அண்மைய நாட்களாக சிறுவர்கள் மத்தியில் புதிய நோய்த்தாக்கம் ஒன்று ஏற்ப்ட்டு வருவதாகவும் அதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஐசியு இல் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் என்எச்எஸ் அறிவித்து உள்ளது. சிறார்களின் உடலில் வித்தியாசமான தாக்கம் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு என்எச்எஸ் அறிவித்துள்ளது.
இது கோவிட்-19இன் தாக்கமா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பாதிக்கபட்ட சிறார்களில் கோவிட்-19 வைரஸ் இருந்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உடலில் புள்ளி புள்ளி வீக்கங்கள் அவதானிக்கப்பட்டு உள்ளது.