இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்க 33 வாக்குச் சாவடிகள்

இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கென வவுனியா மெனிக்பாம் வலயம் – 2 மற்றும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் என்பவற்றில் 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

dis.bmpதேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆளடையாளத்துடன் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கென மெனிக்பாம் வலயம் இரண்டில் 17 வாக்குச் சாவடிகளும், இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத நிவாரணக் கிராமங்களில் அல்லாதவர்களுக்கென வவுனியா தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 16 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் திணைக்களத்தினால் அங்கீகரிக்க ப்பட்டுள்ள எட்டு ஆளடையாள அட்டை களும் இல்லாதவர்கள் உடனடியாக வவு னியா உதவித் தேர்தல் திணைக்களத் துடன் தொடர்புகொண்டு ஆளடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக இலவச பஸ் சேவையை பெற்றுக்கொள்ள காமினி வித்தியாலயத்துக்கு செல்லவேண்டும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உள்ளடங்கிய வன்னி மாவட்டத்தில் 209 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் தாம் வதியும் பகுதியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பிக்காத, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் உடனடியாக மாவட்ட செயலகம், மற்றும் நிவாரணக் கிராமங்கள் அமை க்கப்பட்டுள்ள விசேட கரும பீடத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *