பொதுமக்கள் கைவிட்டு வந்த வாகன பட்டியல்…

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் கைவிட்டுவந்த வாகனங்கள், பற்றிய விபரங்களடங்கிய பட்டியல் வவுனியா மாவட்ட செயலகம், மற்றும் வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

தமது வாகனங்கள், உடைமைகள் குறித்து உரிமை கோருபவர்கள். தகுந்த ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் வருமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று மேலும் 500 மோட்டார்சைக்கிள்கள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டன. இதுவரை சுமார் 6000க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கென 16 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *