வடக்கிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் கிளைகளை மூடும்படி அரசாங்கம் உத்தரவிடவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, ஆகிய இடங்களிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளைகளை மூடுமாறு அரசாங்கம் கோரியுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கிளை மூடப்பட்டு விட்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்தார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரசன்னம் அவசியமானதுதானா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.