வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக வெடி பொருட்கள் அகற்றல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்வதற்காக அப்பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக துரிதமாக அப்பகுதிகளிலுள்ள மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க ‘ஹலோட்ரஸ்ற்’ மற்றும், இராணுவ பொறியியல் பிரிவு என்பன வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும், விரையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *