உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை ராமராஜா கிருஷ்ணராஜா (50) பலி

உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உகண்டாவிலுள்ள இந்திய கம்பனியொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார். இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *