சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் வீடுகளுக்கு – மேலதிக மின்சாரத்தை சபைக்கு விற்கவும் வசதி

வீடுகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் ‘நெட் மீட்டர்’ மின்சாரத் திட்டத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று பத்தரமுல்ல பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.  தமது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை இதனூடாக உற்பத்தி செய்ய முடிவதோடு மேலதிக மனிசாரத்தை மின்சார சபைக்கு விற்கவும் முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

தமது வீட்டுத் தேவைக்கு போதுமான அளவு மின்சாரம் உற்பத்தியாகாத போது அதனை மின்சார சபையினூடாக பெறவும் ‘நெட் மீட்டர்’ பாவனையாளர்களுக்கு வசதி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 4.5 கிலோ வோர்ட் நெட் மீட்டரினூடாக தினமும் 12 முதல் 23 அலகுகள் மின் உற்பத்தி செய்ய முடியும்.

வியாபாரிகள், கைத்தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் மின் பாவனையாளர்களுக்கு இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என அமைச்சு கூறியது. முதலாவது ‘நெட் மீட்டர்’ பத்தரமுல்லை ஜயந்திரபுரவில் உள்ள புரூம் கூட்டு வியாபார உரிமையாளர் மஹிபாலவின் வீட்டில் பொருத்தப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *