தன்னுடைய பிளற்றில் வாழ்ந்த நண்பன் உகாராஜன் சுவாமிநாதனை (34) கோடாலியால் பலமுறை கொத்திக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜஸ்டின் சந்திரகாந்தன் (31) மார்ச் 5ல் அவர் சிறை வைக்கப்பட்டு இருந்த அறையில் தூக்கிட்டு மரணித்துள்ளார். ஜனவரி 13ல் உகாராஜன் சுவாமிநாதன் தான் தங்கியிருந்த கரோ ரவுன் சென்ரரில் உள்ள ஆர்எப்சி எக்ஸ்பிரஸ் சிக்கின் கடைக்கு மேலே வைத்து படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இக்கொலை தொடர்பாக 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
ஜஸ்ரின் சந்திரகாந்தன் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஹென்டன் மஜிஸ்ரேற் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். ஏப்ரலில் இவருடைய வழக்கு விசாரணை ஓல்ட் பெய்லிக்கு வர இருந்த நிலையிலேயே அவர் தூக்கிட்டு மரணித்துள்ளார்.
இம்மரணம் சிறையில் நிகழ்ந்தள்ளதால் இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எச்எம் பிறிசின் சேர்விஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்விரு மரணங்களுக்குமான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.