க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தேவிபாலிக்கா வித்தியாலயத்தைச் சேர்ந்த சசித்ரா சாமளி குணவர்தன எனும் மாணவி இலங்கையிலேயே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அம்பலாங்கொடை தர்மசோக்கா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சரித் கெளசல்ய விமலரட்ண இரண்டாம் இடத்தையும் காலி சவுத்லண்ட்ஸ் பாடசாலையைச் சேர்ந்த திரித்தி உபேக்ஷ ரணவீர மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அதே பாடசாலையைச் சேர்ந்த ஹசீதா லங்சினி லியனாரச்சி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.