யாழ். மாவட்டத்தில் ஐந்து இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 21 குழிகளில் பனை விதைகளை நடும் பயனாளிகளுக்கு உலக உணவுத்திட்டத்தின் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இத்திட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக உலக உணவத்திட்ட நிறுவனம் 100 மெற்றிக் தொன் உலருணவை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பனை வளத்தை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பனை விதை நடுகைத் திட்டத்திற்காக பல இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பனைசார் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.