சு.க.வின் 59 வது மாநாடு நாளை அலரிமாளிகையில்

mini.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (2 ஆம் திகதி) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. கடந்த 59 வருடங்களில் 4 பேர் கட்சிக்கு சிறந்த தலைமைத்துவம் அளித்தனர். கட்சியின் 59 வருட வரலாற்றில் அதிகூடுதலாக இம்முறை 118 சு.க. உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *