இலங்கை மத்திய வங்கியின் மாகாண அலுவலகம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது மத்திய வங்கியின் நான்காவது மாகாண அலுவலகம் என்பது குறிப்பித்தக்கது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், குத்தைகை நிறுவனங்கள் என்பன மிக வேகமாக யாழ்ப்பாணத்தில் தங்கள் கிளைகளைத் திறந்து வருகின்றமை குறிப்பிடத்க்கது. இந்நிலையில் இலங்கை மத்தியவங்கி அதன் வடமாகாண கிளை நிறுவனத்தைத் திறந்து வடமாகாண மக்களின் நிதியியல் தேவைகளை நிறைவு செய்யவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.