்கிகள், 12 போர் ரக 12 தோட்டாக்கள், டபிள் கெப் ரக வாகனமொன்று என்பவற்றை யும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அபயம் தேடி வரும் வெளிநாட்டு பறவைகளை சுடுவதோ, வதைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்பதாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *