அளவெட்டியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ். அளவெட்டியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்துள்ளார். அளவெட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி வடக்கைச் சோந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் என்பவரே தப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்தவராவார். தனிப்பட்ட காரணங்களுக்காக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காயமடைந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *