யாழ்ப்பாணத்தில் தொழிற்சந்தை நடத்துவதற்கு ஏற்பாடு.

Waiting_for_Employmentயாழ்ப் பாணத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தொழிற்சந்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் இது நடத்தப்படவுள்ளது.

இத்தொழிற்சந்தையில் கொழும்பிலிருந்து வந்து கலந்து கொள்ளும் தனியார் தொழில் நிறுவனங்களும், உள்ளுர் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளும் எனவும், இவை தங்கள் நிறுவனங்களிலும் உள்ள பணியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக யாழ்.மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி தொழில் வாய்ப்புகளை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சந்தையில் கலந்து கொண்டு பணியாளர் வெற்றிடங்களை நிரப்ப விரும்பும் நிறுவனங்கள் எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்பதாக யாழ்.மாவட்ட திட்டமிடல் செயலகத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *