கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக இருவர் இன்றுகாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மாகாணசபை அமர்வு இன்று காலை கூடியபோது ஐ.ம.சு.மு யின் உறுப்பினராக காத்தான்குடியைச் சேர்ந்த கே.எல்.எம். பரீட் மற்றும், ஐ.தே.க. உறுப்பினராக புல்மோட்டையைச் சேர்ந்த ஆர்.எம். அன்வர் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பாராளுமன்றத்துக்குத் தெரிவான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் எம்.எஸ்.தெளபீக் ஆகியோரின் வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.