இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழரசுக் கட்சியின் உபதலைவர் சீற்றம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனிக் கட்சியாக பதிவு செய்யப்பட்டமை துரோகம். இதற்காக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

தமிழரசுக்கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழரசுக்கட்சிக்கு துரோகம் செய்த திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகிக்கும் பதிவிகளிலிருந்து விலக வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலர் எஸ்.எக்ஸ். குலநாயகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலொ ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பாக செயற்படலாமேயன்றி இவை தனி அரசியல் கட்சியாக செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் பங்கு வகிக்க முடியாது எனவும், அதனைத் தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் திரு. குலநாயகம் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்தவொரு தமிழசுக் கட்சிக்காரனும் ஏற்கப்போவதில்லை எனவும், இலங்கையில் தமிழ் பேசும் இனத்தை இணைத்த தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழசுக்கட்சியின் அழிவை தமிழ்பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் உபதலைவரும், 1956ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் அங்கம் வகித்து வருபவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான யாழ். பலகலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு கட்சியாக பதிவு செய்வதற்கு முதல்நாள் இவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *